உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

         கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

 இது தொடர்பாக கடலூர் அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை வழக்கறிஞர் கே. சக்திவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:  

             கடலூரில் லாரன்ஸ் சாலை முக்கிய வியாபார மையமாக உள்ளது. இந்தச் சாலைக்கு அருகிலேயே கடலூர் பஸ் நிலையம், திருபாதிரிப்புலியூர் ரயில் நிலையம் போன்ற முக்கியமான இடங்கள் உள்ளன. அந்தச் சாலையில் உள்ள ரயில்வே கேட், ரயில் வரும் நேரத்தில் மூடப்படும்போது, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதைக் கருத்தில் கொண்டு, அந்தச் சாலையில் ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

            நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியுள்ள திட்டத்தின்படி, அந்தப் பாலம் அமைக்கப்பட்டால், அதில், இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். மினி வேன்கள், பஸ்கள் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர், வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மேலும், அந்தச் சாலை முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களை கையகப்படுத்தியாக வேண்டும்.  இதனால், அந்தப் பகுதியில் உள்ள கடைகளும் பாதிக்கப்பட்டு வியாபாரமும் குறைந்துவிடும். 

              எனவே, எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், கடலூர் பஸ் நிலையத்தின் பின் புறம், சுரங்கப்பாலம் அமைக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் மாற்றுத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அளிக்கப்பட்டது. இதை ஆதரித்து 15,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதைப் பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியரும் தெரிவித்தார்.  பாலம் அமைப்பது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மக்கள் கொடுத்த திட்ட வரைவு குறித்து ஆட்சியர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

             லாரன்ஸ் சாலையில் பாலம் அமைந்தால் ஏற்படும் இடையூறுகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.  இந்த நிலையில், அந்தச் சாலையில் பாலம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்தச் சாலையில் உள்ள குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை மாற்றி அமைப்பது தொடர்பாக அரசு டெண்டர் விட்டுள்ளது. எனவே, அந்தச் சாலையில் சுரங்கப் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

              அப்போது, இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்கள். வழக்கு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Read more »

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திரத்துக்கு ஏற்றுமதியாகும் சிதம்பரம் பன்னீர் கரும்புகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் வெட்டி எடுக்கப்படும் கரும்புகள்.

சிதம்பரம்:

            பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பன்னீர் கரும்புகள் கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

           சிதம்பரம் பகுதியில் வல்லம்படுகை, வேளக்குடி, இளநாங்கூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பை பயிரிட்டுள்ளனர்.  இந்த ஆண்டு கரும்பு நல்ல விளைச்சல் பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள கரும்பு மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் கிராக்கி அதிகம். தற்போது பொங்கல் பண்டிகைக்காக சிதம்பரம் பகுதியில் கரும்பு வெட்டி எடுக்கப்பட்டு 20 கழிகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100-க்கு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  

            இவையல்லாமல் வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி, லாரி வாடகை தனியாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ஆந்திரத்தில் கரும்பு உற்பத்தி இல்லாததால் தமிழகத்திலிருந்து குறிப்பாக சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதிகளிலிருந்து கரும்பு வெட்டி எடுக்கப்பட்டு வேலூர் மற்றும் சென்னை கோயம்பேடு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  ÷பொங்கல் பண்டிகைக்கு ஒரு கரும்பு ரூ. 20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிக்கு ஒரு ஏக்கர் கரும்பு பயிரிடுவதற்கு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகிறது.  

           ஒ   ரு ஏக்கருக்கு 900 கட்டுகள் வரை கரும்பு கிடைக்கும். ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் வரை விலை கரும்புக்கு விலை கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர். இவையல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் தாங்களே கரும்புகளை நேரடியாக எடுத்துச் சென்று பொங்கலுக்கு ஒரு கரும்பு ரூ. 20 என விற்பனை செய்து அதிகம் லாபம் சம்பாதிக்கின்றனர். 

Read more »

கடலூர் மாவட்ட ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு

கடலூர்:
            ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.  
மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது.  1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.  இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.  

              மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

            ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை இணைக்கும்போது, பதிவேட்டில் குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் மட்டும் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து, ரேஷன் கார்டுதாரர்கள் 1-1-2011 முதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, உள்தாள்களை இணைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் ரேஷன் கடைகளுக்குச் செல்லாமல், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தை கண்டறிந்து, அந்த நாள்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

               இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரேஷன் கடை விற்பனையாளர், வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவில் திட்ட அலுவலர்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

          வளர் இளம் பருவத்தினர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பட மாவட்ட திட்ட அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நேரு யுவ கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

              கடலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்திற்கு புவனகிரி, நல்லூர் ஒன்றியங்களில் வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர் குழுக்களை ஒருங்கிணைத்து செயல்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட திட்ட அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சமூகப் பணி, சமூக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

            வயது 2011ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று 25 முதல் 35 வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஊக்கத் தொகை மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 

நேரு யுவ கேந்திரா, 34, 
ராமதாஸ் தெரு, 
புதுப்பாளையம்,
கடலூர் 

                  முகவரிக்கு வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04142-293822 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதித்த சிறுவர்களின் கல்விக்கு ரூ.1.13 கோடி செலவிடப்பட்டுள்ளது: கலெக்டர் சீத்தாராமன்

கடலூர்:
 
            சுனாமியில் பெற்றோரை இழந்த 222 ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்காக இதுவரை ஒரு கோடிய 13 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

              மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவு தூணில் கலெக்டர் சீத்தாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.நிகழ்ச்சியில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன், சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், நகராட்சி கமிஷனர் இளங்கோவன், டி.எஸ்.பி., பாண்டியன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் கடலூர் அரசு சேவை இல்ல வளாகத்தில் உள்ள சுனாமி காப்பகத்தில் தங்கி படித்து வரும் சுனாமியில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுவர்களுடன் அஞ்சலி செலுத்தினர். காப்பக சிறுவர்களுக்கு கலெக்டர் சீத்தாராமன் தனது சொந்த செலவில் சால்வை மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில், 

                "சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. சுனாமியில் வீடு உள்ளிட்ட உடமைகளை இழந்தவர்களுக்கு ராஜிவ்காந்தி மறுவாழ்வு புனரமைப்பு திட்டத்தில் 1,589 வீடுகளும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் 5,090 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரை இழந்த 222 ஆதரவற்ற சிறுவர்களின் கல்விக்காக இதுவரை ஒரு கோடிய 13 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

                மேலும், கடற்கரைக்கு 1,000 மீட்டருக்குள் இயற்கை இடர்பாடுகளை தாங்க முடியாத நிலையில் உள்ள 351 வீடுகளை உலக வங்கி நிதியுதவியுடன் கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. ஐதராபத்தில் உள்ள சுனாமி ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தால் அதனை உடனடியாக மீனவ கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்க ஒயர்லஸ் கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடையில்லா தகவல் பரிமாற்றத்திற்கு வசதியாக நெய்வேலியில் பன்பலை வானொலி நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்றார்.

Read more »

சூனாமி நினைவு நாள்: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அஞ்சலி

கடலூர்:

            கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சிக்கி இறந்தவர்களுக்கு நேற்று கடலோர கிராமங்களில் பலர் அஞ்சலி செலுத்தினர்.கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உருவான சுனாமி பேரலை தமிழக கடலோர மாவட்டங்களைத் தாக்கியது.

                  அதில் கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், ராசப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு உள்ளிட்ட 50 கிராமங்களை தாக்கியது. இத்தாக்குதலில் 214 சிறுவர்கள் உட்பட 617 பேர் இறந்தனர். 40 பேரை காணவில்லை.உலகையே உலுக்கிய இச்சம்பவத்தின் 6ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களில் சுனாமியில் இறந்தவர்களின் படங்கள் மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

                  மீனவர் பேரவை சார்பில் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுனாமி நினைவு தூணில் மாநில துணைத் தலைவர் மாரியப்பன், நிர்வாகி கஜேந்திரன், சுப்புராயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சிங்காரத்தோப்பில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் நடந்த அஞ்சலி கூட்டத்தில் நடராஜன், முருகன், தேவராஜ், வெண்புறா குமார், மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.சிதம்பரம்: எம்.ஜி.ஆர். திட்டு, முடசல் ஓடை, டி.எஸ்.பேட்டை, கிள்ளை, சின்னவாய்க்கால், பில்லுமேடு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவர்கள் ஊர்வலமாக சென்று கடல் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

                      நிகழ்ச்சியில் நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் பரமதயாளன், கவுன்சிலர்கள் கற்பனை செல்வம், பாண்டியன், கலா உட்பட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை: அன்னங்கோயிலில் பேரூராட்சி தணை தலைவர் செழியன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

                நிகழ்ச்சியில் மீன் வியாபாரிகள் சங்கத் தலைவர் அரவிந்தன், ஜேப்பியார் பேரவை மாவட்ட தலைவர் கனகசபை, புதுப்பேட்டை கிராம நிர்வாகி மணிவண்ணன், ராஜேந்திரன், அரசு, சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சுனாமி நினைவு தினத்தையொட்டி மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதன் காரணமாக மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Read more »

Annamalai University to evaluate submergence-tolerance of paddy

CUDDALORE: 

          The International Rice Research Institute (IRRI), Manila, the Philippines, has assigned the task of evaluating submergence-tolerant paddy varieties in Tamil Nadu to the Department of Agronomy, Faculty of Agriculture, Annamalai University.

             Rm.Kathiresan, head and professor, Department of Agronomy, told The Hindu that the existing paddy varieties would withstand partial submergence only for a limited period and would perish soon if submerged fully. In the recent years, in the delta districts, the food basket of Tamil Nadu, submergence of standing paddy crops for over a week had become a common phenomenon. If the problem was not tackled in a scientific and consistent manner, it might endanger food security and seriously threaten the livelihood of lakhs of farmers and farm labourers.

          Mr. Kathiresan said that the IRRI, through the project called “Stress-tolerant rice for Africa and South Asia (STRASA)” funded by the Bill and Melinda Gates Foundation, the U.S., had isolated the submergence tolerant gene and introduced it in paddy varieties such as IR-74, Swarna, Samba Mashuri and CR-1009, all with the suffix ‘sub-1.'

              Various agricultural research institutions were evaluating these varieties elsewhere in India and in Tamil Nadu the task had been assigned to Annamalai University. Mr. Kathiresan further said that his department had already been implementing the World Bank-Indian Council of Agricultural Research-funded National Agricultural Innovation Project for livelihood enhancement of 2,400 farming households in the disadvantaged districts of Tamil Nadu.

                  On the strength of the latter project, the IRRI had given the responsibility of evaluating the new varieties to the department. The evaluation process for these new cultivars had already started. Mr. Kathiresan observed that the Department of Biotechnology under the Union Ministry of Science and Technology had involved the Agronomy Department as a partner in a network mode in collaboration with the IRRI to speed up the process of evolving many more flood and saline-tolerant paddy varieties. He hoped that the new varieties would come as a boon to the delta farmers to mitigate the crop losses on account of floods.

Read more »

Special gram sabha meetings on December 29

CUDDALORE: 

          Collector P. Seetharaman had ordered the panchayats to convene special gram sabha meetings on December 29 to discuss the proposal to convert multi-member wards into single-member wards.

           In a statement released here, he said that the meeting should be widely publicised through noticeboards in the panchayats and distribution of hand bills. During the meeting, details such as how many wards would be made one-member wards, and the number of hamlets, households and the electorate to be brought under its purview, and other related issues, would be discussed the Collector added.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior