உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

கம்பி, சிமென்ட் விலை விர்ர்...!: வீடு கட்டுவோர் கலக்கம்

பண்ருட்டி:                  கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி, சிமென்ட் விலை அதிகரிப்பால் வீடு கட்டுவோர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள் கடும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டுமான பொருட்களில் முக்கிய பொருட்களான சிமென்ட், கம்பிகளின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.              ...

Read more »

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் சாலைப் பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பெருமிதம்

சிதம்பரம்:                   தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 55 ஆயிரத்து 785 கிலோ மீட்டர் தூர சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் பேசினார். காட்டுமன்னார்கோவிலில் நடந்த விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் பேசியதாவது:                           ...

Read more »

பணி நிரந்தரம் செய்யக்கோரி கம்ப்யூட்டர் ஊழியர்கள் மனு

கடலூர்:                கம்ப்யூட்டர் விவர பதிவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி துணை முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஊழியர்கள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு:                     கம்ப்யூட்டர் விவர பதிவு ஊழியர்களாக பணி நியமனம்...

Read more »

சூரியகாந்தி பயிரில் அதிக லாபம் பெறும் வழிகள் : வேளாண்துணை இயக்குனர் ஆலோசனை

சிறுபாக்கம்:            மங்களூர் ஒன்றிய விவசாயிகள் சூரியகாந்தி பயிரில் அதிக லாபம் பெற வேளாண் துறை சார்பில் ஆலோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்து கடலூர் வேளாண் துணை இயக்குனர் (வணிகம்) கனகவேல், விருத்தாசலம் கோட்ட அலுவலர் (வணிகம்) அமுதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                    ...

Read more »

தீயணைப்பு வீரர்களுக்கு முதல்வர் விருது

சேத்தியாத்தோப்பு:                 சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கு முதல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் முன்னணி தீயணைப்பு வீரர்கள் தர்மலிங்கம், நவரத்தினம், அன்பழகன் ஆகியோரின் பணிகளை பாராட்டி தீயணைப்பு வீரர்களுக்கான முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளது. விருது பெற்ற தீயணைப்பு...

Read more »

சுனாமி குடியிருப்புக்கு அடிக்கல் நாட்டு விழா

கடலூர்:                 கடலூர் செல்லங்குப்பத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுனாமி குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் 1,678 சுனாமி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு அதில் பரங்கிப்பேட்டையில் 168ம், பனங்காட்டு காலனியில் 74ம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.                ...

Read more »

திருச்சோபுரம் சுகாதார நிலையம்தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்

கடலூர்:                 திருச்சோபுரத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் காயல்பட்டு அடுத்த பேட்டோடை கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. இணைப்பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.              ...

Read more »

தொழுதூர் ஆறுமுகம் கல்லூரியில்நேனோ டெக்னாலஜி கருத்தரங்கு

ராமநத்தம்:                    தொழுதூர் ஆறுமுகம் கல்லூரியில் தமிழ், இயற் பியல், வேதியியல் துறை சார்பில் முத்தமிழ் மன்றம், நேனோ டெக்னாலஜி கருத்தரங்கு நடந்தது.முத்தமிழ் மன்ற விழாவிற்கு தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ராஜபிரதாபன் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை விரிவுரையாளர் மீனாட்சி வரவேற்றார்.              ...

Read more »

தபால் நிலையம் அமைக்கஇடம் வழங்க கோரிக்கை

சிதம்பரம்:             சிதம்பரம் மேற்குபகுதியில் தபால் நிலையம் மீண்டும் அமைக்க இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து முன்னாள் மாவட்ட தி.மு.க., இலக்கிய அணி புரவலர் கண்ணதாசன் கலெக்டருக்கு அணுப்பியுள்ள மனு:                 சிதம்பரம் லால்கான் தெருவில் தனியார் இடத்தில் வாடகைக்கு...

Read more »

அரசு கல்லூரியில் ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் மைய பொதுக்குழு வலியுறுத்தல்

விருத்தாசலம்:                 விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி இடத்தில்உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மையம் கோரிக்கை விடுத்துள்ளது. விருத்தாசலத்தில் மக்கள் மைய பொதுக்குழு கூட்டம் நடந்தது. முன்னாள் ஆர்.டி.ஓ., முத்தையா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராமசாமி வரவேற்றார்.            ...

Read more »

பேராசிரியருக்கு விஷ்வகர்மா விருது

சிதம்பரம்:                பேராசியர் ரகுநாத்துக்கு விஷ்வகர்மா விருது வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக கட்டட அமைப்பியல் துறைபேராசிரியர் ரகுநாத்தின் ஆய்வு  நுட்பம் மற்றும் பங்களிப்பை பாராட்டி கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமம் மற்றும் இந்திய திட்டகுழு இந்த விருதை வழங்கியுள்ளத...

Read more »

சாலையை சீரமைக்க வேண்டும் அரசுக்கு பா.ஜ., கோரிக்கை

சேத்தியாத்தோப்பு:                   சேத்தியாத்தோப்பு - விருத்தாசலம் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தமிழகஅரசுக்கு பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து சேத்தியாத்தோப்பு நகர பா.ஜ. செயலாளர் பன்னீர்செல்வம் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப் பியுள்ள மனு:                 ...

Read more »

தொழிற்சங்கத்திற்கு விருது

நெல்லிக்குப்பம்:            நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை லேபர் யூனியனுக்கு சிறந்த தொழிற் சங்க விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் செயல்படும் தொழிற் சங் கங்களில் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி. பாரி லேபர் யூனியனுக்கு சிறந்த தொழிற் சங்கத்துக்கான விருது வழங்கப்பட்டது.                  சென்னையில்...

Read more »

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : தலைமை பொறியாளர் பாலாஜி பேட்டி

திட்டக்குடி:                விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை 19.5 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி விரைவில் துவங்கப்படும் என நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் பாலாஜி கூறினார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே முருகன்குடி வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை நெடுஞ்சாலைத்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் பாலாஜி ஆய்வு செய்தார்.      ...

Read more »

முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்த வழிமுறை வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத்தையா தகவல்

விருத்தாசலம்:              முந்திரி மரங்களை தாக் ககூடிய தேயிலை கொசுவை கட்டுப்படுத்தினால் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அறிவியல் நிலைய தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சாத் தையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                முந்திரி மரங்களை தாக்கக்கூடிய...

Read more »

கடலூர் ரோட்டரி அரங்கில் டாக்டர்களுக்கு யோகா பயிற்சி

கடலூர்;            இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் டாக்டர்களுக்கான ஒருநாள் யோகா பயிற்சி முகாம் கடலூர் ரோட்டரி அரங்கில் நடந்தது. இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் டாக்டர்களுக்கான ஒருநாள் யோகா பயிற்சி முகாம், கடலூர் பீச் ரோட்டில் உள்ள ரோட் டரி அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவச் சங்க தலைவர் டாக்டர் சந்திரன், செயலாளர் டாக்டர் சீனுவாசன், ரோட்டரி சங்க தலைவர் டாக்டர்...

Read more »

மீனவர்களுக்கு அடையாள அட்டை

கிள்ளை:            மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது. மாவட்ட மீன் வளத்துறை சார்பில் கடலில் மீன் பிடித்தொழில் செய்யும் மீனவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க புகைப் படம் எடுக்கும் பணி கிள்ளை மீனவர் காலனி சமுதாயக் கூடத்தில் நடந்தது.கிராம தலைவர் மலையரசன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜகோபால், பொரு ளாளர் அருணகிரி முன்னிலையில் 350 மீனவர்களுக்கு...

Read more »

வேலைவாய்ப்பு முகாம்

ராமநத்தம்:                  தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான நேர்முகத் தேர்வு நடந்தது.இதில் திருச்சி குறிஞ்சி பொறியியல் கல்லூரி, கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, விழுப்புரம் ஐ.எப்.இ.டி., மயிலாடுதுறை ஏ.வி.சி., திருச்சி எம்.ஐ.இ.டி., உள்ளிட்ட பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 306 பேர் கலந்து...

Read more »

.குழாய் மூலம் பாலம்: கிராம மக்கள் எதிர்ப்பு

பரங்கிப்பேட்டை:                பரங்கிப்பேட்டை அருகே நெடுஞ்சாலைத்துறை சாலையில் குழாய் மூலம் பாலம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே நெடுஞ்சாலைத்துறை சாலையில் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டுவதற்கு நேற்று முன்தினம் பள்ளம் தோண்டப்பட்டது.                   ...

Read more »

மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு:மங்கலம்பேட்டை த.மு.மு.க., முடிவு

விருத்தாசலம்:                  மங்கலம்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது. மங்கலம்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் நடந்தது.                ஜபருல்லா தலைமை தாங்கினார்.நகர தலைவர்...

Read more »

மத்திய அமைச்சர் பாதுகாப்புக்கு வந்த போலீசார் ரகளை : கார் கண்ணாடி உடைப்பு; டிரைவர்கள் தாக்கு

சிதம்பரம்:                    சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் பாதுகாப்புக்கு வந்த போலீசார், துப்பாக்கியால் அடித்து கார் கண்ணாடியை உடைத்து, டிரைவர்களை தாக கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . புதுச்சேரியை சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை கடலூர் வழியாக காரைக்கால் சென்றார்.                  ...

Read more »

இளம்பெண்ணை கடத்தியவர் கைது

சேத்தியாத்தோப்பு:             இளம்பெண்ணை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது சென்றனர். சேத்தியாத்தோப்பை அடுத்த பெரியநற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகள் தமிழ்வாணி (17). சேத்தியாத்தோப்பு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நாகை மாவட்டம் சீர்காழி பச்சை மைதானம் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மகன் கோபால் (23).                 ...

Read more »

திடீர் தீ விபத்து: ரூ. ஒரு லட்சம் சேதம்

நெல்லிக்குப்பம்:              நெல்லிக்குப்பம் அருகே இரண்டு வீடுகள் எரிந்ததில் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. நெல்லிக் குப்பம் அடுத்த நத்தமேட்டை சேர்ந்தவர் சின்னபொண்ணு. இவரது கூரைவீடு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.               அச்சமயம் காற்று வீசியதால் அருகில் இருந்த முத்து வீட்டிற்...

Read more »

அழைப்பிதழ் அச்சடித்த தொகையை கேட்டு சென்னை நிறுவனம் கலெக்டருக்கு கடிதம்

கடலூர்:                    நெல்லிக்குப்பம் பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடித்த தொகை 87 ஆயிரம் ரூபாய் கேட்டு சென்னை நிறுவனம் கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடலூர் மாவட்டம், நெல்லிக் குப்பம் நகராட்சி புதிய பஸ் நிலையம் கட்டட திறப்பு விழா 2008 அக்டோபர் 24ம் தேதி காராமணிக் குப்பத்தில் நடந்தது.                  ...

Read more »

நடுவீரப்பட்டு பகுதியில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள் வீணாகிறது

நடுவீரப்பட்டு:                   நடுவீரப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 2 லட்சம் செலவில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பயன்படுத் தாமல் வீணாகி வருகிறது. பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், முத்துகிருஷ்ணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தலா 2 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடின்றி வீணாகி...

Read more »

உளுந்துப் பயிருக்கு வீராணம் நீர் திறப்பு

கடலூர்:                கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் உளுந்துப் பயிருக்கு வீராணம் ஏரியில் இருந்து வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படப்பட இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் 1.5 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா நெல் அறுவடைக்கு 10 தினங்களுக்கு முன், வயல்களில் ஊடுபயிராக உளுந்து விதைத்து விடுவார்கள்....

Read more »

விழிப்புணர்வு முகாம்

நெய்வேலி:             நெய்வேலி பயோனியர் தொண்டு நிறுவனம் சார்பில் தட்பவெப்பம் மாற்றம் குறித்த தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது. இம் முகாமை ஒட்டி மாணவ, மாணவியருக்கு இடையே கட்டுரை, பேச்சு, பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.  இம்முகாமின் நிறைவு நாளன்று பயோனியர் தொண்டு...

Read more »

உலக மகளிர் தின விழா

நெய்வேலி:                     நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம், என்எஸ்எஸ் பிரிவு 12 மற்றும் நெய்வேலி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற மகளிர் தினவிழாவுக்கு கல்லூரி முதல்வர் அரங்கராசன் தலைமை வகித்தார். பேராசிரியர் கிப்ட் கிறிஸ்டோபர்...

Read more »

ராஜ்ய விருது

நெய்வேலி:                    நெய்வேலி மாவட்ட சாரண, சாரணியருக்கான ராஜ்ய புரஷ்கார் வழங்கும் விழா நெய்வேலி வட்டம் 25-ல் உள்ள பி.பி.பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் சி.செந்தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சாரண மாணவ, மாணவியரின் பணிகளைப் பாராட்டி, 80 பேருக்கு ராஜ்ய புஷ்கார் விருதை வழங்கினார். விழாவுக்கு,...

Read more »

விலைவாசி உயர்வுக்கு மருந்து விற்பனை பிரதிநிதிகள் கண்டனம்

கடலூர்:                       விலைவாசி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து, கடலூர் மாவட்ட மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்க ஆண்டு பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தனியார் நிறுவனத்தின் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

Read more »

மாணவர்களை தாக்கியவர்கள் கைது

ராமநத்தம்:                  ராமநத்தத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் தேவநாதன் மகன் வினோத்ராஜ் (20). இவர் தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன் றாமாண்டு பி.பி.ஏ., படித்து வருகிறார்.                ...

Read more »

பண்ருட்டியில் பழவியாபாரி மீது தாக்குதல் மூவருக்கு வலை

பண்ருட்டி:                        பழ வியாபாரியை தாக் கிய மூவரை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் முருகன்(32). இவர் காந்தி ரோட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் செக்கு மேட்டு தெரு ராஜா பழம் கேட்டார். பணம் கொடுத்தால் தருவதாக முருகன் கூறினார்.                     ...

Read more »

கார் கவிழ்ந்து நால்வர் காயம்

சிறுபாக்கம்:            சாலை தடுப்பு கட்டையில் கார் மோதி கவிழ்ந்ததில் நான்கு பேர் படுகாயமடந்தனர். சென்னையை சேர்ந்த பீட்டர்காவு (70). இவர் தனது உறவினர்களான அனில்காவு (55), லில்லிகாவு (70) ஆகியோருடன் நேற்று முன்தினம் காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.                    காரை சிவகங்கையை சேர்ந்த செந்தில்வேல்...

Read more »

வங்கியில் அலாரம் ஒலித்ததால் திடீர் பரபரப்பு

கடலூர்:                   கடலூர் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. விடுமுறை தினமான நேற்று காலை 9.45 மணியளவில் வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஓலித்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டனர்.                 ...

Read more »

கார்குடல் தீ விபத்து அரிமா சங்கம் நிவாரணம்

விருத்தாசலம்:                தீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஜெயராமன், ராதாகிருஷ்ணன், ஆதிமூலம் ஆகியோரின் வீடுகள் எரிந்து சாம்பலாயின.               ...

Read more »

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி விடுதி மாணவர் பலி

நெல்லிக்குப்பம்:                   விடுதி வார்டனுக்கு தெரியாமல் வெளியே சென்ற மாணவன், மதில் சுவர் இடிந்து விழுந்து இறந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி லட்சுமி. இவர் களது மகன் முரஷரி (15). குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.                 ...

Read more »

கர்ப்பிணி பெண் தீயில் கருகி பலி

பண்ருட்டி :                  கர்ப்பிணி பெண் தீயில் கருகி இறந்தார். பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் நாகஜோதி மனைவி சிவகங்கா(23).  இவர்களுக்கு திவாஸ்(2) என்ற ஆண் குழந்தை உள்ளது. தற் போது  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகங்கா தனது குழந்தை திவாசிற்கு கொடுப்பதற்காக பால் காய்ச்சினார். அப்போது அவரது சேலையில் தீ பரவியது. உடல் கருகிய சிவகங்காவை ...

Read more »

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உண்டியல் உடைத்து திருட முயற்சி

திட்டக்குடி :                  பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.                 பெண்ணாடத்தில் அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், கோவில் பூட்டப்பட்டது. ...

Read more »

டாஸ்மாக் கடை முன் மறியல் : மனித நேய மக்கள் கட்சியினர் கைது

சிதம்பரம் :                     சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.                  டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் சிதம் பரம் லால்கான் தெரு டாஸ்மாக் கடை முன்பு மறியல் போராட்டம்...

Read more »

பிச்சாவரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை துவங்கியது

கிள்ளை:              சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை துவங்கியுள்ளது. கோடைக் காலம் துவங்கியதால் சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை துவங்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.                ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior