உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 25, 2011

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த வீடியோ காட்சிகள்

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த
வீடியோ காட்சிகள்

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/202948_1793673944_2071142_q.jpg














Read more »

இந்தியாவில் 25, 50 பைசா நாணயங்கள் ஜூன் 29-ம் தேதி முதல் செல்லாது


 
       இந்தியாவில் ஜூன்  29-ம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது. இதுகுறித்த அறிவிப்பை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 29-ம் தேதி முதல் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நாணயங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

Read more »

14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை-1ல் தொடக்கம்


  
 
நெய்வேலி:
 
             ஜூலை 1 முதல் 10-ம் தேதி 14-வது  நெய்வேலி புத்தகக் கண்காட்சி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அரங்கு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. 
 
             பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுத்து மின்சாரம் தயாரித்து அதை தென் மாநிலங்களுக்கு விநியோகத்து வரும் என்.எல்.சி. நிறுவனம் சமூகப் பார்வையோடு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. தற்போது 14-ம் ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கான அரங்குகள் அமைக்கும் லிக்னைட் அரங்க வளாகத்தில் நடைபெறுகிறுது. சுமார் 160 அரங்குகள் அமைக்கும் பணியை என்.எல்.சி. நகர நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.  
 
               புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகத்தை மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தை போக்கும் வகையில், சில பொழுதுபோக்கு அம்சங்களும் இக்கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக ரங்கராட்டினம், டோராடோரா, பொம்மை ரயில் உள்ளிட்ட பல விளையாட்டு சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. இப் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கவுள்ளனர்.    பு
 
             த்தகக் கண்காட்சி நிகழ்வின் போது, மாலை நேரங்களில் லிக்னைட் ஹாலில் தினம் எழுத்தாளர், ஒரு பதிப்பாளர் பாராட்டி கெüரவிக்கப்படுவதோடு, ஒரு புத்தகமும் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து சிறந்த கலைஞர்களைக் கொண்ட கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  புத்தகக் கணகாட்சி அரங்கினுள் பார்வையிட வரும் பார்வையாளர்கள் சற்று களைப்பாறும் விதமாக கண்காட்சி அரங்க வளாகத்திலேயே தரமான, விலை குறைவான சிற்றுண்டி அங்காடிகளும் இடம்பெற்றுள்ளன.
 
           கண்காட்சியை காண வெளியூர்களில் இருந்துவரும் பார்வையாளர்களுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம், புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடம் வரை சென்று வர பஸ் வசதியையும் புத்தகக் கண்காட்சிக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் சிறப்பு என்.எல்.சி. பஸ்களும் இயக்கப்படவுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் புத்தகக் கண்காட்சிக் குழுவின் செயலர் ஜார்ஜ் ஜேக்கப் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சி.செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெறுகிறது. 
 
தினமணியுடன் இணைந்து... 
 
           இன்றைய இளைய சமுதாயத்தினரிடம்  வாசிக்கின்ற பழக்கம் குறைந்து வருகின்ற நிலையில், அவர்களிடம் மீண்டும் வாசிக்கும் பழக்கத்தையும் சுயசிந்தனையுடன் தங்களது கற்பனைத் திறனையும், எழுத்துத் திறைமையையும் வளர்க்கும் விதமாக தினமணி நாளிதழும்-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் கடந்த 13 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மாநில அளவில் கட்டுரைப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. 
 
              இப்போட்டிகளில் ஏராளமான மாணவ,மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இப் போட்டியில் பங்கேற்கும் மாணவ,மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணும்போது, தினமணியும்-நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் மாணவ,மாணவியரிடத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது நிரூபணமாகியுள்ளது. கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு, நாள் இவற்றை பிரசுரிக்கும் முன்னரே, ஒவ்வொரு ஊரிலிருந்தும் பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவியர் தினமணி அலுவலகத்தையும், நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி குழுவுக்கான அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு, எப்போது  கட்டுரைப் போட்டி, அது தொடர்பான செய்தியை பிரசுரித்து விட்டீர்களா என்று கேட்டறிகின்றனர்.  எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறுகதைப் போட்டி நடத்தி, அவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருவதோடு அக் கதைகளை தினமணி கதிரில் பிரசுரித்து வருகிறது. 
 
                   திரைப்படத் துறையினரை ஊக்குவிக்கும் பொருட்டு குறும்படப் போட்டியை நடத்தி, சிறந்த இயக்குநர்கள் அடங்கிய குழுவின் மூலம் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்து அதை இயக்கிய இயக்குநர்கள், பங்கேற்ற கலைஞர்களுக்கு பரிசுத் தொகையையும் வழங்கிவருகிறது.
 
 
 
 

Read more »

கடலூரில் மீன்கள் வரத்து குறைவு: மீன் விலை கடும் உயர்வு


கடலூர் கடலில் வெள்ளிக்கிழமை கிடைத்த வஞ்சரம் மீன்கள்.
 
கடலூர்:

             கடலூரில் மீன்கள் வரத்து பெருமளவுக்குக் குறைந்ததால், மீன்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன.  தமிழக மக்களின் உணவுத் தேவையில் பெரும்பகுதியை கடல் உணவுகள் பூர்த்தி செய்கின்றன. 

              ஆனால் தமிழக தென் மாவட்டங்களில் இலங்கை கடற்படையினரின் தொல்லை, வட மாவட்டங்களில் அந்நிய நாட்டு மீன்பிடிக் கப்பல்கள், கடலில் கலக்கும் ரசாயன ஆலைக் கழிவுகள் உள்ளிட்ட காரணங்களால் மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.  62 கி.மீ. நீளம் கடற்கரை கொண்ட கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 30 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்படுவதாக, மீன் வளத்துரையின் பழைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள், கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளன. 

                சுனாமிக்குப் பிறகு வங்கக் கடலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் ரசாயனக் கழிவுகள், மீன் பிடித் தொழிலைக் கேள்விக் குறியாக மாற்றி வருவதுடன், மக்கள் உடல் நலனுக்கு ஏற்ற உணவான மீன்கள் உள்ளிட்ட கடல் பொருள்களின் தட்டுப்பாடு விலையேற்றத்தை உருவாக்கி, மக்களுக்குக் கடல் உணவு கிடைக்காத நிலையைத் தோற்றுவித்து வருகிறது.   மீன்களின் இனப் பெருக்கத்துக்காக ஏப்ரல் 15-ம் தேதிமுதல் 45 நாள்கள் தடை விதிக்கப்பட்டபோதிலும், அடுத்து வரும் காலங்களில் அப்படியொன்றும் மீன்கள் அபரிமிதமாகக் கிடைத்துவிடவில்லை என்கிறார்கள் மீனவர்கள். 

                 நாளொன்றுக்கு 100 டன் மீன்கள் கிடைத்து வந்த கடலூரில், மக்கள் விரும்பும் மீன் ரகங்களுக்கு சமீபகாலமாக பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மத்தி மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. அவைகளை கடலூர், அருகாமை மாவட்டங்களில் விரும்பி உண்பதில்லை. எனவே கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு  அனுப்பப்படுகின்றன.   அவ்வப்போது குறைந்தளவில் கிடைக்கும் பால் சுறா, சூரை, கோலா, திருக்கை,  வஞ்சரம் உள்ளிட்ட சில வகை மீன்கள், திடீர் திடீர் என அதிகமாக 5 டன்கள் வரை கிடைக்கின்றன. 

              இந்த வகை மீன்களும், வெளி நகரங்களுக்கே அனுப்பப்படுகின்றன. பிற கடலோர மாவட்டங்களிலும் மீன்கள் கிடைப்பது குறைந்து வருவதால், கடலூரில் கிடைக்கும் கொஞ்ச மீன்களும், நல்ல விலை கருதி, வெளி மாவட்ட வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு விடுகின்றன.  இதனால் கடலூரில் மீன்கள் கிடைப்பது அரிதாகி, விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. எப்போதும் 50 பேருக்குக் குறைவின்றி மீன் விற்கும் பெண்களால் நிரம்பி வழியும் கடலூர் முதுநகர் மீனவர் அங்காடியில், வெள்ளிக்கிழமை 3 பேர் மட்டுமே விற்பனை செய்து கொண்டிருந்தது வியப்பை அளித்தது.   

             முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை வஞ்சரம் மீன் விலை கிலை ரூ. 500 ஆக உயர்ந்தது. இதனால் மீன் வாங்க வந்த பலரும், கோழிக்கறி வாங்கிக் கொள்ளலாம் என்று திரும்பிச் சென்றனர். கிலோ ரூ. 80 முதல் ரூ. 100 வரை விற்கும் சங்கரா மீன் வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 180 ஆகவும், கிழங்கா மீன் ரூ. 200 ஆகவும் உயர்ந்து விட்டது.  கடலூரில் பிடிபடும் மீன்கள் பெரும்பகுதியை வெளிமாவட்ட வியாபாரிகள் வாங்கிச் சென்று விடுகிறார்கள். வெள்ளிக்கிழமை கடலூர் மீன் இறங்கு தளத்தில் கிலோ வஞ்சரம் மீன் ரூ. 350 க்கும், கிழங்கா மீன் ரூ. 120 க்கும், சங்கரா மீன் ரூ. 80 க்கும், பிற வகை மீன்கள் ரூ. 40 முதல் ரூ. 50 க்கும் வெளிமாவட்ட வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டதாக மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார். 

                 மீன்கள் பற்றாக்குறைக்குக் காரணம் பற்றிக் கேட்டதற்கு சுப்புராயன் கூறுகையில், கடலூர் கடற்கரையிóல் 20 கி.மீ. தூரத்துக்குள் மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது.  அதற்குக்குமேல் 30 கி.மீ. தூரத்தில் ஆழ்கடலில் தைவான், ஜப்பான், நார்வே உள்ளிட்ட பிற நாட்டுக் கப்பல்கள் மீன்களை பெருமளவு பிடித்துத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்று விடுகின்றன.  20 கி.மீ. தூரத்துக்குள் உள்ள நமது கடல் பகுதிகளில், கடல் நீரோட்டம் அடிக்கடி மாறுவதால், மீன்கள் கிடைப்பது இல்லை. ரசாயன ஆலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமலேயே தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவது மீன்களை இடம்பெயரச் செய்து விட்டன.

             மக்கள் உணவுத் தேவையையும், மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இப் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதே இல்லை. நவீன விசைப் படகுகளுடன் மீன் பிடித் தொழில் செய்தவர்களில் 25 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளில் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர் என்றார். 




Read more »

விருத்தாசலம் ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் வெண்கல சாமி சிலைகள் திருட்டு


திருடுபோன சிலைகள் குறித்த ஆவணங்களை பார்வையிடுகிறார் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன் (இடமிருந்து 2-வது). (வலதுபடம்) காணாமல் போன வெண்கலச் சிலைகள்
 
விருத்தாசலம்:

             விருத்தாசலம் அருகே சத்தியவாடி கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் இருந்த 5 வெண்கல சிலைகளை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு திருடிச்சென்றுள்ளனர்.

             வியாழக்கிழமை மாலை, வழிபாடுகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை, காலை கிராம மக்கள் கோயிலில் பார்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. கோயிலில் இருந்த உற்சவ மூர்த்தியான சுமார் 2 அடிக்குமேல் உயரமுள்ள ஆலந்துறை ஈஸ்வரர், அழகிய பொன்மணி அம்மன் சிலை, அதேபோல் சுமார் 2 அடி உயரமுள்ள அஸ்திரதேவர் சிலை, விநாயகர் சிலை, சுமார் அரை அடி உயரமுள்ள சண்டிகேஸ்வரர் சிலை உள்ளிட்ட 5 வெண்கலச் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

            இதுகுறித்து அறநிலையத் துறை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியராஜன் போலீசா ருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அறிவழகன், கோயிலுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் கோயில் பின்புறம் உள்ள குளத்தில் சிலைகளை வீசியிருப்பார்களா? என தேடிபார்த்தனர். காணாமல் போன சிலைகள் விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். 

போதிய பராமரிப்பு இன்றி: 

                ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் முகலாயர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது என்றும், சிலர் 200 ஆண்களுக்கு முன்னர் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர்.    கோயில் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த கோயில் இந்து அறநிலையத் துறையின்கீழ் செயல்பட்டும் கோயிலில் போதிய பாதுகாப்பு, பராமரிப்பு வசதிகள் இல்லாமல் கோயில் கோபுரம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

             அதேபோல் மூலவர் அறையில் உள்ள கதவுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. கதவுகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் மர்ம நபர்கள் எளிதாக சிலைகளை திருடிச் சென்றுள்ளனர் என அறியப்படுகிறது. இதனால், அறநிலையத்துறை பழைமைவாய்ந்த கோயில்களை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






Read more »

கடலூர் சிப்காட் பகுதி மக்களுக்கு புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்

கடலூர்:

           கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி, புற்றுநோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
  
வியாழக்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தலைமையில் நடந்த, கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் தெரிவித்த கருத்துகள்:

              கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து மழைநீர் வெளியேற, வடிகால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் ரசாயனக் கழிவுகள் வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வடிகால்கள் மூலம் வெளியேறும் கழிவுநீரை மாசுக் கட்டுபாடு வாரியம் அடிக்கடி சோதனையிட வேண்டும். 

             அத்தகைய வடிகால்களை, பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்ய வேண்டும். கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் வயதானோர் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பரவும் வாய்ப்பு, 2 ஆயிரம் மடங்கு அதிகம் இருப்பதாக, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.எனவே புற்றுநோய் ஆய்வில் ஈடுபடும் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இப்பகுதி மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி மக்களுக்கு சுத்தமான காற்று கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

             பல தொழிற்சாலைகள் ஆம்னி பஸ்களில் ரசாயனப் பொருள்களை அனுப்பி வைக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது.எனவே ஆம்னி பஸ்களில் ரசாயனப் பொருள்கள் கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும். ஆபத்தான ஆலைகள் பட்டியலில் உள்ள பல ரசாயனத் தொழிற்சாலைகள், பல ஆண்டுகளாக அனுமதி பெறாமல் இயக்கப்படுகின்றன. அனுமதி பெறாத ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்படும் ரசாயனப் பொருள்களை ஏற்றிச் செல்லும் டாங்கர் லாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். 

              ரசாயன தொழிற்சாலைகளில் அவசர காலங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சிப்காட் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அடையாளம் கண்டு, தனியாக வேலி அமைத்து மரங்களை வளர்க்க வேண்டும். தொழிற்சாலைகளில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் கடந்த ஆண்டு மேற்கொண்ட, காற்றில் பரவும் ரசாயனங்கள் குறித்த ஆய்வு விவரங்களை, மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.




Read more »

கடலூரில் ரூ.500க்கு சாதிச் சான்றிதழ் (தட்கல் முறையில்) : பிட் நோட்டீஸ்

கடலூர் :

          "ஐநூறு ரூபாய் கொடுத்தால், உடனடியாக ஜாதிச் சான்று கிடைக்கும்' என, கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த, "பிட் நோட்டீஸ்' பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

               கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் குறைகேட்கும் கூட்ட அரங்க வளாகம் அருகே, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக நுழைவாயிலில், நேற்று காலை, கையால் எழுதப்பட்ட, "பிட் நோட்டீஸ்' ஒட்டப்பட்டிருந்தது. அதில், "எம்.பி.சி., ஜாதிச் சான்று, "அர்ஜென்ட்' ஒரு நாள், ரூபாய் 500. எம்.பி.சி., ஜாதிச் சான்று, 'ஆர்டினரி' 2 நாள், ரூபாய் 200. உடன் அணுகவும், துணை வட்டாட்சியர் பழனி, கடலூர்' என எழுதப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், இந்த நோட்டீசை படிக்க கூடியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர் அலுவலக ஊழியர் ஒருவர், அந்த நோட்டீசை கிழித்து அப்புறப்படுத்தினார். 

இதுகுறித்து, நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்த துணை தாசில்தார் பழனி கூறுகையில்,

               "ஜாதிச் சான்று வழங்க பணம் எதுவும் வாங்குவதில்லை. ஆள் பற்றாக்குறை காரணமாக, சற்று தாமதமாக வழங்கப்படுகிறது. இதனால் பாதிக் கப்பட்டவர் எவரேனும், இந்த நோட்டீசை ஒட்டியிருக்கலாம். இருப்பினும், இதுகுறித்து ஊழியர்களிடம் விசாரிக்கப்படும்' என்றார். 


 பின் குறிப்பு : 

பள்ளி,  கல்லூரி திறந்தாலே இது ஒரு பெரும் பிரச்சனை







Read more »

Suggestions sought from public to improve road safety says Cuddalore Superintendent of Police P. Pakalavan

CUDDALORE: 

        Concerned over the increasing number of road accidents and fatalities, the police have sought suggestions from people, non-governmental organisations, educational institutions and traders on safe travel.

          The exercise has been undertaken on the direction of Deputy Inspector General of Police (Villupuram range) Vinit Dev Wankhade and under the supervision of Cuddalore Superintendent of Police P. Pakalavan.

         Police sources told The Hindu that last year as many as 269 road accidents occurred in the district of which 37 were fatal. This year, as many as 337 road accidents occurred up to May, out of which 44 were fatal. According to a study conducted by police, most of the accidents were resulting from human errors such as drunk driving, reckless driving, parking vehicles on thoroughfares without switching on tail lamps, overspeeding and hitting vehicles going ahead, overtaking vehicles without proper signal, etc.

         The study had identified 66 points across the district as accident-prone areas and taken various measures such as installing signboards, putting up barricades to regulate traffic and speed breakers. Sources said seven special teams, each headed by an Inspector of Police, have been posted at crucial stretches of important thoroughfares such as East Coast Road, Kumbakonam road and Tiruchi road to monitor traffic movement and curb racing tendency among motorists.

            The general public, organisations and road-users could give their suggestions on improving road traffic and preventing accidents either in person or in writing to the 

Additional Superintendent of Police (Crime), 
District Crime Record Bureau, 
Cuddalore, 

or over phone 9445490472.






Read more »

Process for issuing unique identification cards begins in Cuddalore district on June 27

CUDDALORE: 

        The process for issuing unique identification cards will begin at Panruti, Kurinjipadi and Chidambaram blocks on Monday, according to Collector V.Amuthavalli.

In a statement, she said that to start with two villages in each of the three blocks have been identified: 

Poongunam and Ezhumedu in Panruti block; 

North Sirupalaiyur and Bhoothambadi in Kurinjipadi block and

Poonthottam and Thavarthampattu in Chidambaram block.

           The place and timing of the camps would be announced by the tahsildars. Besides taking photographs of all citizens, the imprints of all 10 fingers and impression of the iris would be taken at the camps. The citizens should bring the acknowledgement slips issued by the enumerators, and whatever identity cards at their disposal, such as the Electors' Photo Identity Cards, driving licence, Permanent Account Number cards, ration cards, passports, all in original, to the camps.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior