உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மே 29, 2011

சமூகநலத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் செல்வி ராமஜெயம் ஆலோசனை

கடலூர்:

            முந்தைய தி.மு.க. அரசைவிட, முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் சமூகநலத் துறை திட்டங்கள், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்று தமிழக சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார்.  

          சமூக நலத்துறை அமைச்சர் பொறுப்பு ஏற்றதும், முதல்முறையாக செல்வி ராமஜெயம் சனிக்கிழமை கடலூர் வந்தார்.  மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் ஊழியர்கள் திரளாக வந்து, அமைச்சர் செல்வி ராமஜெயத்தை வரவேற்றனர்.  சமூகநலத் துறை திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.  

பின்னர் சமூகநலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், 

         "முந்தைய ஆட்சியைவிட சமூகநலத் துறை திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக நடத்துவார்.  தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, முதியோர், விதவையர், ஆதரவற்றோர் மற்றும் திருமணம் ஆகாத 50 வயதுக்கு மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ. 500-ல் இருந்து ரூ. 1,000-ஆக உயர்த்தி இருக்கிறார்.  இந்தத் தொகை ஜூன் 1-ம் தேதியில் இருந்து 7-ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டுவிடும் என்றார்.


Read more »

தமிழக அமைச்சர்களுக்கு அரசுக் குடியிருப்புகள் அறிவிப்பு

       தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு சென்னை, கிரீன் வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள இந்த பங்களா வீடுகளில் அமைச்சர்கள் தங்களது குடும்பத்துடன் இன்னும் சில தினங்களில் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

           தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, அக்கட்சியை சேர்ந்த 33 எம்.எல்.ஏ.,க்கள் கடந்த வாரம் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றனர். புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு அரசு சார்பில் பங்களா வீடுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த வீடுகள் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு முக்கிய பிரமுகர்கள் குடியிருப்பில் அமைந்துள்ளன. மொத்தம் 26 வீடுகள் கொண்ட இந்த பங்களா குடியிருப்பில், கடந்த ஐந்து வருடங்களாக தி.மு.க.,வை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் வசித்து வந்தனர்.

       தேர்தலில் தி.மு.க.,தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற அரசு உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து மாஜி அமைச்சர்களும் தங்களது வீடுகளை காலி செய்தனர். இதையடுத்து, அந்த பங்களா வீடுகளை புதிய அமைச்சர்களின் பயன்பாட்டிற்காக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், புதிய அமைச்சர்களுக்கான வீடுகள் ஒதுக்கீடு பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம்:

* ஓ.பன்னீர் செல்வம் (நிதியமைச்சர்)
* செங்கோட்டையன் (வேளாண்மைத்துறை அமைச்சர்)
* விஸ்வநாதன் (மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்)
* கே.பி.முனுசாமி (நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்)
* சண்முகவேலு (தொழில்துறை அமைச்சர்)
* வைத்தியலிங்கம் (வீட்டு வசதித்துறை மற்றும் ஊரக வீட்டு வசதித்துறை அமைச்சர்)
* கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர்)
* கருப்பசாமி (கால்நடைத்துறை அமைச்சர்)
* பழனியப்பன் (உயர்கல்வித்துறை அமைச்சர்)
* சண்முகம் (பள்ளிக் கல்வித்துறை)
* ராஜு (கூட்டுறவுத்துறை அமைச்சர்)
* பச்சைமால் (வனத்துறை அமைச்சர்)
* பழனிச்சாமி (நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்)
* சண்முகநாதன் (இந்து அறநிலையத்துறை அமைச்சர்)
* ராமலிங்கம் (பொதுப்பணித்துறை அமைச்சர்)
* வேலுமணி (சிறப்பு பணிகள் செயலாக்கத்துறை அமைச்சர்)
* சம்பத் (ஊரக தொழில்துறை அமைச்சர்)
* தங்கமணி (வருவாய்த்துறை அமைச்சர்)
* கோகுல இந்திரா (வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்)
* செல்வி ராமஜெயம் (சமூக நலத்துறை அமைச்சர்)
* டி.வி.ரமணா (கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர்)
* ந.சுப்பிரமணியன் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்)
* செந்தில் பாலாஜி (போக்குவரத்துத்துறை அமைச்சர்)
* புத்திசந்திரன் (சுற்றுலாத்துறை அமைச்சர்)
* ஆர்.சிவபதி (விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்)என, 

           மொத்தம் 25 புதிய அமைச்சர்களுக்கு அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன் கூறுகையில்,

             "இங்குள்ள 26 பங்களா வீடுகளுக்கும் புதிய அமைச்சர்களுக்கான வீடுகள் ஒதுக்கீடு பட்டியலை, அரசு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது குடியிருப்பில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். மீதமுள்ள அமைச்சர்கள் இன்னும் சில தினங்களில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் குடியேறுவர்' என்று கூறினார்.

விபத்தில் இறந்த மரியம்பிச்சைக்கு ஒதுக்கப்பட்ட பங்களா வீடு : 

        தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு, அரசு சார்பில் சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான பட்டியல் ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது. அதில், கடந்த சில தினங்களுக்கு முன் கார் விபத்தில் இறந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாரியம்பிச்சைக்கும் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் அவரது வீடு மீதமுள்ள அமைச்சர்களில் ஒருவருக்கு வழங்கப்படலாம்' என தெரிவித்தார். 




Read more »

கடலூர் மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசலே சட்டமன்றத் தேர்தலில் தோல்விக்கு காரணம்

         கட்சியில் புரையோடியுள்ள ஜாதிய உணர்வு மற்றும் கோஷ்டி அரசியல் காரணமாக, தி.மு.க.,வின் கோட்டை என கூறப்பட்ட பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள, 20 தொகுதிகளிலும் தி.மு.க., படுதோல்வி அடைய நேரிட்டுள்ளது' என கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியது:

             ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த தற்போதைய கடலூர், விழுப்புரம் மாவட்டம், தி.மு.க., தேர்தலை சந்தித்த காலத்தில் இருந்தே கோட்டையாக விளங்கி வந்தது.அந்த கால கட்டத்தில் தொண்டர்கள் ஜாதி, மதங்களை மறந்து கொள்கை பிடிப்போடு இருந்தனர். தொண்டர்களை வழி நடத்திய நிர்வாகிகளும் அவ்வாறே செயல்பட்டனர். கொள்கை ஈடுபாடும், ஆற்றல் மிக்கவர்கள் நிர்வாகிகளாக இருந்ததால், மாவட்டமே தி.மு.க.,வின் கோட்டையாக விளங்கியது.

           ஒருங்கிணைந்த மாவட்ட செயலராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் பதவி வகித்தபோது கட்சியில் ஜாதிய உணர்வு மேலோங்கியதால், தொண்டர்கள் ஜாதி வாரியாக பிளவுபட்டனர். அதேகால கட்டத்தில், கட்சியின் பொறுப்புகளுக்கு ஏற்கனவே பொறுப்புகளில் இருந்தவர்களின் வாரிசுகளே நியமிக்கப்பட்டனர். இதனால், காலம் காலமாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் பதவிக்கு வரமுடியாததால் அவர்களின் செயல்பாடு குறைந்தது.

           இந்நிலையில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தை, கட்சியின் நிர்வாக வசதிக்காக, கடலூர் மற்றும் விழுப்புரம் என இரு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு கடலூர் மாவட்ட செயலர் பதவிகளுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், விழுப்புரம் மாவட்ட செயலர் பொன்முடியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடாமல், ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வந்தனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வன்னியர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர்கள் அல்லாதவர்களே, கட்சிப் பதவிகளுக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்கினர்.

           அனைத்திற்கும் மேலாக, மாவட்டத்தில் கட்சி பொறுப்புகளுக்கு வருபவர்கள் தங்களுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டனர். இவர்களை மீறி, கட்சியில் கோலோச்ச முயன்றவர்கள், மாவட்ட செயலர்களால் பல்வேறு வழிகளில் ஓரம் கட்டப்பட்டனர்.

          இவ்வாறு கட்சி ஆரம்ப கால முன்னோடிகளில் ஒருவரான, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் மகன் சம்பத், பழனியப்பன், கடலூர் மாவட்ட செயலராக இருந்த மருதூர் ராமலிங்கம், துரை கிருஷ்ணமூர்த்தியின் மகன் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் உள்ளிட்ட பலர் ஓரம் கட்டப்பட்டனர். இவர்களுக்கு கட்சி பதவி முதல் எம்.எல்.ஏ., சீட் பெற முடியாமல் மாவட்ட செயலர்கள் தடை ஏற்படுத்தி வந்தனர். இதே பாணியை கடந்த தேர்தலிலும் கையாண்டனர். தனது எதிர்ப்பாளர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே, வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்குத் தள்ளி விட்டனர்.

        இவர்களால் ஓரம் கட்டப்பட்ட நிர்வாகிகள், கட்சியில் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க சொந்த கட்சி வேட்பாளர்களையே தோற்கடிக்க, உள்ளடி வேலைகளில் ஈடுபடத் துவங்கியதால் கோட்டையில் ஓட்டை விழத் துவங்கியது. இதே நிலைதான் நடந்து முடிந்த தேர்தலிலும் நீடித்தது.

          கடலூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த அய்யப்பனுக்கு "சீட்' மறுக்கப்பட்டது. அந்த விரக்தியில் அவர் கட்சி வேட்பாளரை தோற்கடிக்க உள்ளடி வேலை செய்தார். அவரை அழைத்து சமாதானம் செய்வதற்கு பதிலாக, அவரை கட்சியை விட்டு நீக்கச் செய்தனர். அவர் வேறு வழியின்றி தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அ.தி.மு.க.,வில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக மாவட்டத்தின் தலைநகர் தொகுதியான, கடலூரில் தி.மு.க., வேட்பாளர் வரலாறு காணாத வகையில் படுதோல்வி அடைய நேரிட்டது.

           பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட சபா ராஜேந்திரன், மாவட்ட செயலரின் எதிரணி என்பதால், அவரை தோற்கடிக்க உள்ளடி வேலைகள் படு ஜோராக நடந்தது. இதேபோன்று மாவட்ட செயலரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போட்டியிட்ட, குறிஞ்சிப்பாடி தொகுதியில் அவரால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து முழுவீச்சில் உள்ளடி வேலைகளை செய்தனர். இதில் உச்சகட்டமாக பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க விழுப்புரம் மாவட்ட செயலரான பொன்முடியும், அவரை தோற்கடிக்க மற்றொரு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் முன்னோடி அமைச்சர் ஒருவரும் உள்ளடி வேலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

        இதே உள்ளடி வேலை விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அரங்கேறியது. இழந்த பெருமையை மீட்க, கட்சியின் தலைமை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, எங்களைப் போன்ற மூத்த தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. இவ்வாறு தி.மு.க., மூத்த நிர்வாகி கூறினார்.


Read more »

கடலூர் செம்மண்டலத்தில் புதிய பேருந்து நிலையம்: ஊரக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

கடலூர் : "

            "கடலூர் செம்மண்டலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறினார். 

கடலூரில் ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத் கூறியது: 

              முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் நலன் கருதி 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை வரும் 1ம் தேதி துவக்கி வைக்கிறார். கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 60 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 525 பேர் 20 கிலோ அரிசி பெறும் பயனாளிகள் ஆவர். இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பாதிரிக்குப்பம் ஊராட்சியில் அரசு விழாவாக வரும் 1ம் தேதி நடக்கிறது. 

         கடலூர் நகரில் நடைபாதை சீரமைக்கப்படும். தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தவிர்க்கப்படும். ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தது போல் சில்வர் பீச் புதுப்பித்து படகு குழாம் சீரமைக்கப்படும். கோடை விழா அடுத்த ஆண்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடலூர் செம்மண்டலத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சம்பத் கூறினார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior