உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 08, 2011

கடலூர் மாவட்டத்தில் பாலித்தீனுக்கு பதில் சணல் பைகளை பயன்படுத்த ஆட்சியர் கோரிக்கை


கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற, சணல் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு முகாமில் பேசுகிறார், மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி. (வலது படம்)
கடலூர்:

           பாலித்தீன் பைகளுக்குப் பதில், சணல் பைகளைப் பயன்படுத்துங்கள் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வேண்டுகோள் விடுத்தார்.  

                தேசிய சணல் வாரியம் மற்றும் கோவை சணல் சேவை மையம் ஆகியன தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, சணல் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு முகாமை கடலூரில் சனிக்கிழமை நடத்தின.  

முகாமைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது: 

               சணல் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த சணல் பொருள்களை அனைவரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.  சணலைக் கொண்டு ஏராளமான பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடியும். மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பலர் தொழில் தொடங்கக் கடன் வேண்டும் என்று கேட்கிறார்கள்.  ஆனால் என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? என்று கோட்டால், 98 சதவீதம் பேரிடம் இருந்து பதில் வருவது இல்லை.  

                மகளிர் சுயழுதவிக் குழுக்கள், முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.÷சணலை மூலப் பொருளாகக் கொண்டு, பல்வேறு பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.  அதற்காக சணல் வாரியம் 3 கட்டப் பயிற்சிகளை அளிக்கத் தயாராக உள்ளது. பாலித்தீன் பைகளைத் தவிர்த்து அதற்கு மாற்றாக சணல் பைகளைப் பயன்படுத்தலாம். சணலை மூலப்பொருளாகக் கொண்டு, துணிகள், கைவினைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் பலவற்றையும் தயாரிக்கலாம். அதன்மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.  

              பெண்கள் சணல் பொருள்கள் தயாரிக்கும் தொழிலை, ஆர்வமுடன் கற்றுக் கொண்டு, சிறுதொழில்களைச் செய்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர். சணல் சேவை மைய அதிகாரி எம்.ராமசாமி, சணல் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் பற்றி விளக்க உரை நிகழ்த்தினார். உலகில் சணல் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 160 லட்சம் டன் சணல் உற்பத்தி செய்யப்படுகிறது. சணல் பொருள்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்காது.  

           பிளாஸ்டிக் பொருள்களின் வரவு, சணல் பொருள்களின் விற்பனையைப் பாதிக்கிறது. சணலை தரம் உயர்த்தப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும் என்று ராமசாமி குறிப்பிட்டார். நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் எஸ்.ராஜகோபாலன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வெங்கடாச்சலம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர்.  மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பலர் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சணல் பொருள்கள் தயாரிப்பு குறித்து விளக்கிக் கூறப்பட்டது.





Read more »

நெய்வேலி வடக்குத்து ஊராட்சியில் 15 ஆண்டுகளாக முறையாக இயங்காத துணை சுகாதார நிலையம்

பாழடைந்த நிலையில் கிடக்கும் அரசு துணை சுகாதார நிலையம்.
நெய்வேலி:

            குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வடக்குத்து ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையம் பாழடைந்த நிலையில் இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக முறையாக   இயக்கங்காமல் உள்ளது.  

              வடக்குத்து ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. 2006-ம் ஆண்டு தேர்தல் வரை பண்ருட்டி தொகுதியில் இருந்துவந்தது வடக்குத்து ஊராட்சி. 30 ஆண்டுகளுக்கு பண்ருட்டி எம்.எல்.ஏ. வாகவும், தமிழக மின் துறை அமைச்சராகவும் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் முயற்சியால் வடக்குத்து ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார தொடக்கத்ல் இயங்கிவந்தது.  ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த துணை சுகாதார நிலையம் போதிய பராமரிப்பின்றியும், நியமிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர் சரிவர இந்த சுகாதார நிலையத்திற்கு முறையாக வந்து செல்லாததாலும், சரிவர இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது துணை சுகாதார நிலையம் பாழடைந்து கட்டடத்தின் உள்பகுதியில் சுவர்கள் இடிந்தும் காணப்படுகிறது. யாரும் அதை பயன்படுத்த முடியாத நிலையில் அக்கட்டிடம் உள்ளது.  

அப்பகுதியைச் சேர்ந்த அப்பாவு என்பவர் கூறுகையில், 

                      இந்த சுகாதார நிலையம் இங்கு அமைக்கப்பட்ட போது, இப்பகுதியைச் சுற்றியுள்ள 22 கிராம மக்கள் பெரும் பயனடைந்தனர். சிறிய காயச்சல் என்றால் கூட இங்குள்ள சுகாதாரப் பணியாளரிடம் கூறி ஏதேனும் மாத்திரை வாங்கிக் கொள்வோம், கர்ப்பிணிகளுக்கும் பெரிய உதவியாக இருந்தது.  நாளடைவில் இந்த துணை சுகாதார நிலையத்தை மாவட்ட நிர்வாகம் மறந்தே போய்விட்டது.

               தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏ நகரப் பகுதிகளையும் மட்டும் பார்வையிட்டு சென்று விடுவதால், கிராமத்திலிருந்து இந்த துணை சுகாதார நிலையம் பாழடைந்து விட்டது. இந்த சுகாதார நிலையத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள பெண் பணியாளர் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மாதம் ஒரு முறை வருவார், அதோடு சரி. அவரும் துணை சுகாதார நிலையம் குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என காத்திருந்து பலனில்லை என்றார் அப்பாவு.  

இதுகுறித்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர் கூறுகையில், 

                 இந்த சுகாதார நிலையத்துக்கென ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் அப்பகுதியில் தினநதோறும் கிராம மக்களை சந்தித்து சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்றார். கட்டடம் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.




Read more »

சிதம்பரத்தில் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் பழைய காவலர் குடியிருப்பு




இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய காவலர் குடியிருப்பு. (உள்படம்) புதர் மண்டிய பகுதி.
 
சிதம்பரம்:
 
         சிதம்பரத்தில் உள்ள பழைய போலீஸ் குடியிருப்பு புதர் மண்டியும், சாக்கடை நீர் தேங்கியும், பழுதடைந்த கட்டடத்துடன் குடியிருக்க தகுதியற்ற மிக மோசமான நிலையில் உள்ளது.  
 
              சிதம்பரம் - சீர்காழி சாலையில் கோட்டாட்சியர் வீடு அருகில், பழைய போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு கட்டடங்கள் முற்றிலும் பழுதடைந்துள்ளன.  குடியிருப்புக்குச் செல்லும் வழியில் செடிகள் மற்றும் புதர்கள் மண்டி உள்ளன. அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கியும் உள்ளது.  பழைய போலீஸ் குடியிருப்பில் மொத்தம் 21 வீடுதள் இதில் 15 வீடுகள் முற்றுலும் சேதமடைந்துள்ளதால் அவற்றில் காவலர்கள் யாரும் குடியேறாமல் காலியாக உள்ளன. 
 
             மீதிஉள்ள சுமாரான 6 வீடுகளில் போலீசார்  வசித்து வருகின்றனர். இதனால் சிதம்பரம் கோட்டத்தில் பணியாற்றும் போலீஸôருக்கு போலீஸ் குடியிருப்பில் வீடு கிடைக்காததால் வெளியில் அதிக வாடகைக்கு வசித்து வருகின்றனர். பழைய போலீஸ் குடியிருப்புக்கு அருகில் புதிதாக குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் மொத்தம் 21 வீடுகள். இதில் இன்ஸ்பெக்டருக்கு ஒரு வீடும், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 2 வீடும், காவலர்களுக்கு 18 வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  சிதம்பரம் நகரம், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் பணியாற்றுகின்றனர்.  
 
             ஆனால் மொத்தம் பழைய போலீஸ் குடியிருப்பு, புதிய போலீஸ் குடியிருப்பு 2-ம் சேர்த்து மொத்தம் 27 வீடுகள்தான் உள்ளன. இதனால் போலீசார்  பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மேலும் போலீசார்  குடியிருப்புக்கு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கிடையாது. எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் அப்பகுதியில் உள்ள பழைய குடியிருப்பை தாற்காலிகமாக சீரமைக்கவும், மேலும் புதிதாக வீடுகள் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே போலீஸôரின் எதிர்ப்பார்ப்பாகும்.  
 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்டத்தில் செய்தித் துறை சார்பில் அரசு சாதனை விளக்கத் திரைப்படம்


கடலூர் அருகே மதலப்பட்டு கிராமத்தில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையால் திரையிடப்பட்ட அரசு விடியோ திரைப்படக் காட்சி.
கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில், அரசின் சாதனை விளக்க, விடியோ திரைப்படக் காட்சி திரையிடப்பட்டு வருவதாக மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா அண்மையில் தெரிவித்தார்.  

மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

             தமிழக அரசு செய்தி, மக்கள் தொடர்புத்துறை சார்பில், முதல்வர் பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகள், தமிழக அரசின் சாதனைகள், நல திட்டங்கள், செயல்பாடுகள், கடலூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் அடங்கிய "மலர்ந்தது அம்மாவின் பொற்கால ஆட்சி' என்ற செய்தி தொகுப்பு மலர் கிராமங்களில் திரையிடப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி, மக்கள் தொடர்புத்துறை வாகனம் மூலம், மாலை நேரங்களில் இந்த விடியோ படக்காட்சி நடத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமை கடலூர் பஸ் நிலையத்திலும், புதன்கிழமை குண்டு உப்பளவாடி, பெரியகங்கனாங்குப்பம் பகுதிகளில் படக்காட்சி காண்பிக்கப்பட்டது.  

                8-ம் தேதி கிளிஞ்சிக்குப்பம், சிங்கிரிகுடி, 9-ம் தேதி புதுக்கடை, செல்லஞ்சேரி, 10-ம் தேதி காரணப்பட்டு, பள்ளிப்பட்டு, 11-ம் தேதி நல்லாத்தூர், தென்னம்பாக்கம், 12-ம் தேதி தூக்கணாம்பாக்கம், எம்.பி.அகரம் ஆகிய இடங்களில் மாலை 7 முதல் 9 மணி வரை விடியோ படக்காட்சி நடைபெறும். பொதுமக்கள் இந்த விடியோ படக் காட்சிகளைக் கண்டு, அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 




Read more »

சிதம்பரத்தில் தாய்ப்பால் வார விழா



சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தாய்ப்பால் வாரவிழாவில் பேசுகிறார் இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம்
சிதம்பரம,:
 
           வளர் இளம்பருவத்தினர் வளமுடன் வாழ தங்களது உடல், மனம் ஆகிய இரண்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.  
 
              சிதம்பரம் ரோட்டரி சங்கம், இன்னர்வீல் சங்கம், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம் ஆகியவை இணைந்து தாய்ப்பால் வார விழாவை வாரம் முழுவதும் கொண்டாடுகிறது.   இவ்விழாவுடன் உப்பு கரைசல் தினம் மற்றும் வளரும் இளம்பருவத்தினர் தினம் ஆகியவை சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ம் தேதி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் தாய்ப்பால் வாரவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.  
 
விழாவில் இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்க தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் வி.சிவப்பிரகாசம் பேசியது:  
 
              குழந்தை பருவத்துக்கு, வளர்ந்தவர்களுக்கும் நடுவில் உள்ளவர்கள் இளம் பருவத்தினர். இவர்கள் பிரச்னைகள் வித்தியாசமானது. இப்பருவத்தில் வேகமாக வளர்ந்து எடை 25 கி.கி. கூடுகிறது.÷உயரம் 25-30 செ.மீ. அதிகமாகிறது. அதிக வளர்ச்சி காரணமாக நிறைய சத்துப்பொருள்கள் தேவைப்படுகிறது.  ÷சரிவிகித உணவு இல்லாத பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுகிறது. கண் பார்வை கோளாறு வருகிறது. எனவே இப்பருவத்தில் உடல், மனம் ஆகிய இரண்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வி.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.  
 
              ரோட்டரி மாவட்ட உதவி கவர்னர் முனைவர் ந.பஞ்சநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தாய்ப்பால் விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு விழாவை தொடங்கி வைத்துப் பேசினார்.  விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஆர்.கிருஷ்ணன் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார்.  அண்ணாமலைப் பல்கலைக்கழக குழந்தை நலப்பிரிவு மருத்துவர் ராமநாதன் தாய்ப்பாலின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
 
               மிட்டவுன் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கேசவன், இன்னர்வீல் சங்கத்தைச் சேர்ந்த வரலட்சுமி கேசவன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ரவிசங்கர் உள்ளிட்டோர் பேசினர். ஆசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். இன்னர்வீல் சங்க நிர்வாகியும், ஆசிரியையுமான ஜி.சுந்தரி நன்றி கூறினார்.  
 
 
 
 

Read more »

நானோ தொழில் நுட்பம் மருத்துவத் துறையில் மாற்றம் ஏற்படுத்தும் : ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

விழாவில் மாணவிக்கு பட்டமளிக்கிறார் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். உடன் (இடமிருந்து) பல்கலைக்கழக முதன்மையர் எஸ். வைத்திய சுப்பிரமணிய
   
                எதிர்கால அறிவியலில் நானோ ரோபோட் பிரதானமாகத் திகழப்போகிறது என்றார் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். 
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 25-வது பட்டமளிப்பு விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.   பேசியது: 

              காலமாற்றங்களுக்கு ஏற்ப அறிவியல் தொழில்நுட்பங்களும் மாறிவருகிறது. இந்த மாற்றங்கள் ஆரோக்கியமானதாகவும், தேவையானதாகவும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்பமும், தொடர்பு தொழில்நுட்பமும் இணைந்து தகவல் தொடர்பு தொழில்நுட்பமாக ஏற்கெனவே மாறிவிட்டது.  மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் இடத்தை நானோ தொழில்நுட்பம் பிடித்துவிட்டது. இந்தச் சூழலில், நானோ தொழில்நுட்பமும், தகவல் தொடர்பு தொழில்நுட்பமும் இணையும் போது மருத்துவத்தில் இன்னமும் பல நவீனங்களை அடையலாம். இதிலிருந்து, நானோ ரோபோட் உருவாக்குவது சாத்தியமாகும். நானோ ரோபோட் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். 

              உடலில் புற்றுநோய் பாதித்த செல்களை மட்டுமே நானோ ரோபோட் கண்டுபிடித்து அழிக்கும். நல்ல செல்கள் உள்ள உடல் பாகங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது. இந்த சிகிச்சை முறைக்கு அதிகம் செலவாகும்.  சாஸ்த்ரா போன்ற ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்கலைக்கழகங்கள் நானோ ரோபோட் தொழில்நுட்பங்களை கட்டுப்படியாகும் செலவில் மருத்துவத்தில் பயன்படுத்துவது குறித்து ஆராயலாம்.  எச்.ஐ.வி. பாதித்தோருக்கு நானோ மருத்துவ சிகிச்சை அளிப்பதால், பாதிக்கப்பட்டவரை மேலும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு உயிர்வாழும்படி செய்ய இயலும். நானோ ரோபோட் என்பதை மரபணு சார்ந்த தயாரிப்புகளாக உருவாக்கும் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும்.  இந்தத் தயாரிப்பு ஒன்றை தென்கொரியா நாட்டில் பார்த்திருக்கிறேன். 

              நம் மாணவர்களாலும், ஆராய்ச்சியாளர்களாலும்கூட இந்தத் தயாரிப்புகளைப் படைக்க இயலும். முடியவே முடியாது என்று கருதப்படுவதை, முடித்துக் காட்டுவதுதான் சரித்திரமாகிறது. முடியாது என்ற தடைக்கல்லை தகர்த்தெறிய வேண்டும்.அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கலை, விளையாட்டு என்று அனைத்துத் துறைகளிலும் ஆக்கப்பூர்வ சிந்தனையாளர்கள்தான் சாதனையாளர்களாகி உள்ளனர். முதன்முதலாக பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ். சுவாமிநாதன், வெண்மை புரட்சிக்கு வித்திட்ட வர்கிஸ் குரியன், இரும்பு தொழிலில் சாதித்த ஜாம்ஷெட்பூர் டாட்டா, கணித மேதை ராமானுஜம் போன்றவர்கள் அந்த வரிசையில்தான் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். 

               நான், கடந்த 10 ஆண்டுகளில் 1.20 கோடி இளைஞர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் தனித்தன்மையுடன் திகழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. சவால்களோடு போராடுங்கள். உயர்ந்த இலக்கை நினைவில் வையுங்கள். அறிவைத் தேடுங்கள். கடினமாக உழையுங்கள். விடாமுயற்சியுடன் போராடுங்கள். இந்த வாழ்வியல் முறைகள்தான் உங்களை உச்சத்திற்கு கொண்டுபோகும் என்றார் அப்துல் கலாம்.  

               விழாவில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன், அப்துல் கலாமுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 4,222 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக வேந்தர் ஆர். கந்தசாமி, முதன்மையர்கள் எஸ். சுவாமிநாதன், எஸ். வைத்திய சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

கலாமிடம் விளக்கம் பெற... 

                 தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு 5-வது முறையாக குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் வந்திருந்தார். இந்த முறை அவர் பல்கலைக்கழக ஆய்வு மையங்களை வெகுவாகப் பாராட்டி பேசினார். தான் எழுதிய இண்டோமிட்டபிள் ஸ்பிரிட், தி பேமிலி அண்ட் தி நேஷன், தி சயன்டிபிக் இந்தியா ஆகிய மூன்று நூல்களையும் பல்கலைக்கழக நூலகத்திற்கு அளித்தார். 

         மேலும், சாஸ்த்ரா மாணவர்கள் தன்னோடு கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், விளக்கங்கள் பெறவும்  




  என்ற இணையதளத்திற்கு வரும்படியும் கேட்டுக் கொண்டார்








.

Read more »

கடலூரில் உலக தாய்ப்பால் வார விழா: அமைச்சர்கள் எம்.சி. சம்பத், செல்வி ராமஜெயம் பங்கேற்பு

கடலூர்:

            குழந்தைகளுக்கு பெண்கள் தாய்ப்பால் கொடுக்க மறுப்பது, தமிழ் கலாசாரத்துக்கே எதிரானது என்று, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார். உலக தாய்ப்பால் வார விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

விழாவில் அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது: 

                பெண்களுக்கான சிறந்தத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் பெண்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய, பிரசவகால விடுப்பு அளித்து இருக்கிறார். ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறவேண்டும் என்பதற்காக, கருவுற்ற தாய்மார்களுக்கு உதவித்தொகையை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி இருக்கிறார் முதல்வர். இது 3 தவணையாக வழங்கப்படும். 

              கருவுற்ற காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதே, இத்திட்டத்தின் நோக்கம். தாய்ப்பால் கொடுப்பதால் வளரும் குழந்தைகள், முழு அறிவு மிக்கவர்களாக, ஆரோக்கியமானவர்களாக வளர்ந்து சமுதாயத்துக்கு நன்மை பயப்பார்கள். தாய்ப்பால் கொடுக்க மறுப்பது தமிழ் கலாசாரத்துக்கே எதிரானது. முத்துலட்சுமி ரெட்டியும், வேலு நாச்சியாரும் பிறந்த தமிழ் மண்ணில், பெண் சிசுக்கொலை என்பதை நினைத்துப் பார்க்க முடிவில்லை. கடலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பெண் சிசுக் கொலை கூடாது என்று நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அவர்கள்தான் பிற்காலத்தில் உலக அரங்கில் சாதனைகள் பல புரிந்து, ஜொலிக்கப் போகிறார்கள் என்றார் அமைச்சர்.

விழாவுக்குத் தலைமை வகித்து சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், "

                குழந்தைகளுக்குத் தாய்ப்பால், 2 வயது வரையிலும் கொடுக்கலாம். இதனால் குழந்தைகள், அறிவுமிக்கவர்களாக, ஆரோக்கியமானவர்களாக வளருவார்கள். பெண்களின் திருமண வயது 18-ஆக இருந்த போதிலும், உடல் ஆரோக்கியம், குடும்ப சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை எண்ணிப் பார்க்கும்போது, பெண்களுக்கு 21 வயதில் திருமணம் என்பதே சரியாக இருக்கும் என்றார்.

           உலக தாயப்பால் வார விழாவையொட்டி, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, அமைச்சர் எம்.சி. சம்பத் பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஊட்டச்சத்து திட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், மருத்துவத் துறை இணை இயக்குநர் மனோகரன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






Read more »

கடலூர் முதுநகரில் கள்ளச் சாராயம் விற்பனை

 http://img.dinamalar.com/data/large/large_290600.jpg

கடலூர்:

           கடலூர் முதுநகர் மார்க்கெட் பகுதியில், பதுக்கி வைத்து சாராயத்தை விற்பனை செய்த, சாராய வியாபாரியை போலீசார் கைது செய்து, 200 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.

            கடலூர் முதுநகர் பகுதியில், கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., வனிதா உத்தரவின்படி, சிறப்பு படை சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், சுப்ரமணியன், நடராஜ், ஏட்டுகள் ஆனந்தவேல், பரமகுரு மற்றும் போலீசார் கடலூர் முதுநகர் பகுதியில், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், பக்தவச்சலம் மார்க்கெட் பகுதியில், ஒரு வீட்டில் சோதனை செய்ததில், 200 லிட்டர் கள்ளச் சாராய பாக்கெட்டுகளைப் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது. உடன், கள்ளச் சாராயம் விற்பனை செய்த, கலியபெருமாள் மகன் ராஜி,30, என்பவரை, போலீசார் கைது செய்து, சாராயத்தை அழித்தனர்.




Read more »

கடலூரில் செயற்கை நகைகள் தயாரிக்கும் பயிற்சி

கடலூர்:
 

கடலூர் தி சுசான்லி குரூப்ஸ் மேலாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:-

              மத்திய அரசு அமைப்பு மூலமாக கடலூர் மஞ்சக்குப்பம் தி சுசான்லி அக்கு பஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையில் வருகிற 14, 15 மற்றும் 20, 21 ஆகிய 4 நாட்கள் பேன்சி நகைகள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நெக்லஸ், ஜிமிக்கி, கம்மல், வளையல், கொலுசு மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேன்சி நகைகள் தயாரிக்கும் முறை செயல் முறையுடன் செய்து காண்பிக்கபடும்.

            கடைகளில் சுமார் ரூ.500 மதிப்பில் வாங்கும் பேன்சி நகைகளை ரூ.100 முதல் 200 க்குள் நாம் கைப்பட தயாரிக்கலாம் இதேபோல் வீட்டில் இருக்கும் பெண்கள் நேரம் கிடைக்கும்போது இதை தயாரித்து விற்பனை செய்தாலே மாதம் கணிச மான தொகையினை சம்பாதிக்க முடியும். bஇதனால் முழுநேர தொழிலாக செய்பவர்களுக்கு மத்திய அரசின் அமைப்பு வழங்கும் இப்பயிற்சியின் மூலமாக வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடனுதவியை பெற்று தொழில் தொடங்கலாம். இப்பயிற்சிக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள். 
 
முன்பதிவு மற்றும் பயிற்சி கட்டணம் விபரங்களுக்கு 98422-43055 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 
 
இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 

Read more »

Birth, death certificates to be issued online in Madurai

http://www.thehindu.com/multimedia/dynamic/00745/06TH_CERTIFICATES_745449f.jpg 


                The government has decided to issue birth and death certificates online.

         The initiative will come into effect in September, before which a government order will be issued. District-level training programmes are under way for health inspectors of Primary Health Centres.

           R.T. Porkai Pandian, Director of Public Health, has written to the Deputy Directors of Health Services of all districts to complete the PHC staff training programme in a week. “We will start issuing computerised birth certificates very soon and it is likely from September. The G.O. is yet to be issued and we are waiting for that,” he told The Hindu on Friday. A training programme for online registration was conducted for health inspectors in Madurai.

            Dr. Porkai Pandian, who is also the Chief Registrar of Births and Deaths, Tamil Nadu government, said that online registration of birth/death particulars would simplify the process for PHC staff and rural population as well.

Health Department officials said, 

            “Online entry training in PHCs Birth and Death Registration System will be completed in a few days.” Once the computerised birth certificates come into vogue, it would help in easy maintenance of data in PHCs. According to R. Abdul Kareem, Assistant Director (Public Health), Madurai district, the new computerised system would help health inspectors to download the birth certificate and issue it at the time of the woman's discharge from PHC after delivery.

           “Since 2009, the birth certificates are being issued at the PHC itself. Earlier, people had to go to the VAO's office to get it. This became simplified due to the Health Department's initiative of giving the birth certificate at the primary health centre level itself,” he said. Computer and internet facilities have been provided to all PHCs and the training session for health inspectors is to orient them on feeding the data. The online birth registration system is being implemented with the technical support of the National Informatics Centre. Birth or death certificates can be given either in Tamil or English as per choice and special software CDs have been handed over to health inspectors of PHCs.

For More Details

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior