உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 04, 2011

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்திலிருந்து 230 பேர் தேர்வு

      ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.  தமிழகத்திலிருந்து 230 பேர் தேர்வு பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.  

              மத்திய பணியாளர் தேர்வாணயம் (யுபிஎஸ்சி) சார்பில் 965 இந்திய குடிமைப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வில் 3.48 லட்சம் பேர் பங்கேற்றனர்.  இதில் 12 ஆயிரத்து 545 பேர் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 844 பேரும் அடங்குவர்.  முதன்மை தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, இந்தியா முழுவதும் 1,930 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.  தமிழகத்திலிருந்து 230 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

               இதில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயின்ற 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயின்ற 72 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அதன் இயக்குநர் சத்யா கூறினார்.  

நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்: 

               மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகம் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது. இதில் ஐ.ஏ.எஸ். மாதிரி நேர்முகத் தேர்வுகள், ஆளுமைக்கான வகுப்புகள், தில்லிக்கு அழைத்துச் சென்று ஒரு மாத காலம் தங்குவதற்கும், உணவு மற்றும் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும் என கல்வியகம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்த விவரங்களுக்கு

             044 - 24358373 என்ற தொலைபேசி எண்ணையும், 9840106162 கைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.  

நேர்முகத் தேர்வு மார்ச்சில் ஆரம்பம்: 

                 நேர்முகத் தேர்வுகள் மார்ச் 22-ம் தேதி தொடங்க உள்ளன. நேர்முகத் தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும்.


தேர்வு  முடிவுகளை  

 

பார்க்கலாம்.  

Read more »

கடலூர் மாவட்டத்தில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை'

கடலூர்:

         கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,165 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாக அறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை தெரிவித்தார். 

 கடலூர் மாவட்டத்தில்

திட்டக்குடி (தனி) தொகுதியில் 90, 
விருத்தாசலம் தொகுதியில் 139, 
நெய்வேலி தொகுதியில் 109, 
பண்ருட்டி தொகுதியில் 160, 
கடலூர் தொகுதியில் 73, 
குறிஞ்சிப்பாடி தொகுதியில் 167, 
புவனகிரி தொகுதியில் 188, 
சிதம்பரம் தொகுதியில் 101, 
காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதியில் 144 
ஆக மொத்தம் 1,165 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவைகளாகக் கருதப்படுகின்றன. 

                 பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள் விவரம், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் பயன்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு விவரம், வாக்குச் சாவடி அடங்கிய பகுதியின் வரைபடம், வாக்குச் சாவடியின் நிலை அறிய அவற்றின் அருகில் அரசியல் தொடர்பில்லாத நபர்களின் விவரம், வாக்குச் சாவடி காப்பாளர்கள் விவரம், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுலர்களின் முழு முகவரி அவர்களின் தொலைபேசி எண்கள் போன்றவை மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டத்தில் இடம்பெற்று இருக்கும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள்

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களைத் தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண்களையும் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை வெளியிட்டார். 

தேர்தல் அறிவிக்கப்பட்டதைக் தொடர்ந்து ஆட்சியர், புதன்கிழமை  அளித்த பேட்டி:

             9 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் அவர்களின் செல்போன் எண்களும் வருமாறு: 

திட்டக்குடி தொகுதி (தனி): 

ஏ.கணபதி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர், கடலூர் 98427-23080.

விருத்தாசலம் தொகுதி: 

கே.முருகேசன், விருத்தாசலம் கோட்டாட்சியர். 94450-00427. 

நெய்வேலி தொகுதி: 

ஆர்.கந்தசாமி, நெய்வேலி நில எடுப்பு தனித்துணை ஆட்சியர். 99941-92532. 

பண்ருட்டி தொகுதி:

டி.திருவேங்கடம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், கடலூர். 98948-21351. 

கடலூர் தொகுதி: 

வி.முருகேசன், கடலூர் கோட்டாட்சியர், 94450-00426.

குறிஞ்சிப்பாடி தொகுதி: 

ஏ.நடராஜன்: முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியர், கடலூர். 94434-83094.

புவனகிரி தொகுதி: 

எஸ்.கல்யாணம், மாவட்ட வழங்கல் அலுவலர், கடலூர். 94450-00209.

சிதம்பரம் தொகுதி: 

எம்.இந்துமதி, சிதம்பரம் கோட்டாட்சியர், 94450-00425.

காட்டுமன்னார்கோயில் தொகுதி (தனி):

சிவி.கேசவன், கலால் உதவி ஆணையர்,  கடலூர். 98424-05631. 

              அனைத்து தொகுதிகளுக்கும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரமும் இயங்கும். தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தொடர்பு கொள்ளலாம். 

அதன் தொலைபேசி எண்கள்:

04142- 220029. 04142- 230651-  219, 247, 213, 214. 

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசில் கட்சிகள்: 

இந்திய தேசிய காங்கிரஸ், 
பாரதிய ஜனதா கட்சி. 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி,
தேசியவாத காங்கிரஸ் கட்சி, 
பகுஜன் சமாஜ் வாடி கட்சி, 
திராவிட முன்னேற்றக் கழகம், 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 
பாட்டாளி மக்கள் கட்சி.

                தற்போது கிராமங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் 1,200க்கு மேல் வாக்காளர்கள் இருந்தால், அவற்றை ஆண், பெண் வாக்குச் சாவடிகளாகப் பிரிப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.நகரங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் 1,400க்கு மேல் வாக்காளர்கள் இருந்தால், அவற்றை ஆண், பெண் வாக்குச் சாவடிகளாகப் பிரிப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 

                 நேர்மையான தேர்தல் நடத்துவதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் நகரம், கிராமங்களுக்கென 2 குழுக்கள் வீதம், 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியர் ஒருவர், காவல் துணை ஆய்வாளர் ஒருவர், மற்றும் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றார் ஆட்சியர். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கூடுதல் ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

பண்ருட்டியில் வாக்காளர் படிவம் கிடைக்காமல் மக்கள் அவதி

பண்ருட்டி:

               பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் படிவங்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான படிவம் 6, நீக்கல் படிவம் 7, திருத்தம் படிவம் 8, பாகம் மாற்றுதல் 8ஏ, வாக்காளர் அடையாள அட்டை புகைப்படத்துடன் பெறுவதற்கு படிவம் 001சி ஆகியவை கிடைக்காமல் கடந்த 7 நாட்களாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். 

              வாக்காளர்கள் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு துவக்குவது உள்ளிட்ட அனைத்து சான்று பெறுவதற்கும் முகவரி ஆவணமாக பயன்படுவதால் அவசியம் தேவை என்பதால் வாக்காளர் அடையாள அட்டை பெற வேண்டியது அவசியமாகிறது. தொலைந்து போனவர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய வேண்டும் என சென்றால் படிவம் இல்லை வெளியில் விண்ணப்பம் விற்பவர்களிடம் வாங்கி வந்து கொடுங்கள் என வருவாய்த் துறையினர் அலட்சியமாக கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் விண்ணப்பங்களை வெளியே 2 ரூபாய்க்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கவனிக்க:

படிவங்களை தேர்தல் ஆணையத்தில் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாமே, வீண் அலைச்சல் எதற்கு!!!!!!!!!!!!!!

கீழ்காணும் இணைப்புகளிலிருந்து  படிவங்களினை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 



Forms
Forms Details
Form 6
Application for inclusion of name in electoral roll after draft publication of roll (if your name is not included in the draft roll).
Form 7
Application for objection to inclusion of name in electoral roll.
Form 8
Application for correction of particulars in electoral roll.
Form 8A
Application for transposition of entry in electoral roll.
Form 001C Application for obtaining duplicate / Replacement EPIC
Form 6A
Application for  inclusion of name in electoral roll by an Overseas elector







 


Read more »

பொறியியல் படிப்பு கவுன்சிலிங்: மே 16 முதல் விண்ணப்பம் வழங்க முடிவு

            பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்குக்கு மே 16ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்க அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

            தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 478 உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. இன்னும் புதிய கல்லூரிகள் வர உள்ளன. எனவே இடங்கள் மேலும் கூட உள்ளன. அதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங்குக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

               சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் வழக்கம் போல இந்த ஆண்டும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான அனைத்து செயல்பாடுகளும் நடைபெற உள்ளன. கவுன்சிலிங்கும் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகிற மே மாதம் 16ந் தேதி முதல் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் அனைத்து அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும். மேலும் பல வங்கிகளிலும் கொடுக்கப்பட உள்ளது.

               விண்ணப்பம் மே மாதம் 31 ந் தேதி வரை கொடுக்கவும் அன்றே சமர்ப்பிக்க கடைசி நாளாகவும் தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல இந்த வருடம் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிங்கின் முதல் கட்டம் முடிந்த உடன் அதாவது அதற்கு அடுத்த வாரத்தில் தொடங்குவது வழக்கம்.

             என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜுலை மாதம் 1 ந்தேதி முதல் ஆகஸ்டு 14 ந்தேதிவரை நடத்தவும் அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான முன் ஏற்பாடுகளை துணை வேந்தர் பேராசிரியர் பி.மன்னர்ஜவகர், மாணவர்சேர்க்கை தலைவர் பேராசிரியர் ரைமண்ட், பேராசிரியர்கள் நாகராஜன், ராமலிங்கம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Read more »

விஏஓ தேர்வு முடிவுகள் : டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை

           தமிழகம் முழுவதும் கடந்த 20ம் தேதி 3,484 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் இத்தேர்வை சுமார் 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் எழுதினர்.


            இத்தேர்வு எழுதியோரிடம் சிலர், சாதகமான முடிவை பெற்று தருவதாகக் கூறி பணத்தை வசூலித்து வருவதாக நிறைய புகார்கள் வந்தன. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு சீட்டுக்கும் ரூ.2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது போல் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று டி.என்.பி.எஸ்.சி. எச்சரித்துள்ளது.

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,

            ’’தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் விடைத் தாள்கள் தேர்வாணையத்தால் பெறப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விடைத் தாள்கள் அனைத்தும் கணினி மூலம் மிகுந்த பாதுகாப்பிற்கிடையே கவனத்துடன் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுக்கான முடிவுகள் முற்றிலுமாக விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலும் இடஒதுக்கீடு சுழற்சி அடிப்படையிலும்தான் வெளியிடப்படும்.


            விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதில் யாரும் குறுக்கிடவோ தவறு செய்யவோ சாத்தியமில்லை. பொதுமக்களிடம் அல்லது விண்ணப்பதாரர்களிடம் தேர்வின் முடிவினை சாதகமாக பெற்றுத் தர முடியும் என்று தவறான செய்தியை யாரேனும் பரப்பினால் அது உண்மைக்கு புறம்பானது. அதனை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Read more »

Majestic confluence of styles in Chidambaram Natyanjali Festivel


Exponents of various dance forms perform at the Natyanjali festival at Chidambaram Natarajar temple

CUDDALORE:

          A galaxy of performing artists representing eight classical dance forms jointly presented a kaleidoscopic and exhilarating performance in the Natyanjali Festival at Chidambaram Natarajar temple on Wednesday night. The stage for the artists was the ‘Nritya Sangamam,' a confluence of various dance forms on the same platform.

           Though the fete is generally viewed as a congruent point for all classical dance forms, it is for the first time that the event organizer Natyanjali Trust has experimented with the novel theme of putting all the exponents on stage for a single event.

The participants in the singular event are: 

Sadanam Balakrishnan of Kerala – Kathakali; 
Pratiba Prahalad of New Delhi – Bharatham; 
Darshana Jhaveri of Kolkata –Manipuri; 
Ranjana Gauhar of New Delhi – Odissi; 
Vaijayanthi Kashi of Bangalore – Kuchipudi; 
Sheila Mehta of Mumbai – Kathak; 
Sharodi Saikia of Guwahati – Sattriya and 
Gopika Varma of Chennai – Mohini Attam.

           The scintillating performance by the artists kept the audience, including a sprinkling of foreigners, spell bound. Even the uninitiated were found riveted to the ensemble. The programme began with a line-up led by the Kathakali performer in the traditionally elaborate costume. The majesty of the mudras and the fluid movement of the expressive eyes set the tone for evening. Then followed the choreography of the artists, both in tandem and in unison

             The soft and graceful movements of the Manipuri dancer, the mellifluous mobility of the Odissi dancer, the signature spin of the Kathak dancer, the evocative expression of the Sattriya artist, enchanting embellishments of the Mohini Attam artist, the rhythm of the Bharatham artist and the scintillating swivel of the Kuchipudi artist, all presented a visual as well as a musical treat.

        The underlying theme was “Maha Vidhya,” signifying Goddess Sakthi/Durga in her various moods. Devotion and fervour marked the performances and the spirit permeated to the audience too. Trust secretary A.Sambandam told The Hindu that the Trust adopted the innovative method with full cooperation of the artists who had even come down to Chidambaram two days before the event to practice. He said that since all the accompanying musicians could not be accommodated on stage, recorded music was made use of.

Read more »

Cooperation sought for peaceful polls: Cuddalore Collector P. Seetharaman


Collector P. Seetharaman and Superintendent of Police Ashwin Kotnis at a meeting in Cuddalore on Thursday.

CUDDALORE:

            Collector P. Seetharaman has called upon political parties and leaders to extend full cooperation for the peaceful conduct of elections. He was speaking at an all-party meeting held at the District Development Council Hall here on Thursday.

         The Collector, along with Superintendent of Police Ashwin Kotnis, briefed them on the model code of conduct and directed them to remove banners from all over the district within 24 hours. Political parties should conduct public meetings only at the designated places and get prior permission from law enforcing authorities. The campaigns should not go beyond 10 p.m. Political leaders should scrupulously adhere to the Election Commission guidelines.

               Earlier, the Collector and the Superintendent of Police convened a meeting of polling officials and police officers to give them an elaborate account of the poll process. The SP told station officers to put up noticeboards in their respective police stations listing out the places notified for public meetings.  The Collector said that the officials had taken an oath to conduct the elections in a free and fair manner. It was, therefore, their bounden duty to act in accordance to the oath.

           In the evening, the Collector opened a media centre at the Collectorate, meant to disseminate information on election process. He told presspersons that 354 gun licence holders had been instructed to surrender their weapons at the respective police stations till the poll process was completed.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior