உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 10, 2011

திட்டக்குடியில் திருடர்களை பிடிக்க இளைஞர் குழு

திட்டக்குடி:

               திட்டக்குடி பகுதியில் சிறு, சிறு, திருட்டுகள் நடந்தன. கடலு£ர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன் பேரில் திட்டக்குடியை அடுத்துள்ள புத்தேரியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

               கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், ஆவினங்குடி சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், அரியபுத்திரன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் ஜெயராமன், பூமாலை, சம்பத்குமார், பாலகிருஷ்ணன், பூவராகன், லெட்சுமி, செல்வாம்பாள் உட்பட பலர் பேசினர்.
 
           கூட்டத்தில் சட்டம் ஓழுங்கை பராமரிக்கவும், இரவு வேளைகளில் கதவுகளை திறந்து வைத்து படுத்து தூ ங்குவதை தவிர்க்கவும், கிராமங்களில் இளைஞர் குழுக்கள் அமைத்து இரவில் ரோந்து பணி மேற்கொள்ளவும் அடையாளம் தெரியாத நபர்கள் தென்பட்டால் காவல் துறைக்கு தகவல் தரவும், சாராய விற்பனை, சமுக விரோத செயல்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தந்து கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. 
 
                   இதே போல் மருவத்தூரில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சிவகாமி தலைமை தாங்கினார். ஜெயராமன், செல்வராஜி உட்பட பலர் பேசினர். சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், அரியபுத்திரன், முருகேசன் ஆகியோர் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறித்து பேசினர். இந்த கூட்டத்திலும் கிராம மக்கள் காவல் துறையுடன் ஒத்துழைப்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 
 
 
 

Read more »

புறம்போக்கு நிலங்களில் மரம் வெட்டினால் கடும் நடவடிக்கை: கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்

திட்டக்குடி:
 
           கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் திட்டக்குடி வந்தார். அவர் தாலுகா அலுவலகத்தில் பட்டாமாற்றம், நிலம், வீட்டுமனை அளவீடு, இலவச அரிசி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

               இதில் தாசில்தார் சையத்ஜாபர், சமூக பாதுகாப்பு தாசில்தார் கண்ணன், நிலஅளவைத் துறை வட்ட ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்ட சார் ஆய்வாளர் விநாயகம், வட்ட வழங்கல் அலுவலர் சொக்கலிங்கம், துணை தாசில்தார்கள் ராஜா, ராமமூர்த்தி, பால்ராஜ், வருவாய் ஆய்வாளர்கள் செந்தில், விருத்தகிரி, அசேன், நித்தியானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கு பின் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கூறியது:-
 

              முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை உட்பட 8 இனங்களில் திட்டக்குடி தாலுக்காவில் மட்டும் 6 ஆயிரத்து 713 பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. ஜமாபந்தியில் பெறப் படும் மனுக்களில் பட்டா மாற்றம்குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவும், முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிப்போருக்கு தகுதியின் அடிப்படையில் உடனுக்குடன் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

             குறிப்பாக ரேஷன் கார்டுகளில் பெயர், வயது தவறாக இருக்கும் போது வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 3 மாத காலகெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை வெட்டினாலும், மணல் கடத்தல் செய்வோர் மீதும் நடவடிக்கை கடுமையாக இருக்கும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.
 
 
 
 

Read more »

கடலூர் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா: நடிகை சினேகா பங்கேற்பு

கடலூர்:
             

             கடலூர் லாரன்ஸ் சாலையில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி நகைக்கடை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கடையின் முன்பு வாழை, கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.
               விழாவில் நடிகை சினேகா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டதால் அவரை காண நகைக் கடையின் முன்பு ஏராளமான ரசிகர்களும், பொது மக்களும் திரண்டு நின்றனர். காலை 11.50 மணிக்கு நடிகை சினேகா அங்கு வந்தார். அவரை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் மண்டல மேலாளர் கிரேஷியஸ், கிளை மேலாளர் பிரின்ஸ்பாபு, உதவி மேலாளர் ஜோமன் மற்றும் ஊழியர்கள் சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர்.

              அப்போது கடையின் முன்பு திரண்டு நின்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களை பார்த்து சினேகா கையசைத்தார். பதிலுக்கு ரசிகர்களும் கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நடிகையை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸ் காரர்களும் மற்றும் கடை காவலர்களும் நடிகை சினேகாவை பாதுகாப்பாக கடைக்குள் அழைத்துச்சென்றனர்.

                பின்னர் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. நடிகை சினேகா குத்து விளக்கேற்றியும், கேக் வெட்டியும் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நகைக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளின் குறிப்பிட்ட டிசைன்களை எடுத்து அவர் தனது கழுத்தில் அணிந்து வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார். அப்போது அங்கே நின்ற வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருந்த செல்போனில் சினேகாவை படம் பிடித்தனர்.

             சுமார் 1 மணிநேரம் கடையை சுற்றிப்பார்த்து விட்டு நடிகை சினேகா அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா குறித்து கிளை மேலாளர் பிரின்ஸ் பாபு கூறும்போது ரூ.25 ஆயிரத்துக்கு மேல்தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது. கேரளத்தில் 916 தர நகைகளை அறிமுகப்படுத்திய ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரி மேலும் பல புதிய டிசைன்களை பொது மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் எங்களுக்கு சிறப்பான ஆதரவைத் தந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

Read more »

கடலூர் மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஊர்வலம்


கடலூரில் வியாழக்கிழமை நடந்த மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஊர்வலம்.
கடலூர்:

                  கடலூர் மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தினர் கடலூரில் வியாழக்கிழமை ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 

             ஆறுகளில் மணல் எடுப்பது தொடர்பாக மாவட்டம் முழுவதும் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீது போடப்பட்டு உள்ள வழக்குகளை, நிபந்தனையின்றி வாபஸ்பெற வேண்டும். மாட்டு வண்டித் தொழிலாளர் ஒருவரை தாக்கிய, கடலூர் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவந்திபுரம், சி.என்.பாளையம், திருக்கண்டேஸ்வரம். பலாப்பட்டு பகுதிகளில் அதிகாரப் பூர்வமான மணல் குவாரிகளை அமைக்க வேண்டும், மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகையை ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளுக்காக இந்த ஊர்வலம் நடந்தது.  

             திருப்பாபுலியூர் உழவர் சந்தை அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாட்டுவண்டித் தொழிலாளர் சங்க கடலூர் நகரச் செயலாளர் பி.பரணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஏ.ரங்கநாதன், ஜெய்சங்கர், சுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், துணைத் தலைவர் ஆளவந்தார், மாட்டுவண்டித் தொழிலாளர் சங்க சிறப்புத் தலைவர் ஆர்.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் ஆர்.என்.சுப்பிரமணியன், செயலாளர் வி.திருமுருகன், பொருளாளர் வி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பேசினர்.




Read more »

Social Welfare Minister Selvi Ramajayam given relief materials for Fire victims

CUDDALORE: 

       Social Welfare Minister Selvi Ramajayam on Wednesday gave away relief materials to 31 families that lost tenements and belongings in a fire that broke out a couple of days ago.

           The flames that engulfed the rows of houses on Attuthotti Street near Bhuvanagiri on Tuesday night reduced 21 thatched houses to ashes, besides damaging two ‘pucca' houses. The Minister handed over Rs. 2,000 in cash, five kg of rice, a litre of kerosene, and free dhotis and sari to the affected families. Later, the Minister called on five persons, who sustained burns and were undergoing treatment as in-patients at the Chidambaram Government Hospital. Chidambaram Revenue Divisional Officer Indumathi and tahsildar Rajendran accompanied the Minister.



Read more »

Residents block train near Pennadam

CUDDALORE: 

          Residents of Narasingamangalam near Pennadam detained the Vaigai Express for over half-an-hour on Thursday in support of their demand.

          They said that since the gate at the Thazhanallur railway crossing always remained locked, it affected road connectivity. Whenever there was heavy traffic, officials at the Thazhanallur railway station, located about 500 metres from the railway crossing, would come and open the gate on special request. Since, such an arrangement posed immense hardship to commuters, the residents demanded that a gate-keeper be engaged at the level-crossing to operate the gate in a need-based manner.




Read more »

Electric scooters distributed for differently abled students in Cuddalore District

CUDDALORE: 

         Collector V. Amuthavalli gave away electric scooters to five differently abled students here on Tuesday.

Over 18 years of age

      The scooters, each costing Rs. 45,000, were given to students who had completed 18 years of age. The beneficiaries include Sathya of Mel Bhuvanagiri, P.Kumaran of Panruti, A.Ramu of Vepur, P.Latha of Kattumannarkoil and P.Anand of Thiagavalli. District Revenue Officer C.Rajendran and Welfare Officer for Differently abled Persons T. Srinivasan were present.




Read more »

Residents stage demonstration to expedite subway project in Cuddalore



Residents of Cuddalore staging a demonstration in front of the municipality on Wednesday.


CUDDALORE: 

           The members of the Federation of all Residents' Welfare Associations-Cuddalore staged a demonstration in front of the Municipality here on Wednesday urging the authorities to expedite the work on the construction of a subway at the Lawrence Road railway crossing.

        The Federation made an appeal to District Collector V.Amuthavalli to convene a meeting of the officials of the civic body, Highways Department and the Southern Railway to prepare a plan of action to be carried out within a timeframe. It urged the district administration to put such an action plan within the public domain too. General secretary of the Federation M.Maruthavanan said that a year ago the Highways Department had handed over a sum of Rs 2 crore to the municipality to take up the works, but the latter was dilly dallying for so long a period.

            Since the railway crossing was located in the commercial hub of Cuddalore town the frequent closure of gates for facilitating passage of trains was causing immense hardship to the commuters. The civic body continued to remain insensitive to the plight of the travelling public. Besides taking stock of the execution aspect the joint meeting should also pay attention to developing the alternative routes such as the Khammiampettai road and the Jawan's Bhavan road. The Federation also appealed to Rural Industries Minister M.C.Sampath to convene a meeting of the officials and the representatives of the social service organisations to explore the ways and means of expediting the project execution.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior