உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 21, 2012

கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் புனித வளனார் திருவிழா

கடலூர் புனித வளனார் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர் பவனியில் பங்கேற்ற அருள் தந்தையர்கள்.
கடலூர்:

        கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில், திங்கள்கிழமை புனித வளனார் திருவிழா கொண்டாடப்பட்டது.

          கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் திருப்பாப்புலியூர் புனித வளனார் கல்வி நிறுவனங்களில் நடந்த இந்த விழாவில், கடலூர் புதுவை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபை பேராயர் அந்தோனி ஆனந்தராயர் கலந்து கொண்டார்.விழாவை முன்னிட்டு, தூய வளனார் கல்வி நிறுவனங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன.இதையொட்டி மாலையில் தேர் பவனியும் நடந்தது. மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர்அடிகள், மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்னல் அடிகள் மற்றும் அருள் தந்தையர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









Read more »

நாள்காட்டியின் உதவியின்றி நாட்களை சொல்லும் நெய்வேலி இளைஞர்

சங்கரநாராயணன்.
நெய்வேலி:

          நெய்வேலியைச் சேர்ந்த எஸ்.சங்கரநாராயணன் (39), நாள்காட்டியின் உதவியின்றி கடந்த ஆண்டோ அல்லது நடப்பாண்டோ அல்லது அடுத்த ஆண்டிலோ ஏதேனும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு என்ன கிழமை என்றால் தெள்ளத் தெளிவாக, ஓரிரு வினாடிகளில் பதில் தருகிறார். இத்தனைக்கும் இவர் 1-ம் வகுப்போடு படிப்பை மறந்தவர்.இவர் நெய்வேலியை அடுத்த பெரியாக்குறிச்சி பக்தா நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் - மீனாட்சி தம்பதியரின் இளைய மகன். இவரது தந்தை என்.எல்.சி. ஓய்வுபெற்ற ஊழியர். இவரது சகோதரர் சந்திரன், என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் இளம் வயது முதலே வெகுளித் தனமாக இருந்து வந்துள்ளார். பள்ளிக்கு சரியாக செல்லாததால் படிப்பைக் கைவிட்டுள்ளார்.தற்போது நெய்வேலி மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள வணிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகம். இவர் தினந்தோறும் அனைத்துக் கடைகளுக்கும் சகஜமாக சென்று அங்கிருக்கும் தெய்வ உருவப்படங்களுக்கு பூ வைத்துவிட்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.மேலும் சில நற்காரியங்களுக்காக புரோகிதர்களுடன் சென்று புரோகிதத்தின்போது உதவிகளை செய்து வருவதால், புரோகிதர்கள் இவருக்கு கை செலவுக்கு சில ரொக்கங்களை வழங்குவர்.சங்கரநாராயணன் வீட்டில் இவரது வருமானத்தை எதிர்பார்ப்பது கிடையாது.இவருக்கு தனிப்பெருமை, அமாவாசை, பெüர்ணமி தினங்களை சரியாகக் கணித்து கூறுவது, கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி என்ன கிழமை? என்று கேட்டால் ஒரு வினாடிக் கூட தாமதிக்காமல் வெள்ளிக்கிழமை என்கிறார்.மேலும் 28-02-2013 என்ன கிழமை? என்று கேட்டால் வியாழக்கிழமை என பதிலளிக்கிறார். அதேபோன்று 13-09-2011 என்ன கிழமை? என்றால் செவ்வாய்க்கிழமை என பட்டென பதிலளிக்கிறார்.ஒருசிலர் இவரை சற்று மனநலம் குன்றியதாக கூறியபோதும், அவ்வாறு இல்லாமல் வெகுளித் தனமாகவே காட்சியளிக்கும் இவர், விநாயகர் பூஜையை சிறப்பாக செய்து வருகிறார் என்கின்றனர் மந்தாரக்குப்பம் வணிகர்கள்.

Read more »

நாள்காட்டியின் உதவியின்றி நாட்களை சொல்லும் நெய்வேலி இளைஞர்

சங்கரநாராயணன்.
நெய்வேலி:

          நெய்வேலியைச் சேர்ந்த எஸ்.சங்கரநாராயணன் (39), நாள்காட்டியின் உதவியின்றி கடந்த ஆண்டோ அல்லது நடப்பாண்டோ அல்லது அடுத்த ஆண்டிலோ ஏதேனும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு என்ன கிழமை என்றால் தெள்ளத் தெளிவாக, ஓரிரு வினாடிகளில் பதில் தருகிறார். இத்தனைக்கும் இவர் 1-ம் வகுப்போடு படிப்பை மறந்தவர்.இவர் நெய்வேலியை அடுத்த பெரியாக்குறிச்சி பக்தா நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் - மீனாட்சி தம்பதியரின் இளைய மகன். இவரது தந்தை என்.எல்.சி. ஓய்வுபெற்ற ஊழியர். இவரது சகோதரர் சந்திரன், என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் இளம் வயது முதலே வெகுளித் தனமாக இருந்து வந்துள்ளார். பள்ளிக்கு சரியாக செல்லாததால் படிப்பைக் கைவிட்டுள்ளார்.தற்போது நெய்வேலி மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள வணிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகம். இவர் தினந்தோறும் அனைத்துக் கடைகளுக்கும் சகஜமாக சென்று அங்கிருக்கும் தெய்வ உருவப்படங்களுக்கு பூ வைத்துவிட்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.மேலும் சில நற்காரியங்களுக்காக புரோகிதர்களுடன் சென்று புரோகிதத்தின்போது உதவிகளை செய்து வருவதால், புரோகிதர்கள் இவருக்கு கை செலவுக்கு சில ரொக்கங்களை வழங்குவர்.சங்கரநாராயணன் வீட்டில் இவரது வருமானத்தை எதிர்பார்ப்பது கிடையாது.இவருக்கு தனிப்பெருமை, அமாவாசை, பெüர்ணமி தினங்களை சரியாகக் கணித்து கூறுவது, கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி என்ன கிழமை? என்று கேட்டால் ஒரு வினாடிக் கூட தாமதிக்காமல் வெள்ளிக்கிழமை என்கிறார்.மேலும் 28-02-2013 என்ன கிழமை? என்று கேட்டால் வியாழக்கிழமை என பதிலளிக்கிறார். அதேபோன்று 13-09-2011 என்ன கிழமை? என்றால் செவ்வாய்க்கிழமை என பட்டென பதிலளிக்கிறார்.ஒருசிலர் இவரை சற்று மனநலம் குன்றியதாக கூறியபோதும், அவ்வாறு இல்லாமல் வெகுளித் தனமாகவே காட்சியளிக்கும் இவர், விநாயகர் பூஜையை சிறப்பாக செய்து வருகிறார் என்கின்றனர் மந்தாரக்குப்பம் வணிகர்கள்.

Read more »

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் இணையதளத்தில் வெளியீடு

      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
 
  ஆசிரியர் தேர்வு வாரியத்தின்    http://www.trb.tn.nic.in/ 
 
          என்ற இணையதளத்தில் பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை எழுதலாம். 
 
          ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.இந்த இரண்டு தாள்களிலும் 150 மதிப்பெண்ணுக்கு "மல்டிபிள் சாய்ஸ்' வடிவில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இதில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். முதல் தாளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தாளுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையான பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
 
          1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களை முழுமையாகப் படித்தால் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
பாடத் திட்ட விவரம்: 
 
       ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்), கணிதம், சுற்றுச்சூழலியல் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இடம்பெறும்.
 
           இரண்டாம் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்) பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். கணிதம் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அந்தந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தலா 60 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். பிற பாட ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒரு தாளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.
 
நாளை முதல் விண்ணப்பம்: 
 
         தமிழகம் முழுவதும் உள்ள 66 மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 8 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.  இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 4 ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50.
 
 
 
 
 
 
 
 

Read more »

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பெண்களுக்கு தொழில் உதவி

        கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 900 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1 லட்சம் டாலர் நன்கொடை வழங்கவிருப்பதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித் துள்ளது.

       இந்த நன்கொடை மூலமாக வால்மார்ட் பவுண்டேசன் மற்றும் கேர், கடலூர் பகுதியில் முந்திரி செயல்முறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கும், நீடித்திருக்கும் முந்திரி சாகுபடி நடைமுறை கள் மேம்படுத்தப்படும். மேலும் பாதிக்கப்பட்ட முந்திரி செயல்முறை கட்டமைப்பினை மீள்ப்படுத்தி, அதன் மூலம் நீடித்திருக்கக் கூடிய வாழ்வாதாரத்தை மீட்பதற்கு எண் ணியுள்ளன. குப்பைகளை அகற்றுதல், முந்திரி மரம் நடுவ தற்காக நிலத்தை தயார்படுத்துதல், சிறு விவசாயிகளுக்கு உதவுதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.

 இதுகுறித்து வால்மார்ட நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் ராஜ் ஜெயின்அளித்த பேட்டி

         கடலூர் மிகப் பெரிய அளவில் முந்திரி விவசாயம் மற்றும் செயல்முறை நடவடிக்கைகளை கொண்டுள்ளது. தானே புயலால் கடலூர் பெரிதளவில் பாதிக்கப் பட்டுள்ளது. சுமார் 47 உயிர்களை பலி வாங்கியதுடன், 735 கிராமங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் முந்திரி பயிரிடு பவர்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பணியாளர் களின் திறனை மீண்டும் உருவாக்க முடிவு செய்துள் ளோம். சுமார் 900 பெண்கள் உள்பட 3600 பேர் இதன் மூலம் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.






Read more »

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம்

நெய்வேலி:
 
       என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
         பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு மார்ச் மாத தொடக்கத்தில் கரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நெய்வேலி பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் செயலராக இருந்த என்.இளங்கோவன், மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சரவணபவன் அறிவித்தார். இந்த மாநாட்டின் போது, நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உருவாக காரணமாகத் திகழ்ந்த ஜம்புலிங்க முதலியாருக்கு ஒரு சிலையையும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் கடவுளாகக் கருதப்படும் பொன்.முத்துராமலிங்கத் தேவருக்கும் நெய்வேலியில் சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக என்.இளங்கோவன் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior