உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 25, 2011

நான் முதல்வர் ஆனால் முதல் அமைச்சர் இருக்கை இலவசம்

என் உள்ளக் குமுறல் - 2011 சட்டமன்றத் தேர்தல் 

என்னதான் நடக்கிறது நமது தமிழகத்தில் !!!!! 




           அரசியல் ஒரு சாக்கடை, அரசியல் வாதிகள் ஊழல்  பெருச்சாளிகள், குடிமக்கள் இன்று குடிகாரமக்கள்.

தேர்தல் நெருங்கிவிட்டது:

             ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளிடமிருந்து அடுத்தடுத்த தேர்தல் மக்களை ஏமாற்றும், பொய்யான  அறிக்கைகைள் மற்றும் வாக்குறுதிகள்  (ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருப்பார்கள் ) 

கிரைண்டர், மிக்ஸ்சி, பிரிட்ஜ் என்று......................................சில உளறல்கள். 

             இலவசம் ஒன்றை நம்பியே  இரண்டு  பிரதான கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால்  ஆளுங்கட்சியின்  தேர்தல் அறிக்கையின் நகல் எதிர் கட்சியின் தேர்தல் அறிக்கை. இவ்வளவு காலம் கொடுத்த இலவசங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தது. 
 குடிமக்கள் (குடிகாரமக்கள்) ------------------>>>>அரசு  மதுபானக் கடை ------------->>>>  இலவசம்


இலவசம்----------------<<<<<<<<<<<அரசு  மதுபானக் கடை<<<<<<------------------ குடிமக்கள் (குடிகாரமக்கள்)

இலவசம் அளிக்க நன்கொடை அளிக்கும்  நம்ம குடிகார மக்களுக்குத்தான் ஒரு இலவசம் கூட இல்லை..............................அதற்க்கு ஆட்சி அமைக்க போகும் கட்சியின் உடனடி  நடவடிக்கை தேவை...............................................
           


நான் முதல்வர் ஆனால் நம்ம குடிகார மக்களுக்கு கோட்டரும், கோழி பிரியாணியும் பிரதி ஞாயிறு , திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்  கிழமைகளில்  மூன்று  வேளையும் ( வேலை ஏதும் செய்யாமல் இருப்பவர்களுக்கு மட்டும் ) அளிக்கப்படும்.






   

Read more »

2011 உலகக் கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் ஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா


ஆமதாபாத்:

            உலகக் கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.  
 
               பின்னர் ஆடிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.  பாண்டிங் சதம்  ஆமதாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. வாட்சன் 25 ரன்களில் அஸ்வீன் பந்துவீச்சில் போல்டு ஆனார். தொடர்ந்து மோசமாக ஆடியதால் விமர்சனத்துக்குள்ளான பாண்டிங், மிகவும் கவனமுடன் விளையாடினார்.  இதனிடையே ஹாடின் அரைசதமடித்தார். அணியின் ஸ்கோர் 110 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியை யுவராஜ் பிரித்தார். 
 
               67 பந்துகளில் அரைசதமடித்த பாண்டிங் 113 பந்துகளில் சதமடித்தார். அவர் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் டேவிட் ஹசி சற்று அதிரடியாக விளையாடியதால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.  இந்தியா வெற்றி  பின்னர் பேட் செய்த இந்திய அணியில் சேவாக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சச்சின் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.  சச்சின் அடித்த 94-வது அரைசதம் இது. கம்பீர் 50 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். 
 
               பின்னர் ஜோடி சேர்ந்த யுவராஜும், ரெய்னாவும் அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர்.  யுவராஜ் அரைசதமடித்தார். பிரட் லீ வீசிய 46-வது ஓவரில் ரெய்னா சிக்ஸர் ஒன்றை தூக்கினார். பிரட் லீயின் 48-வது ஓவரில் யுவராஜ் பந்தை பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 261 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. யுவராஜ் சிங் 57 ரன்களுடனும், ரெய்னா 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  பேட்டிங்கில் 57 ரன்களை குவித்ததோடு, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய யுவராஜ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 
 
 பாகிஸ்தானுடன்...  
 
மார்ச் 30-ம் தேதி மொஹாலியில் நடைபெறும் அரையிறுதியில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா.  
 
 ஸ்கோர் போர்டு  ஆஸ்திரேலியா  
 
வாட்சன் (பி) அஸ்வின் 25 (38)  
ஹாடின் (சி) ரெய்னா (பி) யுவராஜ் 53 (62) 
பாண்டிங் (சி) ஜாகீர்கான் (பி) அஸ்வின் 104 (118)  
கிளார்க் (சி) ஜாகீர்கான் (பி) யுவராஜ் 8 (19)  
மைக் ஹசி (பி) ஜாகீர்கான் 3 (9) 
 ஒயிட் (சி) & (பி) ஜாகீர்கான் 12 (22)  
டேவிட் ஹசி நாட் அவுட் 38 (26) 
 ஜான்சன் நாட் அவுட் 6 (6)  
 
உதிரிகள் 11  
 
மொத்தம் (50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு) 260  
 
விக்கெட் வீழ்ச்சி: 
 
1-40 (வாட்சன்),
2-110 (ஹாடின்), 
3-140 (கிளார்க்), 
4-150 (மைக் ஹசி),
5-190 (ஒயிட்), 
6-245 (பாண்டிங்). 
 
 பந்துவீச்சு:  
 
அஸ்வின் 10-0-52-2 
ஜாகீர்கான் 10-0-53-2  
ஹர்பஜன் 10-0-50-0 
படேல் 7-0-44-0 
 யுவராஜ் 10-0-44-2 
சச்சின் 2-0-9-0  
கோலி 1-0-6-0  
 
இந்தியா  
 
சேவாக் (சி) மைக் ஹசி (பி) வாட்சன் 15 (22)  
சச்சின் (சி) ஹாடின் (பி) டெய்ட் 53 (68)  
கம்பீர் ரன்அவுட் (ஒயிட்/டேவிட் ஹசி) 50 (64)  
கோலி (சி) கிளார்க் (பி) டேவிட் ஹசி 24 (33)  
யுவராஜ் நாட் அவுட் 57 (65)  
தோனி (சி) கிளார்க் (பி) பிரட் லீ 7 (8) 
 ரெய்னா நாட் அவுட் 34 (28)  
 
உதிரிகள் 21 
 
 மொத்தம் (47.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு) 261  
 
விக்கெட் வீழ்ச்சி:
 
1-44 (சேவாக்), 
2-94 (சச்சின்), 
3-143 (கோலி),
4-168 (கம்பீர்), 
5-187 (தோனி). 
 
 பந்துவீச்சு:
 
பிரட் லீ 8.4-1-45-1 
டெய்ட் 7-0-52-1  
ஜான்சன் 8-0-41-0 
வாட்சன் 7-0-37-1  
கிரெஜா 9-0-45-0 
கிளார்க் 3-0-19-0  
டேவிட் ஹசி 5-0-19-1

Read more »

தொலைநிலைக் கல்வியின் தரம் பாதுகாக்கப்பட வேண்டும்: வா.செ. குழந்தைசாமி

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக 5-வது பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு பட்டம் வழங்குகிறார் பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா

               
                தொலைநிலைக் கல்வியின் தரம் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி கூறினார்.
 
         தனியார் துறையிலும், பொதுத் துறையிலும் சில தகுதியற்ற, நேர்மையற்ற நிர்வாகத்தினரின் செயல்பாடுதான் இதற்கு காரணம். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக 5-வது பட்டமளிப்பு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 
விழாவில் வா.செ. குழந்தைசாமி பேசியது:- 
               ""இந்தியாவில் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்ற சொல் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தவறான வழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நிர்வாக அலுவலர்களாலும், நீதிமன்றத்தால் பணியமர்த்தம் செய்பவர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்படும், குறைகாணப்படும் நிறுவனமாக திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இருக்கிறது. ஆனால், மேலை நாடுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் தரத்திலும், தகுதியிலும் மரபு வழிப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. உயர் கல்வியில், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தேவை முறையாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 
                ஒருவர் பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பெற்ற கல்வி அறிவை வைத்துக்கொண்டு தனது வாழ்நாள் முழுவதும் திறனுடன் செயல்பட முடியாது. ஒவ்வொருவரும் தமது கல்வியறிவை உயர்த்தவேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும் அல்லது விரிவுபடுத்த வேண்டும். எனவே, கல்வி 6 முதல் 23 வயது வரை பெறக்கூடிய ஒன்றாக இல்லாமல், வாழ்நாள் முழுவதும் பெற வேண்டிய பொருளாகிவிட்டது. அத்தகைய கல்வியை, ஒருவர் தொடர்ந்து வகுப்பறைக்குச் சென்று முழு நேர மாணவனாகப் பெற முடியாது. அலுவலகத்தில், தொழில் சாலையில், வீட்டில் அவரவர் வசதிக்கேற்ப கற்கும் வாய்ப்பு உருவாக வேண்டும். 
                 இதுபோல் 1990-ல் தாய்லாந்து ஜாம்டியன் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் அனைவருக்கும் கல்வி என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை மரபு வழிக் கல்வியால் மட்டும் பூர்த்தி செய்துவிட முடியாது. இதற்கு தொலைதூரக் கல்வி முறை மிக அவசியம். எனவே, பொதுமக்களும், அரசு அதிகாரிகளும், கல்வியாளர்களும், நீதிமன்றங்களும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை எளிதான ஒன்றாக எடைபோட்டு விடக் கூடாது. தொலைநிலைக் கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் நாம், தொலைநிலைக் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், தரத்தை பாதுகாக்கவும் தேவையான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் அவர் கூறினார். 
           பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் 27 ஆயிரத்து 261 மாணவ, மாணவிகளில், 3 ஆயிரம் பேருக்கு விழாவில் பட்டம் வழங்கப்பட்டது.
மாணவிக்கு பதக்கம்
 
                பேச்சு-கேட்பியல் பட்டப்படிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஜி.சரண்யாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையுடன் இணைந்த பேச்சு-கேட்பியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பில் (பி.ஏ.எஸ்.எல்.பி.) முதல் மதிப்பெண் பெற்றதற்காக ஆளுநர் பர்னாலா அவருக்கு தங்கப் பதக்கம் அணிவித்தார். 
               பல்வேறு படிப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற 167 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை காது-மூக்கு-தொண்டை பேச்சு-கேட்பியல் மையத்தில் நாட்டிலேயே பிரத்யேகமாக நடத்தப்பட்டு வரும் முதுநிலை கேட்பியல் மறுவாழ்வு பட்டயப் படிப்பை( "பி.ஜி. டிப்ளமோ இன் ஆடிட்டரி ஹாபிட்டேஷன்') முடித்த நான்கு மாணவர்களும் விழாவில் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read more »

கடலூரில் கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் விதித்த 3 நிபந்தனைகள்

கடலூர்:

           கடலூரில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் கருணாநிதி தங்குவதற்கு 3 நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் புதன்கிழமை விதித்தது. இதனால் அவர் அங்கு செல்லாமல்  சிதம்பரத்துக்கு புறப்பட்டு சென்றார்.   

                 முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக, புதன்கிழமை சென்னையில் இருந்து காரில் திருவாரூர் புறப்பட்டுச் சென்றார்.    வழியில் அவர் கடலூரில் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக அரசு விருந்தினர் மாளிகையில் ஒரு அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அறை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் 3 நிபந்தனைகளை விதித்திருந்தார். நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அறை ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 3 நிபந்தனைகள்:    


விருந்தினர் மாளிகையில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது, 
அரசியல் கட்சியினரைச் சந்திக்கக் கூடாது. 
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது என்பன.  

              விருந்தினர் மாளிகையில் முதல்வர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், செய்தியாளர்கள் சிலர் புதன்கிழமை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தனர். அவர்கள் போலீசாரால் தடுக்கப்பட்டனர்.    

                 இதற்கு பதிலளித்த ஆட்சியர், முதல்வருக்கே 3 நிபந்தனைகள் விதித்து இருக்கிறோம்.  அதேநேரத்தில், முதல்வர் கருணாநிதி, கடலூர் விருந்தினர் மாளிகைக்குச் செல்லாமலேயே சிதம்பரம் சென்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இலங்கை அகதிகளிடம் ஐ.நா., அமைப்பு நேர்காணல்

கடலூர்:

               கடலூர் மாவட்டத்தில் வாழும், இலங்கை அகதிகள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை உயர் ஸ்தானிக அமைப்பினர் கடலூரில் நேற்று நேர்காணல் நடத்தினர்.

                     தமிழகத்தில் 112 அகதிகள் முகாம் உள்ளது. இதில் 68 ஆயிரம் பேர் அதிகளாக உள்ளனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு, கடந்த 2009ம் ஆண்டு தமிழக முகாம்களிலிருந்து 800 பேரும், கடந்த ஆண்டு 2,000 பேரும் சொந்த நாட்டிற்கு திரும்பினர். இந்த ஆண்டு இதுவரை 420 பேர் திரும்பியுள்ளனர்.கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, அம்பலவாணன்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள, 31 குடும்பங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப மனு தாக்கல் செய்தனர்.

                இதைத் தொடர்ந்து நேற்று கடலூர் கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் உள்ள, மக்கள் குறைதீர் மன்ற அரங்கில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உயர் ஸ்தானிக அமைப்பின் பார்வையாளர் ஜெனிபர், டில்லி அதிகாரி விஜயபாரதி மற்றும் அதிகாரிகள், மனு செய்த 31 குடும்பத்தினர் மற்றும் நேரில் வந்து ஆஜரான 10 குடும்பத்தினர் உட்பட மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.

Read more »

ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை; ரூ.50 ஆயிரம் அபராதம்

               இணையத்தளங்களில் உள்ள ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து செல்போன்களில் எம்.எம்.எஸ். ஆக அனுப்பும் அநாகரீகம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. திரைமறைவு செக்ஸ் காட்சிகளை வக்ரபுத்தி கொண்ட பலர் பெண்களுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

            எம்.எம்.எஸ்.தொல்லை அதிகரிப்பு குறித்து நாடெங்கும் அதிக அளவில் புகார்கள் வந்தபடி உள்ளன. இதையடுத்து மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது ஆபாச எம்.எம்.எஸ். அனுப்புபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது.  தொடர்ந்து எம்.எம்.எஸ். அனுப்பி மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வழிவகை உள்ளது. தற்போது வழங்கப்படும் இந்த தண்டனை போதாது என்றும், அதை திருத்தவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

               ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பி முதல் தடவை சிக்குபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும். அதே நபர் மீண்டும் ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பினால் ரூ.5 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior