உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

இந்திரா நகரை தலைமையாக கொண்டு வருவாய் குறுவட்டம் உருவாக்க கோரிக்கை

கடலூர் :

                 நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்டு ஒரு புதிய வருவாய் குறுவட்டத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட இளைஞர் காங்., தலைவர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

               கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ் சாவடி ஆகிய குறுவட் டத்தை கொண்ட 59 கிராமங்களுடன் குறிஞ்சிப் பாடி தாலுகா உதயமாகியுள்ளது. இதற்கு அமைச்சர் பன்னீர்செல்வத் திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

               குறிஞ்சிப்பாடி தாலுகாவில 59 கிராம நிர்வாகத்துடன் 75க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் இணைந்து 4 லட்சத்திற் கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 40 கி.மீட்டர் பரப்பளவும் உள்ள பகுதியாகும். தற்போது உள்ள குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி 2 வருவாய் குறுவட்டத்தை வைத்து மக்கள் பணி செய்வது சிரமம். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், சான்றிதழ்கள் அவர்களை சென்றடைய காலதாமதமாகும். எனவே, நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்ட ஒரு புதிய குறுவட்டத்தை உருவாக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டம் புகைப்படம் எடுக்கும் பணி

விருத்தாசலம் :

                    விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக் கும் பணி இரு கட்டமாக கிராமங்களில் நடந்தது.

                இதில் புகைப்படம் எடுக்க தவறியவர்களுக்கு ஜனவரி 20 ம் தேதி முதல் மூன்று மாதங்கள் வரை விருத்தாசலம் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்க தவறியவர்கள் புகைப்படம் எடுக்க வரும் போது ரேஷன் கார்டு, விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்ட அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., விடம் இருந்து ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத் திற்கு குறைவானவர்கள் என்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பக்தர்கள் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி

விருத்தாசலம் :

                        விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பக் தர்கள் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு விரதத்தை முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் சேதுபதி அன் னதானத்தை தொடங்கி வைத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங் கினார். நிகழ்ச்சியில் பாதயாத்திரை நலச்சங்க செயலாளர் ஜெயக்குமார், சங்க தலைவர் குசலவசாமி, நிர்வாகிகள் பெரியசாமி, சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

பண்ருட்டியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

பண்ருட்டி :

                  பண்ருட்டியில் ம.தி. மு.க., சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ம.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத் திற்கு நகர செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந் தில்குமார் வரவேற்றார். மாவட்ட தலைவர் பெருமாள், பொருளாளர் வேலு, ஜெயசங்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா, காஞ்சி பாஸ்கர், வக்கீல் பாஸ்கரய்யா, மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம், மாநில கலைத்துறை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், பழனி, நகர தலைவர் அண்ணாதுரை, துணை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் பேசினர். செந்தில்குமார் நன்றி கூறினார்.

               விருத்தாசலம்: தி.மு.க., சார்பில் மொழிப் போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுகூட்டம் நடந்தது.தலைமை பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அவை தலைவர் அபுபக்கர், நகர மன்ற துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, திராவிடசெல்வி, கவுன்சிலர் சுந்தரேசன், சந்தானலட்சுமி முன்னிலை வகித் தனர். மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன் வரவேற்றார். பேச்சாளர் சுந்தரேசன், விஜயகுமாரி மொழிப் போர் தியாகிகள் குடும்பத் திற்கு நினைவு பரிசுகள் வழங்கி பேசினர். நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் ராமு, ஞானமுத்து, பாவாடை கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கிராம மக்கள் முதல்வருக்கு மனு

சேத்தியாத்தோப்பு :

           ஓடாக்கநல்லூரில் குடிநீர் வசதி கோரி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஓடாக்கநல்லூர் கிராம மக்கள் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

                  கீரப்பாளையம் ஒன்றியம் ஓடாக்கநல்லூர் ஊராட்சியில் ஓராண்டாக குடிநீர் குழாய்கள் பராமரிக்காததால் பல இடங்களில் இயங்கவில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் அலைய வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய, மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும்  நடவடிக்கை இல்லை. தெரு விளக்குகளும் எரியாமல் கிராமமே இருளில் மூழ்கியுள்ளது. ஓடாக்கநல்லூரில் ஊராட்சி அமைப்பு முடக்கி வைத்திருப்பதாக கூறி எந்த திட்டத்தையும் செயல்படுத்த ஒன்றிய, மாவட்ட நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன. எனவே மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் மற்றும் தெருவிளக்கு பிரச்னையினை மாநில அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Read more »

சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி

கிள்ளை :

                    சிதம்பரம் அருகே கிள்ளையில் ஐ.என்.டி.பி., தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.சிதம்பரம் அருகே கிள்ளை ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் நடந்த பயிற்சி வகுப்பில் கவுன்சிலர் கற்பனைசெல்வம் தலைமை தாங்கினார். வினோபா வரவேற்றார். ஐ.என்.டி.பி., நிறுவன விவசாய ஒருங்கிணைப்பாளர் தீப்பாஞ்சான், மீனவ நலவாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, இன்ஜினியர் அரவிந்தன், ராஜாராமன் முன்னிலை வகித்தனர்.

                இயற்கை விவசாயமும், எதிர்கால வாழ்வும் என்ற தலைப்பில் திண்டுக்கல் மண்டல ஐ.என்.டி.பி., ஒருங்கிணைப்பாளர்கள் விக்டர், குமார் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனர். கிள்ளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், தைக்கால் டிரஸ்டி முத்தவல்லி சர்த்தார் சக்காய் நோக்கவுரையாற்றினர். ஊராட்சித் தலைவர்கள் குலசேகர், தனசேகரன்,மோகன்தாஸ் முன்னோடி விவசாயிகள் முகம்மது ஜக்கரியா, இதயதுல்லா, மதிவாணன், மெய்ஞானகுரு ஆகியோர் நவீன வளாண்மை ஓர் ஆய்வு மற்றும் மாற்று செயல்முறை வடிவம் குறித்து விவாதம் நடத்தினர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். விழிகள் கலைக்குழு சார்பில் விவசாயத்தை பாதுகாக்கும் முறைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Read more »

தவறாக பேசியவரின் காலை வெட்டிய இருவருக்கு வலை

நெல்லிக்குப்பம் :

                  மனைவியை தவறாக பேசியவரின் காலை வெட்டியவரை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டியை சேர்ந்த தயாளன் மனைவி சரளா. இவரைப்பற்றி அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் தவறாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தயாளன், சரளா இருவரும் சேர்ந்து விஸ்வநாதன் காலை வெட்டினர். படுகாயமடைந்த விஸ்வநாதன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து தயாளன், சரளாவை தேடிவருகின்றனர்.

Read more »

நடராஜர் கோவிலில் தேசிய கொடியேற்றம்

சிதம்பரம், :

             குடியரசு தினவிழாவையொட்டி 140 அடி உயரமுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசிய கொடியேற்றப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் நுழைவாயிலான கீழ வீதியில் 140 அடி உயர ராஜகோபுர உச்சியில் பொது தீட்சிதர்கள் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக நடராஜருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப் பட்டு கோபுரத்தில் கொடியேற்றினர்.

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் 'பாயின்ட் டூ பாயின்ட்' ரயில் இயக்க எதிர்பார்ப்பு

சிதம்பரம் :

                     விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை தயாராகிவிட்ட நிலையில், கட்டடப் பணிகளுக்கு காத்திருக்காமல், "பாயின்ட் டூ பாயின்ட்' (இடைநில்லா) பயணிகள் ரயில் இயக்கினால் மக்களின் நீண்ட கால அவதிக்கு தீர்வு ஏற்படும்.விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிகள் முழுமை பெற் றுள்ளன. ரயில்வே பொது மேலாளர் (முன்னாள்) ஜெயந்த், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சுப்ரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

                   கடந்த 5ம் தேதி முதல் இப்பாதையில் 15 முறை சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.சேந்தனூர், திருத்துறையூர், பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், வரக்கால்பட்டு, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர், கேப்பர்குவாரி, ஆலப்பாக்கம், புதுச் சத்திரம், பரங்கிப் பேட்டை, கிள்ளை, சிதம்பரம், வல்லம்படுகை, கொள்ளிடம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், ஆனந்ததாண்டவபுரம், நீடூர் ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை, பிளாட்பாரம், ஷெட்டர், நடைமேடை, மின் விளக்கு அமைக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை.

                       ரயில்வே தொலைபேசி இணைப்பு இல்லை. இப்பணிகள் முழுமைபெற குறைந்த பட்சம் நான்கு மாதங்கள் பிடிக்கும். அதுவரை காத்திருக்காமல், முதற்கட்டமாக ரயில்வே தொலைபேசி இணைப்பு மற்றும் சிக்னல் பணிகளை முடித்து, விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே, "பாயின்ட் டூ பாயின்ட்' (இடைநில்லா) பயணிகள் ரயிலாக இயக்க வேண்டும்.இதன் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும். எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்வம் காட்டாத மக்கள் பிரதிநிதிகள்

                  திருச்செந்தூர் - திருநெல்வேலியில் 60 கி.மீ., தூரம் பணியை ஆறு மாதத்தில் முடித்து தற்போது அங்கு கூடுதலாக பயணிகள் ரயில் கள் இயக்கப்படுகின் றன. அங்குள்ள மக் கள் பிரதிநிதிகள் அதிக ஆர்வம் செலுத்தி படுவேகமாக பணியை முடித்தனர்.ஆனால் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் பிரநிதிகளாகிய எம்.பி.,க்கள், எம்.எல். ஏ.,க் கள், சேர்மன் என ஒருவரும் ரயில்வே பணியை பார்வையிட்டு துரிதப்படுத்தவில்லை.

Read more »

மகன் மீது பொய் வழக்கு: தாய் எஸ்.பி.,யிடம் புகார்

கடலூர் :

                    மகன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக தாய் எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இது குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் பெரியசாமி மனைவி கோவிந்தம்மாள் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷிடம் கொடுத்துள்ள மனு:எனது மகன் சிவா சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இதுவரை அவர் மீது போலீசில் எந்த வழக்கும் இல்லை. இந்நிலையில் 20ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு கடலூர் புதுநகர் இன்ஸ் பெக் டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வீட்டிற்கு வந்து சிவாவை அடித்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர். அதனை தடுத்த என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கீழே தள் ளினர். காமராஜ் நகர் குணா-சீத்தா தம்பதியரின் மகள் பிரியாவும், சிவாவும் காதலித்து வந்தனர். இது பிடிக்காத பிரியாவின் தந்தை போலீசாரை ஏவிவிட்டு சிவா மீது வழிப்பறி செய்ய முயன்றார் என பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவாவை வழக்கிலிருந்து விடுவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

Read more »

மனநிலை பாதித்த வாலிபர் தற்கொலை

கடலூர் :

                   மனநிலை பாதித்த வாலிபர் தீக்குளித்து தற் கொலை செய்துக் கொண்டார்.  கடலூர் அடுத்த பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கிருஷ்ணமூர்த்தி(32). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று காலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தார் ஓடி வந்து காப்பாற்றி புதுச்சேரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கூரை வீடு எரிந்ததில் ரூ.1.5 லட்சம் சேதம்

புவனகிரி :

                         கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒன்னரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.புவனகிரி அடுத்த பெருமாத்தூர் புதுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (34). வீட்டிலேயே கவரிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த சிமினி விளக்கு தீப்பிடித்தது அருகிலிருந்த ஸ்கிரீனில் பட்டு கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. அதில் வீட்டில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் சாதன பொருட்கள் மற்றும் கவரிங் செயின்கள் எரிந்து சேதமடைந்தன. சிதம்பரம் தீயணைப்பு நிலைய அதிகாரி சாதிக் அலி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.

Read more »

பண்ருட்டி ரயில்வே கேட் சிக்னல் பழுது: சரக்கு ரயில் நிறுத்தம்

பண்ருட்டி :

                     பண்ருட்டி ரயில்வே கேட் சிக் னல் இயங்காததால், விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில், நேற்று தஞ்சாவூரில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு ரயில், அரை மணி நேரம் நின்றது. கேட் மூடப்பட்டிருந்ததால், சென்னை - கும்பகோணம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

                         விழுப்புரம் - மயிலாடுதுறை 122 கிலோ மீட்டர் அகல பாதை பணி முடிந்ததையொட்டி, 15 முறை சரக்கு ரயில் இயக்கப்பட்டன. நேற்று தஞ்சாவூரில் இருந்து சென் னைக்கு நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் புறப்பட்டது. பகல் 12 மணிக்கு பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷனக்கு வந்தது. விழுப்புரம் செல்வதற்காக, ஸ்டேஷன் அருகே உள்ள சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டது. இருப்பினும் சிக்னல் விழாததால் ரயில், ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. ரயில்வே கேட் வெகு நேரமாக மூடப்பட்டிருந்ததால் பண்ருட்டி - சென்னை சாலையில், போக்குவரத்து ஸ்தம்பித்தது. சிக்னல் இயங்காதது குறித்து, ஸ்டேஷனில் இருந்து வந்த தகவலை தொடர்ந்து, கேட் கீப்பர் 12.20 மணிக்கு கேட்டை திறந்து விட்டார். 12.30 மணிக்கு சாலை போக்குவரத்து சீரானது. பகல் ஒரு மணிக்கு மீண்டும் ரயில்வே கேட் மூடப்பட்டு, சிக்னல் இன்றி ரயில், விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது.

Read more »

போலி ஆவணம் தயாரித்து ரூ. 2.5 கோடி சொத்து விற்பனை கடலூரில் இருவர் கைது

கடலூர் :

                          போலி ஆவணம் தயாரித்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விற்றவர் மற்றும் வாங்கிய இருவரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சங்கரநாயுடு தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி(54). இவர், தற்போது சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர் இன் ஜினியராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன்(57). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான இவர், கோவையில் வசித்து வருகிறார். கடலூர் சங்கரா நாயுடு தெருவில் உள்ள இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 ஆயிரத்து 654 சதுரடி கொண்ட வீட்டில் உறவினர்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த இடத்தை, திருவண்ணாமலையை சேர்ந்த கோபாலகிருஷ் ணன் என்பவர், கடந்த 1984ம் ஆண்டு வடலூர் துணை பதிவாளர் அலுவலகத் தில் தனது மனைவி சுசிலா பெயருக்கு எழுதி வைத்தார். உடன் சுசிலா, அந்த இடத்தை திருவண் ணாமலையை சேர்ந்த காங்., பிரமுகர் ராஜேந்திரனுக்கு பவர் எழுதி கொடுத்தார்.

                         அதனைத் தொடர்ந்து ராஜேந்திரன், இடத்தின் உரிமையாளர்க ளான பாலாஜி, தேவநாதன் பேரில் கடலூர் சஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும் ராஜேந்திரன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் வாய்தா வாங்கி வந்தார். அதே நேரத்தில், பிரச்னைக்குரிய இடத்தை கடலூர் வேணுகோபாலபுரத்தை சேர்ந்த சத்தியநாராயணனுக்கு "பவர்' எழுதிக் கொடுத்தார்.சத்தியநாராயணன் தனது மனைவி கீதா, மஞ்சக்குப்பத்தை சேர்ந்த பாபு, மதிசேகர், புனிதா மற்றும் பண்ருட்டி ரவி ஆகியோருக்கு, 50 லட்சத்திற்கு விற்பனை செய்தார்.

                          இதனை அறிந்து நியாயம் கேட்ட பாலாஜி மற்றும் தேவநதானையும் கொலை செய்துவிடுவதாக சத்தியநாராயணன், மதிசேகர்,பாபு உள்ளிட்டோர் மிரட்டினர். இதைத்தொடர்ந்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, இவர்களின் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கடந்த டிசம் பர் 19ம் தேதி உத்தரவிட்டார். இதன் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் ரத்தினவேல், ஏட்டுகள் பழமலை, ராஜேந்திரன், தனபால் மற்றும் போலீசார் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், உரிமம் இல்லாத சொத்தை விற் பனை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் சத்தியநாராயணன்(40), பாபு (38) ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

Read more »

கடலூர் அருகே பஸ் சிறைபிடிப்பு

கடலூர் :

           கடலூர் அருகே அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அடுத்த தம்மனாம்பேட்டை கிராமத் திற்கு கடலூரில் இருந்து அரசு டவுன் பஸ் (தடம் எண்.26) தினமும் காலை 5.30, மாலை 3.30, இரவு 10.30 மணிக்கு இயக்கப்படுகிறது.

                           நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு கடலூர் பஸ் நிலையத்தில் பஸ் புறப்பட தயாராக இருந்த நிலையில் அதிகளவில் பயணிகள் இல்லாததை காரணம் காட்டி பஸ்சில் இருந் தவர்கள் இறக்கி விடப்பட்டனர். பின் அந்த பஸ் வேறு பகுதிக்கு மாற்றி விடப்பட்டது. ஆத்திரமடைந்த தம்மனாம்பேட்டை கிராம மக்கள் நேற்று காலை 5.30 மணிக்கு கிராமத்திலிருந்து கடலூருக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை சிறை பிடித்தனர். கடலூர் அரசு போக் குவரத்து பணிமனை கிளை மேலாளர் குணசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். முறையாக பஸ் இயக்கப்படும். பஸ் "ட்ரிப்பை' நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று காலை 10 மணிக்கு பஸ் விடுவிக்கப்பட்டது.

Read more »

மினிலாரி கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பலி

கடலூர் :

                                    மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் இறந்தார். காட்டுமன்னார்கோவில் தாலுகா பாளையங்கோட்டை வடக்குபாளையம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 60 பேர் நேற்று முன்தினம் கடலூரில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் மினி லாரியில் திரும்பியபோது குறிஞ்சிப் பாடி அருகே லாரி கவிழ்ந் தது. காயமடைந்த 50 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு வடக்குப் பாளையம் அற்புதமேரி, இருதயமேரி(49) இறந்தனர். சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் மனைவி சகாயசெல்வி(30) நேற்று இறந்தார்.  சிகிச்சை பெற்று வருப வர்களை அமைச்சர் பன்னீர்செல்வம், இந்திய கம்யூ., நல்லக்கண்ணு, எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior