உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 30, 2012

கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையம் துவக்கம்

கடலூர்:

டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையத்தை கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கலெக்டர் துவக்கி வைத்தார்.


 கடலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 2012 முதல் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையத்தை கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கலெக்டர் துவக்கி வைத்தார். மேலும், கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக் குடி ஆகிய நகரங்களில் அஞ்சலகம், இந்தியன் வங்கிகளின் மூலம் விரைவில் டி.என்.பி. எஸ்.சி., ஆன்லைன் சேவை மையம் துவங்கப்படவுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் டி.என்.பி. எஸ்.சி., ஆன் லைன் சேவை மையத்தை அணுகி தங்களைப் பற்றிய விவரங்களை அளித்து பதிவுக்கட்டணம் 50 ரூபாய் மற்றும் சேவை கட்டணம் 12 ரூபாய் செலுத்தி நிரந்தர பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.





Read more »

கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணி

கடலூர்:

 கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை ஊரகத் தொழில் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் எம்.சி.சம்பத், 604 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கி பேசியது:

"கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். மடிக்கணினி மூலம் உலக நிகழ்வுகளையும், பாடம் தொடர்பான விவரங்களையும் பெற முடியும். தமிழகத்தில் 3 கோடி மக்களுக்கு மேல் வாங்கும் சக்தி இல்லாதவர்களாக உள்ளனர். மடிக்கணினியை நன்மைக்குப் பயன்படுத்தி கல்வியில் முதன்மைப் பெற வேண்டும் என கூறினார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு கணினி: 

      விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பிளஸ் 2 மாணவர்களுக்கு எப்போது கணினி வழங்கப்படும்? என கேட்டதற்கு, "ஹார்டுடிஸ்க் தைவானில் தயாரிக்கப்படுகிறது. அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஆகியுள்ளது. இவர்களின் மதிப்பெண் பட்டியலில் மடிக்கணினி வாங்க தகுதி உடையவர்கள் என அச்சிட்டுத் தரப்படும். இதைக் காண்பித்து பின்னர் மடிக்கணினி பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்ரமணியன், துணைத் தலைவர் ஜி.ஜே.குமார், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ப.மணிமேகலை பழனிசாமி, கல்லூரி முதல்வர் மல்லிகாசந்திரன், மாவட்டக் கவுன்சிலர் என்.டி.கந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.











Read more »

சனி, ஏப்ரல் 28, 2012

கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பாடப்புத்தகம் விநியோகம்



கடலூர்,:

   கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10-ம் வகுப்பு பாடப்புத்தங்கள் விநியோகிக்கும் பணி கடலூரில் வியாழக்கிழமை நடந்தது. 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்க வழிவகை செய்துள்ளது. 9-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு புத்தகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 38,375 செட் 10-ம் வகுப்பு புத்தகங்களை பெற்று கடலூர் செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தங்களை விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை நடந்தது. மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கடலூரில் உள்ள செயின்ட் ஜோசப், செயின்ட் ஆன்ஸ், நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,275 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் கூட்டம்: வரும் 30-ம் தேதி காலை 10 மணி அளவில் செயின்ட் ஆன்ஸ் பள்ளியில் தலைமையாசிரியர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் கலந்துகொண்டு புத்தகம் வழங்குவது குறித்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்க உள்ளார்.
 
இதேபோல் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் புத்தகத்துக்கான தொகையை டிடி யாக கொண்டுவந்து மாவட்டத்தில் உள்ள குடோனில் வழங்கி புத்தகத்தை பெற்று செல்லலாம். முதல் நாள் வியாழக்கிழமை 87 மெட்ரிக் பள்ளிகள் 6,359 செட் புத்தகங்களை பெற்றுச் சென்றதாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 









Read more »

புதன், ஏப்ரல் 25, 2012

கடலூர் ஒன்றியத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்:

கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்புப் பணி துவங்கியது. சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பாளர்களுக்கு இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் அடுத்த சாரதா நகரில் நேற்று சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதனை உதவி செயற் பொறியாளர் (சுனாமி) செல்வமுருகன் துவக்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பத்மநாபன் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






Read more »

கடலூரில் அட்சய திருதியையொட்டி நகைகடைகளில் அலைமோதியது கூட்டம்

கடலூர்:

அட்சய திருதியையொட்டி கடலூரில் உள்ள நகைகடைகளில் கூட்டம் அலை மோதியது. அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இந்தாண்டு அட்சய திருதியை நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் இருந்ததால், கடலூரில் நகைகடைகள் அதிகம் உள்ள லாரன்ஸ் ரோட்டில் காலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது  நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம்காத்திருந்து நகைகள் வாங்கும் நிலை ஏற்பட்டது. கூட்டத்தை தவிர்க்க பலர், கடைகளில் ஏற்கனவே  நகைகளை தேர்வு  செய்து  முன்பதிவு செய்து அட்ச ய திருதியைன்று நகைகளை வாங்கிச் öŒன்றனர். நேற்று  மாலை நகைக் கடைகளுக்கு மக்களின் வருகை அதிகரித்ததால், லாரன்ஸ் ரோட்டில் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது. மக்கள் கூட்டத்தை தொடர்ந்து லாரன்ஸ்  ரோட்டில் போலீசார் மாறு வேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






Read more »

கடலூர் மாவட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்: 

கடலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. கலெக்டர் ராஜேந்திர ரத்னு முகாம் அலுவலத்தில் நேற்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு  உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் மற்றும் கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

 கடலூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்காக 23 மையங்கள், 1459 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், 1324 டேட்டா எண்டிரி ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கணக்கெடுப்பு பணி @நற்று முன்தினம் துவங்கியது. நேற்று சா திவாரி கணக்கெடுப்பாளர்கள் கடலூரில் கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் ராஜே ந்திர ரத்னுவிடம் விபரங்களை கேட்டு பதிவு செய்தனர். கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய அனைத்து மையங்களிலும் மண்டல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.




Read more »

திங்கள், ஏப்ரல் 23, 2012

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

நெய்வேலி:

          என்எல்சி அனல்மின் நிலையங்களில் இருந்து மத்திய மின் தொகுப்புக்கு நாள்தோறும் வழங்கப்படும் மின்விநியோக இலக்கைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 ÷இந்நிலையில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்னுற்பத்தி பாதிக்கக் கூடிய சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகி வருகிறது.
 
இந்நிலையில் மக்கள் தொடர்புத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

        என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் நாளொன்றுக்கு 51.5 மில்லியன் யூனிட் மின்சாரம் மத்திய மின்தொகுப்புக்கு வழங்க ஏதுவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ÷இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 57.5 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மின்விநியோகத்தில் புதிய சாதனை படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

       மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சமரசத் தீர்வு காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும், தகவல் தொடர்பாக மக்கள் தொடர்புத் துறையை அணுகி அதன் மூலம் உரிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

அண்ணாமலைப் பல்கலைகே கழக வேளாண்புலதிற்க்கு புதிய காப்புரிமை

சிதம்பரம்:

     ஆகாயத் தாமரையிலிருந்து நானோ தொழில்நுட்பம் வாயிலாக துணிமணிகள் உற்பத்தி செய்ய உதவும் மெல்லிய இதழ்கள் தயாரிக்க, மத்திய அரசிடம் அண்ணாமலைப் பல்கலை. உழவியல்துறை காப்புரிமைப் பெற்றுள்ளது என அண்ணாமலைப் பல்கலை வேளாண்புல முதல்வர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன் தெரிவித்தார் ÷சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் வேளாண் கல்லூரி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வேளாண்புல முதல்வர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன் பேசியது: 

        தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பார்த்தீனியம் களை ஒழிப்பு நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை வேளாண்புலம் ஈடுபட்டது.÷தற்போது ஆகாயத் தாமரையிலிருந்து நானோ தொழில்நுட்பம் வாயிலாக துணிமணிகள் உற்பத்தி செய்ய உதவும் மெல்லிய இதழ்கள் தயாரிக்க மத்திய அரசிடம் அண்ணாமலைப் பல்கலை. உழவியல் துறை காப்புரிமைப் பெற்றுள்ளது.

         மேலும் தற்போது தேசிய வேளாண் புதுமை திட்டத்தின் விரிவாக்கத்துக்கு மத்திய வேளாண் அமைச்சகம் வாயிலாக அதிகப்படியாக ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழக உழவியல் துறையுடன் இணைந்து சர்வதேச நெல் ஆராய்ச்சி மைய பங்களிப்புடன் வெகுவிரைவில் இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைப் பெற்று தரும் புதிய நெல்ரகத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த உள்ளோம். கனடா நாட்டின் நோவா ஸ்கோட்டியா பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்டுள்ள உயர்கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டங்களைப் பெற முடியும் என ஆர்.எம்.கதிரேசன் தெரிவித்தார்.


அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விழாவில் பேசியது:

         மாணவர்களின் உயர்கல்விக்கு ஊக்கம் தரப்படுவதால் இப் பல்கலை மாணவர்கள் பல துறைகளில் தலைமைப் பண்புகளுடன் சிறந்து விளங்குகின்றனர் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.


ஆந்திர மாநில வருவாய்த் துறை தலைமைச் செயலர் ஏ.ஆர்.சுகுமார் பேசியது: 

         இப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நமது நாட்டின் சிறந்த வேளாண் நிறுவனங்களில் சிறப்பான பங்களிப்பு வழங்கி வருகின்றனர் என தெரிவித்தார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு துணைவேந்தர் எம்.ராமநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.÷வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் டி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Read more »

விருத்தாசலத்தில் புதிய மகளிர் கல்லூரி: முத்துகுமார் எம்.எல்.ஏ., கோரிக்கை


விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் பெண்கள் கல்லூரி துவங்க வேண்டுமென முத்துகுமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் முத்துகுமார் எம்.எல்.ஏ.பேசியது:

விருத்தாசலம் தொகுதியிலுள்ள 200 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உயர் கல்வி படிப்புக்காக திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர். இங்குள்ள 65 சதவீதம் பெண்கள் படிக்கும் விருத்தாசலம் அரசு கல்லூரியில் 60 சதவீதம் பெண்கள் இடம் கிடைக்காமல் வெளியேறுகின்றனர். எனவே விருத்தாசலத்தில் புதிய மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும்.பீங்கான் தொழில் நுட்ப கல்லூரியை சீரமைத்து, அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். செராமிக் தொழிற்சாலைகளின் வசதிக்காக அரசு நிதி மூலம் ஓர் கில்லன் (சுடு சூளை) கட்டடித் தர வேண்டும். பொம்மை தொழிலுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும்.தொகுதியிலுள்ள பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர், நவீன கழிவறை கட்டித் தரவேண்டும். அரசு கல்லூரி விளையாட்டு மைதானம் தரம் உயர்த்த வேண்டும். காணாதுகண்டான் கிராமத்திள்ள எரிசாராய ஆலை மற்றும் நல்லூர் ஒன்றியம் ஏ.சித்தூர் ஆரூர் சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீரை மாசு படிவதை தடுக்க வேண்டும்.விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு முத்துகுமார் எம்.எல்.ஏ., பேசினார்.




Read more »

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொருட்காட்சி துவக்கம்

கடலூர்:


கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொழுது போக்கு பொருட்காட்சியை எஸ்.பி., திறந்து வைத்தார். தமிழ்நாடு எண்டர்டெய்ன்மென்ட் பொருட்காட்சி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் துவங்கியது. எஸ்.பி., பகலவன் திறந்து வைத்தார். பொருட்காட்சியின் நிர்வாகி அப்பாஸ் உடனிருந்தார். பொருட்காட்சியில் நூறு அரங்கங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ ஜெயன்ட் வீல் ராட்டிணம், கொலம்பஸ், பிரேக் டான்ஸ், டோரா டோரா உள்ளிட்ட அனைத்து வகையான ராட்டிணங்களும், சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் தாவும் தவளை, கார்ட்டர் பில்லோ, பலூன், மினி ஜீப் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.பொருட்காட்சி தினமும் மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடக்கிறது. இதற்கான நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.















Read more »

சனி, ஏப்ரல் 21, 2012

சீன வானொலி தமிழ்ப் பிரிவின் சிறந்த நேயராக சிதம்பரதைச் சேர்ந்த பி.பாலாஜிகணேஷ் தேர்வு

சிதம்பரம்,:


      மிசீன வானொலி தழ்ப் பிரிவின் சிறந்த நேயராக சிதம்பரத்தைச் சேர்ந்த "ஜோக்' எழுத்தாளர் பி.பாலாஜிகணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த துணுக்கு எழுத்தாளர் பி.பாலாஜிகணேஷ் சீனாவிலிருந்து ஒலிபரப்பப்பாகும் சீன வானொலி தமிழ்ப் பிரிவில் சிறந்த நேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை சீன வானொலி தமிழ் பிரிவுக்கு அறிமுகம் செய்து வைத்த பி.நந்தகுமார் தலைவராக உள்ள திருப்பூர் மாவட்ட காங்கேயம் நேயர் மன்றம், சிறந்த நேயர் மன்றமாக தேர்வு பெற் றுள்ளது. சீன வானொலி சிறந்த நேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.பாலாஜிகணேஷ் தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்திலும் துணுக்கு எழுதிவரும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

Cuddalore Youth hangs self from bridge across Gadilam


CUDDALORE: 

   Call it coincidence or weird twist of fate. A 27-year-old youth, who had rescued a girl who attempted suicide in 2010 at the Gadilam river, hanged himself to death from an old bridge across the same river on Wednesday. 

  Passersby, who saw the body at the busy place in the town early on Wednesday, informed the police. The deceased, Vijayakumar, was a musician living in RP Nagar in Cuddalore and ended his life due to a family dispute, police said. On Wednesday morning, as news about the incident spread, hundreds of people gathered on the river bank and the bridge, where Vijayakumar had used a bedsheet to hang himself. Reacting to Vijayakumar’s death, his friends recalled that in 2010, a girl had jumped into the Gadilam river from the same bridge. While others stood by when the girl was struggling in the water, Vijayakumar jumped in and rescued her. While the girl was saved, Vijayakumar suffered a fracture in the leg. The people and the police had appreciated him for his courageous act.

     “He was very brave. We did not believe the news till we saw his body. We do not know why he decided to end his life leaving his family alone,” they added.  DSP Vanitha visited the spot and conducted inquiries. Cuddalore New Town police have begun investigation.  The police recovered the body and sent it for postmortem. VCK state youth wing deputy secretary Thamaraiselvan visited the spot and consoled Vijayakumar’s family. Vijayakumar is survived by wife Dhavamani (23) and children Dhanushya (4) and Yogesh (3). 












Read more »

வியாழன், ஏப்ரல் 19, 2012

கடலூர் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் பருவ முறை பாடப் புத்தகத் திட்டம் அறிமுகம்

கடலூர் : 

வரும் கல்வியாண்டில் பருவ முறை பாடப் புத்தகத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் புத்தகச் சுமையிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்க உள்ளது. கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 2010ம் ஆண்டு, முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பொறுப்பேற்ற புதிய அரசு சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்து, பழைய பாடத் திட்டமே தொடரும் என அறிவித்தது.

;இதனை எதிர்த்து கல்வியாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்தாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு மாணவர்களின் புத்தகச் சுமையை குறைக்கும் பொருட்டு வரும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பருவ (செமஸ்டர்) முறையை அறிமுகப்படுத்தப்படும் எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகம் இலவசமாக வழங்கப்படும் என கடந்தாண்டு நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாட நூல் கழகம், தொடக்கக் கல்வி (ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை) மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களையும் ஒருங்கிணைத்து ஒரே புத்தகமாகவும், நடுநிலை (6 முதல் 8ம் ) வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களை உள்ளடக்கி ஒரு புத்தகமாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களை உள்ளடக்கி ஒரு புத்தகமாக தொகுத்து அதனை மூன்று புத்தகமாக அச்சிடப்பட்டு வருகிறது.

அதில் முதல் பருவ புத்தகம் காலாண்டு தேர்விற்கும், இரண்டாம் பருவ புத்தகம் அரையாண்டு தேர்விற்கும், மூன்றாம் பருவ புத்தகம் முழு ஆண்டு தேர்விற்கும் நடத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இந்தக் கல்வியாண்டு பழைய முறையிலேயே ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக புத்தகம் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு வகுப்பிற்குமான அனைத்து பாடங்களையும் ஒருங்கிணைத்து அதனை மூன்று பகுதியாக பிரித்து தனித்தனி புத்தகங்களாக அச்சிட கால அவகாசம் இல்லாத காரணத்தினால் தற்போது முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கான புத்தகங்களும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பாடப் புத்தகங்களும் அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் நான்கரை லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டில் வழங்குவதற்கான இலவச பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாட நூல் கழகத்தால் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே உள்ள செயின்ட் மேரீஸ் நடுநிலைப் பள்ளியிலும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் கடலூர் செயின்ட் ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் இறக்கப்பட்டு வருகிறது.


மாவட்டத்திற்குத் தேவையான பாடப் புத்தகங்கள் வந்து சேர்ந்த பின் அடுத்த மாதம் இறுதியில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. பாடப் புத்தகங்களை மூன்று பருவமாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் கல்வி ஆண்டிலிருந்து புத்தகப்பை சுமையிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.

















Read more »

கடலூரில் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணிக்கு கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி

கடலூர் :


சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடியில் நடந்தது. கடலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு 2011 பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடி, கோண்டூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. பயிற்சியில் முதன்மை பயிற்றுனர்கள் உதவி செயற் பொறியாளர் செல்வக்குமரன் (சுனாமி), உதவிப் பொறியாளர் நாராயணன் பயிற்சி அளித்தனர். மேலும் திட்ட இயக்குனர் மகேந்திரன் பயிற்சி நடைபெறுவதை பார்வையிட்டு பயிற்சியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் செய்திருந்தனர்.
















Read more »

பண்ருட்டியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

பண்ருட்டி:

 பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்த சிவா (32) என்பவரை பண்ருட்டி போலீசார்  புதன்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி நகர் பகுதியில் கஞ்சா விற்பனைஅதிக அளவில் நடப்பதாக போலீஸôருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸôர் புதன்கிழமை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அம்பேத்கர் நகர் ரயில்வே பீட்டர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த சிவா என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Read more »

புதன், ஏப்ரல் 18, 2012

Oil trader Trafigura to invest Rs 1,250 cr in Cuddalore Nagarjuna refinery project



Construction of storage tanks in progress at the Cuddalore refinery of Nagarjuna Oil Ltd (file photo). — Photo: Bijoy Ghosh
B
Construction of storage tanks in progress at the Cuddalore refinery of Nagarjuna Oil Ltd (file photo). 


       Independent oil and commodities trader Trafigura Pte Ltd has said that it will invest up to Rs 1,250 crore ($250 million) in the Nagarjuna refinery coming up at Cuddalore in Tamil Nadu, and in storage facilities. In a statement released in Singapore, Trafigura said it will invest Rs 650 crore ($130 million) for a 24 per cent stake in the Nagarjuna Oil Corporation Ltd refinery. In addition, it will pump in a further Rs 600 crore ($120 million) to construct storage facilities and associated infrastructure at the refinery. The statement said Trafigura’s investment in the refinery was the first of its kind for the company.
“Geographically, the facility is well positioned to receive crude oil from Trafigura’s international producer partners. The investment also affords the company the ability to participate in India’s domestic market where rising incomes, higher vehicle sales and rapid urbanisation are driving the country’s position as one of the world’s fastest-growing major economies.”
          The refinery, with a capacity of six million tonnes a year, can process heavy/sour grades of crude oil and will supply light and middle distillates. The Hyderabad-based Nagarjuna group holds a 51 per cent stake in the project, with Tata Petrodyne, a Tata group company, being the other major shareholder with a 30 per cent stake. The Tamil Nadu Industrial Development Corporation, a Tamil Nadu Government industrial promotion undertaking, is the project’s co-promoter.
The project, which involves relocating the plant and machinery from a refinery in Germany, has been delayed and was due to be commissioned by March. However, its commissioning has been delayed by the cyclone that hit the Tamil Nadu coast in December 2011. The Nagarjuna refinery, being set up at an investment of Rs 10,000 crore, will be the anchor unit for the Centre’s Petroleum, Chemicals and Petrochemicals Investment Region in the area. This will bring in investment of up to Rs 13,000 crore in associated facilities and infrastructure.

Read more »

Tamil Nadu Pollution Control Board monitors pollution levels In Cuddalore SIPCOT


       For over four years I have been a regular visitor to the Tamil Nadu Pollution Control Board on Anna Salai for news. At a personal level, I have also been curious about finding a solution to Chennai's noise and ambient air pollution issues. But all that the TNPCB has been able to offer me is a table on the levels of air, water and noise pollution on a regular basis.
I have often asked them if they were aware of the blaring noise of horns or the increase in pollution levels caused by the city's slow-moving traffic. The responses varied from recalling how a few former bureaucrats had performed well in removing air horns to being under-staffed and therefore, overworked. While the city is grappling with increasing pollution levels, the monitoring agency is struggling to cope with a whole range of challenges.

        With just 670 employees, the board manages over 23,000 files of industries in various categories and also monitors urban pollution levels. In the Cuddalore SIPCOT industrial estate, there are 31 toxic chemical industries and there are just two people there. These people are in-charge of the entire district — what will they take care of, ask activists. At times, applications for consent to set up and operate industrial units await clearance for months together. Until two years ago there were nearly 2,000 industries around Chennai that operated without consent from the TNPCB.

          People who have been associated with the TNPCB for long say that the Board is not as effective as it used to be as it is bogged down by too much work. To make the system perform at optimum levels, there is a need for recruitment of people in the scientific cadre with a background in environment. Roles of officials are not clearly defined and this leads to staff doing what they can to monitor pollution levels, without much coordination. TNPCB needs to ensure accountability, if it is really serious about addressing the issue of increasing pollution levels in the city.

      Monitoring of air, water and noise pollution must be more effective and this might require more monitoring stations across the city. Achieving this should not be difficult, considering that funds are not a constraint. Clear long- and short-term goals must be set for every city and industrial region.This would help officials understand what they are looking at and take initiatives. TNPCB's laboratories need to be upgraded and must go in for National Accreditation Board for Testing and Calibration Laboratories and ISO 14000 accreditation and keep improving their performance. Experts have also called for the setting up of an environment protection authority like in the United States. Such an agency would provide direction to the board. Its purpose would be to protect residents from risks to their health and the environment where they live in, learn and work. The scope of the Board should be expanded to more areas including indoor air pollution, ocean pollution, pesticides and drinking water. It's high time the government considered revamping TNPCB.












Read more »

Fake ration cards to corner relief in Cuddalore

CUDDALORE: 

          Fishermen of Devanampattinam, a coastal village in the Cuddalore district, on Tuesday, charged Fisheries Department officials and a few middlemen for fake ration cards that have allegedly been circulated in coastal villages to pocket funds to be distributed to fishermen during the fishing ban. The State government provides relief funds to fishermen during the fishing ban period. Last year, J Jayalalithaa soon after becoming the Chief Minister doubled the relief amount of `1,000 to `2,000, in line with her assurance during the election campaign. The enhanced relief amount was distributed in June last year. However, the fishermen alleged that there is a lot of malpractice in distribution of these relief amounts. According to sources, in 2011, in the Devanampattinam fishing hamlet, relief funds were distributed to 1,754 beneficiaries whereas there are only 1,300 ration card holders in the village.

         K Pulendhran, a fisherman, said, “In June last year `2,000 was given to 1,754 beneficiaries but `4,000 was given to only around 1,200 people in the same village. How can the number of beneficiaries for the `4,000 relief fund come down to 1,200 later in the same year?” Fishermen charged that over 15 middlemen have been functioning in the village, helping people get relief amounts from the Fisheries Department. Another fisherman E Sekar said, “ These middlemen should be removed completely. They have been benefiting through schemes meant for fisher folk.” When contacted, Vivekanandhan, assistant director of the Fisheries Department, said, “We strictly monitor the distribution process and I am sure everything is being done as per the guideline.”




Read more »

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி, மணப்பட்டு கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் ஞானகுரு வரவேற்றார். கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் எத்திராஜூலு, புதுச்சேரி பல்கலைக் கழக இணை பேராசிரியர் மும்தாஜ் பேகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் செயலர் விஜயகுமார்,

Read more »

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

கடலூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம்

கடலூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று வாயிற் கூட்டம் நடத்தினர்.

>கடலூரில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு வழங்க தடையாக உள்ள அரசாணை எண்.720ஐ திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன் வாயிற்கூட்டம் நடத்தினர். கடலூர், மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடந்த வாயிற் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தரணிதரன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலர் செல்வராசு வரவேற்றார். பொதுச் செயலர் கனகராசு கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெகத்ரட்சகன் நன்றி கூறினார்.

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி

கடலூர் :

கடலூரில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி நடந்தது. கடலூர் கோட்ட அலுவலர் குமாரசாமி துவக்கி வைத்தார். கண்காட்சியில் தீயணைப்பு மீட்பு மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் போது பயன்படுத்தக் கூடிய ஹைட்ராலிக், மூச்சு கருவி, புகை போக்கி உட்பட பல்வேறு விதமான கருவிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், கண்ணாடி விரியன், மண்ணுளி மற்றும் நல்ல பாம்புகளும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிலைய அலுவலர்கள் கடலூர் வீரபாகு, சிப்காட் கருணாகரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜசேகரன், நாகராஜ், திருநாவுக்கரசு, பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

Read more »

கடலூர் நகராட்சி சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள்

கடலூர் :



கடலூர் நகர பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது.>கடலூர் நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளால் நகரமே சுகாதார சீர்கேடு அடைந்து வருகிறது. அதனையொட்டி நகரை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு, நகராட்சியில் உள்ள சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரின் அதிக அளவில் குப்பைகள் சேரும் பகுதிகளில் நவீன ரக "டம்பர் பிளேசர்' குப்பைத் தொட்டிகள் வைத்து அதன் மூலம் குப்பைகளை சேகரித்து பிரத்யேக லாரியைக் கொண்டு குப்பைகளை அள்ளி வந்தனர். இதற்காக கடந்த ஆட்சியில் பல லட்சம் ரூபாய் செலவில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டது. >இந்நிலையில் அப்போது வாங்கிய "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகளை கையாளும் லாரி பழுதடைந்ததால், அப்போது வாங்கிய "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகள் பயனின்றி பாபு கலையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.< >இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி நிர்வாகம், நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து நவீன வசதிகள் கொண்ட புதியரக "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகள் மற்றும் லாரி வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தற்போது 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 "டம்பர் பிளேசர்' குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டு பாபு கலையரங்கத்தில் வைக்கப் பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக லாரிக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள் ளது. இந்த லாரி வந்ததும், இந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும் முக்கிய இடங்களிலும் வைக்கப்பட உள்ளது.









Read more »

சனி, ஏப்ரல் 14, 2012

தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை

கடலூர்:

          தமிழ்ப்புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் கோவில்களில் மாலையில் நடந்த லட்சதீப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

           கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் காலை 5.30 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை சிறப்பு பூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. துர்கை அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், உச்சிகால பூஜையைத் தொடர்ந்து பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் தங்க கவசம் அணிந்தும், மாலை 6 மணிக்கு பெரியநாயகி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

         திருப்பாதிரிப்புலியூர்,  செம்மண்டலம், சாலக்கரை, முதுநகர், நத்தப்பட்டு, அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவில்களில் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பஞ்சாங்கம் படித்தல், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து 26 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைகளுக்கு புது வஸ்திரம், துளசி, பூ, வெற்றிலை மற்றும் வடை மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 7 மணிக்கு லட்சதீப உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

சிதம்பரம்:

        நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை பஞ்சாங்க படனம் நடந்தது. தில்லை காளியம்மன், கீழரத வீதி வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

பரங்கிப்பேட்டை:

        சஞ்சீவிராயர் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தச்சக்காடு அய்யனர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கிள்ளை:

           பின்னத்தூர் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணியில் இருந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. தில்லை விடங்கன் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விடங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொõண்டனர்.

சேத்தியாத்தோப்பு:

          வரசித்தி விநாயகர் கோவில், மேட்டுத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோவில், காளியம்மன் கோவில், பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் கோவில், வடிவுடையம்மன் கோவில், வீரமுடையாநத்தம் மகாதி மாரியம்மன் கோவில், வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லிக்குப்பம்: 

          வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கனி தரிசன விழா நடந்தது.

ஸ்ரீமுஷ்ணம்: 

        பூவராக சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்தி யக்ஞவராகன் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


நடுவீரப்பட்டு:

            சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சொக்கநாதர் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது.








Read more »

புதன், ஏப்ரல் 11, 2012

திட்டக்குடி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தமிழழகன் மீது நிலப்பறிப்பு புகார்

விருத்தாசலம்:

                   திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ மீது நிலப் பறிப்பு புகார் கூறப்பட்டுள்ளது.


         விருத்தாசலத்தை அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான நிலம் பெண்ணாடம் ரயில்வே கேட் அருகில் பெ.பொன்னேரி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருகிறாராம்.



இதுதொடர்பாக மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பகலவனிடம் விவசாயி கொடுத்த புகார் மனு விவரம்: 

                        பெ.பொன்னேரி கிராமத்தில் 68 சென்ட் இடத்தின் ஒரு பகுதியை தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகன், அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் கடந்த 10 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். எனது போர்குழாயை மூடி, அதன் மேல் கொட்டகைக் கட்டி குடியிருந்து வருகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் வருமானம் இன்றி உள்ளேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

               

Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா

கடலூர்:

      செயின்ட் ஜோசப் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கடலூர் செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய விழாவில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர். ;விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். கணிதத்துறை தலைவர் ஜெ.ஜான்ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாவட்ட சார் ஆட்சியர் கே.வீரராகவ ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் எம்.மனோகரன், துணை இயக்குநர் மருத்துவர் பி.சம்பத், கல்லூரி துணை முதல்வர் அருமைசெல்வம், ஜெயந்தி ரவிச்சந்திரன், அனிலன்கா, தங்கமணி, செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கே.கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திட்ட அலுவலர் பி.ஜான்தாமஸ் நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

கடலூரில் மக்கள் நல பணியாளர்கள் சாலை மறியல்

கடலூர்

         மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று  மாநில அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும், இது தொடர்பாக கடந்த ஜனவரி 23-ந் தேதி சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கோரி இந்த போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கடலூர் உழவர்சந்தை அருகே பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலபணியாளர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் பேரணியாக கடலூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர்.

      இம்பீரியல் சாலையில் சென்றபோது ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அந்த பகுதிக்கு திருப்பாப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 300 பேரை கைது செய்தனர்.









Read more »

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் விலையில்லா மடிகணினி

சிதம்பரம்:

   சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழுத் தலைவருமான டாக்டர் எம்.ராமநாதன் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு மடிகணினியை வழங்கினார். கோட்டாட்சியர் எம்.இந்துமதி வாழ்த்துரையாற்றினார். கல்லூர் முதல்வர் பாலு வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




Read more »

பண்ருட்டி அருகே பஸ்-பைக் மோதல்: 2 பேர் சாவு

கடலூர்:

     மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில், அதில் பயணம் செய்த 2 இளைஞர்கள் இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

        கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்ஜித்குமார் (26) கிருஷ்ணராஜ் (25), சஞ்சய்காந்தி (34). இவர்கள் மூவரும் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு வந்து பின்னர் கடலூர் திரும்பியுள்ளனர். திருகண்டேஸ்வரம் அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில் ரஞ்ஜித்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். கிருஷ்ணராஜ் மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.




Read more »

கடலூர் பகுதியில் புதுயுகம் தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள்

கடலூர் : 

     கடலூர் பகுதியில் புதுயுகம் தொண்டு நிறுவனம், தென்னை ராமசாமி பவுண்டேஷன் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் கடலூரில் தேசிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம்கள் நடந்தது.


      கடலூர் அடுத்த உச்சிமேடு, நாணமேடு, தேவனாம்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்த முகாம்களில் சமூக காடுகளை வளர்ப்போம், வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வோம் ஆகியவற்றை வலியுறுத்தி கருத்தரங்கு, வீதி நாடகங்கள் நடத்தப்பட்டது. மேலும், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பயிற்சி ஆகியவை நடத்தப்பட்டது. முகாமில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியாளர் ராஜாராமன், மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் தனசேகரன், ஆரோவில் தாவரவியல் பூங்கா சுற்றுச்சூழல் ஆசிரியர் சத்யமூர்த்தி, சி.எஸ்.டி., இயக்குனர் ஆறுமுகம், நாணமேடு ஊராட்சித் தலைவர் லட்சுமணன், உச்சிமேடு ஊராட்சி துணைத் தலைவர் முருகையன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாம் ஏற்பாடுகளை புதுயுகம் தொண்டு நிறுவனத் தலைவர் ஜெயராமன், செயலர் செல்வநாதன், இயக்குனர் செல்வகுமாரி ஆகியோர் செய்திருந்தனர்.









Read more »

பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

கடலூர் : 

      பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி 11 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

      கடலூர் அடுத்த குண்டியமல்லூரில் உள்ள பெருமாள் ஏரி மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இப்பகுதி விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ள இந்த ஏரி உரிய பராமரிப்பு இல்லாததாலும், என். எல்.சி., சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரில் அடித்து வரும் மணல் மற்றும் நிலக்கரி சகட்டினால் ஏரியின் பெருமளவு தூர்ந்ததால் தற்போது ஒரு போகம் நெல் பயிரிடவே தண்ணீர் தட்டுப்பாடாக உள்ளது. இதனால் ஏரியை தூர் வாரி கொள்ளளவை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

       இந்நிலையில் திருச்சோபுரத்தில் செயல்படவுள்ள நாகார்ஜூனா ஆயில் நிறுவனம், தங்களது தண்ணீர் தேவைக்கு பெருமாள் ஏரியிலிருந்து தினசரி 1.8 மில்லியன் காலன் (ஒன்றரை கோடி லிட்டர்) தண்ணீரை குழாய் மூலம் எடுத்துச் செல்ல பொதுப்பணித் துறையிடம் அனுமதி கோரியது. அதன்பேரில், குறிஞ்சிப்பாடி தாசில்தார் கடந்த நவம்பர் 24ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இருப்பினும் நாகார்ஜூனா ஆயில் நிறுவனம் தனது தேவைக்கு தண்ணீர் எடுப்பதற்காக பெருமாள் ஏரிக்கரையில் வருவாய்த் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நில அளவீடு செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

        அதனைத் தொடர்ந்து பெருமாள் ஏரி மூலம் பாசன வசதி பெறும் ஆதிநாராயணபுரம், தீர்த்தனகிரி, பூவாணிக்குப்பம், வாண்டியாம்பள்ளம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், சிறுபாலையூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் நேற்று மாலை கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுத்தனர்.

     அதில், 11 ஊராட்சிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் கம்பெனி தண்ணீர் எடுக்க உள்ளதாக கடந்த நவம்பர் மாதம் குறிஞ்சிப்பாடி தாசில்தார் அறிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதே தாசில்தாரிடம் மனு கொடுத்தோம். அதனை மீறி மறுபடியும் பெருமாள் ஏரி ஓரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்தால் இப்பகுதியில் நீர் ஆதாரம் முழுமையாக பாதிக்கும். மேலும், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து கடல் நீர் உட்புகும் வாய்ப்பு உள்ளது. விவசாயத்தையும், பொதுமக்களையும் பாதிக்கும் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டனர். மனுவை பெற்ற கலெக்டர் (பொறுப்பு) ராஜேந்திரன், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.













Read more »

திங்கள், ஏப்ரல் 09, 2012

கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி பிரிவு

கடலூர்:

      பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

      தமிழகத்தின் பல பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவிவருகிறது. இந்நிலையில் பல மாவட்டங்களில் பன்றி காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியது: 

       தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல்வலி உடன் மூச்சு திணறல் இருந்தால் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறியாகும். மேற்கண்ட வகையில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் வந்து பரிசோதனை செய்துகொள்ளலாம் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.



Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை உயிருக்கு பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார்


கடலூர் : 

    என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை போலீசில் புகார் செய்துள்ளார்.

     கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி புரிந்து வருபவர் கோமதி, 45. 

இவர் கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகார் மனு:

        கந்தசாமி நாயுடு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மற்றும் கணிதத்துறையும் ஒரே அறையில் செயல்பட்டு வருகிறது. கணிதத் துறையில் பேராசிரியராக இருக்கும் சாந்தியை பேராசிரியைகள் முல்லை, வரலாறு துறையைச் சேர்ந்த திருஞானம் ஆகியோர் சந்தித்து பேசுவது வழக்கம். கடந்த 7ம் தேதி இவர்கள் மூவரும் சத்தம்போட்டு பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பாடம் நடத்துவதற்காக சில குறிப்புகள் தயாரிக்க கடினமாக இருக்கிறது. எனவே மெதுவாகப் பேசுங்கள் என கூறினேன். அதற்கு அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்க முயன்றனர். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே என்னை தகாத வார்த்தைகளால் திட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சி.எஸ்.ஆர்., பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மரக்கன்றுகள் நட வலியுறுத்தல்


கடலூர் : 

  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபாதையையொட்டி மரக்கன்றுகளை நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் தினமும் காலை, மாலை ஏராளமான விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  நடைபாதையையொட்டி ஓய்வு எடுக்கவும், காற்று வாங்கவும், பசுமையாக நிழல் தந்து கொண்டிருந்த வேப்ப மரங்கள், புங்கை மரங்கள், தூங்கு மூஞ்சி மரங்கள் கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி வீசிய "தானே' புயலின் தாக்குதலில் முற்றிலுமாக முறிந்து விழுந்து சேதமடைந்தன. ஒரு சில மரங்கள் மட்டுமே தப்பின. பல மரங்களில் இலைகள் உதிர்ந்து வெறும் எலும்புக் கூடாகவே நிற்கின்றன.

      இந்நிலையில், தற்போது கோடை காலம் துவங்கி அனல் காற்று வீசி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் பகல் நேரங்களில் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில், அண்ணா விளையாட்டரங்கில் போதுமான மரங்கள் இல்லாததால் வீரர், வீராங்கனைகள் வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகி சோர்வு அடைகின்றனர். எனவே, அனைத்து தரப்பினரின் நலன் கருதி நடைபாதையையொட்டி மரக்கன்றுகளை நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.









Read more »

சனி, ஏப்ரல் 07, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.சிவபெருமான் எழுதிய நூலுக்கு விருது

சிதம்பரம்:

      சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.சிவபெருமான் எழுதிய இலக்கியங்களில் மனித உரிமைகள் என்ற ஆய்வு நூலுக்கு விருது கிடைத்துள்ளது.


        புதுச்சேரியில் இயங்கி வரும் மூவொரு கடவுள் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்துறை இலக்கிய அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2010-ம் ஆண்டுக்கான ஞானராஜா மகிமை செல்வி இலக்கிய விருதுக்கு கட்டுரைப் பிரிவின் கீழ் அ.சிவபெருமான் எழுதிய இலக்கியங்களில் மனித உரிமைகள் என்ற ஆய்வு நூலை தேர்ந்தெடுத்துள்ளது என அறக்கட்டளை நிறுவனர் ஞா.ஜோசப் அதிரியன் ஆண்டோ கடிதம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். இதற்கான விருது மற்றும் நற்சான்றிதழ் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறவுள்ள அறக்கட்டளையின் 6-ம் ஆண்டு விழாவில் வழங்கப்படவுள்ளது.








Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு புதிய கட்டடம்

சிதம்பரம்:

    சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று அரசு காமராஜர் மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு ரூ.33 லட்சம் செலவில் தனியே புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக செயலாளர் கோ.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

       சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு தனி கட்டடத்தில் இயங்கி வந்தது. அக்கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலானதாலும், கட்டடம் பழுதடைந்ததாலும் தற்போது இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்த மருத்துவப் பிரிவுக்கு தனி கட்டடம் இல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு சிறு அறையில் இயங்கி வருவதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கடந்த 4-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வி.எஸ்.விஜய், 2012-13ம் நிதியாண்டில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவுக்கு தனியே கட்டடம் கட்டுவதற்கு ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபடும் என உறுதியளித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.







Read more »

மங்களூர் ஒன்றியத்தில் சுகாதார வளாகத்தினை பராமரிப்பிற்கும் பணி மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைப்பு


சிறுபாக்கம்:

     மங்களூர் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் உள்ள சுகாதார வளாகத்தினை பராமரிப்பிற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊரக வளர்ச்சி நிர்வாகப் பொறியாளர் பிரபாகரன், உதவிக் கோட்டப் செயற் பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் அடரி, பொயனப்பாடி, கீழ்ஒரத்தூர், மா.கொத்தனூர், பாசார், வினாயகனந்தல், எஸ்.புதூர், வடபாதி, நரையூர், சிறுகரம்பலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தினர். தண்ணீர் வசதி, மின்மோட்டார் இயங்கும் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் பேசி தினசரி முறையாக பயன்படுத்தி பராமரிக்குமாறு அதன் சாவிகளை ஒப்படைத்தனர். பி.டி.ஓ.,சுந்தரம், பொறியாளர் மணிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.













Read more »

கடலூர் ஜெ.எஸ்.ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்


கடலூர்:

      கடலூர் ஜெ.எஸ். ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது.கல்லூரி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் துவக்க உரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் ராஜசேகர், இணைப் பேராசிரியர் நடராஜ் ஆகியோர் பேசினர். முனைவர் வையாபுரி ராஜா மற்றும் சிவக்குமார் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்தனர்.விழாவில் "ஆராய்ச்சி இதழ்' என்ற மலர் வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழாவை பேராசிரியை செண்பக பிரியா தொகுத்து வழங்கினார். ராஜ் கவிதா நன்றி கூறினார்.

Read more »

வியாழன், ஏப்ரல் 05, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சிதம்பரம்:

      சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 2-ல் நடைபெற்ற "ஆயுஷ் டே' விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் மருத்துவ அறிவியல்துறைக்கு ஆற்றியை சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் வழங்கினார். விழாவில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், பதிவாளர் டாக்டர் ஆர்.ஸ்ரீலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior