உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 31, 2010

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



உலக மக்கள் அனைவருக்கும் எமது உளம் 
கனிந்த ஆங்கிலப் ( 2011) புத்தாண்டு

நல்வாழ்த்துக்கள்..




Read more »

2010 ம் ஆண்டின் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள்

2010 ம் ஆண்டின் அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள்

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்
2. சாமியார் நித்யானந்தா
3 . காமன் வெல்த்  ஊழல் 

4 . உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
 
5 . மங்களூர் விமான விபத்து
6. கோவையில் குழந்தைகள்  கொடூரமாக கொலை

7. ஹைதி பூகம்பத்தில் 2 லட்சம் பேர் பலி
8 . விக்கிலீக்ஸ் இணையத்தளம்
9. சச்சின் சாதனை - ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் 

10. தமிழக  வெள்ளம்   

Read more »

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த நடிகர் & நடிகைகள்

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த நடிகர் & நடிகைகள்

1.  கார்த்தி

ஆர்யா 

3. சிம்பு 

4 விக்ரம்

5. மிஸ்கின்


Read more »

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த படங்கள்

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த படங்கள்

1 அங்காடித் தெரு

2. விண்ணைத்தாண்டி வருவாயா

3. பாஸ் (எ) பாஸ்கரன்

4 .பையா
 
5. மதராசபட்டினம்

6. எந்திரன்
 
7. ராவணன் 

சிறப்பு திரைப்படம் - நந்தலாலா

 

Read more »

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த பாடல்கள்

2010 ம் ஆண்டின் தமிழின் சிறந்த பாடல்கள்

1. உன் பேரை சொல்லும்போதே - அங்காடித் தெரு

2. இதுவரை இல்லாத  உறவிது  - கோவா

3. அடடா  மழைடா   அட  மழடா பையா

4. உசுரே போகுதே உசுரே போகுதே - ராவணன்

5. ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே - விண்ணைத் தாண்டி வருவாயா   

6. நான்காவது இடம்: கிளிமஞ்சாரோ - எந்திரன் 

7. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - அங்காடித் தெரு


Read more »

கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பயன்பாட்டுக்கு வராத பாலம்!


கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்னமும் பயன்பாட்டுக்கு வராத திருச்சோபுரம் பாலம்.
 
கடலூர்:
 
                     கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலம், ஏனோ இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
 
               - சிதம்பரம் சாலையில் இருந்து திருச்சோபுரம் செல்லும் சாலை மிகவும் குறுகலானது. இந்தச் சாலை வழியாக உப்பனாற்றைக் கடந்துதான், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சில தனியார் தொழிற்சாலைகள், மற்றொரு தனியார் தொழிற்சாலைக்கான சிறிய துறைமுகம், ஆலப்பாக்கம் ரயில் நிலையம் ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டும். மேலும் கம்பளிமேடு, தியாகவல்லி, பெரிக்குப்பம், நடுத்திட்டு, நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, தம்பணாம்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் இச்சாலையில் உள்ள உப்பானாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
 
            உப்பனாற்றைக் கடந்து செல்லும் இவ்வழியில் சீனிவாசபுரத்தில் உள்ள இந்தத் தரப்பாலம் மிகப் பழையது. வடகிழக்குப் பருவமழை காலத்தில், தரைப்பாலத்தில் நீர் மட்டம் உயர்வதால், முந்தைய ஆண்டுகளில் 5 நாள்களுக்கு மேலும் போக்குவரத்து தடைபட்டது  உண்டு.இந்த ஆண்டு 3 நாள்கள் இப்பாலத்தில் போக்குவரத்து நடைபெற வில்லை. குறுகிய தரைப்பாலம் வழியாகச் செல்வதில் உள்ள சிரமங்களைப் போக்க, 15 ஆண்டுகளுக்கு முன், 100 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்பாலத்தின் இரு முனைகளும் அணுகு சாலைகளால் இணைக்கப்படாமல் பாலம் துண்டாக நிற்கிறது.
 
.இது குறித்து திருசோபுரத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சாமி கச்சிராயர் கூறுகையில், 
 
                "உப்பனாற்றில் நீர் மட்டம் அதிகரிக்கும்போது தரைப் பாலத்தில் போக்குவரத்து தடைபட்டு விடும். பொதுமக்களுக்கும் தொழிற்சாலைகளுக்குச் செல்வோருக்கும் வசதியாக உயர்மட்டப் பாலம் தேவை என்று கோரியதால் நெடுஞ்சாலைத் துறை இப்பாலத்தைக் கட்டியது.நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்னை காரணமாக, உயர்மட்டப் பாலத்துக்கு அணுகுசாலை அமைக்கும் பணி தடைபட்டது.தற்போது தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் தரைப்பாலம் வழியாகச் சென்று வருகிற நிலையில், உப்பனாற்றில் உயர் மட்டப் பாலத்தின் தேவை அதிகரித்து உள்ளது' என்றார்.
 
குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 
 
                 நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை எழுந்ததால் பாலம் கட்டும் பணி நிறைவு அடைய வில்லை. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகள் அப்போது தடைபட்டு நின்றுவிட்டது. அதனால் பாலம் பற்றி அப்போது யாரும் கவலைப்படவில்லை' என்று தெரிவித்தார்.
 
                    ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், அரசின் உதவியுடன் எளிதாக கையகப்படுத்தப்படுகிறது.ஆனால் ஒரு பாலத்துக்கான சிறிய அளவு நிலத்தை கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்னையை, அரசால் ஏன் தீர்த்து வைக்க முடியவில்லை என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள்


பெண்ணாடத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அரசு நூலகம்
கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு நூலகங்கள் வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகின்றன. ஆனால் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களில் நூலகத்துக்காக கட்டப்பட்ட கட்டடங்கள் திறக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் மூடியே கிடக்கின்றன.

             வளர்க்கும் இடங்களாக கருதப்படும் நூலகம் இன்று அவசியத் தேவையான ஒன்று. நூலகங்களை மாணவர்கள் மட்டுமின்றி, பெரியோர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்துகின்றனர். இன்று தொலைக்காட்சி ஆக்கிரமித்திருந்தாலும் நூலகத்துக்கான மவுசு இன்னும் குறையவில்லை. ஒவ்வொரு நூலகத்திலும் வாசகர் வட்டம் இருக்கத்தான் செய்கிறது. நூலகத்துக்குச் செல்லும் அங்கு நிலவும் அமைதியான சூழ்நிலை படிக்காத ஒருவரையும் புத்தகங்களை புரட்டச் செய்யும். அத்தகைய பெருமை நூலகங்களுக்கு உண்டு.

               மாவட்டத்தில் அரசின் சார்பில் 18 நூலங்கள் இயங்குகின்றன. இவற்றில் மூன்றில் 2 பங்கு நூலகங்கள் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகின்றன.அவ்வாறு வாடகைக் கட்டடத்தில் இயங்கும் நூலகங்கள் போதிய பராமரிப்பின்றியும், மழைகாலத்தில் ஒழுகிக் கொண்டும், வருகிற வாசகர்கள் அமர்ந்தபடி படிக்க முடியாத சூழலில் இயங்குகின்றன.சில நூலகங்களில் புத்தகங்கள் அடுக்கி வைக்கக் கூட போதிய அலமாரிகள் இல்லாமல் அவை சாக்குமூட்டையில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

                ஒரு சில நூலகர்கள் ஆங்காங்கே நூலகப் புரவலர்களை உருவாக்கி, புரவலர்களின் உதவியுடன், நூலகத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி வாசகர்கள் குறையாத வண்ணம் செயல்படுகின்றனர்.ஏழை எளியவரும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஓய்வுபெற்றவர்களும்தான் இன்று அதிகஅளவில் நூலகங்களை பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழலில் விஞ்ஞான வளர்ச்சி என்பது கைக்கு எட்டாத தூரத்துக்கு வளர்ந்து விட்டபோதிலும், அரசு நூலக வளர்ச்சியில் போதிய பங்காற்றவில்லை என்பது கண்கூட தெரிகிறது.

          நூற்றாண்டு பழமைவாய்ந்த கன்னிமாரா நூலகத்தை புதுப்பித்து, அவற்றின் பெருமையை எடுத்துக்கூறும் அரசு, மாநிலம் முழுவதும் அரசுத்துறையால் நடத்தப்படுகிற நூலகத்தில் போதிய கவனம் செலுத்தாது ஏன் என்பது தெரியவில்லை.காலத்தால் அழியாத பல வரலாற்று உண்மைகள் உள்ளடக்கி, அவற்றை காலங்காலமாக போற்றிப் பாதுகாக்கப்படுவது இந்த நூலங்களில்தான்.அத்தகைய நூலகங்களுக்கு சொந்தக் கட்டடம் அவசியம் என்பதை ஏன் அரசு இன்னும் உணரவில்லை. 

               அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமம்தோறும் | 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டடங்கள் மட்டும் கட்டப்பட்டுள்ளன.இதன் மூலம் அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒப்பந்ததாரரும் மட்டும் பயன்பெற்றுள்ளனர். நூலகக் கட்டடம் எதற்காக கட்டப்பட்டதோ அதற்கான நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகள் இதுபோன்று வெறும் கட்டடங்களுக்கு செல்லாமல், தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்குகிற நூலகங்களுக்கு பயன்படுத்தியாவது, நூலகங்களுக்கென சொந்தக் கட்டடத்தை ஏற்படுத்த, அரசு முயற்சிக்குமா?

Read more »

கடலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் மின் கட்டணம்

சிதம்பரம் : 

            மின் கட்டணத்தை இனி இணைய தளம் மூலம் செலுத்தி பயனடையலாம் என சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சிதம்பரம் மின் துறை செயற் பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

              தமிழ்நாடு மின் துறை, நுகர்வோர் வசதியை கருத்தில் கொண்டு இணைய தளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே நுகர்வோர் இந்த வசதியை பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்தி பயனடையலாம். மின்வாரிய அலுவலகங்கள் மூலமும் மின் கட்டணத்தை தொடர்ந்து செலுத்தலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் 26 ஆயிரம் பேர் தேர்வு

கடலூர்:

               கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பயனாளிகளுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கும் விழா குமராட்சியில் நடைபெற்றது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி 9444 பேருக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார். 
 
அப்போது கலெக்டர் சீத்தாராமன் பேசியது:-

             கலைஞர் வீடு வழங்கும் திட்டம் முதன் முதலில் துணை முதல்வர் அடிக்கல் நாட்டியதும், முதல் பயனாளிக்கு வீட்டு சாவி ஒப்படைத்தது நமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும். இந்த பணிகள் இந்த பகுதிகளில் பெய்த மழை பெருவெள்ளம் காரணமாக சுணக்கம் ஏற்பட்டது.

              கடலூர் மாவட்டத்தில் 1,27,888 பேருக்கு நிபந்தனையின்றியும், 39239 பேருக்கு நிபந்தனையுடன் கூடியும் ஆக மொத்தம் 1,64,327 பேருக்கு வரும் 6 ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டுள்னர். இதில் நடப்பாண்டில் 26119 வீடுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 195.89 லட்சத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.  குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிக்கு 5759 பேருக்கு நிபந்தனையின்றி யும், 3685 பேருக்கு நிபந்தனை பேரிலும் ஆக மொத்தம் 9444 பேருக்கு தேர்வு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் 1560 வீடுகளுக்கு ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.17 கோடியே 70 லட்சத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரம் கட்டுமான பொருட்களன் விலை மற்றும் கட்டுப்பாடு நீங்கி பணிகள் விரைந்து நடைபெறும்.

                   மேலும் வெள்ளம் பாதித்த காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு முழுவதும் பாதிக்கப்பட்ட 83 குடிசை வீட்டிற்கு ரூ.5000 வீதமும், பகுதியாக சேதம் அடைந்த 170 குடிசைக்கு ரூ.2500 வீதமும், 5151 வீடுகளுக்கு ரூ.1500 வீதமும், சிதம்பரம் பகுதியில் முழுவதும் பாதித்த 9 குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக சேதமடைந்த 79 வீட்டிற்கு ரூ.2500ம், 6172 வீடுகளுக்கு ரூ.1500ம் வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.இதேபோல் பயிர் கணக்கெடுப்பு முடிந்து பணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் வரவு வைக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பயிர் காப்பீடு குறைபாடுகள் வரும் காலங்களில் நிவர்த்தி செய்யப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

                காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ரவிக்குமார், குமராட்சி ஒன்றியக்குழு தலைவர் மாமல்லன், மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, திட்ட அலுவலர் கவுன்சிலர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, திட்ட அலுவலர் வெங்கடாசலம், செயற்பொறியாளர் சந்திர நாராயணன், ஒன்றிய கவுன்சிலர்கள் பரந்தாமன், நடராஜன், சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் சரக்கு போக்குவரத்து துவங்கியது

நெல்லிக்குப்பம்:

                  நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் முதன் முதலாக சரக்கு போக்குவரத்து துவங்கியது. விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது கடலூர் முதுநகரில் மட்டும் சரக்குகள் ஏற்றி இறக்க தனிப்பாதை வசதி இருந்தது. நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து ஆண்டு தோறும் பல ஆயிரம் டன் சர்க்கரையை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப லாரிகள் மூலம் கடலூர் முதுநகர் எடுத்து சென்று அங்கிருந்து ரயில்கள் மூலம் அனுப்பி வந்தனர். அதேப்போன்று சவுக்கு கட்டைகளும் அனுப்பப்பட்டன.

               விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையாக மாற்ற பணி துவங்கிய போது நெல்லிக்குப்பத்தில் சரக்குகள் ஏற்ற தனிப்பாதை அமைக்க வேண்டுமென சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் சரக்குகள் ஏற்ற தனி பாதையும், வாகனங்கள் செல்ல ரயில் பாதையையொட்டி சாலை வசதியும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முதன் முதலாக நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் இருந்து 42 சரக்கு ரயில் பெட்டிகளில் 1,500 டன் சவுக்கு மர கட்டைகள் ஒடிசா மாநிலம் சிங்கபுரம் ரோடு ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

            நெல்லிக்குப்பம் சுற்று வட்டாரத்தில் வெட்டப்படும் சவுக்கு மரங்களை இனி இங்கிருந்தே ரயில்களில் அனுப்ப முடியும் என்பதால் வியாபாரிகளும், சர்க்கரை மூட்டைகளை குறைந்த செலவில் வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் சர்க்கரை ஆலை நிர்வாகமும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி இங்கிருந்து சரக்குகள் ஏற்றப் படுவதால் நெல்லிக்குப்பம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior