உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 09, 2009

முதி​யோர் இல்​லத்​துக்கு கட்​டில்

நெய்வேலி, ​​ ​ டிச.​ 8 : 

                          நெய்வேலி டாக்​டர் முரு​கன் சமூக அறக்​கட்​டளை சார்​பில் வட​லூரை அடுத்த மேட்​டுக்​குப்​பத்​தில் வள்​ள​லா​ரின் பக்​த​ரால் நடத்​தப்​ப​டும் முதி​யோர் இல்​லத்​துக்கு கட்​டில் வழங்​கப்​பட்​டது.​

          சமூக அறக்​கட்​ட​ளை​யைச் சேர்ந்த பாலச்​சந்​தர்,​​ ஜீவா​னந்​தம்,​​ பாபு,​​ அழ​கு​ராஜ்,​​ நட​ரா​ஜன்,​​ இளங்கோ மற்​றும் சிவ​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

Read more »

108 ஆம்​பு​லன்ஸ் வாக​னத்தால் 2 லட்​சம் பேருக்கு பயன்

கடலூர்,​​ ​ டிச.8: ​ ​ 

                    தமி​ழ​கத்​தில் 108 ஆம்​பு​லன்ஸ் வாக​னம் அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​டது முதல் இது​வரை 1.98,691 பேர் அதன் மூலம் பயன் அடைந்​தி​ருப்​ப​தாக மக்​கள் நல்​வாழ்​வுத்​துறை அமைச்​சர் எம்.ஆர்.கே.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார்.​

               க​ட​லூர் அருகே பச்​சை​யாங்​குப்​பம்,​​ வெள்​ளக்​கரை,​​ கும​ளங்​கு​ளம்,​​ ஆகிய ஊராட்​சி​க​ளைச் சேர்ந்த 7,142 பேருக்கு இல​வச கலர் டி.வி.யை அமைச்​சர் எம்.ஆர்.கே.​ பன்​னீர்​செல்​வம் ஞாயிற்​றுக்​கி​ழமை நடந்த விழாக்​க​ளில் வழங்​கி​னார்.​     

               வெள்​ளக்​கரை ஊராட்​சி​யில் ரூ.​ 13 லட்​சத்​தில் கட்​டப்​பட்ட கூடு​தல் வகுப்​ப​றை​களை அமைச்​சர் திறந்து வைத்​தார்.​  விழா​வில் அமைச்​சர் பேசி​யது:​

                க​ட​லூர் மாவட்​டத்​தில் இது​வரை 565 ஊராட்​சி​க​ளில் 2,99,867 இல​வச கலர் டி.வி.க்கள் வழங்​கப்​பட்டு உள்​ளன.​  48,358 பேருக்கு முதி​யோர் உத​வித்​தொகை,​​ 7,156 பேருக்கு 2,894 ஏக்​கர் இல​வச நிலம் வழங்​கப்​பட்டு உள்​ளது.​ 6,492 மாண​வர்​க​ளுக்கு கண் சிகிச்சை அளிக்​கப்​பட்​டுள்​ளது.​

             ப​ரங்​கிப்​பேட்டை கிள்ளை இணைப்​புப்​பா​லம் ரூ.​ 9 கோடி​யில் கட்​டப்​பட்டு வரு​கி​றது.​ 108 ஆம்​பு​லன்ஸ் வாக​னம் 40 ஆயி​ரம் பிர​ச​வங்​க​ளுக்கு உதவி இருக்​கி​றது.​ கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் 15 ஆயி​ரம் பேருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​ட​தில் ரூ.​ 52 கோடி செல​வி​டப்​பட்டு உள்​ளது.​   1.27 கோடி குடும்​பங்​க​ளுக்கு அடை​யாள அட்டை வழங்​கப்​பட்டு இருக்​கி​றது.​

          அ ​ரசு மருத்​து​வ​ம​னை​க​ளுக்கு ரூ.​ 110 கோடி​யில் உயிர்​காக்​கும் மருத்​து​வக் கரு​வி​கள் வழங்​கப்​ப​டு​கி​றது என்​றார் அமைச்​சர் பன்​னீர்​செல்​வம்.​ ​

             வி​ழாக்​க​ளுக்கு மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன் தலைமை வகித்​தார்.​ எம்​எல்ஏ சபா.ராஜேந்​தி​ரன்,​​ ஊராட்சி மன்​றத் தலை​வர்​கள் விஜ​ய​ரா​க​வன்,​​ சாமிக்ண்ணு,​​ கட​லூர் வட்​டாட்​சி​யர் தட்​சி​ணா​மூர்த்தி ​ உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

Read more »

நடு​நி​லைப் பள்ளி முற்​றுகை

​ கட​லூர்,​​ டிச.8: ​ 

                  கூடு​தல் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்க வலி​யு​றுத்தி செவ்​வாய்க்​கி​ழமை ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்​ளி​யைப் பெற்​றோர் முற்​று​கை​யிட்​ட​னர்.​ ​÷கு​ம​ராட்சி ஊராட்சி ஒன்​றி​யம் பூலா​மேடு கிரா​மத்​தில் ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்ளி உள்​ளது.​ இங்கு 134 மாண​வர்​கள் படிக்​கி​றார்​கள்.​ 2 ஆசி​ரி​யர்​கள் மட்​டுமே நிய​மிக்​கப்​பட்டு உள்​ள​னர்.​

                கூ​டு​தல் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்க வேண்​டும் என்று பல​முறை கோரிக்கை விடுத்​தும் நிய​மிக்​கப்​பட வில்லை.​ ​

                 எ ​னவே செவ்​வாய்க்​கி​ழமை பெற்​றோர் தங்​கள் பிள்​ளை​களை பள்​ளிக்கு அனுப்ப மறுத்​து​விட்​ட​னர்.​ மேலும் பெற்​றோர் மற்​றும் ஊர் பொது​மக்​கள் பள்​ளிக்​குழு உறுப்​பி​னர் வடி​வேல் தலை​மை​யில் பள்​ளியை இழுத்து மூட முயன்​ற​னர்.​ 

           போ​லீ​ஸô​ருக்​குத் தக​வல் கிடைத்து அவர்​கள் வந்​து​வி​டவே,​​ பள்​ளியை மூடும் முயற்சி கைவி​டப்​பட்​டது.​         

                      எனி​னும் பள்​ளியை முற்​று​கை​யிட்டு தங்​கள் கோரிக்​கை​கயை வலி​யு​றுத்​தி​னர்.​ மாண​வர்​க​ளைப் பள்​ளிக்கு அனுப்ப மறுத்து விட்​ட​னர்.​ ​அ​வர்​க​ளு​டன் சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் தன​வந்​த​கி​ருஷ்​ணன் மற்​றும் போலீ​ஸôர் பேச்சு வார்த்தை நடத்​தி​னர்.​ விரை​வில் ஆசி​ரி​யர்​களை நிய​மிக்க ஏற்​பாடு செய்​வ​தாக உறுதி அளித்​த​தைத் தொடர்ந்து பொது​மக்​க​ளின் முற்​று​கைப் போராட்​டம் கைவி​டப்​பட்​டது.​ ஊராட்சி மன்​றத் தலை​வர் குண​சே​க​ரன் உள்​ளிட்​டோர் பேச்​சு​வார்த்​தை​யில் கலந்து கொண்​ட​னர்.

Read more »

சாதிச் சான்​றி​தழ் மாண​வர்​கள் கவனத்துக்கு...


கட​லூர்,​​ டிச.8: ​ 
 
                            10-ம் வகுப்பு மற்​றும் 12-ம் வகுப்பு ​ மாணவ மாண​வி​யர் அவர்​கள் பயி​லும் பள்​ளி​க​ளி​லேயே சாதிச்​சான்​றி​தழ் மற்​றும் வரு​மா​னச் சான்​றி​தழ் பெறு​வ​தற்கு உடனே விண்​ணப்​பிக்​கு​மாறு ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வேண்​டு​கோள் விடுத்து உள்​ளார்.​ ​
 
                     ஆட்​ சி​யர் செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ கட​லூர் மாவட்​டத்​தில் இந்த ஆண்டு நவம்​பர் மாதம் வரை 24,344 மாணவ மாண​வி​ருக்கு சாதிச் சான்​றி​தழ் மற்​றும் வரு​மா​னச் சான்​றி​தழ் வரு​வாய்த் துறை​யி​ன​ரால் வழங்​கப்​பட்டு உள்​ளது.​ இது​வரை சாதிச் சான்​றி​தழ் மற்​றும் வரு​மா​னச் சான்​றி​தழ் கேட்டு விண்​ணப்​பிக்​காத 10-ம் வகுப்பு மற்​றும் 12-ம் வகுப்பு மாணவ மாண​வி​யர் அந்​தந்​தப் பள்​ளித் தலைமை ஆசி​ரி​யர்​கள் மூலம் விண்​ணப்​பிக்​கு​மாறு கேட்​டுக்  கொள்​ளப்​ப​டு​கி​றார்​கள்.

Read more »

மஹா கோடி​ அர்ச்​சனை விழா

நெய்வேலி, ​​ டிச.8: ​ 

             நெய்வேலி அருள்​மிகு வேலு​டை​யான்​பட்டு கோயி​லில் மஹா கோடி​யர்ச்​சனை விழா டிசம்​பர் 14-ம் தேதி வரை நடை​பெ​று​கி​றது.​

             டி ​சம்​பர் 4-ம் தேதி தொடங்​கிய இந்த மஹா கோடி​யர்ச்​சனை ஆன்​றோர்​கள்,​​ சம​யச் சான்​றோர்​கள் முன்​னி​லை​யில் நடை​பெ​று​கி​றது.​ ஒவ்​வொரு நாளும் 10 லட்​சம் அர்ச்​சனை கணக்​கிட்டு நடத்​தப்​ப​டு​கி​றது.​​ இதை​யொட்டி வேத விற்​பன்​னர்​கள் முன்​னி​லை​யில் கோயி​லில் யாகம் நடத்​தப்​பட்டு வரு​கி​றது.​

Read more »

குழந்​தை​கள் தின விழா

              நெய்வேலி வட்​டம் 29-ல் உள்ள தாகூர் மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்​ளி​யில் குழந்​தை​கள் தின​விழா அண்​மை​யில் கொண்​டா​டப்​பட்​டது.​     

              வி​ழா​வுக்கு தாகூர் கல்​விக் குழும நிர்​வாக இயக்​கு​நர் ரபீந்​தி​ர​நாத் தலைமை வகித்​தார்.​ சிறப்பு விருந்​தி​ன​ரா​கக் கலந்​து​கொண்ட நெய்வேலி டிஎஸ்பி என்.மணி,​​ தேசிய அள​வி​லான போட்​டி​க​ளில் பங்​கேற்று வெள்​ளிப்​ப​தக்​கம் வென்ற மாண​வன் ராமச்​சந்​தி​ரனை கெüர​வித்து பரி​சு​களை வழங்​கி​னார்.​மு​தன்மை விருந்​தி​ன​ரா​கக் கலந்து கொண்ட தொழி​ல​தி​பர் எல்.சீனு​வா​சன் 10,​ 12-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் அதிக மதிப்​பெண் பெற்ற மாண​வர்​க​ளுக்கு ஊக்​கப் பரி​சு​கள் வழங்​கப்​ப​டும் என அறி​வித்​தார்.​       

          மனித நேய வளர்ச்சி மைய பொதுச் செய​லர் ஜீவா முரு​கே​சன் வாழ்த்​துரை வழங்​கி​னார்.​  தொ​டர்ந்து மாணவ,​​ மாண​வி​ய​ரின் கலை நிகழ்ச்​சி​கள் நடை​பெற்​றன.​ முன்​ன​தாக பள்​ளி​யின் துணை முதல்​வர் உமா வர​வேற்​றார்.​        

       நட​ராஜ சோழன் தொகுத்து வழங்​கி​னார்.​ நிகழ்ச்​சிக்​கான ஏற்​பா​டு​களை பள்ளி முதல்​வர் சந்​தி​ர​சே​க​ரன் செய்​தி​ருந்​தார்.​

Read more »

ஊனமுற்ற இலங்கை அகதிகள் கவனத்துக்கு...

கட ​லூர்,​​ ​ டிச.​ 8: ​ ​ 

                       கட​லூர் மாவட்ட இலங்கை அக​தி​கள் முகா​மில் இருக்​கும் உடல் ஊன​முற்​றோர் உப​க​ர​ணங்​கள் பெறு​வ​தற்​காக புதன்​கி​ழமை ​(இன்று)​ கட​லூர் மாவட்ட மறு​வாழ்வு அலு​வ​லரை அணு​க​லாம் என்று,​​ மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்து உள்​ளார்.​
  
இது குறித்து ஆட்​சி​யர் திங்​கள்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

                          குள் ​ளஞ்​சா​வடி,​​ குறிஞ்​சிப்​பாடி,​​ விருத்​தா​ச​லம் மற்​றும் காட்​டு​மன்​னார்​கோ​வில் அக​தி​கள் முகாம்​க​ளில் உள்ள உடல் ​ ஊன​முற்​றோ​ருக்கு உப​க​ர​ணங்​கள் வழங்​கப்​பட உள்​ளது.÷எ​னவே அக​தி​கள் முகாம்​க​ளில் உளள ஊன​முற்​றோர்,​​ ஊன​முற்​றோ​ருக்​கான தேசிய அடை​யாள அட்டை வைத்து இருப்​பின்,​​ அத்​து​டன் அக​தி​கள் முகாம் அட்டை நகல்,​​ பாஸ்​போர்ட் அளவு புகைப்​ப​டம் மற்​றும் விண்​ணப்​பத்​து​டன் கட​லூர் புதுப்​பா​ளை​யத்​தில உள்ள மாவட்ட மறு​வாழ்வு அலு​வ​ல​கத்தை புதன்​கி​ழமை ​(டிசம்​பர் 9) காலை 10 மணிக்கு அணு​க​லாம்.​

           தே​சிய ஊன​முற்​றோர் அடை​யாள அட்டை இல்​லா​த​வர்​கள்,​​ அதே அலு​வ​ல​கத்தை அணு​கிóப் பெற்​றுக் கொள்​ள​லாம் என்​றும் செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

Read more »

கொலை வழக்கு​ தந்தை,​​ மக​ளுக்கு ஆயுள் சி​றை

கடலூர்,​​ டிச.8:​ 

                சொத்​துத் தக​ரா​றில் பெண் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் தந்தை,​​ மக​ளுக்கு கட​லூர் மாவட்ட மக​ளிர் நீதி​மன்​றம் செவ்​வாய்க்​கி​ழமை ஆயுள் சிறைத் தண்​டனை விதித்​தது.​ ​

              கு​றிஞ்​ சிப்​பா​டியை அடுத்த கல்​கு​ணம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் பாலு ​(55).​ அவ​ரது மகள் சத்​தியா ​(22).​ சத்​தி​யாவை கல்​கு​ணத்​தைச் சேர்ந்த வேலா​யு​தம் மகன் கன​க​வே​லுக்​குக் திரு​ம​ணம் செய்து கொடுத்து இருந்​த​னர்.​

              தி​ரு​ம​ணம் ஆன சிறிது நாளில் கன​க​வேல் குடும்​பத் தக​ரா​றில் தற்​கொலை செய்து கொண்​டார்.​ ​

                 எ ​னவே பாலு அவ​ரது மனைவி உஷா​ராணி ​(50),​ மகள் சத்​தியா ஆகி​யோர் சேர்ந்து கன​க​வே​லு​வின் வீட்​டுக்​குச் சென்று,​​ சொத்​தில் ஒரு பகு​தியை சத்​தி​யா​வுந்க்கு எழுதி வைக்​கு​மாறு வேலா​யு​தத்​தின் குடும்​பத்​தி​னரை வற்​பு​றுத்​தி​னர்.​ ​ ​

              இ​தில் அவர்​க​ளுக்​குள் தக​ராறு ஏற்​பட்டு வேலா​யு​தத்​தின் மனைவி அமுதா ​(50) எரித்​துக் கொல்​லப்​பட்​டார்.​ இந்த சம்​ப​வம் 14-1-2009 அன்று நடந்​தது.​ ​ ​கொலை தொடர்​பாக பாலு,​​ உஷா​ராணி,​​ சத்​தியா ஆகி​யரை குறிஞ்​சிப்​பாடி போலீ​ஸôர் கைது செய்து நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​த​னர்.​ வழக்கை கட​லூர் மாவட்ட மக​ளிர் நீதி​மன்ற நீதி​பதி அசோ​கன் விசா​ரித்து செவ்​வாய்க்​கி​ழமை தீர்ப்​புக் கூறி​னார்.​

                   குற் ​றம் சாட்​டப்​பட்ட பாலு,​​ சத்​தியா ஆகி​யோ​ருக்கு ஆயுள் சிறைத் தண்​டனை விதித்​தார்.​ குற்​றம் நிரூ​பிக்​கப்​ப​டா​த​தால் உஷா​ராணி விடு​தலை செய்​யப்​பட்​டார்.

Read more »

முதி​யோர் இல்​லத்​துக்கு உதவி

    நெய்வேலி டாக்​டர் முரு​கன் சமூக அறக்​கட்​டளை சார்​பில் வட​லூரை அடுத்த மேட்​டுக்​குப்​பத்​தில் வள்​ள​லா​ரின் பக்​த​ரால் நடத்​தப்​ப​டும் முதி​யோர் இல்​லத்​துக்கு கட்​டில் வழங்​கப்​பட்​டது.​      

        இந்த நிகழ்ச்​சி​யில் சமூக அறக்​கட்​ட​ளை​யைச் சேர்ந்த பாலச்​சந்​தர்,​​ ஜீவா​னந்​தம்,​​ பாபு,​​ அழ​கு​ராஜ்,​​ நட​ரா​ஜன்,​​ இளங்கோ மற்​றும் சிவ​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

Read more »

போராட்ட அறி​விப்பு

                   கட​லூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப்​பாதை அமைக்​கக் கோரி விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் ரயில் மறி​யல் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.​

                    வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மா​றன் சனிக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ விழுப்​பு​ரம்-​மயி​லா​டு​துறை இடையே அகல ரயில்​பா​தைத் திட்​டம் நிறை​வ​டை​யும் நிலை​யில் உள்​ளது.​ இப்​ப​ணி​கள் முடிவு அடைந்​த​தும்,​​ கட​லூர் லாரன்ஸ் சாலை​யில் உள்ள ரயில்வே கேட்டை நிரந்​த​ர​மாக மூடி,​​ சுவர் வைக்​கப் போவ​தாக ரயில்வே இலாகா அறி​வித்து உள்​ளது.​ ஆனால்,​​ இந்த இடத்​தில் சுரங்​கப்​பாதை அமைக்க வேண்​டும் என்​பது கட​லூர் மக்​க​ளின் நீண்​ட​கால கோரிக்கை.​ ​

                  ர​யில்வே மேம்​பா​லம் கட்​டும்​போதே சுரங்​கப் பாதைக்​கும் நிதி ஒதுக்​கப்​பட்டு,​​ பணி நடை​பெ​ற​வில்லை.​ தற்​போது சுரங்​கப்​பாதை திட்​டம் அனு​ம​திக்​கப்​பட்​டும் பணி​கள் தொடங்​கப்​ப​டாத அவ​ல​நிலை நீடிக்​கி​றது.​ ​

                  சு​ரங்​கப்​பாதை கோரி கட​லூர் பொது​நல அமைப்​பு​கள் 16-ம் தேதி முதல் கால​வ​ரை​யற்ற உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் அறி​வித்து உள்​ளன.​ எனவே ரயில்வே சுரங்​கப்​பா​தைத் திட்​டத்தை விரைந்து நிறை​வேற்ற வலி​யு​றுத்தி விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் விரை​வில் ரயில் மறி​யல் போராட்​டம் நடத்​தப்​ப​டும் என்று செய்​திக் குறிப்பு தெரி​விக்​கி​றது.​

Read more »

வெள்ளை ​ அறிக்கை வெளி​யிட வேண்டும்

கடலூர்,​​ ​ டிச.​ 8: ​ ​ 

                     கட​லூர் ரயில்வே சுரங்​கப்​பா​தைத் திட்​டம் கால​தா​ம​த​மா​வது குறித்து வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்​டும் என்று விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி மற்​றும் பொது​நல அமைப்​பு​கள் திங்​கள்​கி​ழமை கோரிக்கை விடுத்​தன.​ ​ ​

                          வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யின் மாவட்​டச் செய​லர் சு.திரு​மா​றன் தலை​மை​யில் கட​லூர் பொது​நல அமைப்​பு​க​ளின் கூட்​ட​மைப்​பைச் சேர்ந்த நிர்​வா​கி​கள் திங்​கள்​கி​ழமை மாவட்ட ஆட்​சி​ய​ரைச் சந்​தித்து அளித்த கோரிக்கை மனு:​

                             ம ​யி​லா​டு​துறை -​ விழுப்​பு​ரம் அகல ரயில்​பா​தைத் திட்​டம் முடி​வ​டை​யும் நிலை​யில் உள்​ளது.​ ஆனால் இந்த மார்க்​கத்​தில் உள்ள திருப்​பாப்பு​லி​யூர் லாரன்ஸ் சாலை சுரங்​கப்​பாதை திட்​டம் இன்​ன​மும் நிறை​வேற்​றப்​ப​டா​மல் உள்​ளது.​

                           இந்த மார்க்​கத்​தில் ரயில்​கள் ஓடத் தொடங்​கி​னால்,​​ லாரன்ஸ் சாலை​யில் சுவர் வைத்​துத் தடுக்க ரயில்வே ஏற்​கெ​னவே முடிவு செய்து இருக்​கி​றது.​

                           சு​ய​நல சக்​தி​க​ளுக்​கு துணை போகும் சில அதி​கா​ரி​க​ளின் மெத்​த​னப் போக்கே,​​ சுரங்​கப்​பாதை திட்​டம் கால​தா​ம​தம் ஆவ​தற்​குக் கார​ணம் என்று அறி​கி​றோம்.​ என​வே​தான் சுரங்​கப்​பாதை திட்​டத்தை அமல்​ப​டுத்த பொது​நல இயக்​கங்​கள் 16-ம் தேதி முதல் நடத்த திட்​ட​மிóட்டு இருக்​கும் கால​வ​ரை​யற்ற உண்​ணா​வி​ர​தப் போராட்​டத்​துக்கு விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி ஆத​ரவு அளித்து இருக்​கி​றது.​

                        வி​டு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில் ரயில் மறி​யல் போராட்​டம் நடத்த முடிவு செய்து இருக்​கி​றோம்.​

             இந்த நிலை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நெல்​லிக்​குப்​பம் வந்த ரயில்வே கோட்ட மேலா​ளர்,​சுரங்​கப்​பாதை அமைக்க ரயில்வே தயா​ராக இருப்​ப​தா​க​வும்,​​ மாநில நெடுஞ்​சா​லைத் துறை​யி​டம் இருந்து ஒப்​பு​தல் வர​வில்லை என்​றும் கூறி​யுள்​ளார்.​

              எ​னவே இத்​திட்​டத்தை முறி​ய​டிக்க முய​லும் சுய​நல சக்​தி​க​ளுக்கு மாவட்ட நிர்​வா​கம் மறை​மு​க​மா​கத் துணை நிற்​கி​றதோ என்ற சந்​தே​கம் எழுந்​துள்​ளது.​ ​ ​​ வெளிப்​ப​டை​யான நிர்​வா​கம் இருப்​பதை உத்​த​ர​வா​தம் செய்​யும் வகை​யில்,​​ இப்​பி​ரச்​னை​யில் வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்​டும் என்​றும் மனு​வில் கோரப்​பட்​டுள்​ளது.​

                 த​மிழ் தேசிய விடு​த​லைப் பேரவை மாநி​லத் துணைச் செய​லர் திரு​மார்​பன்,​​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் வழக்​க​றி​ஞ​ரணி மாவட்ட்ச செய​லர் காத்​த​வ​ரா​யன்,​​ ஓவி​யர் அணி மாநி​லச் செய​லர் ஜெய​ரா​மன் உள்​ளிட்​டோர் உடன் சென்று இருந்​த​னர்.​ ​

Read more »

இன்று பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

சிதம்ப​ரம்,​​ டிச.​ 7:​ 
 
                     சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​லக நில அள​வைப் பிரி​வில் பட்டா மாற்​றம் மற்​றும் புல​எல்லை அளக்​கக்​கோரி ஏற்​கெ​னவே கொடுக்​கப்​பட்ட மனுக்​கள் நிலு​வை​யில் உள்​ள​வற்​றுக்கு தீர்வு காண செவ்​வாய்க்​கி​ழமை ​(டிசம்​பர் 8) பட்டா மாற்ற சிறப்பு முகாம் நடை​பெ​ற​வுள்​ளது.​
 
                    சி​தம்​ப​ரம் வட்​டம்,​​ திரு​வக்​கு​ளம் குறு​வட்​டத்​தில் ஏற்​கெ​னவே மனு அளித்​த​வர்​கள் கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கங்​க​ளில் கிர​யப்​பத்​தி​ரம் உள்​ளிட்ட ஆவ​ணங்​க​ளு​டன் ஆஜ​ராகி தங்​க​ளது மனுக்​கள் மீது நட​வ​டிக்கை மேற்​கொள்ள ஒத்​து​ழைக்கலாம் என சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன்  கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more »

கிராம மக்​கள் உண்​ணா​வி​ர​தம்

கடலூர்,​​  டிச.7: ​ 
 
                மின் வாரி​யத்​தைக் கண்​டித்து பூண்டி ஊராட்​சி​யைச் சேர்ந்த பொது​மக்​கள் கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் திங்​கள்​கி​ழமை உண்​ணா​வி​ர​தம் இருந்​த​னர்.​
 
             பண்​ருட்டி வட்​டம் அண்ணா கிரா​மம் ஊராட்சி ஒன்​றி​யத்​துக்​குட்​பட்ட பூண்டி ஊராட்சி குச்​சிப்​பா​ளை​யம் கிரா​மத்​தில் மின்​கம்​பங்​க​ளுக்கு இடையே உள்ள கம்​பி​கள் 50 ஆண்​டு​க​ளுக்கு மேல் பழை​ய​தாக இருப்​ப​தால்,​​ ​ எந்த நேரத்​தி​லும் அறுந்து விழும் நிலை​யில் இருப்​ப​தாக கிராம மக்​கள் புகார் தெரி​விக்​கி​றார்​கள்.​ 
 
           இ​த​னால் அப்​ப​குதி மக்​கள் பெரி​தும் பீதி அடைந்​துள்​ள​னர்.​ மேலும போதிய மின் அழுத்​தம் இல்​லா​த​தால் பல நேரங்​க​ளில் இக்​கி​ரா​மம் இரு​ளிóல் மூழ்​கிக் கிடக்​கி​றது.​ 
 
              கட்​ட​முத்​துப்​பா​ளை​யம் ஆற்​றுத் தெரு​வில் 30 வீடு​கள் உள்​ளன.​ அவற்​றில் 13 வீடு​க​ளுக்கு மின் இணைப்பு வழங்​கப்​பட்டு உள்​ளது.​ மீதி வீடு​க​ளுக்கு பல ஆண்​டு​க​ளாக விண்​ணப்​பித்​தும் மின் இணைப்பு ​ கிடைக்​க​வில்லை.​     எனவே அனைத்து வீடு​க​ளுக்​கும் மின் இணைப்பு வழங்க வேண்​டும்,​​ மின்​கம்​பி​களை மாற்ற வேண்​டும்,​​ ​ மின் அழுத்​தம் சீராக இருக்க வேண்​டும் என​கோரி உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் நடந்​தது.​÷ ஊராட்சி மன்​றத் துணைத் தலை​வர் பெ.அரி​கி​ருஷ்​ணன் தலைமை வகித்​தார்.

Read more »

பெண் கைதி தப்பி ஓட்​டம்

கட​லூர்,​​ ​ டிச.​ 7: ​ 
 
                   கட​லூ​ரில் பெண் கைதி லட்​சுமி ​(33) போலீஸ் காவ​லில் இருந்து திங்​கள்​கி​ழமை தப்பி ஓடி​விட்​டார்.​
 
               வே ​லூர் மாவட்​டம்,​​ ஆம்​பூர் ரயில் நிலை​யச் சாலை​யைச் சேர்ந்​த​வர் ராஜா.​ அவ​ரது மனைவி லட்​சுமி.​ திருட்டு வழக்கு ஒன்​றில் சம்​மந்​தப்​பட்ட லட்​சு​மியை வளத்தி போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ அதைத் தொடர்ந்து லட்​சுமி கட​லூர் பெண்​கள் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்டு இருந்​தார்.​
 
      நெஞ்​சுவலி ஏற்​பட்​ட​தன் கார​ண​மாக லட்​சுமி கடந்த 5-ம் தேதி கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​டார்.​ போலீஸ் காவ​லில் அவ​ருக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது.​ இந்​நி​லை​யில் திங்​கள்​கி​ழமை போலீஸ் காவ​லில் இருந்து லட்​சுமி தப்பி ஓடி​விட்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ அவ​ரைப் ​ பல இடங்​க​ளில் தேடி​யும் கிடைக்​க​விó​லலை.​
 
             சிறை அலு​வ​லர் விஜ​ய​லட்​சுமி அளித்த புகா​ரின் பேரில்,​​ கட​லூர் புது​ந​கர் போலீ​ஸôர் வழக்​குப் பதிவு செய்து லட்​சு​மி​யைத் தேடி வரு​கி​றார்​கள்.

Read more »

கட​லூர் சிறை​யில் ஆயுள் கைதி தற்​கொலை

கடலூர்,​​ ​ டிச.7: ​ 
 
                    கட​லூர் மத்​திய சிறை​யில் ஆயுள் தண்​ட​னைக் கைதி திங்​கள்​கி​ழமை பினா​யில் குடித்​துத் தற்​கொலை செய்து கொண்​டார்.​ 
 
            விழுப்​பு​ரம் மாவட்​டம்,​​ தேர்​கு​ணம் கிரா​மம் மாரி​யம்​மன் கோயிóல் தெரு​வைச் சேர்ந்த பூங்​கா​வ​னத்​தின் மகன் பாலு ​(26).​ கிளி​ய​னூர் போலீஸ் சர​கத்​தில் நடந்த கொலை வழக்​கில் பாலு​வுக்கு 2006-ல் ஆயுள் சிறைத் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.​ அவர் கட​லூர் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்டு இருந்​தார்.​÷இந்​நி​லை​யில் திங்​கள்​கி​ழமை காலை சிறைச்​சாலை வளா​கத்​தில் மயங்​கிக் கிடந்​தார்.​ கழி​வ​றையை சுத்​தம் செய்ய ​ வைத்து இருந்த பினா​யிலை அவர் குடித்​த​தைத் தொடந்து அவர் மயக்​கம் அடைந்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ உடனே அவ​ரைக் கட​லூர் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்த்​த​னர்.​ அங்கு பாலு இறந்​தார்.​
 
             அரசு மருத்​து​வ​ம​னை​யில் கட​லூர் கோட்​டாட்​சி​யர் செல்​வ​ராஜ் முன்​னி​லை​யில் பாலு​வின் பிரே​தப் பரி​சோ​தனை நடந்​தது.​ கட​லூர் நக​ராட்சி துணைத் தலை​வர் தாம​ரைச்​செல்​வன்,​​ கோட்​டாட்​சி​ய​ரி​டம் கோரிக்கை மனு ஒன்றை அளித்​தார்.​ மன​நிலை பாதிக்​கப்​பட்ட நிலை​யில் பாலு இருந்​தி​ருக்​கி​றார்.​ எனவே அவ​ரது பெற்​றோ​ருக்கு அரசு நிவா​ர​ணம் வழங்க வேண்​டும என்று மனு​வில் கோரி​யுள்​ளார்.

Read more »

விலை உயர்வை கண்டித்து மறியல்

கட ​லூர்,​​ டிச.7: ​ 

                             கட​லூர் மாவட்​டத்​தில் 9 ​ இடங்​க​ளில் இந்​தி​யக் கம்​யூ​னிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள் திங்​கள்​கி​ழமை இணைந்து நடத்​திய மறி​யல் போராட்​டத்​தில் 1,700 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர்.​ ​

                    வி​லை​வாசி உயர்​வைக் கட்​டுப்​ப​டுத்த வேண்​டும்,​​ முன்​பேர வர்த்​த​கத்​தைத் தடை செய்ய வேண​டும்,​​ பொது விநி​யோ​கத் திட்​டத்​தைப் பலப்​ப​டுத்த வேண்​டும்,​​ சமை​யல் கேஸ் தட்​டுப்​பாட்டை போக்க வேண்​டும் என்ற கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி இரு கம்​யூ​னிஸ்ட் கட்​சி​க​ளும் இணைந்து கட​லூர் மாவட்​டத்​தில் மறி​யல் போராட்​டம் நடத்​தின.​ ​

                க​ட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் உழ​வர் சந்தை அருகே மறி​யல் போராட்​டம் நடந்​தது.​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் நக​ரச் செய​லர் சுப்​பு​ரா​யன்,​​ இந்​தி​யக் கம்​யூ​னிஸ்ட் வட்​டச் செய​லர் சம்​பந்​தம் ஆகி​யோர் தலைமை வகித்​த​னர்.​ ​

             மார்க் ​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் மாநில செயற்​குழு உறுப்​பி​னர் பி.செல்​வ​சிங்,​​ மாநி​லக்​குழு உறுப்​பி​னர் செ.தன​சே​க​ரன்,​​ ஒன்​றி​யச் செய​லர் மாத​வன்,​​ சிப்​காட் செய​லர் ஆள​வந்​தார்,​​ இந்​தி​யக் கம்​யூ​னிஸ்ட் மாவட்​டச் செய​லர் டி.மணி​வா​ச​கம்,​​ மாவட்​டக்​குழு உறுப்​பி​னர் எஸ்.கே.விஸ்​வ​நா​தன்,​​ வட்​டத் துணைச் செய​லர் இ.பால​கி​ருஷ்​ணன்,​​ நக​ரச் செய​லர் வி.குளோப்,​​ வட்​டக் குழு உறுப்​பி​னர் ஜி.வீரப்​பன்,​​ கட​லூர் நக​ரத் தலை​வர் என்.ராமு உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​ ​

 ம ​றிய​லில் ஈடு​பட்ட 243 பேர் போலீ​ஸô​ரால் கைது செய்​யப்​பட்​ட​னர்.​ ​ கட​லூர் மாவட்​டத்​தில் சிதம்​ப​ரம்,​​ பண்​ருட்டி,​​ நெய்வேலி,​​ ​ விருத்​தா​ச​லம்,​​ திட்​டக்​குடி,​​ பெண்​ணா​டம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​யில்,​​ குறிஞ்​சிப்​பாடி,​​ ஆகிய ஊர்​க​ளி​லும் மறி​யல் போராட்​டங்​கள் நடந்​தன.​ மாவட்​டத்​தில் 1700 பேர் கைது செய்​யப்​பட்​ட​தாக,​​ போலீ​ஸôர் தெரி​வித்​த​னர். 

சிதம்​ப​ரத்​தில் ...​​​ 

                                    சிதம்​ப​ரம்,​​ டிச.​ 7:​ அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை​வாசி உயர்வை கட்​டுப்​ப​டுத்தி வலி​யு​றுத்தி மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி,​​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி இணைந்து சிதம்​ப​ரத்​தில் சாலை மறி​யல் போராட்​டத்தை திங்​கள்​கி​ழமை நடத்​தி​யது.​÷காந்தி சிலையி​லி​ருந்து ஊர்​வ​ல​மாக புறப்​பட்டு தெற்கு ரத வீதி இந்​தி​யன் வங்கி முன் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ நக​ரச் செய​லர்​கள் ஆர்.ராமச்​சந்​தி​ரன்,​​ எஸ்.காசி​லிங்​கம் ஆகி​யோர் தலைமை வகித்​த​னர்.​÷மா ​வட்ட செயற்​குழு உறுப்​பி​னர் வி.எம்.சேகர்,​​ மாவட்​டச் செய​லர் டி.ஆறு​மு​கம்,​​ நகர்​மன்​றத் தலை​வர் ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம்,​​ மாவட்​டக்​குழு உறுப்​பி​னர் வி.நட​ரா​ஜன் மற்​றும் 68 பெண்​கள் உள்​ளிட்ட 321 பேரை நகர போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ மாலை​யில் விடு​விக்​கப்பட்டனர்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

நெய்​வே​லி​யில்...​

                  நெய்வேலி, ​​ ​ டிச.​ 7: ​ விலை​வாசி உயர்​வைக் கண்​டித்து மந்​தா​ரக்​குப்​பம் பி.எஸ்.என்.எல்.​ அலு​வ​ல​கம் எதிரே மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி சார்​பில் மறி​யல் போராட்​டம் நடை​பெற்​றது.​ இதில் பங்​கேற்ற 102 பேர் கைதா​கி​னர்.​÷அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை உயர்​வைக் கண்டு கொள்​ளாத மத்​திய,​​ மாநில அர​சின் போக்​கைக் கண்​டித்து நெய்வேலி நகர மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி சார்​பில் மந்​தா​ரக்​குப்​பம் பி.எஸ்.என்.எல்.​ அலு​வ​ல​கம் எதிரே நெய்வேலி நகர மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி நக​ரச் செய​லர் திரு​அ​ரசு தலை​மை​யில் மறி​யல் போராட்​டம் நடை​பெற்​றது.​ இ​தில் சிஐ​டியு தொழிற்​சங்க மாவட்​டச் செயற்​குழு உறுப்​பி​னர் முத்​து​வேல்,​​ இணைச் செய​லர் சங்கி​லிப்​பாண்​டி​யன்,​நெய்வேலி சிஐ​டியு தலை​வர் குப்​பு​சாமி உள்​பட பலர் பங்​கேற்​ற​னர்.​ம​றி​யல் போராட்​டத்​தில் பங்​கேற்ற 102 பேரை மந்​தா​ரக்​குப்​பம போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ மாலை​யில் அவர்​கள் விடு​விக்​கப்​பட்​ட​னர்.​

Read more »

சிதம்பரம் செய்திகள்




சிதம் ​ப​ரம்,​​ டிச.7: ​ 
  
கொடி​நாள் நிதி சேக​ரிப்பு
 

சிதம்​ப​ரத்​தில் ஊர்க்​கா​வல்​படை சார்​பில் கொடி​நாள் நிதி சேக​ரிப்பு தொடக்க விழா கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​÷நி​கழ்ச்​சியை கோட்​டாட்​சி​யர் ஜி.ராம​லிங்​கம் ​ தொடங்கி வைத்​தார்.​ கட​லூர் மாவட்ட தள​பதி ஆர்.கேதார்​நா​தன் முதல் நிதியை அளித்​தார்.​÷இந்​நி​கழ்ச்​சி​யில் கோட்​டத் தள​பதி ஆர்.கோவிந்​த​ரா​ஜன்,​​ படைத் தள​பதி எஸ்.அந்​தோ​ணி​சாமி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர். 

தலைமை ஆசி​ரி​யர்​க​ளுக்​கான கருத்​த​ரங்கு       

                      கட​லூர் கல்வி மாவட்ட பாரத சாரண,​​ சார​ணி​யர் இயக்​கம் சார்​பில் சிதம்​ப​ரம் ஹோட்​டல் சார​தா​ராம் தர்​பார் ஹாலில் தலைமை ஆசி​ரி​யர்​க​ளுக்கு சார​ணி​யம் குறித்த ஒரு நாள் கருத்​த​ரங்கு அண்​மை​யில் நடை​பெற்​றது.​÷இக் கருத்​த​ரங்​கில் 125 தலைமை ஆசி​ரி​யர்​கள் பங்​கேற்​ற​னர்.​ மாவட்​டத் தலை​வர் சி.எஸ்.ராம​சாமி தலைமை வகித்​தார்.​ சார​ணிய ஆணை​யர் கா.காவேரி முன்​னிலை வகித்​தார்.​ ப​யிற்சி ஆணை​யர் துரை.ராம​லிங்​கம் வர​வேற்​றார்.​ மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் செ.அமு​த​வள்ளி கருத்​த​ரங்கை தொடக்கி வைத்​துப் பேசு​கை​யில் அனைத்து பள்​ளி​க​ளி​லும் சாரண இயக்​கம் சிறப்​பாக நடை​பெற தலைமை ஆசி​ரி​யர் செயல்​பட வேண்​டும் எனக் கூறி​னார்.​ 
  
குழும வளர்ச்​சி திட்ட கூட்​டம் 

செப்பு, ​​ கவ​ரிங் நகை தொகுப்பு நிறு​வ​னங்​க​ளின் குழும வளர்ச்சி திட்​டம் குறித்த முதன்​மைக் கூட்​டம் சிதம்​ப​ரம் காமாட்​சி​யம்​மன் கோயில் வளா​கத்​தில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.​÷த​மிழ்​நாடு விஸ்​வ​கர்ம முன்​னேற்​றச் சங்​கம் மற்​றும் தமிழ்​நாடு ஐந்​தொ​ழி​லா​ளர்​கள் முன்​னேற்ற தொழிற்​சங்​கம் ஆகி​யவை இக்​கூட்​டத்தை ஏற்​பாடு செய்​தி​ருந்​தது.​

                              சங்க மாநி​லத் தலை​வர் ஜி.சேகர் தலைமை வகித்​தார்.​ தொழிற்​சங்க மாநில செய​லர் ஆர்.ராமச்​சந்​தி​ரன் வர​வேற்​றார்.​ க ​ட​லூர் மாவட்ட தொழில் மைய முது​நிலை மேலா​ளர் ராஜ​க​ணேஷ்,​​ இந்​தி​யன் வங்கி முது​நிலை மேலா​ளர் என்.கபி​லன்,​​ விலை மதிப்பு மேலாண்மை ஆலோ​ச​கர் சென்னை ஆர்.வாசு​தே​வன் உள்​ளிட்​டோர் விளக்​க​வு​ரை​யாற்​றி​னர்.​

                   சி ​தம்​ப​ரத்​தில் செப்பு,​​ கவ​ரிங் நகை தொழில் முனை​வோர்​கள் வாழ்க்கை தரம் உய​ரும் வகை​யில் மத்​திய,​​ மாநில அர​சு​கள் மூலம் அத்​தொ​ழில் சார்ந்த முனை​வோர்​களை ஒருங்​கி​ணைத்து செப்பு,​​ கவ​ரிங் நகை தொகுப்பு நிறு​வ​னங்​க​ளின் குழு​மம் ஒன்றை உரு​வாக்​கு​வது என கூட்​டத்​தில் தீர்​மா​னிக்​கப்​பட்​டது.​ ந​க​ரச் செய​லர் பி.முத்​துக்​கு​மார்,​​ பொரு​ளா​ளர் எஸ்.ராஜ்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​ மாநில இளை​ஞ​ரணி செய​லர் எஸ்.ரமேஷ் நன்றி கூறி​னார்.

Read more »

உலக எய்ட்ஸ் தின பிர​சா​ரம்

நெய்வேலி, ​​ டிச.​ 7:​ 

              உலக எய்ட்ஸ் தினத்தை முன்​னிட்டு நெய்வேலி நியூ​லைட் சாரி​ட​புள் அறக்​கட்​டளை சார்​பில் எய்ட்ஸ் விழிப்​பு​ணர்வு பிர​சா​ரம் அண்​மை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது.​

                இ​தை​யொட்டி மன​நல நிபு​ணர் டாக்​டர் சகா​ய​ராஜா தலை​மை​யில் மந்​தா​ரக்​குப்​பம் பஸ் நிலை​யம் அருகே உள்ள வாடகை வாகன ஓட்​டு​நர்​க​ளி​டம் விழிப்​பு​ணர்வு வாச​கங்​கள் அடங்​கிய துண்​டுப் பிர​சு​ரத்தை கெங்​கை​கொண்​டான் பேரூ​ராட்​சித் தலை​வர் கே.சக்​தி​வேல் வழங்​கி​னார்.​

             இந்​நி​கழ்ச்​சி​யில் செஞ்​சி​லு​வைச் சங்க உறுப்​பி​னர் லட்​சு​மி​நா​ரா​ய​ணன்,​மனித நேய மேம்​பாட்டு மைய நிறு​வ​னர் கே.சி.தம்பி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.​ நெய்வேலி டாக்​டர் முரு​கன் சமூக அறக்​கட்​டளை சார்​பில் நெய்வேலி மெயின் பஜா​ரில் கர​காட்​டம் மூலம் விழிப்​பு​ணர்வு பிர​சா​ரம் மேற்​கொள்​ளப்​பட்​டது.​ இந்​நி​கழ்ச்​சி​யில் அறக்​கட்​டளை நிர்​வா​கி​கள் ஸ்ரீதர்,​​ கண​பதி,​​ தண்​ட​பாணி,​​ கணே​சன்,​​ தங்​க​மணி உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​ட​னர்.

Read more »

மாண​வர்​கள் கையெ​ழுத்து இயக்​கம்


சிதம்ப​ரம்,​ டிச.​ 7:​ 

       சமச்​சீர்​கல்வி முறையை அமல்​ப​டுத்​தக்​கோரி இந்​திய மாண​வர் சங்​கம் சார்​பில் சிதம்​ப​ரத்​தில் 5 இடங்​க​ளில் கையெ​ழுத்து இயக்​கம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​​ நிகழ்ச்​சிக்கு நக​ரச் செய​லா​ளர் கோபால் தலைமை வகித்​தார்.​ நிர்​வா​கி​கள் சிவ​பா​லன்.​ சத்​தி​ய​நா​ரா​ய​ணன்,​​ மணி​வண்​ணன்,​​ கார்த்​திக் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பொது​மக்​க​ளி​ட​மும்,​​ மாண​வர்​க​ளி​ட​மும் கையெ​ழுத்து பெற்​ற​னர்.

Read more »

விழுப்​பு​ரம்-​ மயி​லா​டு​துறை அக​லப் பாதை​யில் ​ சரக்கு ரயில் போக்​கு​வ​ரத்து விரை​வில் தொடங்​கும்

கட​லூர்,​  டிச. 6:​ 
                     விழுப்​பு​ரம் மயி​லா​டு​துறை அகல ரயில் பாதை​யில் விரை​வில் சரக்கு ரயில் போக்​கு​வ​ரத்து தொடங்​கும் என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலா​ளர் சுப்​பி​ர​ம​ணி​யம் தெரி​வித்​தார்.
 
                    நெல்​ லிக்​குப்​பம் ரயில் நிலை​யத்​துக்கு சுற்​றுச்​சு​வர் கட்​டு​வ​தில் எழுந்த பிரச்னை தொடர்​பாக ஆய்வு செய்​வ​தற்​காக சுப்​பி​ர​ம​ணி​யம் ஞாயிற்​றுக்​கி​ழமை நெல்​லிக்​குப்​பம் வந்​தார். அங்கு அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​
 
         வி​ழுப்​பு​ரம்-​மயி​லா​டு​துறை அகல ரயில் பாதைத் திட்​டம் முடி​வ​டை​யும் தரு​வா​யில் உள்​ளது. விரை​வில் சரக்கு ரயில்​கள் இயக்​கப்​ப​டும். ரயில்வே நிலங்​க​ளில் ஆக்​கி​ர​மிப்​பு​கள் படிப்​ப​டி​யாக அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. கட​லூர் திருப்​பாப்பு​லி​யூர் ரயில் நிலை​யப் பகு​தி​யில் உள்ள ஆக்​கி​ர​மிப்​பு​க​ளும் அகற்​றப்​ப​டும். இரட்டை ரயில்​பாதை திட்​டம் அம​லா​கும்​போது அனைத்து ஆக்​கி​ர​மிப்​பு​க​ளும் அகற்​றப்​பட்டு விடும். ​ ​
 
 தி​ருப்​பாப்பு​லி​யூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப்​பதை அத்​தி​யா​வ​சி​யம் என்றே கரு​து​கி​றோம். சுரங்​கப்​பாதை அமைக்க ரயில்வே இலாகா தயா​ராக இருக்​கி​றது. ​ ஆனால்,​ இதற்​காக மாநில அர​சி​டம் இருந்து உறு​தி​செய்​யும் கடி​தம் எது​வும் வர​வில்லை. திருப்​பாப்பு​லி​யூர் சுரங்​கப்​பாதை தொடர்​பாக நானும் தமி​ழக நெடுஞ்​சா​லைத்​துறை அதி​கா​ரி​கள் உள்​ளிட்ட பல அதி​கா​ரி​க​ளி​டம் பேசி இருக்​கி​றேன் என்​றார் சுப்​பி​ர​ம​ணி​யம். ​
 
           தி​ருப்​பாப்பு​லி​யூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப்​பாதை அமைக்க வலி​யு​றுத்தி,​ கட​லூர் பொது​நல அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் எம்.நிஜா​மு​தீன்,​ வெண்​புறா குமார்,​ வழக்​க​றி​ஞர்​கள் திரு​மார்​பன்,​ மன்​ற​வா​ணன்,​ கவி​ஞர் பால்கி,​ சி.ஏ.தாஸ்,​ கதிர்​ம​ணி​வண்​ணன்,​ தங்க சுதர்​ச​னம்,​ துரை​வேலு உள்​ளிட்​டோர் திருச்சி கோட்ட ரயில்வே மேலா​ளர் சுப்​பி​ர​ம​ணி​யத்​தைச் சந்​தித்து கோரிக்கை அளித்​த​னர்.​

Read more »

நெல்​லிக்​குப்​பம் ரயில் நிலை​யம் அருகே ​சாலை​யோர வீடு​கள் பிரச்னை:​ எம்.பி. முயற்​சி​யால் தீர்வு



கட​லூர்,​ டிச. 6:​ 
 
                          நெல்​லிக்​குப்​பம் ரயில் நிலை​யம் அருகே ரயில்வே ஃபீ​டர் சாலை​யோ​ரம் வசிப்​ப​வர்​கள் பிரச்​னைக்கு,​ கட​லூர் மக்​க​ளவை உறுப்​பி​னர் கே.எஸ்.அழ​கி​ரி​யின் முயற்​சி​யால் ஞாயிற்​றுக்​கி​ழமை தீர்வு காணப்​பட்​டது. ​ ​
 
                     நெல்​லிக்​குப்​பம் ரயில்வே ஃபீ​டர் சாலை​யோ​ரம் 200க்கும் மேற்​பட்ட வீடு​கள் உள்​ளன. இவற்​றில் 40 வீடு​கள் ரயில்வே ஃபீ​டர் சாலை​யை​யொட்டி அமைந்து உள்​ளன. இவற்​றில் வசிப்​போர் 60 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக ரயில்வே ஃபீ​டர் சாலை​யையே தங்​கள் பொதுப் பாதை​யா​கப் பயன்​ப​டுத்தி வந்​த​னர். ​
 
                          இந்த நிலை​யில் விழுப்​பு​ரம்-​ மயி​லா​டு​துறை அகல ரயில் பாதைத் திட்​டத்​தில் பல ரயில் நிலை​யங்​க​ளுக்கு சுற்​றுச்​சு​வர் கட்​டப்​பட்டு வரு​கி​றது. நெல்​லிக்​குப்​பம் ரயில் நிலை​யத்​தி​லும் ரயில்வே ஃபீ​டர் சாலை​யை​யொட்டி வடக்​குப் பகு​தி​யில் 300 மீட்​டர் நீளத்​துக்கு மதில்​சு​வர் கட்​டும் பணி தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதில் ஆக்​கி​ர​மித்து கட்​டப்​பட்ட பல வீடு​க​ளின் பகு​தி​கள் இடித்து அகற்​றப்​பட்​டன. மதில் சுவ​ரும் சிறிது தூரத்​துக்​குக் கட்​டப்​பட்​டது. இத​னால் 40-க்கும் மேற்​பட்ட வீடு​க​ளில் வசிப்​போர் பாதிக்​கப்​பட்​ட​னர் இந்த வீடு​க​ளில் யாரா​வது இறந்​தால்​கூட சட​லத்தை வெளியே கொண்​டு​வர முடி​யாத நிலை ஏற்​பட்டு இருப்​ப​தாக அப்​ப​குதி மக்​கள் தெரி​வித்​த​னர்.  
 
                  மே​லும் இப்​ப​கு​தி​யில் உள்ள 10-க்கும் மேற்​பட்ட மாட்​டி​றைச்​சிக் கடை​க​ளால் ரயில் பய​ணி​கள் பாதிக்​கப்​ப​டு​வ​தா​க​வும் புகார் தெரி​விக்​கப்​பட்​டது. இப்​பி​ரச்​னை​கள் தொடர்​பாக பாதிக்​கப்​பட்ட மக்​கள் கட​லூர் மக்​க​ளவை உறுப்​பி​னர் கே.எஸ்.அழ​கி​ரி​யி​டம் முறை​யிட்​ட​னர். ​ ​
 
                அப்​ப​குதி மக்​க​ளின் வேண்​டு​கோளை ஏற்று,​ பிரச்​னைக்கு உரிய இடத்தை கே.எஸ்.அழ​கிரி ஞாயிற்​றுக்​கி​ழமை பார்​வை​யிட்​டார். இதற்​காக கே.எஸ்.அழ​கி​ரி​யின் வேண்​டு​கோளை ஏற்று,​ திருச்சி ரயில்வே கோட்ட மேலா​ளர் சுப்​பி​ர​ம​ணி​ய​மும் சிறப்பு ரயி​லில் நெல்​லிக்​குப்​பம் வந்​தார்.   இரு​வ​ரின் வரு​கை​யை​யொட்டி அப்​ப​குதி மக்​கள் பெரு​ம​ள​வில் அங்கு திரண்​ட​னர். இரு​வ​ரும் பொது​மக்​கள் பிர​தி​நி​தி​க​ளைச் சந்​தித்​துப் பேசி​னர். ​
 
                        பின்​ னர் அழ​கிரி எம்.பி. செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ பாதிக்​கப்​ப​டும் வீடு​க​ளுக்​காக 5 அடி நிலம் விட்​டுக் கொடுக்​கு​மாறு ரயில்வே அதி​கா​ரி​க​ளி​டம் தெரி​வித்து இருக்​கி​றேன்.   ரயில் நிலை​யத்​தின் தெற்​குப் பகு​தி​யில் உள்​ள​வர்​க​ளின் பிரச்​னை​யைத் தீர்க்க,​ அங்கு வழி​விட்டு ரயில்வே மதில் சுவர் கட்​டு​மாறு தெரி​வித்​தேன். பாதிப்பை ஏற்​ப​டுத்​தும் மாட்​டி​றைச்​சிக் கடை​களை அகற்​றி​னால் இந்​தக் கோரிக்​கை​க​ளைப் பரிசீ​லிப்​ப​தாக கோட்ட மேலா​ளர் தெரி​வித்​தார். மாட்​டி​றைச்​சிக் கடை​களை 10 நாளில் அப்​பு​றப்​ப​டுத்​து​வ​தாக நக​ராட்​சித் தலை​வர் உறுதி அளித்​தார். உயர் அதி​கா​ரி​க​ளு​டன் விவா​தித்து சாத​க​மான முடிவை எடுப்​ப​தாக கோட்ட மேலா​ளர் உறுதி அளித்து உள்​ளார் என்​றார் அழ​கிரி. ​
 
          எம்எல்ஏ சபா.ராஜேந்​தி​ரன்,​ நக​ராட்​சித் தலை​வர் கெய்க்​வாட்​பாபு,​ உத​விக் கோட்ட மேலா​ளர் செல்​வ​ராஜ்,​ ஆர்.வி.என்.எல். உத​விப் பொது மேலா​ளர் ரெட்டி,​ நெல்​லிக்​குப்​பம் உள்​ளிட்​டோர் உடன் இருந்​த​னர்.

Read more »

திற​மைக்​கோர் திரு​விழா

சிதம்ப​ரம்,​  டிச. 6:​ 

                               சிதம்​ப​ரம் ஹோட்​டல் சார​தா​ரா​மின் 21-ம் ஆண்டு விழாவை முன்​னிட்டு சிதம்​ப​ரம் பள்​ளி​க​ளுக்கு இடை​யே​யான திற​மைக்​கோர் திரு​விழா என்ற பெய​ரில் கலைப் போட்​டி​கள் நடத்​தப்​பட்​டன. அதன் பரி​ச​ளிப்பு விழா அண்​மை​யில் நடை​பெற்​றது. ந​ட​னப் போட்டி,​ குழு​ந​ட​னப் போட்டி,​ சிறு​வர்​கள் பாடல் போட்டி,​ மாறு​வே​டப் போட்டி,​ கவி​தைப் போட்டி,​ ஓவி​யப் போட்டி உள்​ளிட்ட 6 வித​மான போட்​டி​கள் நடை​பெற்​றன. 15க்கும் மேற்​பட்ட பள்​ளி​க​ளைச் சேர்ந்த 200க்கும் மேற்​பட்ட மாணவ,​ மாண​வி​ய​கள் போட்​டி​யில் பங்​கேற்​ற​னர். இ​தில் குரு​ஞான சம்​பந்​தர் பள்ளி மாணவி ஆர்.அபி​ராமி ​(சிறு​வர்​கள் பாடல் போட்டி)​,​ எடி​சன் ஜி.அகோ​ரம் நினை​வுப் பள்ளி எஸ்.ஹரித்ரா ​(பாம்பு நட​னம்)​,​ வீனஸ் மெட்​ரிக் பள்ளி மாணவி ஆர்.பிரி​யங்கா ​(பரத நாட்​டி​யம்)​,​ காம​ராஜ் மெட்​ரிக் பள்ளி மாண​வி​யர்​கள் ​(குழு நட​னம்)​ ஆகி​யோர் பரி​சு​கள் பெற்​ற​னர். ப​ரி​ச​ளிப்பு விழா​வில் நிர்​வாக இயக்​கு​நர் ஆர்.எம்.சுவே​த​கு​மார் வர​வேற்​றார்.   அரிமா சங்​கத் தலை​வர் செந்​தில்​வே​லன்,​ சண்​மு​க​சுந்​த​கம்,​ இளை​ய​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பரி​சு​களை வழங்​கி​னர்.     

                போட்​டி​க​ளில் அதிக புள்​ளி​க​ளைப் பெற்ற காம​ராஜ் மெட்​ரிக் பள்​ளிக்கு சார​தா​ராம் கோப்பை-​2009 வழங்​கப்​பட்​டது.  விழா ஏற்​பா​டு​களை மேலா​ளர்​கள் முத்​து​வேல். ராஜ​சுந்​த​ரம்,​ சுரேஷ் ஆகி​யோர் செய்​தி​ருந்​த​னர்.

Read more »

நெய்வேலி ஆஞ்​ச​நே​யர் கோயி​லில் இன்​று​மு​தல் பெரிய திரு​மஞ்​ச​னம்

நெய்வேலி,​ டிச. 6:​ 

                        ஸ்ரீ ஹனு​மன் ஜயந்​தியை முன்​னிட்டு நெய்வேலி வட்​டம் 13-ல் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்​ச​நே​யர் கோயி​லில் திங்​கள்​கி​ழமை முதல் 10 நாள்​க​ளுக்கு ​(டிசம்பர் 7 முதல் 16 வரை)​ விசேஷ பெரிய திரு​மஞ்​ச​னம் நடை​பெ​று​கி​றது.

              இ ​தை​யொட்டி ஒவ்​வொரு நாளும் வெற்​றிலை அலங்​கா​ரம்,​ வாழைப்​பழ அலங்​கா​ரம்,​ எலு​மிச்சை பழ அலங்​கா​ரம்,​ காய்​கனி அலங்​கா​ரம்,​ வெண்ணை அலங்​கா​ரம்,​ புஷ்​பம் அலங்​கா​ரம்,​ சந்​தன அலங்​கா​ரம்,​ வெள்​ளிக் கவச அலங்​கா​ரம்,​ வடை மாலை அலங்​கா​ரம் மற்​றும் விசேஷ பெரிய திரு​மஞ்​ச​னம் நடை​பெ​ற​வுள்​ளது.

             இந்த ஆன்​மிக நிகழ்ச்​சி​யில் ஆன்​மிக பெரு​மக்​கள் பெரு​ம​ள​வில் பங்​கு​கொண்டு ஆஞ்​ச​நே​யர் அரு​ளைப் பெரு​மாறு கேட்​டுக்​கொள்​வ​தாக கோயில் நிர்​வாக அதி​காரி நாக​ரா​ஜன் கேட்​டுக்​கொண்​டுள்​ளார்.​

Read more »

முஸ்​லிம் முன்​னேற்​றக் கழக பேரணி,​ ஆர்ப்​பாட்​டம்

​ ​சிதம்​ப​ரம்,​ டிச. 6:​ 

                        பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்​னிட்டு தமிழ்​நாடு முஸ்​லிம் முன்​னேற்​றக் கழ​கம் சார்​பில் சிதம்​ப​ரத்​தில் பேரணி மற்​றும் ஆர்ப்​பாட்​டம் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்​றது.

                              பே ​ரணி சிதம்​ப​ரம் தெற்கு சன்​ன​தியி​லி​ருந்து புறப்​பட்டு மேல​வீதி வழி​யாக வடக்​கு​வீதி தலைமை தபால் நிலை​யத்தை அடைந்​தது. பேர​ணி​யில் 500 பெண்​கள் உள்​ளிட்ட 1500 பேர் பங்​கேற்​ற​னர். பின்​னர் தலைமை தபால் நிலை​யம் முன்பு கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. தமிழ்​நாடு முஸ்​லிம் முன்​னேற்​றக் கழக மாநி​லத் தலை​வர் எம்.ஹெச்.ஜவா​ஹி​ருல்​லாஹ் தலைமை வகித்​துப் பேசி​னார்.

                     அ​வர் பேசி​யது:​ பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட பின்​னர் அமைக்​கப்​பட்ட நீதி​பதி லிப​ரான் ஆணை​யம் 17 ஆண்​டு​கள் கழித்து ரூ.8 கோடி செலவு செய்து 48 முறை ஆயுள் நீட்​டிப்பு பெற்று தனது அறிக்​கையை தற்​போது சமர்ப்​பித்​துள்​ளது. அண்​மை​யில் நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள இந்த அறிக்​கை​யில் விடு​தலை பெற்ற இந்​தி​யா​வில் காந்​தி​ய​டி​கள் படு​கொ​லைக்கு பிறகு நடை​பெற்ற மிகப்​பெ​ரும் பயங்​க​ர​வா​தச் செயல்​க​ளுக்கு கார​ண​மான தீய​சக்​தி​களை தெளி​வாக அடை​யா​ளம் காட்​டி​யுள்​ளது. லிப​ரான் ஆணை​யம் குற்​றஞ்​சாட்​டி​யுள்ள 68 பேர்​க​ளை​யும் உட​ன​டி​யாக கைது செய்ய வேண்​டும். லிப​ரான் ஆணைய அறிக்கை பாபர் மசூதி இடிப்பு வழக்கை நடத்தி வரும் மத்​திய புல​னாய்​வுத் துறை​யி​டம் மேல் நட​வ​டிக்​கைக்​காக ஒப்​ப​டைத்​துள்​ளதை வர​வேற்​கி​றோம் என ஜவா​ஹி​ருல்​லாஹ் கூறி​னார்.

             மா ​நில துணைச் செய​லா​ளர் எஸ்.எம்.ஜின்னா,​ மாவட்​டத் தலை​வர் எம்.அபு​பக்​கர்​சித்​திக்,​ மாவட்​டச் செய​லா​ளர் வி.எம்.ஷேக்​தா​வூத்,​ முன்​னாள் மாவட்​டத் தலை​வர் ஏ.அஷ்​ரப்அலி,​ இ.மக​பூப்​உ​சேன்,​ நக​ரத் தலை​வர் இஸ்​மா​யில்,​ செய​லா​ளர் ஜாகீர் உசேன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று உரை​யாற்​றி​னர். ​ சிதம்​ப​ரம் டிஎஸ்பி மா.மூவேந்​தன் தலை​மை​யில் 300க்கும் மேற்​பட்ட போலீ​ஸôர் பாது​காப்​புப் பணி​க​ளில் ஈடு​பட்​டி​ருந்​த​னர்.​

Read more »

பள்ளி மாண​வர்​க​ள் செல்​போன் பேச தடை

கடலூர்,​ டிச. 5:​ 

                         பள்ளி மாணவ,​ மாண​வி​யர் செல்​போன்​களை பயன்​ப​டுத்​தத் தடை விதிக்க வேண்​டும் என்று கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்த குழந்​தை​கள் நாடா​ளு​மன்​றத்​தில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது. பள்ளி நேரங்​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளுக்​கும்,​ பள்ளி வாகன ஓட்​டு​நர்​க​ளுக்கு வாக​னத்தை இயக்​கும்​போ​தும் செல்​போன் பயன்​ப​டுத்த தமி​ழக அரசு தடைச் சட்​டம் கொண்​டு​வர வேண்​டும் என்​றும் குழந்​தை​கள் நாடா​ளு​மன்​றம் தீர்​மா​னம் நிறை​வேற்​றி​யது. ​

              பொ​யட்ஸ் தொண்டு நிறு​வ​னம்,​ பி.எம்.எஸ்.எஸ். தொண்டு நிறு​வ​னம்,​ புது​யு​கம்,​ கரு​ணை​வி​ழி​கள்,​ மனுஷி உள்​ளிட்ட பல்​வேறு தொண்டு நிறு​வ​னங்​கள் சார்​பில் சனிக்​கி​ழமை கட​லூ​ரில் குழந்​தை​கள் உரிமை தின விழா மற்​றும் குழந்​தை​கள் பேரணி நடந்​தது. ​

              வி​ழாவை யொட்டி பள்ளி மாணவ,​ மாண​வி​யர் கலந்​து​கொண்ட பேரணி,​ பெரி​யார் சிலை அரு​கில் இருந்து புறப்​பட்டு விழா நடை​பெற்ற டவுன்​ஹா​லில் முடி​வ​டைந்​தது. பேர​ணியை கட​லூர் சட்​டப்​பே​ரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன் தொடங்கி வைத்து குழந்​தை​க​ளு​டன் நடந்து வந்​தார். ​

               ட​வுன்​ஹா​லில் நடந்த நிகழ்ச்​சி​க​ளுக்கு பொயட்ஸ் தொண்டு நிறு​வன நிர்​வாக இயக்​கு​நர் பெ.சாமி​நா​தன் தலைமை தாங்​கி​னார். சி அறக்​கட்​டளை இயக்​கு​நர் டெய்சி வர​வேற்​றார். குழந்​தை​கள் நாடா​ளு​மன்ற அமைச்​சர்​க​ளுக்கு மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் எஸ்.அமு​த​வல்லி பத​விப் பிர​மா​ணம் செய்து வைத்து உரை நிகழ்த்​தி​னார். குழந்​தை​கள் நாடா​ளு​மன்​றக் கண்​காட்​சியை அய்​யப்​பன் எம்.எல்.ஏ. பார்​வை​யிட்​டார். ​

               அ​தைத் தொடர்ந்து குழந்​தை​கள் நாடா​ளு​மன்ற நிகழ்ச்சி நடந்​தது. இதில் பல்​வேறு பிரச்​னை​கள் விவா​திக்​கப்​பட்டு தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

                 காலை, ​ மாலை வேலை​க​ளில் மாண​வர்​க​ளுக்கு சிறப்​புப் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்​டும். உரிய பஸ் நிறுத்​தங்​க​ளில் பஸ்​களை நிறுத்த வேண்​டும். பஸ் ஓட்​டு​நர்​கள் மற்​றும் நடத்​து​நர்​கள் பள்ளி மாணவ,​ மாண​வி​யரை கண்​ணி​யத்​து​டன் நடத்​து​மாறு மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் அரசு போக்​கு​வ​ரத்​துத் துறை அலு​வ​லர்​கள் நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். ​ பள்ளி மாண​வர்​கள் செல்​​போ​னைப் பயன்​ப​டுத்​தத் தடை விதிக்க வேண்​டும். பள்ளி நேரங்​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளும்,​ பள்ளி வாகன ஓட்​டு​நர்​கள் வாக​னங்​களை ஓட்​டும் போது செல்​போன் பயன்​ப​டுத்த தமி​ழக அரசு தடை​வி​திக்க வேண்​டும். குழந்​தை​கள் ஊட்​டச்​சத்து மையங்​கள்,​ சத்​து​ணவு மையங்​க​ளில் சரி​யான முறை​யில் சுகா​தா​ர​மான உணவு வழங்க வேண்​டும். திரைப்​ப​டங்​கள்,​ தொலைக்​காட்சி,​ விளம்​ப​ரங்​க​ளில் குழந்​தை​க​ளைத் துன்​பு​றுத்​தும் காட்​சி​க​ளுக்​குத் தடை விதிக்க வேண்​டும் என்​றும் தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.

                    தொ​ டர்ந்து குழந்​தை​க​ளின் கலை நிகழ்ச்​சி​கள் நடை​பெற்​றன. நாடா​ளு​மன்ற இணைய ஆலோ​ச​கர் கல்​பனா,​ நாடா​ளு​மன்ற கூட்​ட​மைப்​பின் அமைப்​பா​ளர் கிறிஸ்​டோ​பர்,​ வெல்த்​துங்​கர் ஹில்பே தொண்டு நிறு​வன இயக்​கு​நர் முனை​வர் ஆறு​மு​கம்,​ பொயட்ஸ் இயக்​கு​நர் திரி​வேணி,​ பி.எஸ்.ஜி. தொண்டு நிறு​வ​னச் செய​லா​ளர் தாம​ரைச்​செல்​வன்,​ ​ கேர் இந்​தியா மாவட்ட ஒருங்​கி​மைப்​பா​ளர் மோசஸ் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.​

Read more »

பாபர் மசூதி இடிப்பு தினம்: ​ போலீஸ் தீவிர சோதனை

கட ​லூர்,​ டிச. 5:​ 

                            டிசம்​பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்​னிட்டு கட​லூர் மாவட்​டத்​தில் போலீஸ் சோதனை தீவி​ர​மாக நடை​பெற்​றன. இதில் பிடி​வா​ரண்ட் நிலு​வை​யில் இருந்​த​வர்​கள் உள்​ளிட்ட 110 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர். ​ ​

                      மா​வட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஸ் உத்​த​ர​வின்​பே​ரில் வெள்​ளிக்​கி​ழமை இரவு இந்த மாவட்த்​தில் உள்ள 21 சோத​னைச் சாடி​க​ளி​லும் வாக​னத் தணிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. விடு​தி​கள்,​ பஸ் நிலை​யங்​கள்,​ ரயில் நிலை​யங்​கள்,​ மக்​கள் அதி​கம் கூடும் இடங்​க​ளில் சோதனை நடத்​தப்​பட்​டது. 600க்கும் மேற்​பட்ட போலீ​ஸôர் இந்த சோத​னை​யில் ஈடு​பட்​ட​னர். ​ பிடி​வா​ரண்ட் நிலு​வை​யில்  இருந்த குற்​ற​வா​ளி​கள் 15 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர். திருட்டு வழக்​கு​க​ளில் தேடப்​பட்ட 4 பேர்,​ சாராய வழக்​கு​க​ளில் தேடப்​பட்ட 21 பேர்,​ மேலும் சந்​தே​கப்​ப​டும் நிலை​யில் சுற்​றித்​தி​ரிந்த 70 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர். ​

           கு​டி​போ​தை​யில் வாக​னங்​களை ஓட்​டிய 41 பேர்,​ அதி​வே​க​மாக வாக​னங்​களை ஓட்​டிய 9 பேர் மீதும் போதிய அவ​ணங்​கள் இன்றி வாக​னங்​களை ஓட்​டிய 200 பேர் மீதும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. ​

               மா​வட்​டத்​தில் உள்ள சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயில்,​ விருத்​தா​ச​லம் விருத்​த​கீ​ரீஸ்​வர் கோயில்,​ திரு​வந்​தி​பு​ரம் தேவ​நா​த​சாமி கோயில்,​ திருப்​பாப்பு​லி​யூர் பாட​லீஸ்​வ​ரர் கோயில் உள்​ளிட்ட பிர​ப​ல​மான கோயில்​கள்,​ மசூ​தி​கள்,​ கிறிஸ்​தவ தேவா​ல​யங்​க​ளுக்​கும் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்டு உள்​ளது. தலை​வர்​க​ளின் சிலை​க​ளுக்​கும் பாது​காப்பு போடப்​பட்டு உள்​ளது.​

Read more »

பிள்​ளை​யார்​குப்​பத்​தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பண்ருட்டி,​ டிச. 5:​ 

                        பண்​ருட்டி வட்​டம் நடுப்​பிள்​ளை​யார்​குப்​பம் கிரா​மத்​தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா சனிக்​கி​ழமை நடை​பெற்​றது. ​ 

                    பண்​ருட்டி வட்​டம் மாளி​கம்​பட்டு ஊராட்​சி​யில் உள்ள நடுப்​பிள்​ளை​யார்​குப்​பம்,​ புது​பிள்​ளா​யார்​குப்​பம்,​ பழைய பிள்​ளை​யார்​குப்​பம் ஆகிய கிரா​மங்​க​ளில் 700க்கும் மேற்​பட்ட குடும்​பத்​தி​னர் வசித்து வரு​கின்​ற​னர். இப்​ப​கு​தி​யில் வசிப்​ப​வர்​கள் ரேஷன் பொருள்​கள் வாங்க 2 கீ.மி. தொலை​வில் உள்ள மாளி​கம்​பட்டு கிரா​மத்​துக்கு சென்று வந்​த​னர். இ​த​னால் தங்​கள் பகு​தி​யில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்​துத் ​ தர வேண்​டும் என கிராம மக்​கள் கோரிக்கை வைத்​தி​ருந்​த​னர். இக்​கோ​ரிக்​கையை ஏற்று நடுப்​பிள்​ளை​யார் குப்​பத்​தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்​கப்​பட்​டது. 

                இ​தன் தொடக்க விழா ஊராட்சி மன்​றத் தலை​வர் கே.வர​த​ரா​ஜன் தலை​மை​யில் சனிக்​கி​ழமை நடை​பெற்​றது. இதில் கூட்​டு​றவு சங்க சார் பதி​வா​ளர் எஸ்.ராக​வன் கலந்​துக்​கொண்டு முதல் விற்​ப​னை​யைத் தொடங்கி வைத்​தார்.​

Read more »

14 வய​துக்கு உள்​பட்​டோருக்கு கட்​டாய இல​வ​சக் கல்​வி

  14 வய​துக்கு உள்​பட்ட அனைத்து குழந்​தை​க​ளுக்​கும் இல​வச கட்​டா​யக் கல்வி வழங்க வகை​செய்​யும் சட்​டத்​தைத் தமி​ழக அரசு இயற்ற வேண்​டும் என்று கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்த குழந்​தை​கள் உரி​மைச் சட்​டக் கருத்​த​ரங்​கில் அர​சுக்கு பரிந்​துரை செய்​யும் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது. ​÷கு​ழந்​தை​கள் உரிமை மற்​றும் வளர்ச்​சிக்​கான மையம்,​ தோழமை,​ இந்​திய நுகர்​வோர் அமைப்​பு​க​ளின் கூட்​ட​மைப்பு சார்​பில் குழந்​தை​க​ளுக்​கான உரிமை பற்​றிய கருத்​த​ரங்​கம் நடந்​தது. குழந்​தை​கள் உரி​மைச் சட்​டம் -​2000 மற்​றும் தமி​ழ​கச் சட்​டங்​கள் குறித்து கருத்​த​ரங்​கில் விவா​திக்​கப்​பட்​டது.

                14 வய​துக்கு உள்​பட்ட அனைத்து குழந்​தை​க​ளக்​கும் கட்​டாய இல​வ​சக் கல்வி வழங்க வகை​செய்​யும் சட்​டத்​தைத் தமி​ழக அரசு இயற்ற வேண்​டும். குழந்​தை​க​ளுக்​கான நீதி​மன்​றங்​க​ளுக்​குத் தனி​யாக நீதி​ப​தி​களை நிய​மிக்க வேண்​டும். அவர்​க​ளுக்கு குழந்​தை​கள் உரிமை பற்றி பயிற்சி அளிக்க வேண்​டும். அனைத்து மாவட்​டங்​க​ளி​லும் குழந்​தை​க​ளுக்​கான போலீஸ் யூனிட்​டு​களை உரு​வாக்க வேண்​டும் ​ உள்​ளிட்ட 12 தீர்​மா​னங்​கள் அர​சுக்​குப் பரிந்​து​ரைக்​கப்​பட்​டன. 18 வய​துக்கு உள்​பட்​ட​வர்​கள் குழந்​தை​கள் என்று இருப்​பதை 16 வய​துக்கு உள்​பட்​ட​வர்​கள் குழந்​தை​கள் என்று சட்​டத்​தில் திருத்​தம் கொண்​டு​வர வேண்​டும் என்​றும் கருத்​த​ரங்​கில் கோரப்​பட்​டது.

                 க​ருத்​த​ரங்​கில் குழந்​தை​கள் உரிமை வாரிய உறுப்​பி​னர் சமூக சேவகி சுஜாதா சீனி​வா​சன்,​ குழந்​தை​கள் உரிமை மற்​றும் வளர்ச்சி மைய இயக்​கு​நர் தாமஸ் ஜெய​ராஜ்,​ துணை இயக்​கு​நர் தேன்​பாண்​டி​யன்,​ இந்​திய நுகர்​வோர் கூட்​ட​மைப்​பின் அறங்​கா​வ​லர் வழக்​க​றி​ஞர் மார்ட்​டின்,​ உயர் நீதி​மன்ற வழக்​க​றி​ஞர் திவா​க​ரன்,​ தோழமை அமைப்​பின் இயக்​கு​நர் தேவ​நே​யன் உள்​ளிட்​டோர் பேசி​னர். இந்​திய நுகர்​வோர் கூட்​ட​மைப்​பின் பொதுச் செய​லா​ளர் எம்.நிஜா​மு​தீன் வர​வேற்​றார். செல்​வம் நன்றி கூறி​னார்.​

Read more »

பாதி​யில் விடப்​பட்ட பள்ளி வகுப்பறை கட்​டு​மா​னப் பணி

​ பண்​ருட்டி,​ டிச. 5:​ 

                              மாளி​கம்​பட்டு கிரா​மத்​தில் 5 ஆண்​டு​க​ளுக்கு முன் கட்​டப்​பட்டு பாதி​யில் நிற்​கும் கூடு​தல் பள்ளி வகுப்​பறை கட்​டு​மா​னப் பணியை விரைந்து முடித்​துத் தர வேண்​டும். இல்​லை​யேல் மக்​க​ளைத் திரட்டி போராட்​டம் செய்​யப்​ப​டும் என்று ஒன்​றிய கவுன்​சி​லர் எழி​ல​ர​சன் கூறி​னார்.

                           பண்​ருட்டி வட்​டம் மாளி​கம்​பட்டு கிரா​மத்​தில் ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்ளி இயங்கி வரு​கி​றது. தாழம்​பட்டு,​ மாளி​கம்​பட்டு,​ பிள்​ளை​யார்​குப்​பம் பகு​தி​களை சேர்ந்த 450க்கும் மேற்​பட்ட மாணவ,​ மாண​வி​கள் இப்​பள்​ளி​யில் படித்து வரு​கின்​ற​னர்.

                அ​னை​வ​ருக்​கும் கல்வி திட்​டத்​தின் மூலம் இப்​பள்​ளிக்​காக 5 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் ​ ரூ.4.60 லட்​சம் செல​வில் 3 வகுப்​ப​றை​கள் கட்​டும்​பணி தொடங்​கி​யது. 75 சத​வீ​தம் முடி​வ​டைந்த நிலை​யில் இக்​கட்​ட​டப் பணியை அப்​ப​டியே விட்​டு​விட்​ட​னர். இத​னால் இக்​கட்​ட​டம் தற்​போது சித​லம் அடைந்து வரு​கின்​றது.÷இது குறித்து மாளி​கம்​பட்டு ஊராட்சி ஒன்​றிய கவுன்​சி​லர் எழி​ல​ர​சன் கூறி​யது:​ மாளி​கம்​பட்டு கிரா​மத்​தில் 50 ஆண்​டு​க​ளுக்​கும் மேலாக இப்​பள்ளி இயங்கி வரு​கி​றது. இக்​கட்​டி​டத்​தின் மேல் ஓடு​கள் பதிக்​கப்​ப​ட​வில்லை,​ பூச்சு வேலை மற்​றும் தரை போடப்​ப​டா​மல் உள்​ளது. இடப்​பற்​றாக்​கு​றை​யால் இந்த கட்​ட​டத்​தில் தான் மாண​வர்​கள் அமர்ந்து படித்து வரு​கின்​ற​னர். கடந்த 5 ஆண்​டு​க​ளாக பூர்த்தி செய்​யப்​ப​டா​மல் உள்ள இக்​கட்​ட​டம் சித​லம் அடைந்து வரு​கின்​றது.÷இது குறித்து பண்​ருட்டி ஒன்​றிய அலு​வ​ல​கத்​தில் கேட்​ட​தற்கு,​ "கட்​ட​டம் ஒன்​றி​யத்​தி​டம் ஒப்​ப​டைக்​கப்​ப​ட​வில்லை'  என கூறி​விட்​ட​னர். இக்​கட்​ட​டப் பணியை பூர்த்தி செய்து மாண​வர்​கள் பாது​காப்​பான சூழ​லில் கல்வி பயில மாவட்ட நிர்​வா​க​மும்,​ சம்​மந்​தப்​பட்ட அதி​கா​ரி​க​ளும் முன்​வர வேண்​டும். இல்லை என்​றால் கிராம மக்​களை ஒன்று திரட்டி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​ப​டும் என்று ஒன்​றி​யக் கவுன்​சி​லர் எழி​ல​ர​சன் கூறி​னார்.​

Read more »

பண்​ருட்​டி​யில் மணிலா விதைப்பு மும்​மு​ரம்

​ பண்​ருட்டி,​ டிச. 5:​ 
 
                              பண்​ருட்டி பகு​தி​யில் மணிலா விதைப்​புப் பணி தீவி​ரம் அடைந்​துள்​ளது. ஆள்​கள் பற்​றாக் குறை​யால் இப்​பணி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.
 
                        க​ட​லூர் மாவட்​டத்​தில் விவ​சாய விளை பொருள்​க​ளில் நெல்,​ கரும்​புக்கு அடுத்​தப்​ப​டி​யாக எண்ணை வித்​தான மணிலா அதிக அளவு நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​ப​டு​கி​றது. ​ கார்த்​திகை,​ மார்​கழி மாதங்​க​ளில் மணிலா விதைப்பு செய்​யப்​ப​டும். இருப்​பி​னும் மழை​யால் சேதம் ஏற்​ப​டும் என்ற அச்​சத்​தால் அநேக விவ​சா​யி​கள் கார்த்​திகை தீபம் முடி​வ​டைந்​த​தும் விதைப்​புப் பணி​களை தீவி​ரப்​ப​டுத்​து​வர். தற்​போது கார்த்​திகை தீபம் முடி​வ​டைந்​ததை அடுத்து மணிலா விதைப்பை தீவி​ரப்​ப​டுத்​தி​யுள்​ள​னர். ​
 
                   இ​து​கு​ றித்து மாளி​கம்​பட்டு விவ​சாயி ஆறு​மு​கம் கூறி​யது:​ கார்த்​திகை தீபத்​துக்கு முன் மணிலா விதைத்​தால் மழை​யால் சேதம் அடை​யும். இத​னால் தீபம் முடிந்து தான் மணிலா விதைப்பு தீவி​ரம் அடை​யும். ஆள் பற்​றாக் குறை​யால் மணிலா விதைப்பு பாதிப்​ப​டைந்​துள்​ளது. விவ​சா​யத் துறை மூலம் சான்று அளிக்​கப்​பட்ட மணிலா விதை கிடைக்​க​வில்லை. இத​னால் தனி​யா​ரி​டம் இருந்து வாங்கி விதைக்​கின்​றோம். இதன் முளைப்​புத் தன்மை மற்​றும் காய்ப்பு திறன் போகப்​போ​கத்​தான் தெரி​யும் என விவ​சாயி ஆறு​மு​கம் கூறி​னார்.
 
              இது குறித்து வேளாண்மை உதவி இயக்​கு​னர் பி.ஹரி​தாஸ் கூறி​யது:​ மணிலா விதைப்பு பரு​வத்​துக்​காக பண்​ருட்டி வட்​டத்​துக்கு 2 டன் மணிலா விதை பெறப்​பட்டு,​ கடந்த 15 நாள்​க​ளுக்கு முன்​னரே விவ​சா​யி​க​ளுக்கு விநி​யோ​கம் செய்து விட்​டோம். தற்​போது விதை இருப்பு இல்லை என்​றார்.

Read more »

துல்​லியப் பண்​ணைய திட்​டம் மூலம் தோட்​டக்​கலை பயிர் சாகு​படி

சிதம்​ப​ரம்,​ டிச. 5:​ 

                                 சிதம்​ப​ரத்தை அடுத்த பரங்​கிப்​பேட்டை வட்​டா​ரத்​தில் தமிழ்​நாடு வேளாண்மை வளர்ச்சி திட்​டத்​தில் துல்​லிய பண்​ணைய திட்​டம் மூலம் தோட்​டக்​கலை பயிர்​கள் சாகு​படி செய்ய திட்​ட​மி​டப்​பட்​டுள்​ள​தாக உதவி வேளாண் இயக்​கு​நர் ராஜ​ரா​ஜ​சோ​ழன் தெரி​வித்​துள்​ளார்.

                 இ​து​கு​றித்து அவர் வெளி​யிட்​டுள்ள பத்​தி​ரிகை செய்தி:​ துல்​லிய பண்​ணைய வேளாண் திட்​டத்​தில் ஒரு ஹெக்​டேர் நிலம் உடைய 10 வேளாண் பெரு​மக்​கள் ஒரு குழு​வாக ஒருங்​கி​ணைந்து ஓராண்டு வாழை அல்​லது காய்​கறி உள்​ளிட்ட தோட்​டக்​கலை பயிர்​கள் சாகு​படி செய்​ய​லாம். இதற்கு மத்​திய,​ மாநில அரசு நுண்​ணீர் பாசன அமை​விற்கு ரூ.40 ஆயி​ரம் மற்​றும் கரை​யும் உரங்​கள் ரூ.30 ஆயி​ரம் உள்​ளிட்ட ரூ.70 ஆயி​ரத்தை மானி​ய​மாக வழங்​கு​கி​றது.

                  வி​வ​சா​யி​கள் இத்​திட்​டத்​தின் மூலம் பயன்​பெற நில உடைமை சிட்டா,​ சாகு​படி விவர அடங்​கல்,​ அடை​யாள அட்டை நகல்,​ வயல் விபர வரை உள்​ளிட்ட ஆவ​ணங்​க​ளு​டன் அருகே உள்ள உதவி வேளாண் அலு​வ​லரை தொடர்பு கொள்ள வேண்​டும் என ராஜ​ரா​ஜ​சோ​ழன் தெரி​வித்​துள்​ளார்.​

Read more »

விருத்​தா​ச​லத்​தில் மக்​காச்​சோள விளை​பொ​ருள் குழுக் கூட்​டம்

நெய்வேலி, ​ டிச. 5:​ 

                            விருத்​தா​ச​லம் வட்​டம் மங்​க​ளூர் ஒன்​றி​யத்​துக்கு உட்​பட்ட ஜா.ஏந்​தல் கிரா​மத்​தில் வேளாண் விற்​பனை மற்​றும் வணி​கத்​துறை சார்​பில் விருத்​தா​ச​லம் கோட்ட வேளாண் விளை​பொ​ருள் கூட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது.

                       இ​து​கு​றித்து விருத்​தா​ச​லம் கோட்ட வேளாண் அலு​வ​லர் ச.அமுதா வெள்​ளிக்​கி​ழமை வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​ ஜா.ஏந்​தல் கிரா​மத்​தில் நீர்​வள,​ நில​வள திட்​டத்​தின் கீழ் 15 உறுப்​பி​னர்​க​ளைக் கொண்ட விளை​பொ​ருள் குழுக்​கள் எள்,​ மணிலா,​ பருத்தி மற்​றும் மக்​காச்​சோள பயிர்​க​ச​ளுக்​காக அமைக்​கப்​பட்​டுள்​ளன.

                 இக் ​கு​ழுக்​க​ளுக்கு வேளாண் வணி​கத் திட்​டங்​கள்,​ மேற்​கண்ட பயிர்​க​ளுக்​கான அறு​வடை பின்​செய் நேர்த்தி தொழில்​நுட்​பங்​கள்,​ லாபம் தரும் சந்தை வாய்ப்​பு​கள்,​ விளை பொருள்​களை ஒழுங்​கு​முறை விற்​பனை கூடங்​க​ளுக்கு கொண்டு சென்று விற்​பனை செய்​வது ஆகி​யவை குறித்து பயிற்சி அளிக்​கப்​பட்​டது.

              மே​லும் விளை பொருள்​க​ளின் அறு​வ​டைக் காலங்​க​ளில் எதிர்​நோக்​கும் விற்​பனை விலை குறைவை ஈடு​கட்ட ஒழுங்கு முறை விற்​ப​னைக் கூடங்​க​ளில் இருப்பு வைத்து விற்​பனை செய்​வது,​ விற்​ப​னைக் காலங்​க​ளில் பொரு​ளீட்டு கடன்​பெ​றும் வழி வகை​கள்,​ மக்​காச்​சோ​ளம் விற்​பனை செய்​வ​தற்கு வேளாண் விற்​ப​னைத் துறை சார்​பில் தனி​யார் கோழித் தீவன பண்​ணை​கள் மூலம் புரிந்​து​ணர்வு ஒப்​பந்​தம் செய்து கொள்​மு​தல் செய்​யும் ஏற்​பா​டு​கள் குறித்​தும் அமுதா விளக்​கி​னார்.

                 முன்​ன​தாக விவ​சாய முன்​னோடி விளை​பொ​ருள் குழுக் கூட்​டத்​துக்கு வேம்​பன் தலைமை வகித்​தார். உதவி வேளாண் அலு​வ​லர் ஜெய​பால் கூட்​டத்​துக்​கான ஏற்​பா​டு​க​ளைச் செய்​தி​ருந்​தார். 40-க்கும் மேற்​பட்ட விவ​சா​யி​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​ற​னர்.

Read more »

அனைத்து ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளி​லும்​நிர்​வாக அலு​வ​லர்​களை நிய​மிக்​கக் கோரிக்கை

கட​லூர்,​  டிச. 5:​ 

                                 அனைத்து ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளி​லும் நிர்​வாக அலு​வ​லர்​களை நிய​மிக்க வேண்​டும் என்று தமிழ்​நாடு பொது சுகா​தா​ரத் துறை அமைச்​சுப் பணி அலு​வ​லர் சங்​கம் அர​சுக்​குக் கோரிக்கை விடுத்​துள்​ளது. ​

                   இச் ​சங்​கத்​தின் மாநில செயற்​கு​ழுக் கூட்​டம் கட​லூ​ரில் சனிக்​கி​ழமை நடந்​தது. கூட்​டத்​தில் நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:​

                      ஆ​ ரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளில் கோடிக்​க​ணக்​கில் பணப் புழக்​கம் உள்​ள​தால்,​ ​ நிர்​வாக அலு​வ​லர் பணி​யி​டங்​க​ளைத் தோற்​று​விக்க வேண்​டும். அனைத்து வட்​டார சுகா​தார நிலை​யங்​க​ளுக்​கும் அலு​வ​ல​கக் கட்​ட​டம் கட்ட நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும். அனைத்து இள​நிலை உத​வி​யா​ளர்​க​ளுக்​கும் பதவி உயர்வு வழங்க வேண்​டும். ஆரம்ப சுகா​தார நிலை​யங்​க​ளில் பணிச்​சுமை அதி​க​ரித்து உள்​ள​தால்,​ அயல் பணி​களை ரத்து செய்ய வேண்​டும். தாற்​கா​லிக இள​நிலை உத​வி​யா​ளர்​களை பணி​நி​ரந்​த​ரம் செய்ய வேண்​டும் என்​பவை உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கை​கள் அடங்​கிய தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன. ஏற்​கெ​னவே நிறை​வேற்​றப்​பட்ட கோரிக்​கை​க​ளுக்​காக முதல் அமைச்​ச​ருக்கு நன்றி தெரி​விக்​கப்​பட்​டது. புதிய ​ நிர்​வா​கி​கள் பாராட்​டப்​பட்​ட​னர். ​

                         கூட்​டத்​துக்கு மாநி​லத் தலை​வர் எஸ்.பி.தின​மணி தலைமை தாங்​கி​னார். மாநில பொதுச் செய​லா​ளர் ஞான​சே​க​ரன் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர். தமிழ்​நாடு அரசு அலு​வ​லர் ஒன்​றிய மாநி​லத் தலை​வர் கோ.சூரி​ய​மூர்த்தி சிறப்​புரை நிகழ்த்​தி​னார். சங்க நிர்​வா​கி​கள் சண்​மு​க​ரா​ஜன்,​ கார்​மே​க​வண்​ணன்,​ மோகன்​ராஜ்,​ செல்​வம்,​ கங்​கா​த​ரன்,​ பாஸ்​க​ரன்,​ அரங்க.ரகு த.சேகர் பேசி​னர். முத்​துக்​கிó​ருஷ்​ணன் வர​வேற்​றார். செங்​கேணி நன்றி கூறி​னார்.​

Read more »

திட்டக்குடி அருகே விபத்து: ஆந்திர பக்தர்கள் இருவர் பலி

கட ​லூர்,​ ​ டிச. 5:​ 


                  ஆந்​திர மாநி​லத்​தைச் சேர்ந்த இரு பக்​தர்​கள் ராமேஸ்​வ​ரம் கோயி​லில் சாமி கும்​பிட்டு விட்டு திரும்​பு​கை​யில்,​ திட்​டக்​குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்​தில் இறந்​த​னர். சனிக்​கி​ழமை அதி​கா​லை​யில் இந்த விபத்து நடந்​தது.÷ஆந்​திர மாநி​லம் சுகா​கு​ளம் மாவட்​டம் ராணிகா மண்​ட​லத்​தைச் சேர்ந்த 5 பேர் ராமேஸ்​ரம் கோயி​லுக்கு சாமி கும்​பிட காரில் வந்​த​னர். சாமி கும்​பிட்​டு​விட்டு ஆந்​தி​ரம் திரும்​பு​கை​யில்,​ அவர்​கள் பய​ணம் செய்த கார் திட்​டக்​கு​டியை அடுத்த வேப்​பூர் அருகே விபத்​தில் சிக்​கி​யது. திருச்​சி​யில் இருந்து சென்னை நோக்​கிச் சென்ற லாரி அதி​வே​க​மாக வந்து காரின் பின் பகு​தி​யில் மோதி​யது. ​ ​

                       இந்த விபத்​தில் காரில் பய​ணம் செய்த ஈஸ்​வ​ர​ராவ் ​(25), மகேஸ்​வ​ர​ராவ் மனைவி ரானம்​மாள் ​(70) ஆகி​யோர் அதே இடத்​தில் இறந்​த​னர். காய​ம​டைந்த மேலும் மூவர் உளுந்​தூர்​பேட்டை அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​ட​னர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior