உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 27, 2012

திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் விழா

குறிஞ்சிப்பாடி :


குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் விழா நடந்தது.

நிர்வாக அதிகாரி முத்துகுமரன் தலைமை தாங்கினார். வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகத்துறை தலைவர் சிவசங்கரன் வரவேற்றார். நிர்வாக குழுத் தலைவர் சட்டநாதன், முதல்வர் முத்துகருப்பன், தேசிய தரநிர்ணயக்குழு ஒருங்கினைப்பாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். ஜோதிமணி பழனி, பேராசிரியர் கலியமூர்த்தி எழுதிய வணிக பொருளியல் பாட புத்தகத்தை பி.காம்., இரண்டாமாண்டு மாணவர்களுக்கு நகைக்கடை உரிமையாளர் பழனி பாபு, பேராசிரியர் கலியமூர்த்தி ஆகியோர் இலவசமாக வழங்கிப் பேசினர்.ஆங்கில துறைத் தலைவர் வசந்தி டேனியல், வேலை வாய்ப்புக் குழு உறுப்பினர் நிர்மலா உட்பட பலர் பங்கேற்றனர்.
 





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior