உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 03, 2010

இன்றுமுதல் பி.இ. விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி


             தமிழகத்தில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 58 மையங்களில் திங்கள்கிழமை (மே 3) முதல் விநியோகிக்கப்படவுள்ளன. விண்ணப்பங்கள் மே 29-ம் தேதி வரை வழங்கப்படும். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களின் 16 உறுப்புக் கல்லூரிகளில் 5,905 பி.இ. இடங்கள், 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் 2,560 இடங்கள், 3 அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 2,465 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,61,515 இடங்கள் என 456 கல்லூரிகளில் 1,72, 445 பி.இ. இடங்கள் உள்ளன.இவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 58 மையங்களில் மே 3 முதல் வழங்கப்படுகின்றன. குறிப்பாக அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், சில குறிப்பிட்ட அரசு கலைக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் போன்றவற்றில் வழங்கப்படுகின்றன. அனைத்து மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

                   ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பத்தை நேரில் பெறுவதற்கான கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.சி.ஏ., (அருந்ததியினர்), எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250. விண்ணப்பத்தைத் தபாலில் பெற, "செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம்', என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில், டி.டி. எடுத்து, செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 25 என்ற முகவரிக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்ப வேண்டும். தபாலில் பெறுவதற்கு எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவனர் ரூ.450-க்கும், மற்ற பிரிவினர்கள் ரூ.700-க்கும் டி.டி. எடுக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31-ம் தேதிக்குள் ஏற்கெனவே, மேலே குறிப்பிட்ட முகவரியில் மாலை 5.30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  இணையதளம் மூலம்:  பி.இ. விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமும் பதிவு செய்யலாம். அதாவது www.annauniv.edu/tnea2010 என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கேட்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும். பின்னர், அதை பிரிண்ட் எடுத்து, அதில் சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படத்தை ஒட்டி, கையெழுத்திட்டு, அந்த படிவத்தையும், டி.டி.யையும் இணைத்து மேலே குறிப்பிட்ட முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். பி.இ. தரவரிசைப் பட்டியல் ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படும்.  பி.இ. கலந்தாய்வு ஜூன் 28-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை நடைபெறும்.   

சென்னையில் 4 இடங்களில் விண்ணப்பம் 

               சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு மையம், குரோம்பேட்டை எம்.ஐ.டி., புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக், பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி ஆகிய 4 இடங்களில் பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.   அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. விண்ணப்பம் வாங்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை வழக்கம் போல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதனால் மாணவர், பெற்றோர் வசதிக்காக, முதல் நாளான திங்கள்கிழமை காலை 6 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. தவிர, பல்கலைக்கழகத்தில் 20 கவுன்ட்டர்கள் அமைத்து பி.இ. விண்ணப்பங்கள் வழங்கப்படும். மற்ற மையங்களில் காலை 9.30 மணிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

1.80 லட்சம் விண்ணப்பங்கள் 

               பி.இ. மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஆண்டு மொத்தம் 1.6 லட்சம் விண்ணப்பங்கள்  விற்கப்பட்டன. அதை அடிப்படையாக வைத்து 2010-11-ம் கல்வி ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கு 1.80 லட்சம் பி.இ. விண்ணப்பங்கள் முதல் கட்டமாக அச்சடிக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் தங்களுக்கு பி.இ. விண்ணப்பம் கிடைக்கும் கிடைக்காதோ என்ற சந்தேகம் கொள்ளவேண்டாம். விண்ணப்ப விநியோக மையங்களில் முதல் நாளே சென்று இடம் பிடிப்பதும் தேவையில்லை.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் தமிழுக்கு இந்த நிலையா


புதுவையில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கடலூர் நகருக்குள் நுழையும் இடத்தில், சுற்றுலாத் தலங்கள் என்பதற்குப் பதில் "சுற்றுலாத் தளங்கள்' என்று
கடலூர்:

               சமயக் குறவர்கள் நால்வரில் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில், திருமாணிக்குழு வாமனபுரீஸ்வரர் கோயில், எய்தனூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்கள் கடலுர் மாவட்டத்தில் சமயக் குறவர்களால் பாடல் பெற்றத் தலங்களாக உள்ளன.தமிழகத்தில் கோயில்கள் சமயத்தை மட்டும் அல்ல தமிழையும் சேர்த்து வளர்த்தன. தமிழாய் விளங்கிய கோயில்களையும், தமிழ்க்கடல் ஞானியார் அடிகளாரும், வடலூர் ராமலிங்க அடிகளார், தமிழறிஞர்கள் சுந்தரசண்முகனார், நடேச முதலியார், சிவலிங்கனார் உள்ளிட்டோரும் தோன்றிய கடலூரில், சில நேரங்களில் தமிழ் தடுமாறத் தொடங்கி விடுகிறது.புதுவையில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகக் கடலூர் நகருக்குள் நுழையும் இடமான பெண்ணை ஆற்றின் கரையில், தமிழக அரசின் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாத்துறை சார்பில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த அறிவிப்புப் பலகையில், கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்களைக் காணவாரீர் என்று இருப்பதற்குப் பதில், கடலூர் மாவட்ட சுற்றுலாத் தளங்களைக் காணவாரீர் என்று, தலத்துக்கும் தளத்துக்கும் வேறுபாடு தெரியாமல் பிழையாக எழுதப்பட்டு உள்ளது. அதேபோல் பாடலீஸ்வரர்கோயில் என்பதற்குப் பதில் பாடலிஸ்வரர் கோயில் என்றும் பிழையாக எழுதப்பட்டு உள்ளது. அரசு சார்பில் வைக்கப்பட்டு இருக்கும் அறிவிப்புப் பலகையே இப்படி என்றால், தனியார் வைக்கும் அறிவிப்புப் பலகை பற்றி பேசவே வேண்டாம்.சோழர் காலத்தில் கடலூர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகள், நடுநாடு என்று அழைக்கப்பட்டது.  
 
                 அதற்கு முன் இப்பகுதி பல காலம் பல்லவர்கள் ஆட்சிக்கு உள்பட்டு இருந்துள்ளது. எனவே இப்பகுதியில் வடமொழி மற்றும் பாலி, பிராகிருதமொழிகளின் ஆதிக்கம் பல காலம் இருந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களின் தமிழ் மொழியில் சில நேரங்களில் தடுமாற்றம் காணப்படுவது உண்டு. எண்பது (80) என்பதை எண்பழது என்றும், மூங்கிலை முழுங்கில் என்றும் கற்றிந்தவர்கள்கூட உச்சரிப்பார்கள். அந்த வரிசையில் சுற்றுலாத் தலத்தை சுற்றுலாத் தளம் என்று பிழையாக எழுதிவிட்டார்களோ என்னவோ அறிவிப்புப் பலகையில் உள்ள பிழையைத் திருத்துமா அரசு?

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டியில் பலாப்பழ வரத்து அதிகரிப்பு


பண்ருட்டி வட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஆர்.மாயவேல் (வலது) தோட்டத்தில் விளைந்த 65 கிலோ எடையுள்ள மெகா சைஸ் பலாப்பழம்.
பண்ருட்டி:
 
                சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. சராசரி அளவுள்ள ஒரு பழத்தின் விலை ரூ150 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி. பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தென் பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடந்து வளர்ந்துள்ள முந்திரி காடுகளுக்கு இடையேயும், வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம் வளர்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் மிகுந்த சுவை கொண்டவை. இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டி பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். 
 
இதுகுறித்து பலா விவசாயிகள் சீரங்குப்பம் ஆர்.மணிவண்ணன், சாத்திப்பட்டு எழில், காடாம்புலியூர் டி.சரவணன் ஆகியோர் கூறியது: 
 
             மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பலாப்பழம் சீசன். இக்காலத்தில் பலா மரத்தை பராமரிக்க வேண்டும். அவ்வப்போது காய்கள் பழுத்துள்ளனவா, பூச்சிகள் தாக்கியுள்ளதா, களவு போகாமல் உள்ளதா என பார்க்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் பலா மரம் வைத்துள்ளவர்கள் அவர்களே பராமரித்துக்கொள்வர். அதிக அளவில் மரம் வைத்துள்ளவர்கள் குத்தகைக்கு விட்டுவிடுவர்.குத்தகை விடும்போது மரத்தின் தரம், காயின் சுவை மற்றும் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு பிஞ்சு ஒன்று ரூ.20 முதல் ரூ.30 வரையில் விலை பேசி ஒப்பந்தம் செய்வர்.மரத்தின் அளவு மற்றும் வயதுக்கு தகுந்தாற்போல் 20 முதல் 50 பிஞ்சுகள் வரைவிட்டுவிட்டு, மரத்தில் இருந்து கழிக்கப்படும். ஏனைய பிஞ்சுகளை சில சமயத்தில் விற்றுவிடுவோம். அதிக அளவு பிஞ்சுகளை மரத்தில் விட்டால் மலட்டு தன்மை அடைவதுடன் சில சமயத்தில் மரம் இறந்துவிடும். இன்னும் ஓரிரு வாரத்தில் முழு அளவில் பலாப்பழம் அறுவடை தொடங்கிவிடும் என கூறினர்.பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் பலா பழம் கமிஷன் மண்டி வைத்துள்ள பி.ஆர்.மாயவேல் கூறியது:விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை விற்று கொடுத்து வருகின்றோம். 
 
                 இதற்கு ஊதியமாக குறிப்பிட்ட அளவு கமிஷன் பெற்றுக்கொள்வோம்.பண்ருட்டியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், மும்பை, பெங்களூர், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் அனுப்பி வருகின்றோம்.மும்பையில் பலாப்பழத்தின் ஜூஸ் அதிக அளவு விற்பனை ஆவதல் அங்கு அதிக அளவு பலாப்பழங்கள் அனுப்பப்படுகின்றன. ஒரு டன் பலாப்பழம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.  கொல்கத்தா மாநிலத்தில் பலா பிஞ்சுக்கு அதிக கிராக்கி உள்ளதால் ஒரு கிலோ ரூ.25 வரை விலை போகிறது என்றார் அவர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Rs. 1,000 crore given as maternity assistance, says Minister

 

Health Minister M.R.K.Panneerselvam and Cuddalore Collector P. Seetharaman at a function in Kurinjipadi on Sunday.

CUDDALORE: 

              Health Minister M.R.K. Panneerselvam inaugurated a “valaikappu” function at Kurinjipadi near here in which as many as 575 expectant mothers participated.

           The Minister said that financial assistance of Rs. 6,000 given to pregnant women over a period of six months under the Muthulakshmi Reddy Maternity Assistance Scheme was unique. So far, a total of 20,11,511 pregnant women in the State benefited under the scheme to the extent of Rs. 1,000 crore. It reduced maternal mortality rate and infant mortality rate. Mr. Panneerselvam complimented the officials for successfully implementing the scheme. He said that to render efficient healthcare services, vacancies in government hospitals were being filled. These included appointment of 6,498 doctors, 11,941 nurses, 1,282 Village Health Nurses and 30,218 workers. Ever since its introduction, the “108” ambulance services had helped 1,10,480 deliveries.

           The Minister pointed out that in healthcare delivery, Cuddalore occupied the ninth place in the State and called upon the medical fraternity to strive to take the district to number one position. Doctors from PHCs should render services in the hospitals from 9 a.m. to 4 p.m, and if they failed to do so action would be taken against them. Mr. Panneerselvam noted that under the Kalaignar Health Insurance Scheme, a total of 83,993 people underwent surgery at a total cost of Rs. 238 crore. The Minister observed that the Theerthagiri and Kundiamallur Primary Health Centres in the Kurinjipadi block had been elevated and new PHCs opened at Thiruchopuram and Thondamanallur. Mr. Panneerselvam disbursed financial aid of Rs. 400 each to 51 differently abled persons and gave away pattas to 31 residents of Agaram. They gave the petition directly when the Minister visited the village recently.
Collector P. Seetharaman was present.

Read more »

என்எல்சி அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் கைது

 நெய்வேலி:

               நெய்வேலியில் என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்யும் செல்வக்குமார் என்பவரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். என்எல்சி 2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகள் நெய்வேலியில் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது. இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எடாக் எனும் தனியார் நிறுவனமும் இங்கு ஒப்பந்தப் பணி மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

               இவர்கள் அனைவரும் தென் மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதால், இவர்கள் தங்குவதற்காக எடாக் நிறுவனத்துக்கு என்எல்சி நிர்வாகம் வட்டம் 5-ல் குடியிருப்புகளை வழங்கியிருந்தது. இந்தக் குடியிருப்பில் வசித்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் சிலர் அருகாமையில் வசிக்கும் குடும்பப் பெண்களிடம் அருவறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது, ஆபாச படங்களை வரைந்து அவர்களை கிண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் வசித்துவரும் சுப்பிரமணி என்ற ஒப்பந்ததாரர் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சேகர் உத்தரவின் பேரில், எஸ்.ஐ. ரேவதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் மேற்பார்வையாளர் செல்வக்குமார் என்பவர் போலீசாரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்த போலீசார், அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சுற்றுப்புற கிராமங்களில் கல்வி சுகாதாரத்துக்கு என்எல்சி உதவிடும்

 நெய்வேலி:

               நெய்வேலிக்கு அருகில் 10 கி.மீ. சுற்று வட்டாரத்துக்குள் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த என்எல்சி தயாராக இருப்பதாக நெய்வேலி மாற்றுக் குடியிருப்பில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பேசினார். என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு நெய்வேலி இந்திரா நகர் அருகில் 350 ஏக்கர் பரப்பளவில் மாற்றுக்குடியிருப்பு அமைக்கப்பட்டு, அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் என்எல்சி நிறுவனம் செய்துள்ளது. 

               இங்கு இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் 400 மாணவ,மாணவியர் பயிலுகின்றனர். இப்பள்ளியில் என்எல்சி சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.25 லட்சம் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பள்ளிக்கு நிரந்தர கூரை, கூடுதல் வகுப்பறை, பால்வாடி மையம், சத்துணவு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. புனரமைக்கப்பட்ட பள்ளியை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். பின்னர் அதைத் தொடர்ந்து பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், தான் சிறுவயதில் 5 கி.மீ. தூரம் நடந்துச் சென்று ஓராசிரியர் தொடக்கப்பள்ளியில் மரத்தடி நிழலில் பயின்று இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதாகவும், அதுபோன்ற நிலை இன்றைய மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் என்எல்சி நிறுவனம் இதுபோன்ற அடிப்படை வசதிகளை பள்ளிகளுக்கு செய்துவருகிறது என்றும் கூறினார். நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமையாசிரியை பத்மாவதி வரவேற்றார். என்எல்சி நில எடுப்புத் துறை பொது மேலாளர் என்.எஸ்.ராமலிங்கம் தலைமை வகித்தார். என்எல்சி நில எடுப்புத் துறை அலுவலர்கள் சிவசங்கரன், கார்த்திகேயன், தனபால், வீரசிகாமணி, டாக்டர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் அதிகரிப்பு

 கடலூர்:

             திமுக ஆட்சியில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சி.மகேந்திரன் தெரிவித்தார். 

சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் சார்பில், கடலூர் தேரடித் தெருவில் சனிக்கிழமை இரவு நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் மகேந்திரன் பேசியது
           
                திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளில் 8 மணி நேர வேலை என்ற நிலை மாறி, தொழிலாளர்கள் 10 மணி நேரம் 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறார்கள். அரசு நிறுவனமான டாஸ்மாக் மதுக்கடைகளில் தொழிலாளர்கள் 14 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் வைத்துக் கொள்ளும் உரிமையே மறுக்கப்பட்டு வருகிறது. 14 மணி நேரம் உழைத்தும் நியாயமான ஊதியம் கிடைக்கவில்லை.ரேஷனில் அரிசி விலை கிலோ ரூ.1. ஆனால், கடைகளில் உப்பு விலை கிலோ ரூ.12. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 17 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டன. ஆனால் பெயின்ட் பிரஷ்ஷுக்கு வரிவிலக்கு என்று அரசு அறிவிக்கிறது. இதனால் என்ன பயன்.

               உணவுப் பொருள்களின் விலைகள் 100 சதவீதம் உயர்ந்து விட்டன. ஆனால் ஊழியர்களின் ஊதியம் 10 முதல் 15 சதவீதம்தான் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆனால் சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தடையின்றி மின்சாரம் கிடைக்கிறது. 1700 மெகாவாட் மின்சாரம் இந்தத் தொழிற்சாலைகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றார் மகேந்திரன். கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் என்.மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாநிலக்குழு உறுப்பினர் வி.முத்துவேல், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.குளோப் வரவேற்றார். கே.உலகநாதன் எம்.எல்.ஏ. (ஏ.ஐ.டி.யூ.சி.  மாநிலக்குழு உறுப்பினர்) உள்ளிட்ட பலர் பேசினர். டி.குமார் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

போலீஸ்காரர் மீது கொலைவெறி தாக்குதல் ரவுடிகள் பெரும் அட்டகாசம்: மூவர் கைது


திட்டக்குடி : 

             திட்டக்குடியில் குடிபோதையில் போலீஸ்காரரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.

            திட்டக்குடி மேலவீதியைச் சேர்ந்தவர் ஆனந்த் என்ற முருகானந்தம்; பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். அப்போது அந்த ஓட்டலில் குடிபோதையில் வந்த ஆறு பேர், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வந்த இண்டிகா காரை அரியலூர் - திட் டக்குடி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தியிருந்தனர். அப் போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சுக்கு வழி விடுமாறு போலீஸ்காரர் முருகானந்தம் கூறினார்.

               ஆத்திரமடைந்த ஆறு பேரும் முருகானந்தத்திடம் தகராறு செய்து தாக்கினர். காரிலிருந்து வீச்சரிவாளை எடுத்து கொலை வெறியுடன் வெட்ட முயன்றனர். முருகானந்தத்தின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டனர். கும்பலை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோட முயன்றனர். அதில் மூன்று பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்ற மூன்று பேரும் காரில் தப்பிச் சென்றனர். டி.எஸ்.பி., இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். தொழுதூர் புதிய காலனியைச் சேர்ந்த பாக்கியராஜ்(28), பிரபா என்ற பிரபாகரன்(24) லக்கூர் காலனி கார்த்தி என்ற கார்த்திகேயன் (23) என தெரிந்தது. போலீஸ்காரர் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் பாக்கியராஜ், பிரபாகரன், கார்த்திகேயன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர். மேலும் தலைமறைவான பெரம்பலூர் மாவட்டம் ஆடுதுறை விமல் என்ற விமல்ராஜ், பென்னகோணம் வாசு, முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர். காருக்குள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்ததால் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

டாக்டர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Latest indian and world political news information
குறிஞ்சிப்பாடி : 
 
           டாக்டர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டுமென குறிஞ்சிப்பாடியில் நடந்த வளைகாப்பு மற்றும் மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

                கடலூர் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, கடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நலக்கல்வி, வளைகாப்பு மற்றும் மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழா குறிஞ்சிப்பாடியில் நடந்தது. குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சீனுவாசன் வரவேற்றார். கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் மீரா திட்ட விளக்கவுரையாற்றினார்.

அமைச்சர் பன்னீர் செல்வம் கர்ப்பிணி பெண் களுக்கு மகப்பேறு நிதிஉதவி வழங்கி பேசியதாவது: 

               தி.மு.க., ஆட்சி வந்த பிறகுதான் மருத்துவத் துறை சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 6 ஆயிரத்து 947 டாக்டர்கள், 11 ஆயிரத்து 948 செவிலியர்கள், ஆயிரத்து 288 கிராமபுற செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,218 பொது ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பயனடையும் வகையில் மருத்துவ துறை இயங்குகிறது. முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 20 லட்சத்து 11 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்களுக்கு ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்பட் டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நலத்திட்டங்களே செயல்படுத்தப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர். அனைத்து டாக்டர்களும் பணி நேரத்தில் பணியில் இருப்பதுடன் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடியாது: முன்னாள் அமைச்சர் சொல்கிறார்


கடலூர் : 

                முப்பது ஆண்டுகளானாலும் தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடை பணி முடியாது என முன்னாள் அமைச்சர் கலைமணி பேசினார். அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் கடலூர் புதுப்பாளையத் தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பாலகிருஷ் ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.

 கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கலைமணி பேசியதாவது: 

                  தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள் ளது. இதனை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை. ஜெ., ஆட்சியில் 10 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, தற் போதைய ஆட்சியில் 7 ஆயிரம் மெகாவாட்டாக குறைந்துள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததாலேயே மின் உற்பத்தி குறைந்துள்ளது. கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது. இன்னும் 30 ஆண்டுகளானாலும் பாதாள சாக்கடை பணி முடிவடையாது. கூட்டத்தில் மண்ணாடி கிருஷ்ணமூர்த்தி, அரங்கநாதன், மாவட்ட செயலாளர் சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் சுப்ரமணியன், விவசாய பிரிவு காசிநாதன், அண்ணா தொழிற் சங்க துணை செயலாளர் ஆறுமுகம், வக்கீல் பிரிவு பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கோவில்களுக்கு வர வேண்டிய வருவாய் இழப்பு! நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயக்கம்


கடலூர் : 

                 கோவில் சொத்துக்களுக்கான வாடகை மற் றும் குத்தகை வசூலிப்பதில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் போதிய ஆர்வம் காட்டாததால் அரசுக்கு வர வேண் டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

                ஆன்மிகத்தை வளர்க்கும் பொருட்டு மன்னர் காலத்தில் கலை நயமிக்க கோவில்கள் பல கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்களை பராமரிக்கவும், தினசரி பூஜை செய்யவும், ஆண்டிற்கு ஒருமுறை திருவிழா நடத்தும் பொருட்டு நிலம், வீடு போன்ற சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் உள்ள கோவில்கள் இந்து அறநிலையத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருவாய் வரும் கோவில்கள் பட்டியலை சாராதவை என்றும், இவை இந்து அறநிலையத்துறை துணை ஆணையரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் வரும் கோவில் கள் பட்டியலை சார்ந்தவை என்றும், இந்த கோவில்கள் அறநிலையத் துறையின் இணை ஆணையரால் பராமரிக் கப்பட்டு வருகிறது.

                 ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற கடலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட கோவில்கள் பட்டியலை சாராதவை இனத்திலும், சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி, ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள், விருத்தகிரீஸ்வரர், வீரட்டானேஸ்வரர், சரநாராயணபெருமாள், திருமூல நாதர், பூவராக சுவாமி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மற்றும் பாடல் பெற்ற கோவில்கள் பட்டியல் இனத்தில் உள்ளன. பட்டியலைச் சார்ந்த இந்த கோவில்களுக்கு நிலம், வீடு, கடைகள் மற் றும் வர்த்தக வளாகங்கள் என ஏராளமான சொத்துக் கள் உள்ளன. இந்த சொத் துக்களை தனி நபர்களுக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விட்டு அதில் வரும் வருவாயைக் கொண்டு கோவிலை பராமரித்து வர வேண்டும். கோவில் சொத்துக் களை குத்தகைக்கும் மற் றும் வாடகைக்கு எடுத்தவர்கள் கோவிலுக்கு செலுத்த வேண்டிய தொகையை பல ஆண்டுகளாக செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். கோவில் நிலங்களை பல ஆண்டாக குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் குறிப் பிட்ட காலத்திற்கு பிறகு வேறு நபர்களுக்கு 'பகடிக்கு' (பத்திர பதிவு இன்றி விலை பேசி விற்று விடுவது) விட்டு விடுகின்றனர்.

                 பகடிக்கு எடுத்தவர்கள் ஏற்கனவே குத்தகை எடுத்தவர் பெயரிலேயே கோவிலுக்கு பணத்தை செலுத்தி வருகின்றனர். அதேபோன்று கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளை குத்தகை எடுத் தவர்கள், கூடுதல் தொகை பெற்றுக் கொண்டு வேறு நபர்களுக்கு கடையை வாடகைக்கு விடுகின் றனர். சிலர் ஒரே கடையை இரண்டு அல்லது மூன்றாக பிரித்து உள் வாடகைக்கு விட்டு கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர். பலர் கோவில் இடங்களை குத்தகைக்கு எடுத்து கூடுதல் தொகைக்கு வாடகைக்கு விடுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். இவ்வாறு கோவில் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் வாடகைதாரரிடம் மாதந்தோறும் வாடகையை வசூலித்த போதிலும், கோவிலுக்கு செலுத்த வேண்டிய மிகச் சொற்ப தொகையையும் செலுத்துவதில்லை. அல் லது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விடுகின்றனர். இதனால் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள கோவில்கள் பல போதிய வருவாய் இன்றி நிர்வாக செலவினங்களுக்கே அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர் பார்க்க வேண்டியுள்ளது.

               கோவில் சொத்துக் களை வைத்து தனி நபர்கள் வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகளோ, ஊழியர்கள் பற் றாக்குறை காரணமாக வாடகை வந்தால் போதும் என எதையும் கண்டு கொள்ளாமல் உள் ளனர். கோவில் சொத்துக் களை வைத்து நடைபெறும் இந்த முறைகேடுகளை தடுத்திட கோவில் நிலம், வீடு, கடை மற்றும் வணிக வளாகங்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை பொது ஏலம் விட வேண்டும். இதன் மூலம் குத்தகை தொகையும் அதிகரிக்கும். கோவிலுக்கு வருவாயும் பெருகும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆன் மிகவாதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பாலம் அகலப்படுத்தும் பணி எச்சரிக்கை பலகை தேவை


பண்ருட்டி : 

              பண்ருட்டி - பாலூர் சாலையில் பாலம் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

                பண்ருட்டி - பாலூர் சாலையில் முத்துகிருஷ் ணாபுரம் முதல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையில் மூன்றரை அடி சாலை அகலப்படுத்தும் பணி 43 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இதில் திருவதிகை ஜெயா 'காஸ்' குடோன் அருகில் உள்ள சிறுபாலம் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப் பட்டுள்ளது. ஆனால் பள்ளம் தோண்டிய பகுதியில் பாலப் பணிகள் நடைபெறுகிறது என்பதற்கான தகவல் பலகை இல்லை. இதனால் இங்கு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இங்கு பணிகள் நடைபெறுவது குறித்த எச்சரிக்கை தகவல் பலகை வைக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கோடை மழை பொழிவு காய்கறி பயிர்கள் பாதிப்பு


கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கோடை மழை காரணமாக காய்கறி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

           கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் திடீரென கோடை மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் சராசரியாக 30 மி.மீ., மழை பெய் தது. கடலூரில் 36 மி.மீ., ராமநத்தத்தில் 80 மி.மீ., மழையும் பெய்தது. இந்த மழை விவசாயிகள், பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் சில காய்கறி பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதால் சில விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடலூர் சுற்றியுள்ள உச்சிமேடு, நாணமேடு, கண்டக்காடு கிராமங்களில் காய்கறி பயிர்கள் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கத்தரிக்காய், வெங்காயம், சுரை, மலர் செடிகள் இந்த மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி


கடலூர் : 

                 கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில் வீடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான செயற்கைகோள் மூலம் மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

                கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகளிலும் மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கான பயிற்சி பெரியகங்கணாங்குப்பம் அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி கூடத்தில் வகுப்புகள் நடக்கிறது. முதல் இரண்டு கட்டமாக சென் னையிலிருந்து அளிக்கப்படும் பயிற்சியை பெரியகங்கணாங்குப்பத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட செயற்கை கோள் ஒளிபரப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் கட்ட பயிற்சிகள் சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் அளிக்கப்படுகிறது. இதில் திருவந்திபுரம் தலைமை ஆசிரியர் பழனி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் சசிகலா தேவி, சிங்காரவேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்புகளை நகராட்சி கமிஷனர் குமார் பார்வையிட்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்


கடலூர் :

             தமிழகம் மற்றும் கடலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு கருத்தரங்கம் நடந்தது.

               கடலூர் கே.டி.ஆர்., ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு டான்ஸ்டியா பொது செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தலைவர் காந்தி குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினர் கலெக்டர் சீத்தாராமன் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் கடன் காப்புறுதி அறக்கட்டளை தென் மண்டல மேலாளர் முகமது ரபி, திட்டத்தில் மாற்று திட்டங்கள் குறித்து குறுந் தொழில் மற்றும் வணிகத் துறையின் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் மகாலிங்கம், மத்திய கலால் துறை கூடுதல் ஆணையர் குருநாதன், டான்ஸ்டியா சட்ட மற்றும் வரி ஆலோசகர் பார்த்தசாரதி, கடலூர் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத் தலைவர் அசோக், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் தேவன், லைன்ஸ் திருமலை ஆகியோர் பேசினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கலெக்டருக்கு பொதுமக்கள் மனு


சேத்தியாத்தோப்பு : 

             ஓடாக்கநல்லூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்டாக் கடையை ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்ற கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஓடாக்கநல்லூர் கிராம மக்கள் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 

                 கீரப்பாளையம் ஒன்றியம் ஓடாக்கநல்லூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. பஸ் ஸ்டாப் அருகிலும், மக்கள் நடமாட்டம் உள்ள மெயின் ரோட்டில் கடை அமைந்துள்ளது. குடிகாரர்கள் குடித்துவிட்டு கும்மாளம் போடுவதாலும், ஆபாசமாக பேசுவதாலும் ரோட்டில் நடக்ககூட மக்கள் அச்சப்படுகின்றனர். மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி சென்று திரும்பும் மாணவிகளும், வேலைக்கு சென்று திரும்பும் ஆண்களும், பெண்களும் அவதிப்படுகின்றனர். இதே இடத்தில் டாஸ்மாக் இருந்தால் இனக் கலவரம் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள டாஸ்மாக்கை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திருப்பாதிரிப்புலியூரில் ரயில்களை நிறுத்த வேண்டும் : ரயில்வே அதிகாரிக்கு முன்னாள் எம்.எல்.சி, கடிதம்


கடலூர் : 

               விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப் பாதையில் இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் திருப் பாதிரிப்புலியூரில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் சட்டசபை மேலவை உறுப்பினர் ஜெயச்சந்திரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

                    விழுப்புரம் - மயிலாடுதுறை அகலப்பாதை பணிகளை முடித்து பாசஞ்சர் மற்றும் திருச்சி, நாகூர் விரைவு ரயில் இயக்கி வருவதை வரவேற்கிறோம். முன்பு மீட்டர் கேஜாக இருந்தபோது அனைத்து விரைவு ரயில்களும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலூர் முதுநகர் ஜங்ஷனிலும் நின்று சென்றன.

                  ஆனால் தற்போது அகலப்பாதையாக மாற்றிய பின்னர் திருச்சி - சென்னை விரைவு ரயில் கடலூர் முதுநகரில் மட்டுமே நிற்கிறது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரின் மையப் பகுதியில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நிற்காமல் செல்வது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோன்று விரைவில் புவனேஸ்வர் - ராமேஸ்வரம் விரைவு ரயில் இயக்கப்படவுள்ளதை வரவேற்கிறோம். ஆனால் ரயில்வே அட்டவணையில் இந்த ரயில் திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர் மற்றும் சிதம்பரம் பகுதிகளில் நிறுத்தவதற்கான நேரம் குறிப்பிடப்படவில்லை. விரைவு ரயில் நிறுத்தவில்லை எனில் கடலூர் மாவட்டத்திற்கே மிகப் பெரிய அவப் பெயராகும். ஆன்மீக ஸ்தலங்களை இணைக்கும் இந்த ரயில் அவசியம் மேற்கண்ட மூன்று ஊர்களிலும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டியில் ரயில் பயணிகள் நலச் சங்கம் துவக்கம்


பண்ருட்டி : 

               பண்ருட்டியில் ரயில் பயணிகள் நல சங்கம் புதியதாக துவக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் புதிய தலைவராக சண்முகம், துணை தலைவராக ஹரிஹரன், அசோக்ராஜ், செயலாளராக சீனுவாசன், இணைசெயலாளர் வீரப்பன், துணை செயலாளர் கலியபெருமாள், யாசீன், பொருளாளர் சம்பத்லால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பண்ருட்டி வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் இரண்டு நிமிடம் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று போக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் நிலையம் சென்று செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். ரயில் நிலையத்திற்கு ஸ்டேஷன் மாஸ்டர் குடியிருப்பு பகுதி வழியாக மாற்று வழி உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் விழிப்புணர்வு 'ஸ்கேட்டிங்' ஊர்வலம்


கடலூர் : 

               கடலூர் மாவட்ட அமெச்சூர் 'ரோலர் ஸ்கேட் டிங்' அசோசியேஷன் சார்பில் புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கடலூரில் நடந்தது.

                  சங்க தலைவர் கரிகாலன் வரவேற்றார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் ஆல்பேட்டை செக்போஸ் டில் துவங்கி தரைகாத்த காளியம்மன் கோவில் வரை சென்று பின் கடலூர் அண்ணா விளையாட்டரங்கை அடைந்தது. கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி 'ரோலர் ஸ்கேட் டிங்' பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரமோகன் பால்ராஜ் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வு 1,827 பேர் எழுதினர்


சிதம்பரம் : 

                சிதம்பரத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வில், 1,827 பேர் தேர்வு எழுதினர்.

               டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 தேர்வு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று நடந்தது. அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, சி.முட்லூர் அரசு கலைக் கல் லூரி ஆகிய ஏழு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 2,472 பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. ஆனால் 645 பேர் தேர்வு எழுத வராததால் 1,827 பேர் மட்டும் எழுதினர். தேர்வு மையங்களை டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையக் குழு உறுப்பினர் ராமசாமி, டி.ஆர்.ஓ., நடராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். ஆர்.டி.ஒ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் அனைத்து மையங்களையும் கண்காணித்தனர். அத்துடன் 10 முதன்மை மேற்பார்வையாளர்கள், 10 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். டி.எஸ்.பி., மூவேந்தன் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

உயர்மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை போடாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி


நடுவீரப்பட்டு :

                 நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்ட உயர் மட்ட பாலத்திற்கு இணைப்பு சாலை போடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

              பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. சி.என்.பாளையத்திலிருந்து பாலத்திற்கு செல்லும் இணைப்பு சிமென்ட் ரோடு மிகவும் குறுகலாக போடுவதாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் வேலை முழுவதுமாக தடைப் பட்டது.

                     இது குறித்து நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் ரோட்டை முழுவதும் அகலப்படுத்தி தரமான சிமென்ட் சாலை போட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவர் அந்த இடத்தை பார்வையிட்டு சாலையை அகலப்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அப்பகுதியில் இருந்த கடைகள் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்பட்டது. ஆனால் சாலை போடும் பணி இது வரை நடக்கவில்லை. தற்போது பாலம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இணைப்பு சாலை இது வரை போடாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். நடுவீரப்பட்டு பகுதிகளிலிருந்து இரவு நேரத்தில் வரும் வெளியூர் வாகனங்கள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, விடுபட்ட இணைப்பு சாலையை உடனடியாக போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வீட்டிற்கு தீ வைப்பு: 8 பேர் மீது வழக்கு


கடலூர் : 

               முன் விரோதத்தில் வீட்டிற்கு தீ வைத்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

                   திட்டக்குடி அடுத்த மேலகல்பூண்டியைச் சேர்ந்தவர் மின்னல்கொடி (50). இவரது வீடு நேற்று முன்தினம் நள்ளிரவு எரிந்து சாம்பலானது. அதில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து மின்னல்கொடி தனது மைத்துனர் ஆதிமூலம், உறவினர்கள் சரவணன், ராமர் உள்ளிட்ட 8 பேர் முன் விரோதம் காரணமாக வீட்டிற்கு தீ வைத்து விட்டதாக ராமநத்தம் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கலெக்டர் நடவடிக்கை எடுத்தும் உழவர் சந்தை செயல்படவில்லை


பண்ருட்டி : 

                   கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு மே 1ம் தேதி முதல் பண்ருட்டி உழவர் சந்தை செயல்படும் என கூறியும் அதிகாரிகள் மெத்தனத்தால் இன்னும் செயல்பட துவங்கவில்லை.

                   பண்ருட்டி உழவர்சந்தை செயல்படுத்துவது குறித்து கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 23ம் தேதி அனைத்து துறை, காய்கறி வியாபாரிகளுடன் ஆர்.டி.ஒ., செல்வராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் மே 1ம் தேதி முதல் உழவர் சந்தை செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 1ம் தேதி முதல் உழவர் சந்தை செயல்படவில்லை. எப்போதும் போல் வெறிச்சோடியது. அன்று காலை சென்னை சாலையில் வியாபாரம் செய்த காய்கறி கமிஷன் வியாபாரிகளை வேளாண் துணை இயக்குனர் தனவேல் தலைமையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டனர். விவசாயிகளை கேட்டால் உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் எப்படி வியாபாரம் செய்ய முடியும் என கூறுகின்றனர். அதிகாரிகளோ உழவர் சந்தை நடந்ததாக கணக்கு காட்டுகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு : பரங்கிப்பேட்டையில் தொடரும் சம்பவம்


கடலூர் : 

                  வீடு புகுந்து 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

                  பரங்கிப்பேட்டை பெரிய ஆசானகான தெருவைச் சேர்ந்தவர் ரிஜாயத் அலி. நேற்று இரவு 8 மணிக்கு இவரது வீட்டில் இருந்தவர்கள் பக்கத்து தெருவில் உள்ள தெரிந்தவரின் வீட்டிற்கு சென்றிருந்தனர். ரிஜாயத் அலி மட்டும் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட் டில் புகுந்து அறையில் இருந்த சாவியை எடுத்து பிரோவைத் திறந்து 25 பவுன் நகைகளை திருடிக் கொண்டிருந்தனர்.

                      குளித்துவிட்டு வந்த ரிஜாயத் அலி உள்ளே மர்ம ஆசாமிகள் இருப்பது தெரியாமலேயே உடையை மாற்றிக்குக் கொண்டு வெளியே சென்று விட்டார். சற்று நேரத்தில் பக்கத்து தெருவிற்கு சென்ற ரிஜாயத் அலி மனைவி மற்றும் மருமகள் வீட்டிற்கு வந்த போது, கதவு சாத்தப்பட்டிருந்தது. வீட்டிலிருந்து சத்தம் கேட்கவே, உள்ளே சென்றனர். அப்போது மர்ம ஆசாமிகள் வீட்டில் மின் இணைப்பை துண்டித்து விட்டு பின்பக்க கதவை திறந்து கொண்டு தப்பியேடினர். வீட்டினுள் சென்று பார்த்தபோது பிரோ திறந்து கிடந்ததையும், அதிலிருந்த இருந்த 35 பவுன் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருடு போன நகைகளின் மதிப்பு 4.50 லட்சம் ரூபாயாகும்.
இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். பரங்கிப்பேட்டையில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது வரை எந்த சம்பவத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மேலும் நேற்று நடந்த இந்த சம்பவம் பரங்கிப்பேட்டை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வேப்பூரில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பு


சிறுபாக்கம் : 

                 வேப்பூர் பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., சேவை பாதிப்பால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

                திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான பெரியநெசலூர், சேப்பாக்கம், நல்லூர், நிராமணி, கண்டப்பங்குறிச்சி, பூலாம் பாடி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெருமளவு பி.எஸ். என்.எல்., சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு அவசர ஆம்புலன்ஸ் 108, போலீஸ் ஸ்டேஷன் 100, தீயணைப்பு நிலையம் 101 ஆகியன இலவச எண் இணைப்புகளை தொடர்பு கொண்டால் 'உபயோகத்தில் இல்லை, மீண்டும் சரிபார்க்க' வேண்டுமென என பதில் வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருவதால் அடிக்கடி நெடுஞ்சாலையில் நிகழும் விபத்து குறித்து கூட அவசர எண்ணிற்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஏழை, எளிய கிராம மக்கள் தீ விபத்து, ஆம்புலன்ஸ், போலீஸ் சேவையை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்துள்ளனர். வேப்பூர் பகுதிகளில் குறிப்பிட்ட இலவச சேவை எண்கள் பழுதானதை பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் தனிக்கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விருத்தாசலத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்


விருத்தாசலம் :

              விருத்தாசலம் அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வராததை கண்டித்து நேற்று சாலை மறியல் செய்தனர்.

                விருத்தாசலம் 13 வது வார்டு பகுதியை சேர்ந்தது அண்ணாநகர். இந்த பகுதியில் கடந்த மூன்று நாட் களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறி, அப்பகுதி மக்கள் கோகுல கிறிஸ்டீபன் தலைமையில் காலி குடங்களுடன் கடலூர் ரோட்டில் நேற்று காலை 9.45 மணிக்கு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படி கூறியதைத் தொடர்ந்து மறியலை விலக்கிக் கொண்டு தாலுகா அலுவலகம் சென்றனர். அங்கு நகராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. இன்று (நேற்று) மாலைக்குள் குடிநீர் வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலைமறியலால் விருத்தாசலம் - கடலூர் ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மூதாட்டி கழுத்தை நெரித்து ஆறு சவரன் நகை திருட்டு


கடலூர் : 

                   வீட்டில் இருந்த மூதாட்டி கழுத்தை நெரித்து ஆறு சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

                  கடலூர் மஞ்சக்குப்பம் உப்பலவாடித் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி ஜெயா (65). இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த போது மோட்டார் பைக்கில் வந்த மர்ம ஆசாமி ஜெயாவின் கழுத்தை நெரித்து அவரது கழுத்தில் இருந்த ஆறு சவரன் நகையை அறுத்துக் கொண்டு தப்பியோடினான். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக் குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் இதுபோன்று நடப்பது ஆறாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மணல் திருட்டில் மயானம் காணாமல் போனதால் போராட்டம்


கடலூர் : 

                       கடலூர் கூத்தப்பாக்கத்தில் இறந்தவர் உடலை புதைக்க இடம் இல்லாததால் தவித்த பொதுமக்கள் பாடையில் படுத்து போராட்டம் நடத்தினர்.

                      கூத்தப்பாக்கம் பாரதியார் நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் உடல் நிலை சரியில்லாமல் இறந்ததால் நேற்று மாலை அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர் மற்றும் நண்பர்கள் கம்மியம்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றங்கரைக்குச் சென்றனர். பிரேதங்களை வழக்கமாக எடுத்துச் செல்லும் வழி பட்டா இடம் என்பதால் தற்போது அந்த இடம் பிளாட் போடப்பட்டு வழி அடைக்கப்பட்டிருந்தது. மேலும் டிப்பர் லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் திருட்டுத் தனமாக மணல் அள்ளியதால் மயானத்திற்கு செல்லும் வழியும் மயானமும் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

                     வெகுநேரம் பிரேதத்தை வைத்துக் கொண்டு தவித்தவர்கள் பாடையிலிருந்து பிரேதத்தை தனியாக தூக்கிக் கொண்டு பள்ளத்தில் இறங்கியும் ஆற்று தண்ணீரில் நடந்தும் சென்று மீதமிருந்த இடத்தில் பிரேதத்தை ஒரு வழியாக அடக்கம் செய்தனர். கூத்தப்பாக்கம் பகுதி பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் இறந்தால் புதைக்கும் இடங்களில் மணல் திருட்டால் மயான இடமே காணாமல் போனதால் ஆத்திரமடைந்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திடீரென அவர்கள் கொண்டு வந்த பாடையிலேயே படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கூத்தப் பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior