உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 01, 2011

அண்ணா பல்கலைக்கழகத்தில் 'டெக்னோ 2011' போட்டி: கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரிக்கு 5ம் பரிசு

 கடலூர் : 

            கடலூர் சி.கே. பொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த "டெக்னோ 2011' போட்டியில் 5ம் பரிசு வென்றனர்.

           சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 16 தேதி முதல் 19ம் தேதி வரை இந்திய அளவில் பொறியியல் கல்லூரிக்கான மாணவர்களின் வடிவமைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் "டெக்னோ 2011' போட்டி நடந்தது. இந்திய உற்பத்தியாளர் சம்மேளனம், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இப்போட்டியில் இந்திய அளவில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் வடிவமைப்பினை சமர்பித்தனர். 

            பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 8 படைப்புகளில் கடலூர் சி.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, இயந்திரவியல் மற்றும் மின்னறிவியல் 3ம் ஆண்டு மாணவர்கள் சமீத் அர்பாஸ் அஞ்சும், ஜெகதீஷ், கணேஷ்பாபு, பிரவீன்குமார் படைப்பு 5ம் பரிசை வென்றது.மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் மற்றும் இந்திய உற்பத்தியாளர் சம்மேளன தலைவர் ஹரீஸ், மேத்தா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினர்.

             கல்லூரிக்கான சிறப்பு சான்றிதழை கல்லூரி முதல்வர் குமார், பேராசிரியர்கள் மல்லிஸ்வரன், ஈஸ்வரன் பெற்று கொண்டனர். நிறுவன தலைவர் ரங்கநாதன், இயக்குனர் சந்திரசேகரன், சிறப்பு அலுவலர் ராஜா மாணவர்களை பாராட்டினர்.






Read more »

விருத்தாசலம் பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியினை நவீன படுத்த கோரிக்கை

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியில் கூடுதலாக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துகுமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தொழில் வணிகத்துறை ஆணையர் மற்றும் இயக்குனர் அபூர்வவர்மா ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:

               விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி போதுமான அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. இந்தக் கல்லூரியை நவீனப்படுத்தி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களின் காலி பணியிடத்தை பூர்த்தி செய்தும், புதிய கட்டிடம், விடுதி அமைத்துத் தரவேண்டும் எனவும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தேன்.அதன்படி புதிய மாணவர் விடுதி கட்ட ரூபாய் 64 லட்சம் ரூபாய், கல்லூரியில் சுற்றுச் சுவர் அமைக்க ரூபாய் 5 லட்சம் ரூபாய் தேவை எனவும், மாணவர்கள் அறை, ஆய்வகம், கழிப்பறை சீரமைக்க பட வேண்டும். நான்கு விரிவுரையாளர்கள் நியமிக்க வேண்டும். அலுவலகம் தொடர்பான பணிகள் செய்ய கணக்கர், மேலாளர், இளநிலை உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

              இந்த பணிகளுக்குத் தேவையான கருத்துரு கல்லூரி முதல்வரால் சென்னை தொழில் வணிகத் துறை இணை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் விருத்தாசலத்தில் மட்டும் இக்கல்லூரி இயங்கி வருவதால், இக்கல்லூரியை நவீனப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






Read more »

கடலூர் மாவட்ட அளவில் இளம் விஞ்ஞானி மாணவன் அன்பசரனுக்கு பாராட்டு விழா

கிள்ளை : 

          சிதம்பரம் அருகே எம்.ஜி.ஆர் இருளர் குடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் இளம் விஞ்சானிக்கு பாராட்டு விழா நடந்தது. 

              தமிழக அரசின் கல்வித்துறை மாணவர்களை அறிவியல் மற்றும் கணிதத்துறையில் ஆர்வத்தை தூண்டிட பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தி வருகிறது. சிதம்பரம் அருகே கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் இருளர் குடியிருப்பு நடுநிலைப்பள்ளி மாணவன் அன்பசரன் மாவட்ட அளவில் இளம் விஞ்சானி விருது பெற்றுள்ளார்.கடலூரில் நடக்க உள்ள அறிவியல் கண்காட்சியில் அவரது படைப்பை வெளிபடுத்த சான்றிதழ் மற்றும் 5 ஆயிரம் ரொக்கத்தை மாவட்ட கல்வி அலுவலர் அமுதவல்லி வழங்கினார்.

             பள்ளியில் மாணவனுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவக்குமார் வேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் மணிமாறன் வரவேற்றார். ஆசிரியர்கள் சிவகுருநாதன், மணிமொழி சரவணாஸ்ரீ, ஜான்சி முன்னிலை வகித்தனர். கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சரஸ்வதிலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருது பெற்ற மாணவனை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். பின்னர் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இலவச சீருடைகள் மற்ற மாணவர்களுக்கு இலவச குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.





Read more »

திட்டக்குடியில் பிறப்பு சான்றிதழ் வேண்டி கைக்குழந்தையுடன் அலையும் பெண்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/f3eeeda8-2ef0-4e8b-b787-365fa9995c87_S_secvpf.gif
திட்டக்குடி:

                திட்டக்குடியில் அரசு அதிகாரிகளிடம் பிறப்பு சான்றிதழ் வேண்டிய ஒரு தாய் தனது கைக்குழந்தையுடன் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி நவமணி. இவருக்கு கடந்த மே 7ம் தேதி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

                   பின்னர் பிறப்புச் சான்றிதழ் வேண்டி மருத்துவமனை கொடுத்து இருந்த ஆவணங்களுடன் திட்டக்குடி பேரூராட்சியில் விண்ணப்பித்தார். மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய சான்றிதழில் தந்தை பெயர் கிருஷ்ணன் என்பதை கிருஷ்ணமூர்த்தி எனவும், தாயார் பெயர் நவமணி என்பதை தவமணி எனவும் பூர்த்தி செய்து கொடுத்தாக தெரிகிறது. குழந்தையின் பெற்றொர் பேரூராட்சியில் சான்றிதழை கொடுத்து பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தனர்.

               பேரூராட்சி நிர்வாகத்தினர் சான்றிதழை சரிபார்க்கும் போது தவறாக இருந்ததால் வேறொரு சான்றிதழ் வாங்கி வரும்படி திருப்பி அனுப்பியுள்ளனர். மருத்துவமனைக்கு சென்று வேறு சான்றிதழ் கேட்ட பெற்றொரிடம் மருத்துவமனை அதிகாரிகள் நாங்கள் முதலில் கொடுத்த சான்றிதழை திருப்பி எடுத்து வாருங்கள் திருத்தித்தருகிறோம், ஒரே நபருக்கு இரண்டு சான்றிதழ்கள் வழங்க முடியாது என மறுத்து விட்டனர்.

                 பேரூராட்சி நிர்வாகமும் எங்களிடம் அளித்த சான்றிதழ்களை திருப்பித்தர இயலாது என தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனையுடன் இரண்டு மாத காலங்களாக சான்றிதழுக்காக அந்த பெண் படாதபாடு பட்டு வருகிறார். இரு அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் குழந்தையுடன் ஒரு தாய் சான்றிதழ் வேண்டி அலையும் அவலநிலையை போக்க அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






Read more »

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திமுக ஆர்பாட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/4dcd6970-c11d-420b-9572-9da4900d7660_S_secvpf.gif
கடலூர்:

                 கடலூர் மாவட்ட தி.மு.க. வக்கீல்கள் அணி கூட்டம் கடலூரில் சனிக்கிழமை  நடந்தது. கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். வக்கீல் அணி அமைப்பாளர் சிவராஜ், வக்கீல்கள் பக்கிரி, சக்கரவர்த்தி, பாரி இப்ராகிம், ராதாகிருஷ்ணன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                 மாவட்ட அவைத்தலைவரும், கடலூர் நகர்மன்ற தலைவருமான தங்கராசு, முன்னாள் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா, வக்கீல்கள் ராதா, அருணாச்சலம், கலியமூர்த்தி, ராம்சிங், ஏ.ஜி.ஆர்.சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், அருளப்பன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அ.தி.மு.க. அரசின் அடக்குமுறையை கண்டித்து 1-ந்தேதி (நாளை) கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

                 தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பது என்றும் இதுசம்பந்தமாக அந்தந்த நீதிமன்றங்களில் வக்கீல்கள் குழுக்கள் நியமித்து, கசட்டரீதியான பாதுகாப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசு நடப்பு கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Read more »

விருத்தாசலம் சத்தியவாடிஆலந்துறை ஈஸ்வரர் கோவில் சிலைகள் மீட்பு

திட்டக்குடி:

              விருத்தாசலத்தை அடுத்துள்ள சத்தியவாடி கிராமத்தில் பழமை வாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி இரவு மர்ம ஆசாமிகள் சிலர் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கே இருந்த 5 சிலைகளை திருடிச் சென்றனர்.

               இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வேப்பூர் அருகே உள்ள திருப்பயர் கிராமத்தில் உள்ள ஊர் எல்லையில் ஏரிக்கரையில் முட்புதரில் துணியால் கட்டப்பட்டு முட்டைகள் கிடந்தன. அப்பகுதியாக சென்ற ஊர்மக்கள் இதைப்பார்த்து வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

            அதன்பேரில் வேப்பூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு பாலு மற்றும் போலீசார் அந்த முட்டை களை எடுத்து வந்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து பிரித்து பார்த்தனர். அதில் சிலைகள் இருந்தன. வேப்பூர் போலீசார் விருத்தாசலம் போலிஸ் துணை சூப்பிரண்டு அறிவழகனுக்கு தகவல் கொடுத்து சத்தியவாடி சிவன் கோயிலில் திருட்டு போன சிலைகளாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு அந்த கோயிலின் அறங்காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

             அறங்காவலர்கள் இந்த சிலைகளை பார்த்து திருட்டுப்போன சிலைகள் தான் என உறுதி செய்தனர். தொடர்ந்து ஈஸ்வரன் கோவிலில் இருந்த போட்டோக்களை ஒப்பிட்டு அவை திருட்டுப்போன சிலைகள் என உறுதி செய்யப்பட்டது.
 
 
 
 

Read more »

Cuddalore to get priority in Centre’s infra spending

           New infrastructure projects in Gujarat, Andhra Pradesh, West Bengal, Tamil Nadu and Orissa are set to get a major push in the five years starting 2012 as various government agencies will be prioritising building of roads, rail networks, airports and sea ports in these states that are setting up mega petroleum and petrochemical investment regions.

           Five massive regions meant to attract investments in the petrochemical and allied sectors are now at various stages of implementation at Dahej in Gujarat, Visakhapatnam-Kakinada in Andhra Pradesh, Haldia in West Bengal, Paradeep in Orissa and Cuddalore and Nagapattinam in Tamil Nadu. These investment zones, each of which is not less than 250 square kilometres, are expected to attract a collective investment of R8,63,664 crore and create more than 40 lakh jobs during the 12th Five-Year Plan. The idea is to give a boost to the domestic manufacturing sector and to capitalise on the rising Asian.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior