உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 30, 2011

யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் 49 ஓ விதியை பயன்படுத்துவது எப்படி?

               வாக்குப்பதிவின்போது யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அதை பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால் எப்படி பதிவு செய்வது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை.  

                களத்தில் இருக்கும் எந்தவொரு கட்சியையும் அல்லது எந்தவொரு வேட்பாளரையும் பிடிக்கவில்லையெனில் வாக்கு அளிக்க செல்லாமல் இருப்பது சரியல்ல. வாக்களிப்பது பொது மக்களின் கடமை. எனவே வாக்குச் சாவடிக்குச் சென்று களத்தில் இருக்கும் வேட்பாளர் யாரையும் பிடிக்கவில்லை என்பதை பதிவு செய்யலாம். வாக்குச் சாவடிக்குள் சென்றவுடன், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை வாக்குச் சாவடி அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். 

               அவர் அதை ஏற்றுக்கொண்டு வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட பதிவேட்டில் பதிவு செய்ய அனுமதி அளிப்பார்.  அதில் வாக்காளர் தனது பெயருக்கு எதிரே எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கிறேன் என்றோ அல்லது எந்த வேட்பாளருக்கும் எனது வாக்கு இல்லை என்றோ எழுதி கையெழுத்திட வேண்டும். 49 "ஓ'-வுக்கு என தனியாக விண்ணப்பம் ஏதும் இல்லை. வாக்காளர் பதிவேட்டில்தான் அதை பதிவு செய்ய வேண்டும்.

அதிக  விபரங்களுக்கு 




பார்க்கவும் 


Read more »

புவனகிரி சட்டமன்றத் தொகுதி: அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் பலம் மற்றும் பலவீனம்



                                                                  செல்வி ராமஜெயம் 

 
சிதம்பரம்:

               தொகுதி மறுசீரமைப்பிற்கு பின்னர் கடலூர் மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களும், அதிக பரப்பளவும் கொண்ட தொகுதியாக புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி திகழ்கிறது. கிழக்கே சிதம்பரம், மேற்கே விருத்தாசலம், தெற்கே காட்டுமன்னார்கோவில், வடக்கே குறிஞ்சிப்பாடி மற்றும் நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டு மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 
 
                 2006 தேர்தலில் புவனகிரி எம்.எல்.ஏ.வாக அதிமுக கடலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்விராமஜெயம் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவரை விட 14,823 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் இத்தேர்தலில் (2011) பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வனை எதிர்த்து களம் காண்கிறார்.  
 
கடும் போட்டி: 
 
             தொகுதியில் சொல்லிக் கொள்ளும் அளவில் பெரும் பணிகள் மேற்கொள்ளாவிடினும் தனது சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகளை செய்துள்ளார். இவர் மீது கட்சியினரிடமும், மக்களிடமும் அதிருப்தி இல்லை. இருப்பினும் தற்போது சீரமைக்கப்பட்ட தொகுதியில் அவரது சொந்த ஊரான பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் சிதம்பரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டதால் வெற்றிக்கு கடுமையாக பாடுபட வேண்டும் என்ற நிலை உள்ளது.  
 
சாதனைகள்: 
 
               ""தொகுதி பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் பல முறை பேசியும் எதிர்கட்சி தொகுதி என்பதால் பெரிய அளவில் திட்டங்களை கொண்டு வர முடியவில்லை'' என்று கூறும் செல்வி ராமஜெயம், ""தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கிராமங்களுக்கு சாலை, மயானக் கொட்டகை, பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று பார்வையிட்டு நிவாரணம் மேற்கொண்டது, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்காக போராடி ஏக்கருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு பெற்றுக்கொடுத்தது ஆகியவை எனது சாதனைகள்'' என்கிறார் செல்வி ராமஜெயம். 
 
பிரசாரம்:  
 
              பரங்கிப்பேட்டை ஒன்றிய பேரூராட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்கும் இவர், திமுக ஆட்சியின் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகிய பிரச்னைகளை பேசி பிரசாரம் செய்து வருகிறார்.  
 
பலம் 
 
              தொகுதியில் தங்கி தனது  மேம்பாட்டு நிதியிலிருந்து  பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொண்டது. மழை,  வெள்ளத்தின் போது மக்களை சந்தித்தது, கட்சி நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்தது.  அவர்களது இல்ல  நிகழ்ச்சிகளில் பங்கேற்றது  உள்ளிட்டவை.  
 
பலவீனம்  
 
              தொகுதியில்  சொல்லிக் கொள்ளும் அளவில் மிகப் பெரிய திட்டப்பணிகளை மேற்கொள்ளவில்லை  என்பது பலவீனம்.
 
 
 

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து கனிமொழி எம்.பி.பிரசாரம்


 
சிதம்பரம்:
 
             தனது ஆட்சி காலத்தில் சுனாமி நிதியை கூட ஜெயலலிதா ஒழுங்காக பயன்படுத்தவில்லை.  ஆனால் கருணாநிதி ஆட்சியில், கடலூர் மாவட்டத்தில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். 
 
 காட்டுமன்னார்கோவிலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்து பேசியது: 
 
               துரை.ரவிக்குமார் நமது கூட்டணி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். சட்டசபையில் தொகுதி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கூறி பதிவு செய்துள்ளார்.  இவர் முயற்சியில் கடலூர், நாகை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் முட்டம்-மணல்மேடு இடையே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. வீராணம்ஏரி தூர்வாரப்பட்டு அந்த மண்ணை கொண்டு கொள்ளிடக்கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. 
 
                 இதனால் ஏரியின் கொள்ளளவு உயர்த்தப்பட்டு அதிகளவு நீர் தேக்கலாம். ரூ.115 கோடி செலவில் கொள்ளிடக்கரையை அகலப்படுத்தி, பலப்படுத்தி கரையை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. எனவே துரை.ரவிக்குமாருக்கு மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.  காட்டுமன்னார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்  துரை.ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி.

Read more »

2011 தேர்தல் பிரசாரத்தில் கல்லூரி மாணவர்கள்

                அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு இணையாக, கல்லூரி மாணவ-மாணவிகளும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 
  
"கட்சிகளுக்காக அல்ல...

               "தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்" என வலியுறுத்தியே அவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். 2011-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் களம் அனைவருக்கும் புதிதாக அமைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் கட்சியினரின் பிரசாரத்தில் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. 

கார்கள் அணிவகுக்க...

               கொடிகள் வரிசையாய் தோரணம் கட்ட...என தமிழகத்துக்கே உரிய வழக்கமான பிரசாரம் இப்போது இல்லை. வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிப்பதே இதற்குக் காரணம். தமிழகத்தில் இதுவரை பிரசாரம் பெரிய அளவில் களைகட்டவில்லை.

மாணவர்களின் பிரசாரம்...

                 அரசியல் கட்சியினரின் மெல்லிய பிரசாரத்துக்கு நடுவே, தேர்தல் ஆணையமும் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களை வெளியிட்டும், நடிகர், நடிகைகள் மூலம் அந்த வாசகங்களை பேசச் செய்தும் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளது. ஆணையத்தின் பிரசாரம் ஒருபுறம் இருக்க, கல்லூரி மாணவர்களும் பிரசார களத்தில் இறங்கியுள்ளனர். 

                  "வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களை பதாகைகளாக தயார் செய்து அருகில் உள்ள பகுதிகளில் பேரணியாக நடத்தலாம்' என்று கல்லூரி நிர்வாகங்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரசாரத்துக்கான ஆயத்தப் பணிகளில் கல்லூரி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் பணி... 

                 தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரம் வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் 20 ஆயிரம் வாக்குச் சாவடிகள் விடியோ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 10 ஆயிரம் வாக்குச் சாவடிகள் சாதாரண கேமராக்கள் மூலமும், மீதமுள்ள வாக்குச் சாவடிகள் வெப் கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு செய்யப்பட உள்ளன. வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியிலும், அதற்கான தொழில்நுட்பத்தை கையாளவும் பொறியியல் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அடுத்தபடியாக தேர்தல் பணியில் மாணவர்கள் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more »

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்

             தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிடுகிறது.

                சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட 4 ஆயிரத்து 228 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில் ஆயிரத்து 153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசி நாளாகும். சென்னை மாவட்டத்தில் சுயேச்சையாக மனுக்களைத் தாக்கல் செய்திருந்த மூன்று பேர் தங்களது மனுக்களை செவ்வாய்க்கிழமை வாபஸ் பெற்றனர்.

                இதேபோன்று, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மூன்று முதல் ஐந்து பேர் வரை தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் மனுக்களை வாபஸ் பெறவில்லை. 

இன்று கடைசி: 

                வேட்புமனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசி நாளாகும். கடைசி நாளில் பிரதான கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அதே கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தங்களது மனுக்களை புதன்கிழமை வாபஸ் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மனுக்கள் வாபஸ் முடிவுற்ற பிறகு புதன்கிழமை மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

                வாக்குப்பதிவு ஏப்ரல் 13-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்படுகின்றன.

Read more »

விலையேற்றத்துக்கு கருணாநிதி குடும்பமே காரணம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் செவ்வாய்க்கிழமை அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கூட்டத்தினரிடையே ஜெயலலிதா 
சிதம்பரம் :
 
            தமிழகத்தில் விலையேற்றம் என்பது இயற்கையானது அல்ல. கருணாநிதியின் குடும்பத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று கடலூர் மாவட்ட தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
 
கடலூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் புவனகிரி தொகுதி செல்வி ராமஜெயம் (அதிமுக), சிதம்பரம் தொகுதி கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), காட்டுமன்னார்கோவில் தொகுதி நாக.முருகுமாறன் (அதிமுக), திட்டக்குடி தொகுதி தமிழழகன் (தேமுதிக) ஆகியோரை அறிமுகப்படுத்தி ஜெயலலிதா பேசியது:
 
                 கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு எதிராக இங்கு எழுச்சியுடன் கூடி உள்ளீர்கள்.கச்சத்தீவை தாரை வார்த்தவர். இலங்கைத் தமிழர்கள் பலஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டதற்கு உறுதுணையாக இருந்தவர். தமிழக மீனவர்கள் படுகொலைக்கு உறுதுணையாக இருந்தவர்.ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியவர். ஊழல் செய்வதில் மட்டுமல்லாமல், மக்களை ஏமாற்றுவதிலும் வல்லவர். அவர்தான் இப்போதைய முதல்வர் கருணாநிதி.ஊழல் செய்து தமிழகப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் அவர். 
 
                 ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மூலம் 1000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.ஏழை-எளிய மக்களிடம் 1 ஏக்கர் நிலம் ரூ.60 ஆயிரம் என குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் தொழிற்சாலை அமைக்க தொழிலதிபர்களிடம் 1 ஏக்கரை ரூ.18 லட்சத்துக்கு விற்று ரூ.180 கோடி பணத்தை சுருட்டியுள்ளனர்.ஒரு மாவட்டத்தில் மட்டும் ரூ.180 கோடி என்றால், அனைத்து மாவட்டங்களில் கருணாநிதி எவ்வளவு பணத்தை சுருட்டியிருப்பார்?. 
 
                  தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையில் ரூ.50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளையில் ரூ.80 ஆயிரம் கோடி என கருணாநிதி குடும்பத்தினர் பலவழிகளில் பல ஆயிரம் கோடி பணத்தைச் சுருட்டியுள்ளனர். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, காவிரி நதி நீரை பெற்றுத்தர முயற்சிக்கவில்லை. ஏனென்றால் கர்நாடகத்தில் உள்ள தன் குடும்பத்தினரின் வருமானம் பாதிக்கும் என்பதால் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.ஆட்சி அதிகாரத்தையும், தன்னையும், தன் குடும்பத்தினரையும் பாதுகாக்க தன்னை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசி வருகிறார்.
 
                  உங்களை விரட்டிவிட்டு தமிழகத்தில் உள்ள சொத்துகளை குடும்பச் சொத்தாக்கிக் கொள்ள நினைக்கும் கருணாநிதியை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்.இப்படியே விட்டுவிட்டால் கருணாநிதி தமிழகத்தையே விற்றுவிடுவார். எனவே தமிழகத்தில் அவர் குடும்பத்தோடு அகற்றப்பட வேண்டும். எனவே அனைவரும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.இந்தத் தேர்தலில் ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து ஜனநாயகக் கடமையான தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
 
வாக்குறுதிகள்: 
 
               கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். வீராணம் ஏரி தூர்வாரப்படும், கடல் நீர் உள் புகுவதைத் தடுக்க வெள்ளாற்றில் தடுப்புச்சுவர் கட்டப்படும். தேவங்குடி-புத்தூர் இடையே பாலம் அமைக்கப்படும். சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக சீர்கேடுகள் களையப்படும். இப்பகுதியில் உள்ள அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் நான் நன்கு அறிவேன். எனவே ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ள தமிழகத்தை மீட்கவும், தமிழகத்தில் கருணாநிதி குடும்பத்தினர் அபகரித்துள்ள சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்றார் ஜெயலலிதா.

Read more »

முந்திரி பழத்தில் பொருட்கள் தயாரித்தல் விருத்தாசலத்தில் இலவச பயிற்சி முகாம்

விருத்தாசலம் : 

           விருத்தாசலத்தில் முந்திரி பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது. 

இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் முந்திரி பழத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ணை மகளிர் சுயஉதவி குழுக்கள், சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள பெண்கள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு மற்றும் பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும். 

           பயிற்சிக்கு முதலில் வரும் நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதால் பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் முன்கூட்டியே தங்களது பெயரினை வரும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் விருத்தாசலம் வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நேரிடையாக வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

Vote to protect democracy: Jayalalithaa


AIADMK general secretary Jayalalithaa addressing a meeting in Cuddalore on Tuesday.


CUDDALORE: 

          All India Anna Dravida Munnetra Kazhagam leader Jayalalithaa has called upon voters to exercise their franchise without fail and protect democracy. Election is the democratic means through which they can throw away the corruption-ridden ruling dispensation, she said.

         Ms. Jayalalithaa was addressing a public rally at the Manjakuppam grounds here in support of alliance candidates on Tuesday. She said that Dravida Munnetra Kazhagam leader and Chief Minister M. Karunanidhi had been appealing to people to re-elect him as Chief Minister for the sixth time. She alleged that Mr. Karunanidhi's rule was not only steeped in corruption but also adept in deceiving people.

         The power was not only concentrated in the hands of a single family but corruption had reached its pinnacle now. Ms. Jayalalithaa said that the soaring inflation was not a natural phenomenon but artificial, for which she squarely blamed the Karunanidhi family. In the past five years, the family had amassed wealth hugely. The law and order situation had also deteriorated, she alleged . .

             Funds sanctioned for government schemes were also swindled, she added. Mr. Karunanidhi had betrayed the interest of Tamil people in the Cauvery water sharing agreement and remained complacent over the report that Karanataka was attempting to tap water from the Mettur dam.

Read more »

Video programme to create awareness among voters

CUDDALORE: 

         A video programme on creating awareness among voters about the value of vote and importance of exercising their franchise will be screened all over the district till April 11.

         The screening of the programme, approved by the Election Commission, will be organised at bus stands, market places and cinema halls and also be beamed through the local cable television channels, according to a statement from Pon.Muthiah, Public Relations Officer.

The schedule is as follows: 

March 30 – Nellikuppam, Melpattambakkam and Andipalayam; 
March 31 – Thorapadi, Karumbur and Paithambadi; 
April 1 – Panruti and Thiruvadigai; 
April 2 – Kurinjipadi, Kullanchavadi and Vadalur;
April 3 – B.Mutlur, Puduchathiram and Parangipettai; 
April 4 – Mel Bhuvanagiri, Krishnapuram and Sethiathope; 
April 5 – Keerapalayam, Vandi Gate, Chidambaram and Annamalai Nagar.
April 6 – Kumaratchi, Vallambadugai, Chiddambaram and Usuppur; 
April 7 – Kattumannarkoil, Lalpet and Manalmedu; 
April 8 – Khammapuram, Seplanatham, Mandarakuppam and Gangaikondan.
April 9 – Vriddhachalam, Vijayamanagaram and Mangalampettai; 
April 10 – Nallur, Thittakudi, Seppakkam and Pennadam; 
April 11 – Mangalore, Ramanatham, Tholudur and Veperi Cross Roads.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior