உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 11, 2012

"தானே" புயல் நிவாரணம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.103.87 கோடி

           "தானே' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.103.87 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

         பல்வேறு தொழிலதிபர்கள், திரைப்பட பிரமுகர்கள் என பலரும் தாங்களாக முன்வந்து நிதியை அளித்து வருகின்றனர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை வியாழக்கிழமை சந்தித்து 25 பேர் நிதி அளித்தனர். வருவாய்த் துறை சார்பில் அதன் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.1.88 கோடியையும், தொழில் துறை சார்பில் அமைச்சர் பி.தங்கமணி ரூ.1.64 கோடியையும் முதல்வரிடம் வழங்கினர். பள்ளிக் கல்வி சார்பில் ரூ.25 கோடி அளிக்கப்பட்டது.செய்தித் துறை சார்பில் ரூ.13.23 லட்சத்தையும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ரூ.10 லட்சத்தையும் அளித்தனர்.எம்.ஆர்.எப். நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம்.மேமன் ரூ.1 கோடியும், அப்போலோ மருத்துவமனை சார்பில் ரூ.1.5 கோடியும், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா ரூ.1 கோடியும் அளித்தனர்.தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.75 லட்சமும், அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஊழியர்கள் சார்பில் ரூ.50 லட்சமும், எம்.பி. குழுமம் சார்பில் ரூ.25 லட்சமும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் ரூ.20 லட்சமும் நிதி அளிக்கப்பட்டது.

                கோவை கே.ஜி. மருத்துவமனை சார்பில் ரூ.15 லட்சமும், கோவை பிரிகால் நிறுவனத்தின் சார்பில் ரூ.15 லட்சமும், மாதா குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.பீட்டர் சார்பில் ரூ.10 லட்சமும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சமும் நிதி அளிக்கப்பட்டது.சிரைன் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி சார்பில் ரூ.10 லட்சமும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் சார்பில் ரூ.10 லட்சமும், அம்மன் குழுமம் சார்பில் ரூ.7 லட்சமும், இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ரூ.7.10 லட்சமும் நிதி வழங்கப்பட்டது.

               பாரதியார் பல்கலைக்கழகம் ரூ.7 லட்சமும், ஆசான் மெமோரியல் சங்கம் ரூ.6 லட்சமும், திரைப்பட நடிகை நயன்தாரா ரூ.5 லட்சமும் நிதி அளித்தனர். சர்ச் பார்க் பள்ளி மாணவிகள் ஜெய்வர்ஷினி, மனிஷா, சுஜித்ரா ஆகியோர் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அளித்தனர்.தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.35 கோடி வழங்கப்பட்டது. நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ.103.87 கோடி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Read more »

மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்தி வளாகத் திருமாளிகையில் திரு அறை தரிசனம்


வடலூர் மேட்டுக்குப்பம் திரு அறையைத் தரிசிக்கும் சன்மார்க்க அன்பர்கள்.
நெய்வேலி:

                              வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் ஆயிரக்கணக்கானோர் வியாழக்கிழமை திருஅறை தரிசனம் செய்தனர்.

             தனது வாழ்நாளில் அரும்பெரும் பணிகளை செய்துவந்த வள்ளலார் ராமலிங்க அடிகள் இறுதியாக வடலூருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில் 1870-ம் ஆண்டுமுதல் உறையத் தொடங்கினார். மேட்டுக்குப்பத்தில் அவர் வசித்த திருமாளிகைக்கு சித்தி வளாகம் என அழைக்கப்பட்டது. அங்கு வசித்த வள்ளல் பெருமானார் கார்த்திகைத் தீபத் திருநாளான்று, திருமாளிகை உள்ளிருந்த விளக்கை புறத்தில் வைத்து, இதைத் தொடர்ந்து ஆராதியுங்கள், இந்தக் கதவை சாத்திவிடப் போகிறேன், ஆண்டவர் இனி தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள், நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன், இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் எனக் கூறிவிட்டு கதவை சாத்திக் கொண்டார். 1874 தைத் திங்கள் 19-ம் நாள் சித்திவளாகத் திருமாளிகையிலேயே தமது திருவறையில் பெருமானார் அருட்பெருஞ்ஜோதியானார். 

               இந்த திருமாளிகை திருவறையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்துக்கு பின் 3-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் திருஅறை தரிசனம் நடைபெறும்.÷இந்த திருஅறை தரிசனத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்வர். அதுபோன்று இந்த ஆண்டு நடைபெற்ற தரிசனத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 











Read more »

தமிழக தொழிற்சாலை மாசுக்களை கண்காணிக்க ஆன்லைன் முறை

சிதம்பரம்:

                 தொழிற்சாலைகளில் மாசு வெளியாவதை ஆன்லைன் மூலம் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார்.

             தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களை கட்டுப்படுத்துவது குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு தொடக்க விழா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் புல வேதிப் பொறியியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பி.வி.ரமணா கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். 

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பி.வி.ரமணா பேசியது:

             புதிய யுக்திகளை கையாண்டு பிரச்னைகளை அறிவியல் பூர்வமாக அணுகி எரிசக்தி சேமிப்பு மற்றும் மரபுசாரா எரிசக்தி உபயோகித்தல் ஆகியவற்றின் மூலம் கரியமலவாயு வெளியாவதை தடுக்க வேண்டும். காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தொழிற்சாலைகள் சுதந்திரமாக செயல்படவும், அதேவேளையில் சுகாதார மேம்பாட்டுக்கான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

விழாவுக்கு துணைவேந்தர் எம்.ராமநாதன் தலைமையேற்று பேசியது: 

          இயற்கையின் மாற்றங்களால் ஏற்படும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளான புயல், வெள்ளம், சுனாமி மற்றும் பூகம்பம் ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க தொழிற்சாலைகள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

            விழாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லா கோருனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிருஸ்டியன் கென்னஸ், அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். துறைத்தலைவர் டி.வேதகிரி வரவேற்றார். கே.திருமாவளவன் நன்றி கூறினார்.








Read more »

திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம்

கடலூர்:
 
              திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் நின்றுச் செல்ல உத்தரவிடப்பட்டு இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, தமிழ்நாடு மாநில ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.÷கடலூர் நகர மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரியின் முயற்சியால், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
 
          இதையொட்டி திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்ததும், தமிழ்நாடு மாநில ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், ரயிலை வரவேற்று, பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு, ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் ச.சிவராமன் தலைமை வகித்தார். கெüரவத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், துணைத் தலைவர்கள் பால்கி, பாபு, நல்லதம்பி, பொருளர் அருள்செல்வன், பேராசிரியை சாந்தி, ஆசிரியை வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி சார்பில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

சிதம்பரம் : 
 
          சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரி சார்பில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கிள்ளை பேரூராட்சி சேர்மன் வித்தியாதித்தன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பாலசுந்தரம் வரவேற்றார். துணைத் தலைவர் பொன்மொழி, காத்தவராயசாமி, குணசேகரன், வாசுதேவன், ஸ்டாலின், விஜயலட்சுமி, ரவி உட்பட பலர் பங்கேற்றனர். நமதில்லம் டிரஸ்ட் சிறப்பு விருந்தினர் சுவாமிநாதன் காசநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார்

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior