உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, நவம்பர் 20, 2011

திட்டக்குடியில் பெண் சிசு கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/dfc74a3f-a39c-4def-b571-82b770ec125c_S_secvpf.gif
திட்டக்குடி:

            திட்டக்குடி பெருமுளை நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள ககிலன் குட்டையில் பிறந்து ஓரிரு நாட்களே ஆன ஒரு பெண்குழந்தையின் பிணம் மிதப்பதை பார்த்து அவ்வழியாக சென்ற பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

             அந்த பிணம் மிதந்த இடம் அருகே கரைப்பகுதியில் ஒரு மஞ்சள் பை ரத்தத்துளிகளுடன் கிடந்தது. கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தை காரணமாக அல்லது பெண் குழந்தையாக இருந்ததால் யாரோ இந்த குழந்தை பிறந்தவுடன் ஏரியில் போட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மஞ்சள் பை கிடந்த இடத்தில் அந்த குழந்தையை புதைப்பதற்காக குச்சி ஒன்றினால் குழிதோண்ட முயற்சித்து போதிய அளவு குழிதோண்ட முடியாததால் குழந்தையை குளத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளனர். திட்டக்குடி தீயணைப்புப்படையினர் பிணத்தை மீட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த குழந்தை பிணம் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior