உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

அன்னையர் தின வாழ்த்துக்கள்

 மே 09, 2010

Read more »

கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மந்தம்


கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக கொண்டு வரப்பட்டிருக்கும் ராட்சதக் குழாய்கள்.
 
கடலூர்:

             வடகிழக்குப் பருவமழை காலம் முடிவடைந்து 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மீண்டும் தொய்வடைந்து மந்தமாகி விட்டன.ரூ. 44 கோடி மதிப்பீட்டில் கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. ஆனால் திட்டம் இன்னமும் முடிந்த பாடில்லை. 18 மாதத்தில் இப்பணி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது.
 
                 90 சதவீதப் பணிகள் முடிந்து விட்டதாக இத்திட்டத்தை நிறைவேற்றும் குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிக்கிறது. ஆனால் 50 சதவீதப் பணிகள்தான் முடிந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. 8 கழிவுநீரகற்று நிலையங்களில் 4 மட்டுமே முடிவடைந்து உள்ளன. 4 கழிவுநீரகற்று நிலையங்களுக்கு இன்னமும் இணைப்புச் சாலைகளுக்கான நிலம் கையகப்படுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.சாலைகளில் மேன்ஹோல்கள் அமைக்கப்பட்டும், அவை  பல இடங்களில் இன்னமும் இணைக்கப்படவில்லை. 
 
                 பிரதான வேலையான தேசிய நெடுஞ்சாலையில் குழாய்கள் பதிக்கும் வேலை இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை. இத்திட்டத்தில் கழிவுநீரகற்று நிலைங்களை நவீனப்படுத்தவும், எஞ்சிய பணிகளை முடிக்கவும், மேலும் ரூ. 26 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்னும் 4 மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும் என்று 2 மாதங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஆனால் தற்போது பணி மிகவும் மந்தமாக நடந்து கொண்டு இருக்கிறது. 
 
இதுகுறித்து பாதாளச் சாக்கடைத்திட்ட ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில், 
 
                  கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டக் கட்டுமானப் பணிகளில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அவர்களில் பாதிபேர் பணிகளை விட்டுவிட்டுப் போய்விட்டனர். அதுவும் பணிகள் மந்தமாக நடப்பதற்கு ஒரு காரணம் என்று தெரிவித்தார். கோடைக் காலத்தில் பணிகள் மந்தமாக நடைபெறுவதன் மூலம், வடகிழக்குப் பருவமழை காலத்துக்குள் முடிவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பல சாலைகளில் சிறுசிறு வேலைகள் நடைபெறாமல் உள்ளது. உதாரணமாக இரு மேன்ஹோல்களை இணைக்காததால் அந்தப்பகுதி முழுவதும், சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது.மேலும் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க, கடலூர் நகராட்சியிடம் போதிய நிதி வசதி இல்லை. எனவே ரூ. 25 கோடி மானியத்துடன் கூடிய கடன் வேண்டும் என்று, தமிழக அரசை கடலூர் நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. இத் தொகை வந்தால்தான் சாலைகள் அமைக்க முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.பாதாளச் சாக்கடைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற மக்கள் பங்களிப்புத் தொகையாக, ரூ. 15 கோடி சேகரிக்க வேண்டும். அதற்கான பணிகள் நடைபெறவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை முடிக்காமல், பொதுமக்கள் பணம் கொடுப்பார்களா என்பதும் சந்தேகமே.90 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டன என்று அனைத்து துறைகளும் ஒரே குரலில் சாதிக்கின்றன. ஆனால் உண்மை நிலையை ஆராய்ந்தால், 50 சதவீதப்  பணிகள்தான் முடிவடைந்து இருப்பதாகத் தெரிய வருகிறது.   பொதுநல அமைப்புகள் இதற்காக அடிக்கடி போராட்டங்களை நடத்தியும், அரசியில் கட்சித் தலைவர்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உண்மையில் பாதிக்கப்படுவோர் கடலூர் அப்பாவி மக்கள்தான்.

Read more »

சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்: கீழ​ணையி​லி​ருந்து வீரா​ணத்​துக்கு தண்​ணீர் திறப்பு


காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி.
சிதம்பரம்:

            சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வியாழக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கோடைக்காலம் என்பதாலும், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் வீராணம் ஏரியில் கடந்த மார்ச் மாதம் முழுக்கொள்ளளவு (47.50அடி) நீர் தேக்கி வைக்கப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

                   கோடைக்காலம் என்பதால் நீர்வரத்து குறைந்து தற்போது வீராணம் ஏரியின் நீர் மட்டம் 42 அடியானது. இது மேலும் குறைந்தால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் கீழணையிலிருந்து வியாழக்கிழமை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் விநாடிக்கு 1500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக திருச்சி, அரியலூர் பகுதியில் பெய்து வரும் பரவலான மழையால் கீழணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோடைக்காலத்தில் கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடுவது இதுவே முதல்முறையாகும்.விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. 

                 சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியில் கூடுதலாக நீர் தேக்கி வைக்கப்படுவதால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Read more »

பாலமான் ஓடையில் கலக்கும் புதை சாக்கடை நீர்


சிதம்பரம் கனகசபை நகர் 8-வது கிராஸ் ரோட்டில் சாலையின் குறுக்க திறந்தவெளி சாக்கடை அமைத்து கழிவுநீரை பாலமான் ஓடைக்கு கொண்டு செல்கின்றனர்.
 
சிதம்பரம்:
 
          சிதம்பரம் நகரில் புதை சாக்கடைத் திட்டம் பழுதடைந்ததால் நகராட்சி நிர்வாகத்தினர் புதை சாக்கடை நீரை திறந்தவெளி சாக்கடை அமைத்து பாசனக் வாய்க்காலான பாலமான் ஓடையில் நீரைவிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதியுற்றுள்ளனர். சிதம்பரம் நகரின் தெற்கு பகுதியில் வெள்ளந்தாங்கிஅம்மன் கோயில் அருகில் உள்ள மதகு வழியாக கீழப்பாலமான் ஓடைக்கு பாசனநீர் செல்கிறது. சிதம்பரம் நகரில் கனகசபைநகர், ராஜாநகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் உள்ள புதைசாக்கடை கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டு அதன்மூலம் பாலமான் ஓடையில் கொண்டு விடப்பட்டுள்ளது. இதற்காக சாலையின் குறுக்கே தோண்டப்பட்டு திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கொசுத் தொல்லை அதிகரித்து அப்பகுதியில் மக்கள் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பால் அல்லல்படுகின்றனர். மேலும் பாசனத்துக்காக செல்லும் பாலமான ஓடையில் இந்த கழிவுநீர் கலப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் பகுதியில் நேரடி ஆய்வு செய்து பாசன வாய்க்காலில் கழிவுநீரை கொண்டு விடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூக பாதுகாப்பு பேரவை தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
 
 

Read more »

நெய்வேலியில் நாளை திருமண மாலை நேர்காணல்

நெய்வேலி:
 
                 நெய்வேலி நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் திருமண மாலை நேர்காணல் நிகழ்ச்சி நெய்வேலி வட்டம் 16-ல் உள்ள அமராவதி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்பவர்கள் நாயுடு மகாஜன சங்கம் சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், சங்க சட்ட ஆலோசகர் சீனுவாசன் மணமாலை நிகழ்ச்சியை தொடங்கிவைக்க இருப்பதாகவும் சங்கச் செயலர் ஜீவன்பாபு தெரிவித்துள்ளார்.
 
பொது அறிவிற்கு:  
மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் -  கிவி

Read more »

நெய்வேலியில் மூடியே கிடக்கும் ரேஷன் கடைகள்

நெய்வேலி:

              நெய்வேலி நகரில் உள்ள ரேஷன் கடைகளில் சில மூடிய நிலையிலேயே இருப்பதால் பொதுமக்கள் பொருள்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  

                 நெய்வேலி நகரில் 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால் நெய்வேலி வட்டம் 5, 6, 7, 10  மற்றும் மந்தாரக்குப்பத்தில் உள்ள கடைகள் பெரும்பாலான நாள்களில் மூடியே இருப்பதால் அரசு மானிய விலையில் வழங்கும் சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  மாதத்தின் முதல் இரு தினங்கள் பொருள்களை கொள்முதல் செய்வதற்காக கடை மூடப்படுவது வழக்கம். ஆனால், நெய்வேலி வட்டம் 5-ல் உள்ள ரேஷன் கடை இம்மாத தொடக்கத்திலிருந்து இதுவரை திறக்கப்படவில்லை. 

                 நெய்வேலி நகரில் பெரும்பாலானவர்கள் பணிக்குச் செல்லக்கூடியவர்கள். அவர்கள் பணி முடிந்து பிற்பகலில் சற்று ஓய்வெடுத்த பின்னர் மாலை நேரத்தில்தான் பொருள்களை வாங்கச் செல்வர். ஆனால், மாலையில் கடை நேரம் முடிந்து மூடப்படுவதால் அவர்கள் பொருளை வாங்கமுடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே வீட்டிலுள்ள பெண்கள்தான் ரேஷன் கடைக்குச் சென்று பொருள்களை வாங்குகின்றனர். ரேஷன் கடையிலே ஒருநாள் சர்க்கரை, மற்றொரு நாள் கோதுமை என்று தினம் ஒரு பொருள் என தவணை முறையில் பொருகள் விநியோகிக்கப்படுவதால் பெண்கள் ரேஷன் கடைக்கு நடந்து நடந்தே அலுப்புத் தட்டிவிடுகிறது. 
                 
                அதுவும் ரேஷன் கடை தொடர்ந்து திறந்திருந்தாலும் பரவாயில்லை. ஒருநாள் திறந்திருந்தால் மறுநாள் கடை மூடிய நிலையில் இருப்பதால் பெண்கள் நீண்ட தூரம் நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்படுகிறது. கடை திறந்திருந்தாலும் அவர்களிடம் ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்குள் அப்பப்பா என்றாகிவிடுகிறது. சில நேரங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதைக் கூட தாங்கிக்கொண்டு பொருளை வாங்க வேண்டிய சூழல் இருப்பதாக நெய்வேலி பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். 

                      நெய்வேலி வட்டம் 6-ல் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். அவர்களில் 200 பேருக்கும் குறைவாகவே சர்க்கரை கிடைக்கிறது. மற்றவர்கள் வெளி மார்க்கெட்டில்தான் சர்க்கரை வாங்குகிறனர். இங்கிருந்து சர்க்கரை உள்ளிட்ட பொருள்களும் கடத்தப்படுவாதாக கூறப்படுகிறது. அவ்வப்போது மூடப்படும் ரேஷன் கடைகளை நிரந்தரமாக திறக்கவும், ரேஷன் கடைகளில் இருந்து பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் வழிவகை செய்வாரா வட்ட வழங்கல் அதிகாரி?

பொது அறிவிற்கு:  

பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் - தமிழ்நாடு

Read more »

பி.எஸ்.என்.எல்.அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:
 
               பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்கத்தினர் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 
                 அதிகாரிகளுக்கு முறையற்ற மாறுதல்கள் அளித்ததைக் கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாண்டுரங்கன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் என்.பாலகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
 
பொது அறிவிற்கு:  

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் - டாக்டர் பி ஆர் அம்பேத்கர்

Read more »

மனவளர்ச்சி குன்றிய மாணவி கண்தானம்

சிதம்பரம்:

                சிதம்பரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த பி.சரண்யா (18). ஜி.வி. சிறப்புப் பள்ளியில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய இம்மாணவி மஞ்சக்காமலை நோயால் புதன்கிழமை இறந்தார். மேலும் சீர்காழி பனங்காட்டுத் தெருவைச் சேர்ந்த கமலநாதன் (70) செவ்வாய்க்கிழமை காலமானார். இவர்களது இரு ஜோடி கண்கள் சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எஸ்.செந்தில்வேலன், செயலாளர் ஜே.திருமால், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் செய்தனர்.

பொது அறிவிற்கு


தென்னிந்தியாவின் நுழைவுவாயில் - சென்னை

Read more »

நேஷனல் கல்வியியல் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

பண்ருட்டி:

          நேஷனல் கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகிறது. பண்ருட்டி வட்டம் கீழக்கொல்லை நெய்வேலி ஆர்ச் கேட் அருகே நெய்வேலி கல்வி அறக்கட்டளை சார்பில் நேஷனல் கல்வியியல் கல்லூரி, நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 2010-2011 ம் கல்வியாண்டிற்கான டி.டி.எட்., பி.எட்., எம்.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் தேவைப்படுவோர் வேலை நாட்களில் கல்லூரி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் காலை10 மணி முதல் மாலை 5 மணிக்குள் பெற்றுக்கொள்ளளாம். 

பொது அறிவிற்கு:  

ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் - வித்யா சாகர்

Read more »

It's time to mend boats, fishing nets



Right hour: Repair work on boats under way along the Cuddalore coastline.

CUDDALORE: 

             The sound of mechanised tools cutting into wood and polishing surface is being heard at select fish landing centres along the Cuddalore coastline. With the 45-day fishing holiday in force, carpenters are working overtime to repair damaged wooden frames and panels of boats.

            Hundreds of trawlers and mechanised boats are idling along the coast and it is the ideal time for the owners to mend their boats and fishing nets. M. Subramani, a trawler operator at the Old Town area, said that the fishing crafts need periodical maintenance to tackle the corrosive nature of seawater. Fishermen generally allocate a portion of their earnings for the task. Many carpenters have put up tents at places such as the Cuddalore Port area, Sellankuppam and Panchayankuppam.

            They mostly work on mahogany and neem wood, which would withstand the pounding of waves and the corrosive nature of seawater. K. Balu, a senior carpenter, said that repair works ought to be done deftly without leaving even a hairline gap or a weak spot in the craft structure. According to sources, the daily wages of the carpenters, which is usually between Rs. 300 and Rs. 400, would be between Rs. 400 and Rs. 500 during the fishing holiday. The boat owners would also have to offer incentives to retain the workforce. Most of the carpenters would prefer building new boats, and, therefore it would be difficult to engage them in small repair works, sources said. The owners also spend a lot of money on painting their boats and mending their fishing nets, the latter being an intricate and time consuming job.

பொது அறிவிற்கு


மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்

Read more »

AIADMK stages demo in Panruti, flays civic body

CUDDALORE:

             Cadres of the All India Anna Dravida Munnetra Kazhagam, led by P.H. Pandian, former Assembly Speaker, staged a demonstration in front of the Panruti bus stand, alleging inaction on the part of the civic body in providing basic amenities.

           Mr. Pandian said that the agitation was held on the direction of the party general secretary, Jayalalithaa, because Panruti town was reeling under drinking water scarcity and facing health hazards owing to sewage overflow. Though an underground drainage project was proposed in 2006, it was yet to materialise. Had the Wallajah canal project been implemented, drinking water problem could have been tackled. It was owing to the inefficiency of the civic body that the residents were put to hardship, Mr. Pandian said. However, in a statement released here, municipal chairman Pachaiyappan denied the allegations. He said that in the past three years, basic amenities had been improved in the town utilising funds provided under various heads, including the MLA and MP Local Area Development funds. Two big overhead tanks and six normal size overhead tanks had been constructed for streamlining water supply in the town. Twenty deep borewells had also been sunk at various places, he said.

பொது அறிவிற்கு:  

கிரெடிட் கார்டு  வழங்கிய முதல் இந்திய வங்கி- சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

Read more »

புதுச்சேரி பதிவு எண் வாகனங்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் ரூ.7 லட்சம் வசூல்

கடலூர் : 

              கடலூர் மாவட்டத்தில் 237 புதுச்சேரி மாநில பதிவு எண் வாகனங்கள் பிடிபட்டதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

             புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட் சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

பொது அறிவிற்கு:  


தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் - மகாத்மா காந்தி

Read more »

வீட்டில் பெண் கவுன்சிலர்கள்: விவாதத்தில் கணவன்மார்கள் : கடலூர் ஒன்றிய குழு கூட்டத்தில் 'அவலம்'

கடலூர் : 

               கடலூர் ஒன்றிய குழு கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களுக்கு பதில் அவர்களது கணவர்கள் விவாதத்தில் ஈடுபட்டதுடன் தீர்மானத்திலும் கையெழுத்திட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

              உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது தி.மு.க., அரசு. இதனை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் அதிகளவில் பதவி வகித்தனர். இருந்தும் பெரும்பாலான இடங்களில் பதவியில் உள்ள பெண்களின் கணவர்களே அனைத்து பணிகளையும் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக கிளம் பிய புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள், ஒவ்வொரு கூட்டத்திலும் பெண் கவுன்சிலர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும். பணிகள் முழுவதும் அவர் களே செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

               மேலும் உள்ளாட்சிகளில் பெண்களின் பங்கு குறித்து தொண்டு நிறுவனங்கள் பெண் சேர்மன், கவுன்சிலர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி அவர்கள் சுயமாக செயல்படவேண்டிய அவசியத்தை உணர்த்தினர். இது ஓரளவிற்கு பயனளித்தாலும் பெரும்பாலான இடங்களில் இன்னமும் பழைய நிலையே தொடர்கிறது. ஆனால் தற்போது அனைத்தையும் மீறும் அளவிற்கு கடலூரில் நடந்த ஒன்றிய கூட்டத்தில் பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் கூட்ட அரங்கில் அமர்ந்து கூட்ட பொருள் குறித்து விவாதித்தது வேடிக்கையாக இருந்தது.

              கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 கவுன்சிலர்களில் 13 பேர் பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் ஆசைவள்ளி, சுமதி இருவர் மட்டுமே வந்திருந்தனர். மற்ற கவுன்சிலர்களான உமா, சுசீலா, ஜெயந்தி, ஜெயபாரதி, மணிமொழி, செல்வி, ராதா, வள்ளி அவரவர் கணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். கூட்டத்திற்கு வந்தது மட்டுமின்றி கேள்வி எழுப்பி விவாதத்திலும், வருகை பதிவேடு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பதிவேட்டிலும் கையெழுத்திட்டதுதான் விந்தையிலும் விந்தை.

               பெரும்பாலான கூட்டங்கள் இதே போல் நடந் தாலும் நேற்று நடந்த கூட்டத்தில் கணவன்மார்கள் ராஜ்ஜியமே மேலோங்கி காணப்பட்டது. பலமுறை எடுத்துரைத்தும் கவுன்சிலர்கள் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. கட்சி மேலிடம், அமைச்சர் என மிரட்டல்தான் வருகிறது என அதிகாரிகள் தரப்பில் புலம்புகின்றனர். உள்ளாட்சிகளில் பெண் களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்த தி.மு.க., ஆட்சியிலேயே இந்த அவலம் நீடிக்கிறது.

பொது அறிவிற்கு:

உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் - ஜான் சுல்லிவன்

Read more »

மளிகை, ஓட்டல்களில் ஆய்வு 9 கடைகளுக்கு நோட்டீஸ்

கடலூர் : 

             கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை, ஓட்டல்கள், நடை பாதை கடைகளில் நகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

           கடலூர் நகராட்சி பகுதியில் நேற்று மாலை கமிஷனர் குமார், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சக்குப்பம் பகுதியிலிருந்த மளிகை கடைகள், ஓட்டல்கள், சாலையோர தள்ளு வண்டி உணவு கடைகள் என 45க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர்.

            இதில் காலாவதியான டால்டா, நூடுல்ஸ் பாக்கெட், வனஸ்பதி, ஊறுகாய், பேரிச்சம் பழம், கான்பிளக்ஸ் மாவு, கடலை மாவு, சாலையோர உணவு விடுதிகளில் சிக்கன், மட்டன் போன்றவைகளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாயாகும். மேலும் கடைகளில் பயன்படுத்திய மூன்று வீட்டு காஸ் சிலிண்டர்களை கைப் பற்றினர். மேலும் நான்கு மருந்து கடைகளில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டது. பின் ஆய்வு செய்யப்பட்ட 9 கடைகளுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

பொது அறிவிற்கு:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் - டி பி ராய்

Read more »

கடலூரில் மென்பொருள் பூங்கா எம்.எல்.ஏ., அய்யப்பன் வேண்டுகோள்

கடலூர் : 

            கடலூரில் மென்பொருள் பூங்கா அமைத்தர வேண்டும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் சட்ட சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்ட சபையில் மின் துறை மானிய கோரிக்கையின் போது எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது: 

              தி.மு.க., ஆட்சியில் 1998ம் ஆண்டு 8 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் கீழ்பவானி புனல் மின் திட்டமும், 1999ம் ஆண்டு 196 மெகாவாட் பேசின் பாலம் டீசல் எஞ்சின் மின் திட்டமும் துவங்கப்பட்டது. அதே ஆண்டு 5.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சாத்தனூர் புனல் மின் திட்டமும், 2000ம் ஆண்டு 700 மெகாவாட் முக்குருத்தி சிறு புனல் மின் திட்டம் என 942 கோடி ரூபாய் மதிப்பில் 244 மெகாவாட் திறன்கொண்ட 6 மின் உற்பத்தி திட்டங்கள் துவக்கப்பட்டன. கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம் மின் உற்பத்தி செய்வதற்கான அடித்தளங்களை அமைக்கிறார். கடலூர் தொகுதி மிகவும் பிற்பட்ட தொகுதியாகும். எந்த தொழிற்சாலைகளும் இல்லை. முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கடலூரில் மென்பெருள் பூங்கா அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கடலூர் பகுதியில் மேலும் ஒரு புதிய பஸ் ஸ்டாண்டை உருவாக்க வேண்டும்.

               கடலூர் புறவழிச் சாலைகளுக்கு திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அறிவித்தார். இதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, அந்த பணியை விரைந்து முடிந்து கடலூர் மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

பொது அறிவிற்கு:
ஹான்ட் பிளானெட் என்பது - வெள்ளி

Read more »

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ஜெனரேட்டர்கள்

நெல்லிக்குப்பம் : 

             நெல்லிக்குப்பம் நகராட்சியில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படாமல் இருக்க 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது.

              நெல்லிக்குப்பம் நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி வளாகம், ஆலை ரோடு ஆகிய இரண்டு இடங்களில் பிரதான மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதன் மூலம் காலை, மாலை இரு வேளைகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் கிணறு, ஆழ்துளை கிணறு பயன்பாட்டை மக்கள் மறந்தனர். கடந்த சில மாதங்களாக மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மேலும் மழைக் காலங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும் குடிநீர் சப்ளை தொடர்ந்து வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சிக்கு ஜெனரேட்டர் வாங்க முடிவு செய்தனர். ஒவ்வொரு இடத்துக் கும் தலா 6 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது. இனி மின் சப்ளை இல்லா விட்டாலும் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை சீராக இருக்கும்.

பொது அறிவிற்கு:
பெரிய பாதை கொண்ட கிரகம்  - புளுட்டோ

Read more »

அண்ணா விளையாட்டரங்கில் ஆணைய உறுப்பினர் செயலர் ஆய்வு

கடலூர் : 

             கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் சத்ய பிரதா சாகூ நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

              ஆய்வின் போது நீச்சல் குளம், தடகள வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பங்களிப்பு, ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் ஹெலிபேடு, குவாஷ் அரங்கு உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டார். குவாஷ் அரங்கு, ஷட்டில்காக் புதிதாக அமைக்கப்பட்ட அரங்குகளை விரைவில் திறக்க உத்தரவிட்டார். ஷட்டில்காக், வாலிபால், ஹாக்கி, டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட் டவைகளுக்கு பயிற்சியாளர்களை நியமிக்கவும், புதிய ஓடுதளம் அமைக்கவும் ஆவன செய்வதாக கூறினார்.

                மாதம் தோறும் தடகள போட்டிகள் நடத்தி வீரர்களை ஊக்கப்படுத்த அறிவுறுத்தினார். ஸ்கேட்டிங் பயிற்சி பெற வசதியாக இடத்தை மேலும், மென்மையாக்க, கலெக்டரிடம் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். ஆய்வின் போது மண்டல முதுநிலை மேலாளர் தியோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம், நீச்சல் பயிற்சியாளர் அருணா ஆகியோர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து விருத்தாசலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி அரங்கை பார்வையிட சென்றார்.

பொது அறிவிற்கு:

நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் - 1.3 நொடி

Read more »

போலீசார் ஒழுக்கத்தை கடைபிடிக்க எஸ்.பி., உத்தரவு


சிதம்பரம் : 

             கடலூர் மாவட்ட போலீசார் ஒழுக் கத்தை கடைபிடிக்க எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

             போலீசார் பல இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக எஸ்.பி., க்கு புகார்கள் வந்துள்ளது. சிதம்பரத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு பாதுகாப்புக்கு வந்த கடலூர் ஆயுதப்படை போலீசார், வாகனத்திற்கு வழிவிடாத இரு கார் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு ஒருவரை தாக்க பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது என அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் இரவு ரோந்து செல்வதில்லை, குடிபோதையில் டியூட்டி பார்ப்பது போன்ற தகவல்களும் எஸ்.பி., கவனத்திற்கு வந்தது.

               போலீசாரின் இதுபோன்ற நடவடிக்கையால் கடுப்பான எஸ்.பி., போலீசார் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க கட்டளையிட்டுள்ளார். வாரம்தோறும் ஒவ்வொரு போலீஸ் உட்கோட்ட தலையிடத்தில் 'கவாத்து' பயிற்சி கட்டாயம் நடத்த வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலைய அதிகாரிகள் முதல் போலீசார் வரை கட்டாயம் பங்கேற்க வேண்டும். பயிற்சிக்கு வராத போலீசார், அதிகாரிகள் உடனடியாக கடலூர் ஆயுதப்படை பிரிவிற்கு மாற்றப்படுவார்கள். 'கவாத்து' பயிற்சியின் போது, உட்கோட்ட அதிகாரி அறிவுரை வழங்குவதுடன் ஏற்கனவே செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, கண்டிக்க வேண்டும் போன்ற கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். எஸ்.பி.,யின் இந்த அதிரடி உத்தரவால் மாவட்ட போலீசார் கதிகலங்கி உள்ளனர்.

பொது அறிவிற்கு
கண்ணால் பார்க்க கூடிய கிரகம் - செவ்வாய்

Read more »

விவசாயிகள் குறை கேட்பு கூட்டம்

சிறுபாக்கம் : 

             மங்களூர் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார அளவில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடந்தது.

               மங்களூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராசு, செல்வகுமார் முன்னிலை வகித்தனர். உதவி அலுவலர் டென்சிங் வரவேற்றார். மங்களூர் கால்நடை மருத்துவ அலுவலர் சுப்ரமணியன், வேளாண் அலுவலர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராசு, விவசாயிகள் ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

               கூட்டத்தில் வேளாண் மானிய திட்டத்தில் இடுபொருட்கள், கருவிகள், பூச்சி மருந்துகள், விதைகள் குறித்து தகவல் பலகை வைக்கவும், சிவப்பு சந்தனம் பயிரிட கன்றுகள் அரசு அங்கீகரிக் கப்பட்ட, அரசு சார்ந்த மற்றும் தனியார் பண்ணைகளில் மரக் கன்றுகளை ரசீதுடன் பெற்று வேளாண் அலுவலகத்தில் சமர்ப்பித்தால் மானியம் வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம், சிங் சல்பேட், வேர்க்கடலை பயிர்களுக்கு நுண்ணூட்ட உரக் கலவை அடங்கிய 5 கிலோ மினி கிட் உள்ளிட் டவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பொது அறிவிற்கு:
சிவப்பு கிரகம் என அழைக்கப்படுவது - செவ்வாய்

Read more »

அக்னிசிறகுகள் எழுச்சி இயக்கம் நடத்திய புவி வெப்பமடைதல் குறித்த கருத்தரங்கம்

கிள்ளை : 

              சிதம்பரம் அருகே கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் அக்னிசிறகுகள் எழுச்சி இயக்கம் சார்பில் புவி வெப்பமடைதல் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

               சிதம்பரம் அருகே கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு குறித்த இலவச சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில் சிதம் பரம் அக்னிசிறகுகள் எழுச்சி இயக்கத்தின் மூலம் நடந்த புவி வெப்பம் அடைதல் குறித்த கருத்தரங்கில் மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி வரவேற்றார். இயக்கத் தலைவர் குபேரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர்களை தடுக்கும் முறைகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆரோவில் சக்தி இல்லம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, அக்னி சிறகுகள் எழுச்சி இயக்கத்தினர்கள் மணிமாறன், மணிகண்டன், சுப்ரமணியசிவா, விஜயராஜ், வேம்பரசி, யவனராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை குணவதி, பபிதா உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர். கவிதா நன்றி கூறினார். முகாமில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

பொது அறிவிற்கு
மனிதன் நிலவில் இறங்கிய நாள் - ஜூலை 21, 1969


Read more »

ஒரு ஆண்டு தொங்கிய கம்பி ஒரே நாளில் சீரமைப்

சிதம்பரம் : 

          தொட்டு விடும் தூரத்தில் ஒரு ஆண்டாக தாழ்வாக தொங்கிய மின் கம்பி தினமலர் செய்தி எதிரொலியால் ஒரே நாளில் சரி செய்யப்பட்டது.

            சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு கிராமத்தில் வயல்வெளி வழியாக செல்லும் மின் கம்பி மிகவும் தாழ்வாக தொட்டுவிடும் தூரத்தில் ஒரு ஆண்டாக தொங்கியது. இதனால் வயல்வெளிக்கு செல்லும் மக்கள் அச்சத்துடனே சென்று வந்தனர்.  செயற் பொறியாளர் செல்வசேகர் அதிரடி நடவடிக்கையால் நேற்று ஒரே நாளில் புதிய மின் கம்பம் நடப்பட்டு, தாழ்வாக இருந்து மின் கம்பி சரி செய்யப்பட்டது. 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொது அறிவிற்கு:
நிலவின் விட்டம் - 3475 கி.மீ.

Read more »

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் காரீப் முன் பருவ பயிற்சி

குறிஞ்சிப்பாடி :

            குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு காரீப் முன் பருவ பயிற்சி அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெற உள்ளது.

குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

              குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நடப்பு ஆண்டு காரீப் பருவத்தில் கோடையுழவு, மண் மாதிரியின் அவசியம், விதை நேர்த்தி, எலி ஒழிப்பு, செம்மை நெல் சாகுபடி குறித்து காரீப் முன் பருவ பயிற்சி முகாம் கடந்த 26ம் தேதி தொடங்கி வரும் மே 13ம் தேதி வரை அனைத்து வருவாய் கிராமங்களிலும் மாலை 4 மணிக்கு வேளாண்மை துறை அலுவலர்களால் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

               இந்த பயிற்சி முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுவதுடன் தங்கள் நிலத்தின் மண் சத்துக்களை அறிந்து கொள்ள மண் மாதிரி எடுத்து வந்து ஆய்வு செய்து இதன் அடிப்படையில் நிலத்துக்கு தேவையான உரங்களை இட்டு அதிக விளைச்சலை பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஒரு மண்மாதிரி ஆய்வு செய்ய 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி வேளாண்மை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொது அறிவிற்கு:
சூரிய மண்டலத்தின் சிறிய கிரகம் - புளுட்டோ

Read more »

இலவச எலும்பு தேய்வு கண்டறியும் முகாம்

சிதம்பரம் : 

              சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச எலும்பு தேய்வு கண்டறியும் முகாம் நடந்தது.

              சிதம்பரம் ரோட்டரி சங்கம் மற்றும் கண்ணா ஆர்த்தோ கிளினிக் இணைந்து நடத்திய முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் அஷ்ரப் அலி தலைமை தாங் கினார். ரோட்டரி கவர்னர் அருள் மொழிச்செல்வன் துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். முகாமில் எலும்பு எடை அடர்த்தி சோதிக்கப் பட்டது. இதனால் எலும்பு தேய்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆலோசனையை டாக்டர் பாரதி செல்வன் வழங்கினார். முன்னாள் ரோட்டரி தலைவர்கள் மகபூப் உசேன், நடராஜன், ராமகிருஷ் ணன், பாபு, முகமது யாசின், சீனிவாசன், தலைவர் தேர்வு செந்தில் உள்ளிட்டவர்க ள் பங்கேற்றனர். சங்க செயலாளர் ரவி நன்றி கூறினார்.

பொது அறிவிற்கு:
சூரிய மண்டலத்தின் மிக பெரிய கிரகம் - வியாழன்

Read more »

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

கடலூர் : 

              அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் இன்று வெளியிடப்படுகிறது.

இது குறித்து சி.இ.ஓ., அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 6 முதல் 9 மற் றும் பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் இன்று வெளியிடப்படுகிறது. தேர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் வரும் ஆண்டிற்கான பாட புத்தகங்களை வரும் 10ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் சிறப்பு மறு தேர்வு நடத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது அறிவிற்கு:
காற்றில்லாத கிரகம் - புதன்

Read more »

மின்வெட்டை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

 சிதம்பரம் : 

             சிதம்பரத்தில் விவசாய சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

                தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டை கண்டித்தும், விவசாயிகள், பொது மக்களுக்கு தங்குதடையின்றி தொடர்ந்து மின்சாரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாய சங்கத்தின் சார் பில் சிதம்பரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்டதுணைத் தலைவர் ராஜாராமன் முன்னிலை வகித்தார். கண்ணங்குடி ஊராட்சித் தலைவர் ராஜசேகர்,விவசாய சங்க மாவட்டத் தலைவர் கலியபெருமாள்,சிதம்பரம் நகர செயலாளர் ஜின்னா, இந்திய வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் வாஞ் சிநாதன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் குணசேகரன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மாசிலாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

பொது அறிவிற்கு:
சூடான கிரகம் - புதன்

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior