உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

ராகவேந்திரா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் பி.எட்., வகுப்புகள் துவக்க விழா

கிள்ளை:


கிள்ளை அருகே ராகவேந்திரா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் பி.எட்., வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் தலைமையேற்றுகுத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆலோசகர் இளங்கோ முன்னிலை வகித்தார். செயலர் பாபு வரவேற்றார். ரங்காச்சாரி பேசினார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு படங்களாக மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது.விழாவில் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயபால், துணை முதல்வர் பன்னீர்செல்வம், நடனசபேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அறிவுக்கடல் நன்றி கூறினார்.

Read more »

சனி, செப்டம்பர் 08, 2012

மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிரவுன் சர்க்கஸ் துவக்க விழா

கடலூர்:

     கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிரவுன் சர்க்கஸ் துவக்க விழா நேற்று  நடந்தது. நகராட்சி சேர்மன் சுப்ரமணியன் திறந்து வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சர்க்கசில் ஆப்பிரிக்கா, மணிப்பூர்,
மங்கோலியா கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக், ரிங் டான்ஸ், இரும்பு கூண்டுக்குள்  இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஸ்கை வாக், பயர் டான்ஸ், ஆப்பிரிக்கா காட்டு  நடனம், பார் விளையாட்டு, கூர்மையான நான்கு கம்பி மீது படுப்பது,  அந்தரத்தில் கம்பி மீது தலைகீழாக தொங்குவது உள்பட 28 வகையான சாகசங்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞர்கள், குதிரை, ஒட்டகங்களின் அணிவகுப்பு, ஜோக்கர்களின்  நகைச்சுவை உள்ளிட்ட நிகழ்ச்சியும்இடம் பெற்றுள்ளன. அக்டோபர் 10ம் தேதி,  வரை நடைபெறும் சர்க்கஸ் தினமும் மதியம் 1 மணி, மாலை 4, இரவு 7 மணி என  மூன்று காட்சிகள் நடக்கிறது. கட்டணம் 50, 100, 150 ரூபாய் ஆகும். 150  ரூபாய் டிக்கெட் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முன்பதிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து சர்க்கஸ் மேலாளர் சந்திரன் கூறுகையில்,


சர்க்கசில் ஆப்பிரிக்க கலைஞர்கள் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும். பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் கலைஞர்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன என்றார்.

.

Read more »

புதன், செப்டம்பர் 05, 2012

கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஆண்டு தோறும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர்) வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். தமிழக அரசு சார்பில் 2011-2012ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு கடலூர் மாவட்டத்திலிருந்து தொடக்கக் கல்வித்துறையில் 13 பேரும், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் 15 பேரும் பரிந்துரை செய்யப்பட்டனர்.

அவர்களில் தேர்வு பெற்றவர்கள் விவரம்:

சிதம்பரம், ராணி சீதையாட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தர்பாரண்யன், கடலூர் செயின்ட் ஆன்ஸ் பள்ளி முதல்வர் எர்மின் இக்னிஷியஸ், தர்மநல்லூர் ஆதிதிராவிட நலப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி,  வேப்பூர் அரசு மேல்நிலைப்  பள்ளி தலைமை ஆசிரியை ராஜகுமாரி, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடக்கக் கல்வித்துறையில் குறிஞ்சிப்படி அடுத்த பொட்டவெளி, வள்ளலார் உதவி பெறும்  துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜன், கரைமேடு நடுநிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர் குணசேகரன், கீழக்கொல்லை உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியை  தேவிகா, வீனங்கேணி ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை இருதயமேரி, சிதம்பரம்  ராமகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் அருள்பிரகாசம், குமராட்சி ஒன்றியம் மா.புளியங்குடி பள்ளி ஆசிரியர் கணேசன் ஆகியோர் நல்லாசிரியர்  விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பெற்ற இவர்களுக்கு இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior