உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 12, 2011

மத்திய அரசு நடத்தும் மூலிகை தொழிற்பயிற்சி கடலூரில் நடக்கிறது


மத்திய அரசு நடத்தும் மூலிகை தொழிற்பயிற்சி கடலூரில் நடக்கிறது

 
கடலூர்:

         மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மூலமாக கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள தி சுசான்லி அக்கு பஞ்சர் ஆயுர்வேதிக் மருத்துவ மனையில் வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மூலிகை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெறுகிறது.

               மூலிகை பயிற்சியில் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சியில் மூலிகைகள் என்றால் என்ன? மூலிகை மருந்துகளை தயாரிப்பது எப்படி? என்னென்ன நோய்க்கு சரியான மூலிகை எது? கூந்தலுக்கு மூலிகை தைலம், ஹெர்பல் ஹேர்டை, வலிப்பிரச்சினைகளுக்கான பாம், லேகியங்கள், பெண் களின் பிரத்யோக பிரச்சி னைகளுக்கான மூலிகைகள் எவை? என்பன உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட நோய்களுக்கான மருந்து செய்யதேவையான விஷயங் களையும், சில குறிப்பிட்ட மருந்துகளை நேரிடையாக செய்து காண்பித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

             பெண்கள் மாதவிடாய் பிரச்சினைகளுக்கான மூலிகை சூரணங்கள், சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்டவைகளுக்கு மருந்துகள் தயாரிக்க கற்றுத் தரப்படும். வங்கிகள் மூலமாக மானியத்துடன் கடன் உதவி பெற்று மூலிகை தொழில் தொடங்குவது எவ்வாறு? என்று அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள். பயிற்சியை முடித்தவர் களுக்கு மத்திய அரசின் ஹெர்பல் புராடக்ட் மேக்கிங் என்ற சான்றிதழ் வழங்கப்படும். 
 
              பயிற்சி கட்டணம் முன்பதிவு முதலியவற்றிற்கு 9750586267, 9367622255, 9367622256 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை. இந்த தகவலை தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் ஆஸ்பத்திரி டாக்டர் ரவி தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior