உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 05, 2011

கடலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் இயந்திரம் பற்றாக்குறை விவசாயிகள் தவிப்பு

நெல்லிக்குப்பம் : 
 
            கரும்பு வெட்டுவதற்கு போதுமான இயந்திரம் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காக அதிகளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. 

                கடந்த சில ஆண்டுகளாக அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் கரும்பு பயிரிடும் பரப்பளவும் குறைந்து வருகிறது. ஆனால் அகலக்கால் முறையில் கரும்பு நடவு செய்தால் களை எடுப்பது, அறுவடை செய்வது போன்ற பணிகளை இயந்திரங்கள் மூலம் செய்யலாம் என ஆலை நிர்வாகம் கூறியது. இதனை நம்பி அகலக்கால் முறையில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பெரும்பாலான விவசாயிகள் அதிகளவிலான ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

                ஆலை நிர்வாகத்திடம் உள்ள ஒரே ஒரு இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 200 டன் மட்டுமே கரும்பு வெட்ட முடியும். தற்போது பயிரிடப்பட்டுள்ள கரும்புகளை ஒரே இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்வது என்பது இயலாத காரியம். இதனால் குறிப்பிட்ட காலத்தில் கரும்பு வெட்ட முடியுமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கரும்பு அறுவடை இயந்திரத்தை வாங்க ஆலை நிர்வாகம், தனியாருக்கு வங்கிக் கடன் வசதி செய்து தந்தால் வாங்கத் தயாராக உள்ளனர். ஆலை நிர்வாகம் அதற்கான முயற்சி செய்ய வேண்டும்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior