உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 15, 2011

நெய்வேலியில் 637 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா


 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/ab7becb8-a876-4cc4-a379-d77820ef8c2a_S_secvpf.gif
 
நெய்வேலி:

          தமிழக அரசின் சார்பில் மேல்நிலைப்பள்ளி முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும்விழா நெய்வேலி நிலக்கரி நிறுவன பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு 637 மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.

           பள்ளி தலைமை ஆசிரியை மணிமொழி வரவேற்றார். நிலக்கரி நிறுவன பள்ளிகளின் முதன்மை மேலாளர் சுந்தரராஜன் வாழ்த்தி பேசினார். மேலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ரஞ்சிதாவிற்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கி வாழ்த்தினார். மண்டல அளவில் நடந்த தடகள போட்டிகளில் முதல் இடம் பெற்ற டினா மற்றும் முத்தமிழ்ச்செல்விக்கு பதக்கமும், பரிசுகளையும் சிவசுப்பிரமணியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

           விழாவை வேதியியல் ஆசிரியர் பாலகுருநாதன் தொகுத்தளித்தார். விழாவில் அ.தி.முக. நகர செயலாளர் ரவிச்சந்திரன், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் செயலாளர் இராம.உதயகுமார், தலைவர் அபு. பொருளாளர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணி செயலாளர் அப்துல்லா, நகர அவைத்தலைவர் ராமலிங்கம், சட்மன்ற தொகுதியின் இணைச்செயலாளர் பழனிமுத்து மற்றும் ராஜகோபால், வெற்றிவேல், தமிழ்ச்செல்வன், செல்வராஜ், தர்மராஜன், பூபதி, ராஜசேகரன், சின்னசாமி, மனோகர், விஜயன், இளங்கோவன், கஞ்சமலை ஆகியோர் கலந்து கொண்டார்கள். முடிவில் உதவி தலைமை ஆசிரியை மங்கையர்கரசி நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior