உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 04, 2012

தானே புயலில் நெய்வேலி நகரில் 5 லட்சம் மரங்கள் இழப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/002e52dd-ebb7-4079-9972-8fdcddfff51e_S_secvpf.gif


நெய்வேலி:

            என்.எல்.சி. நிறுவனம் அமைந்துள்ள நெய்வேலி டவுன்ஷிப்பில் எங்கு பார்த்தாலும் மரங்களாக காட்சி அளிக்கும். தானே புயல் அந்த மரங்களை ஒட்டுமொத்தமாக வாரி சுருட்டிவிட்டது. டவுன்ஷிப் பகுதியில் மட்டும் 5 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இனி அந்த மரங்களை உருவாக்க 10 ஆண்டுகள் வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

           தென்மாநிலம் முழுவதற்கும் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் மின்சாரம் சப்ளை செய்து வருகிறது. ஆனால் இப்போது நெய்வேலி நகரமே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி கிடக்கி றது. டவுன்ஷிப் பகுதியில்மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன.

              மீண்டும் சீரமைக்க 3000 மின்கம்பங்கள் தேவைப்படுகிறது. ஆனால் மின் கம்பங்கள் கிடைக்க வில்லை. 300 மின்கம்பங்கள் மட்டுமே தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு 28 ஆயிரம் ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. மின்சாரம் இல்லாமல் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். புயல் வீசப்போவது தெரிந்ததும் நெய்வேலியில் உள்ள பல்வேறு ராட்சத எந்திரங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டனர். இதனால் புயலால் இந்த எந்திரங்கள் பாதிக்கப்படவில்லை. எந்திரங்கள் பாதித்திருந்தால் மின் உற்பத்தி தடைபட்டிருக்கும். ஆனால் அந்த நிலைமை ஏற்படவில்லை













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior