உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 15, 2012

தானே புயலால் சிதம்பரம் நகரில் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, மஞ்சள் விலை உயர்வு

சிதம்பரம் மார்க்கெட்டில் குவிக்கப்பட்டுள்ள பன்னீர் கரும்புகள்.
சிதம்பரம்:

           தானே புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் சிதம்பரம் நகரில் பொங்கல் பண்டிகைக்கான பன்னீர் கரும்பு ஒன்று ரூ.40-க்கும், மஞ்சள் கொத்து ஒன்று ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

         பொங்கல் பண்டிகைக்காக பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்பு புயலில் பெருமளவு முறிந்து சேதமுற்றதால் குறைந்தளவே வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டு சிதம்பரம் நகரில் ஒரு கரும்பு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகரில் குறைந்தளவே கரும்பு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் போட்டி போட்டு வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

        இதே போன்று கடலூர் மாவட்டத்தில் புயலில் மஞ்சள் பயிர் சேதமுற்றதால் நாகை மாவட்டம் செம்பனார்கோவில், அல்லிவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சள் கொத்துகளை வியாபாரிகள் வாங்கி வந்து சிதம்பரம் நகரில் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு மஞ்சள் கொத்து ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு கரும்பு ரூ.10-க்கும், மஞ்சள் கொத்து ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior