உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் படகுக்கு தீவைப்பு

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/0a15611f-7015-431d-ae1b-1392638d4282_S_secvpf.gif
 
கடலூர்:
 
 
         கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணி என்ற மீனவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வான்குருதி என்பவர் உள்பட 8 பேர் மீது தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.  
 
         இந்த நிலையில் வான்குருதியின் அண்ணன் மணி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது படகை தேடினார். கடலூர் முதுநகர் குட்டியாண்டவர் கோவில் பகுதியில் அந்த படகு மற்றும் அதில் இருந்த மீன்பிடி வலைகள் எரிந்து கிடந்தன. மர்ம கும்பல் அந்த படகை கடத்தி சென்று தீ வைத்தது தெரியவந்தது. படகின் சேத மதிப்பு ரூ.5 லட்சம். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீரமணி கொலை தொடர்பான மணியின் படகுக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடக்கிறது. படகுக்கு தீவைத்து எரித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மீனவர் படகு தீ வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior