உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 07, 2012

வடலூர் தைப்பூச விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

கடலூர் :

      கடலூரில், தைப்பூச விழாவை முன்னிட்டு, ஓவியப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை வரும் 15ம் தேதிக்குள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காந்தி சமுதாய நலப் பேரவை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் விடுத்துள்ள அறிக்கை:


           காந்தி சமுதாய நலப்பேரவை சார்பில் தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளலாரின் போதனைகளை நினைவு கூறும் வகையில் வரும் 26ம் தேதி விழா நடத்தப்படுகிறது. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு "வடலூர் வள்ளலார்' என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் கவிதைப் போட்டி நடக்கிறது. இதேப் போன்று வள்ளலாரின் கனவுகளை படமாக வரைவது குறித்த ஓவியப் போட்டி, "வள்ளலாரின் நற்சிந்தனைகள்' (அல்லது) "மரணமிலாப் பெருவாழ்வு' என்ற தலைப்பில் குறைந்தது 2 பக்க அளவில் கட்டுரைப் போட்டி நடக்கிறது.

        "வள்ளலாரும் மனித நேயமும்' தலைப்பில் வரும் 26ம் தேதி நடக்கும் பத்து நிமிட பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் கடிதம் மூலம் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை வீட்டு முகவரியுடன் 
ராஜசேகரன், 
65/ஏ, கன்னிய கோவில் தெரு, 
மஞ்சக்குப்பம், 
கடலூர்-1 

என்ற முகவரிக்கு வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior