உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 27, 2012

சிதம்பரம் அருகே இரண்டு முதலைகள் பிடிபட்டன

 http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_414190.jpg

சிதம்பரம் :

      சிதம்பரம் அருகே, கிராமத்திற்குள் புகுந்த இரண்டு முதலைகள் பிடிபட்டன. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த இளநாங்கூர் கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 500 கிலோ எடையும், 10 அடி நீளமும் கொண்ட முதலை, வடக்கு ராஜன் வாய்க்கால் வழியாக புகுந்தது.

      நேற்று அதிகாலை, பாலகுரு என்பவர் வீட்டுத் தோட்டத்தில் மாட்டை கடித்தது. அப்போது, நாய் குறைத்ததால், வீட்டிலிருந்தவர்கள் வந்து பார்த்த போது, முதலை இருப்பதைக் கண்டு சத்தம் போட்டனர். உடன், கிராம மக்கள் ஒன்று கூடி, முதலையைப் பிடித்து கட்டிப் போட்டனர். தகவலறிந்த சிதம்பரம் வனச்சரகர் பாபு, வனவர் மணி உள்ளிட்டோர் விரைந்து சென்று, முதலையைப் பிடித்து, வக்காரமாரி ஏரியில் விட்டனர். சிதம்பரம் ஏ.எஸ்.பி., முகாம் அலுவலகம் எதிரில், ஆயிகுளத்தில், 2 அடி நீளமுள்ள குட்டி முதலையைப் பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். நிலைய பொறுப்பு அலுவலர் சண்முகம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அந்த முதலையைப் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த முதலையும், வக்காரமாரி ஏரியில் விடப்பட்டது.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior