உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 19, 2012

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விருத்தாசலம்:
 
        இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனர். 
 
       இதேபோல், திராவிடர் மாணவர் கழகத்தினர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது தொடர்பாக, அமெரிக்கா அரசு ஐ.நா. மன்றத்தில் இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
        பின்னர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.திராவிடர் மாணவர் கழகம்: விருத்தாசலம் பாலக்கரையில் திராவிடர் கழக மாணவரணியினர் இந்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில மாணவரணி துணைச் செயலர் த.சீ.இளந்திரையன் தலைமை ஏற்றார்.மாவட்ட துணைச் செயலர் முத்து.கதிரவன் கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ப.க. செயலர் செழியன், நகரத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியத் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior