உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 12, 2012

பண்ருட்டி நகராட்சியில் ரூ.1.38 கோடி செலவில் சாலைப் பணி தொடக்கம்

பண்ருட்டி:


பண்ருட்டி நகராட்சியால் ரூ.1.38 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இணைப்புச் சாலைப் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புறவழிச் சாலைகளை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நகர நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நகர்ப் புற வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கும்பகோணம் சாலை அரசு மருத்துவமனையில் இருந்து சத்தியமூர்த்தி வீதி வழியாக டைவர்ஷன் சாலையை இணைக்கும் தார் சாலை 1295 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் ரூ.1.10 கோடி செலவிலும், இந்திரா காந்தி சாலையில் இருபுறமும் வடிகால் வசதிகளுடன் 150 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் ரூ.28 லட்சத்தில் தார் சாலையும் அமைக்கப்பட உள்ளது.


இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த பூஜையில், நகராட்சி அணையர் (பொறுப்பு) ஆர்.ராதா, கவுன்சிலர்கள் ராஜதுரை, வழக்குரைஞர் வடிவேலன், முருகன், வச்சலாசெல்வமணி, பணி ஆய்வாளர் சாம்பசிவம், ஒப்பந்ததாரர்கள் கடலூர் ராமகிருஷ்ணன், சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.















0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior