உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 13, 2012

பண்ருட்டியில் கொசு ஒழிப்புக்கு 4 புதிய இயந்திரங்கள்

பண்ருட்டி:

பண்ருட்டி நகர பகுதியில் கொசுக்களை அழிக்க நான்கு புதிய கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு கொசு புகை மருந்து அடிக்கும் பணி தொடங்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகர நிர்வாகம் சார்பில் 4 கொசு புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, அனைத்து வார்டு பகுதிகளிலும் புகை மருந்து அடிக்கப்பட உள்ளது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் கொசு புகை மருந்து அடிக்கும் பணியை திங்கள்கிழமை துவக்கி வைத்தார். அதிமுக நகர செயலர் எஸ்.ஏ.சி.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஆர்.ராதா, சுகாதார அலுவலர் பி.குமார், சுகாதார ஆய்வாளர்கள் பாண்டியன், திண்ணாயிரமூர்த்தி, வட்டப் பிரதிநிதி கருப்பையா, சோமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior