உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 06, 2012

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். செயலர் சிவக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் சுப்ரமணியன், அப்துல்ரஹீம், கலாவதி, ஜெயந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்கள் இடமாறுதல் காலம் 2 ஆண்டுகள் என்பதை குறைக்க வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior