உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 03, 2012

கந்தசாமி நாயுடு கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர்:


              கடலூர் கே.என்.சி. மகளிர் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில், பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
          கே.என்.சி. மகளிர் கல்லூரியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயில்கின்றனர். அரசு உதவிப் பெறும் இக்கல்லுரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அடிப்படை வசதிகளை பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகமும் செய்யவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசும் கண்டு கொள்ளவில்லை என மாணவியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கல்வி உதவித்தொகையை ஆண்டு தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். கல்லூரி ஆய்வுக்கூடத்துக்கு போதுமான உபகரணங்கள் வழங்க வேண்டும். விலையில்லா மடிக்கணினி ஆண்டின் தொடக்கத்திலேயே அனைத்து மாணவிகளுக்கும் வழங்க வேண்டும்.

           இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரியிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகம் சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாணவர் சங்க நகரத் தலைவர் எம்.ராம்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.அரசன், நகரச் செயலர் இளங்கோவன், துணைச் செயலர் எஸ்.மாணிக்கம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.அமர்நாத், கல்லூரித் தலைவர் கே.ஆர்த்தி, செயலர் எஸ்.செல்வபிரியா, துணைச் செயலர்கள் எம்.வினோதினி, ராஜலட்சுமி, புவனா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் மாணவர் சங்கத்தினர் மற்றும் மாணவியர்கள், மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவை சந்தித்து மனு அளித்தனர். அரசு உதவிப் பெறும் கல்லூரியாக இருப்பதால் அடிப்படை வசதிகளை ஆராய்வதற்கு தனியே குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஆட்சியர் உறுதியளித்தார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior