உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 20, 2012

திட்டக்குடியில்அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

திட்டக்குடி:


திட்டக்குடியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கக் கோரி மாவட்ட கவுன்சிலர் எழிலரசன் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினார்.

மனு விவரம்:

கடலூர் மாவட்டத்தில் மங்களூர் ஒன்றியம் மிகவும் பின்தங்கிய ஒன்றியமாக உள்ளது. மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறாமல் உள்ளது.மேலும் ஏழை மாணவ, மாணவியர்கள் பட்டப்படிப்பு பயில கல்லூரிகள் திட்டக்குடி பகுதியில் இல்லாததால் மாணவர்கள் தொலைவிலுள்ள விருத்தாசலம் அரசு கல்லூரி, அரியலூர், மயிலாடுதுறை கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.மாணவர்கள் அப்பகுதிகளுக்குச் சென்று தங்கிக் கல்வி பயில அதிகம் செலவாகிறது. இதனால் ஏழை மாணவர்களின் பட்டப்படிப்பு கனவாய் போகும் அவலம் உள்ளது. எனவே, மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒன்றியமான மங்களூர் ஒன்றியத்திலுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டக்குடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. .

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior