உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 25, 2010

அகில இந்திய மருத்துவ,பொறியியல் நுழைவுத்தேர்வு கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயிற்சி துவக்கம்


கடலூர்: 

                    புதுச்சேரி பிம்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் அகில இந்திய மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் துவங்கியது.

                     துவக்க விழாவிற்கு பிம்ஸ் நிறுவனத் தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். பேராசிரியர் நடனசபாபதி வரவேற்றார். பள்ளி முதல் வர் நடராஜன் கல்விக்கான சிறப்பு புத்தகங்களின் முதல் பிரதிகளை மாணவர்களுக்கு வழங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.சிறுகிராமம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் சிறப்புரையாற்றினார். பயிற்சி வகுப்பு மே 10ம் தேதி வரை நடக்கிறது. அகில இந்திய பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் (ஐ.ஐ.டி.,ஏஐஇஇஇ,) முறையே ஏப்ரல் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், ஜிப்மர் நுழைவுத் தேர்வு ஜூன் 6ம் தேதியும் நடக்கிறது.நிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெங்கடேசன், சார்லஸ்,டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.பேராசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Read more »

திங்கள், மார்ச் 08, 2010

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி விடுதி மாணவர் பலி

நெல்லிக்குப்பம்:

                  விடுதி வார்டனுக்கு தெரியாமல் வெளியே சென்ற மாணவன், மதில் சுவர் இடிந்து விழுந்து இறந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி லட்சுமி. இவர் களது மகன் முரஷரி (15). குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

                 முரஷரி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இப் பள்ளிக்குச் சொந்தமான குமராபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் முரஷரி தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு முரஷரி மற்றும் அவரது நண்பர்கள் பிரபாகரன், விஜயேந்திரன், சஞ்சய்வாசன், வினோபாலன் ஆகியோர் சினிமா பார்க்க விடுதி வார்டனுக்கு தெரியாமல் மதில் ஏறி குதித்து கடலூர் சென்றனர்.
                    டிக்கெட் கிடைக்காததால், ஓட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தனர். ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்டமதில் மீது ஏறி இரண்டு மாணவர்கள் விடுதிக்குச் சென்றனர். மூன்றாவதாக முரஷரி மதிலை பிடித்து ஏற முயன்றபோது அவர் மீது சுவர் இடிந்து விழுந்தது. முரஷரி இடிபாட்டில் சிக்கி இறந்தார்.

            நேற்று காலை முரஷரி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) செல்வம், சப்-இன்ஸ் பெக்டர் அன்பரசு ஆகியோர் வழக்குப்பதிந்து இறந்த முரஷரியுடன் வெளியே சென்ற நான்கு மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior