உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

அகில இந்திய மருத்துவ,பொறியியல் நுழைவுத்தேர்வு கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயிற்சி துவக்கம்


கடலூர்: 

                    புதுச்சேரி பிம்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் அகில இந்திய மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் துவங்கியது.

                     துவக்க விழாவிற்கு பிம்ஸ் நிறுவனத் தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். பேராசிரியர் நடனசபாபதி வரவேற்றார். பள்ளி முதல் வர் நடராஜன் கல்விக்கான சிறப்பு புத்தகங்களின் முதல் பிரதிகளை மாணவர்களுக்கு வழங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.சிறுகிராமம் அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் சிறப்புரையாற்றினார். பயிற்சி வகுப்பு மே 10ம் தேதி வரை நடக்கிறது. அகில இந்திய பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் (ஐ.ஐ.டி.,ஏஐஇஇஇ,) முறையே ஏப்ரல் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், ஜிப்மர் நுழைவுத் தேர்வு ஜூன் 6ம் தேதியும் நடக்கிறது.நிழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெங்கடேசன், சார்லஸ்,டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.பேராசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior