உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




குமராட்சி ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமராட்சி ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 07, 2012

சிதம்பரம் அருகே தானே புயல் நிவாரணம் வழங்க விவசாயியிடம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது

ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட மேலபருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி (முகத்தை மறைத்துக் கொண்டிருப்பவர்).

சிதம்பரம்:

        தானே புயல் நிவாரணம் வழங்க விவசாயியிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.  

           சிதம்பரத்தை அடுத்த குமராட்சி ஒன்றியம், மேலபருத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆசைதம்பி. இவர் தேமுதிக ஒன்றிய துணைச் செயலராக உள்ளார். இவரது மனைவி தமயந்தி, 8-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக உள்ளார்.  இவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பயிருக்கு ரூ.41 ஆயிரத்து 600 நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. இதை பெறுவதற்கு தனக்கு ரூ.10 ஆயிரம் தருமாறு மேலபருத்திக்குடி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி கேட்டுள்ளார். பின்னர் ரூ.9 ஆயிரமாவது தருமாறு கோரியுள்ளார். இதையடுத்து ஆசைதம்பி கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார்.  

        இந்நிலையில் போலீஸார் அறிவுறுத்தலின்படி ஆசைதம்பி, கிராம நிர்வாக அலுவலர் வீராசாமியை சிதம்பரம் காந்தி சிலை அருகே வந்து செவ்வாய்க்கிழமை பணம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.  அதன்படி வீராசாமியிடம், ஆசைதம்பி ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மாறுவேடத்திலிருந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீஸார் லஞ்சம் பெற்றதாக வீராசாமியை (55) கைது செய்து, அவரிடமிருந்து ரூ.9 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றினர்.   

















Read more »

செவ்வாய், ஜூன் 28, 2011

சிதம்பரம் குமராட்சி ஒன்றியத்தில் பூட்டிக் கிடக்கும் ஊரக நூலகக் கட்டடம்

பூட்டிக் கிடக்கும் ஊரக நூலகக் கட்டடம்.
சிதம்பரம்:
         புதிதாக கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கும் புதிய ஊரக நூலகம் திறக்கப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
              சிதம்பரம் நகரை ஓட்டி அமைந்துள்ளது நான் முனிசிபல் ஊராட்சி. குமராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்முனிசிபல் ஊராட்சிப் பகுதியில் உள்ள சிவசக்திநகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் (2010-11) ரூ. 30 லட்சம் செலவில் ஊரக நூலகம் அமைக்க புதிய கட்டடம் கட்டப்பட்டது. 
           கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இதுபோன்ற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பயன்பாடின்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளது வேதனையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் இந்த ஊரக நூலக கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior