உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




டி.புதூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டி.புதூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 06, 2010

குடிநீர் கேட்டு காலி குடத்துடன் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


கடலூர்: 

            குடிநீர் வசதி கோரி டி.புதூர் கிராம மக்கள் காலி குடத்துடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

                  கடலூர் அடுத்த டி.புதூர் கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறு நான்கு மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் 5 கி.மீ., தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வரவேண்டியுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கோடை காலம் துவங்கி விட்டதால் குடிநீரின்றி அவதிப்பட்டு வரும் டி.புதூரை சேர்ந்த 50 பெண்கள் நேற்று காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். குறை தீர்வு கூட்டத்தில் இருந்த கலெக்டரை சந்தித்து தங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்க கோரி மனு கொடுத்தனர். மனுவை பரிசீலித்த கலெக்டர் சீத்தாராமன், டி.புதூர் கிராமத்திற்கு உடனடியாக புதிதாக ஆழ் துளை கிணறு அமைக்கவும், அதுவரை லாரி மூலம் தினமும் குடிநீர் வழங்க ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனையேற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


downlaod this page as pdf

Read more »

செவ்வாய், மார்ச் 09, 2010

ஒரு மாதமாக மினி பஸ் இயங்காததால் டி.புதுப்பாளையம் மாணவர்கள் அவதி

கடலூர் :

                   டி.புதுப்பாளையத்திற்கு செல்லும் மினி பஸ்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப் பட்டுள்ளதால் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக்கள் பஸ்சிற்காக மூன்று கி.மீ., தூரம் நடந்து செல்லும் அவலம் எற்பட்டுள்ளது.
 
                         கடலூர்-டி.புதுப்பாளையத்திற்கு நான்கு மினி பஸ்கள் இயங்கி வந்தன. இதனால் டி.புதுப்பாளையம், மாவடிப்பாளையம், டி.புதூர், எம்.புதூர், புதுநகர் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொது மக் கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு பல்வேறு பிரச்னை காரணமாக இரண்டு மினி பஸ்கள் நிறுத்தப்பட்டன. இரண்டு பஸ்கள் மட்டுமே இயங்கி வந்தன. இந்த பஸ்களும் ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதிலும், பொதுமக்கள் கடலூருக்கு செல்ல முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். மாணவ, மாணவிகள் தினமும் மூன்று கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறி பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதி மாணவர்கள் நேற்று கலெக்டரை சந்தித்து, டி.புதுப்பாளையத்திற்கு பஸ் இயக்க வேண்டும். ஏற்கனவே கடலூரிலிருந்து டி.புதுப்பாளையம் வழியாக கீரப்பாளையம் வரை சென்று வந்த அரசு பஸ்சை மீண் டும் இயக்க கோரி மனு கொடுத்துள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior