உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




நாட்டார்மங்கலம் ஊராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்டார்மங்கலம் ஊராட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 31, 2012

நாட்டார்மங்கலம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா


கடலூர் : 

      நாட்டார்மங்களம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.


       கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்களம் ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினம் மற்றும் 9 வார்டு பெண் உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 100 சதவீதம் பெண்களே பொறுப் பேற்றதால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த டில்லி தமிழ்ச்சங்கம் டில்லிக்கு அழைத்திருந்தது. அதன்படி நாட்டார்மங்களம் ஊராட்சித் தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கிராம பிரதிநிதிகள் 500 பேர் டில்லி சென்றனர். அங்கு நடந்த பாராட்டு விழாவிற்கு காங்., தமிழக தலைவர் ஞானதேசிகன் எம்.பி., தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் வாசன் வாழ்த்திப் பேசினார். தொழிலதிபர் மணிரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.


        ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினத்திற்கு தமிழ்ச்சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து டில்லி விஸ்வேஷ் சேவா சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரண்வாலிடா பாராட்டி பேசினார். அதனை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் விருந்தளித்தார்.










Read more »

சனி, மார்ச் 17, 2012

நாட்டார்மங்கலம் ஊராட்சியில் பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட கிராம பஞ்சாயத்து

http://mmimages.mmnews.in/Articles/2012/Mar/1367b628-dc7c-4023-8646-eafb4c106ba8_S_secvpf.gif
 

          கடலூர் மாவட்டம், காட்டு மன்னார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாட்டார்மங்கலம் ஊராட்சி தேர்தலில் ஆசிரியராக பணிபுரிந்த சுதா மணிரத்தினம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
         இதைப்போன்று இந்த பஞ்சாயத்தில் உள்ள 9 வார்டு களிலும் பெண்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   100 சதவீதமும் பெண்களே போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் இந்த ஊராட்சியில் மட்டும் தான். இதை அறிந்த டெல்லி தமிழ்ச்சங்கம் அவர்களுக்கு பாராட்டு மற்றும் வரவேற்பு அளிக்க அழைப்பு விடுத்து உள்ளது.
        இந்த தமிழ்சங்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவி சுதா மணிரத்தினம் தலைமையில் அந்த பகுதியில் உள்ள 100 உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கடலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 240 கிராமத்தை சேர்ந்த 500 பேர் டெல்லி செல்கின்றனர். இவர்கள்  (16-ந் தேதி) சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு 18-ந் தேதி சென்றடைகின்றனர். பின்னர் 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அங்கு ஏற்பாடு செய்துள்ள நாட்டு நல பணிததிட்டத்தில் பங்கேற்கின்றனர். 
      தமிழ்சங்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியை சந்திக்க உள்ளனர். பின்னர் ராகுல் காந்தி எம்.பி., மத்திய மந்திரிகள் சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயராம்ரமேஷ், ஜெயந்தி நடராஜன் மற்றும் நாராயணசாமி ஆகியோரையும் சந்திக்கின்றனர். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior