உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 31, 2012

நாட்டார்மங்கலம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா


கடலூர் : 

      நாட்டார்மங்களம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.


       கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்களம் ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினம் மற்றும் 9 வார்டு பெண் உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 100 சதவீதம் பெண்களே பொறுப் பேற்றதால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த டில்லி தமிழ்ச்சங்கம் டில்லிக்கு அழைத்திருந்தது. அதன்படி நாட்டார்மங்களம் ஊராட்சித் தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கிராம பிரதிநிதிகள் 500 பேர் டில்லி சென்றனர். அங்கு நடந்த பாராட்டு விழாவிற்கு காங்., தமிழக தலைவர் ஞானதேசிகன் எம்.பி., தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் வாசன் வாழ்த்திப் பேசினார். தொழிலதிபர் மணிரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.


        ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினத்திற்கு தமிழ்ச்சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து டில்லி விஸ்வேஷ் சேவா சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரண்வாலிடா பாராட்டி பேசினார். அதனை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் விருந்தளித்தார்.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior