உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வருமானச் சான்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வருமானச் சான்றிதழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 10, 2011

கடலூர் மாவட்டத்தில் 184 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலி

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,க்கள்) பணியிடங்கள் பல காலியாக உள்ளதால் சான்றிதழ் பெற முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நிர்வாக வசதிக்காக கடலூர் மாவட்டம் மூன்று வாருவாய் கோட்டம், ஏழு தாலுகா, 32 குறுவட்டம் மற்றும் 901 வருவாய் கிராமங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.
 
              இதில் வருவாய் கிராமங்களை நிர்வகிக்க 604 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிராமங்களில் நிலவரி வசூலித்தல், கணக்குகள் பராமரித்தல் மற்றும் பொதுமக்களுக்கு சிட்ட அடங்கல், ஜாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளை மட்டுமே செய்து வந்தனர். ஆனால் தற்போது அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் வி.ஏ.ஓ.,க்கள் மூலமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

               குறிப்பாக தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், இலவச கால்நடைகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கும் பயனாளிகள் தேர்வு செய்வது, ஜமாபந்தி, மனுநீதி நாள் முகாம், கிராம சபைக் கூட்டம், அரசின் நிவாரண உதவிகள் வழங்குவது, இயற்கை இடர்பாடுகளை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை கொடுப்பது உள்ளிட்ட அரசு மேற்கொள்ளும் இதர பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.

            இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 604 வி.ஏ.ஓ.,க்கள் பணியிடங்களில் தற்போது 184 பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான வி.ஏ.ஓ.,க்கள் கூடுதல் வருவாய் கிராமங்களையும் சேர்த்து பார்த்து வருகின்றனர்.இதனால் சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் வி.ஏ.ஓ., எப்போது வருவார் என அவரது அலுவலகம் முன் நாள் முழுக்க காத்திருப்பது வேதனையாக உள்ளது. கிராம கணக்குகள், "அ' பதிவேடு, வாரிசு சான்றிதழ், அரசு உதவிக்கான சான்றிதழ்கள் பெறுவதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.















Read more »

செவ்வாய், மே 24, 2011

சாதி மற்றும் வருமான சான்றிதழ் பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள்

விருத்தாசலம் : 

            பள்ளி, கல்லூரிகள் துவங்க உள்ள நிலையில் ஜாதி, வருமானச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். பிளஸ் 2 தேர்தல் முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியானது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர உள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ளன.
             இந்நிலையில் மேற்படிப்பிற்காக ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் குவிந்திருந்தனர். இதனால் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் எப்போது மில்லாத அளவிற்கு பரபரப்பாக காணப்பட்டது.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior