உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 24, 2011

சாதி மற்றும் வருமான சான்றிதழ் பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள்

விருத்தாசலம் : 

            பள்ளி, கல்லூரிகள் துவங்க உள்ள நிலையில் ஜாதி, வருமானச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். பிளஸ் 2 தேர்தல் முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியானது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர உள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ளன.
             இந்நிலையில் மேற்படிப்பிற்காக ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் குவிந்திருந்தனர். இதனால் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் எப்போது மில்லாத அளவிற்கு பரபரப்பாக காணப்பட்டது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior