உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 31, 2010

சிதம்பரம் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

சிதம்பரம்:

               சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் |125 லட்சம் செலவில் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

                       இதற்கான தொடக்க விழா புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் தலைமை வகித்தார்.மாவட்ட கவர்னர் பி.குப்பசாமி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைநிலை கவர்னர் ஆர்.எம்.சுவேதகுமார், மாவட்டத் தலைவர் டி.சேகரன், வீரேந்திரகுமார், ஜி.துரைசாமி, டி.உச்சட்,  வட்டாரத் தலைவர் கமல்கிஷோர்ஜெயின், லியோ மதிவாணன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.செயலர் ஏ.ராமச்சந்திரன் வரவேற்றார். பொருளர் எஸ்.பாலநாகசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior