உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 30, 2010

கடலூரில் அரசியல் கட்சியினரின் 100 பேனர்கள் அகற்றம்

கடலூர்:

             கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. இதையொட்டி அவைகளை அகற்றும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் உத்தரவிட்டார்.

            இதைத்தொடர்ந்து கடலூர் புதுநகர், முதுநகர், திருப்பாபுலியூர், ரெட்டிச்சாவடி ஆகிய பகுதிகளில் ரோட்டின் ஓரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வைத்திருந்த பேனர்களை  போலீசார் அகற்றினார்கள். 100-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் பேனர்கள் அகற்றப்படுகின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior