உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 28, 2011

இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : 9.5 லட்சம் பேர் பங்கேற்பு


அனைவருக்கும்  வாழ்த்துக்கள் 
 

 

                ஒன்பதரை லட்சம் மாணவர்கள் பங்கேற்கும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், இன்று முதல் நடைபெறுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 6,922 பள்ளிகள் மூலம், எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவர்கள், தேர்வெழுதுகின்றனர். இவர்களில், நான்கு லட்சத்து 22 ஆயிரத்து 21 பேர் மாணவர்கள்; நான்கு லட்சத்து, 35 ஆயிரத்து 935 பேர் மாணவியர். இவர்களுடன், தனித்தேர்வு மாணவர்கள் 97 ஆயிரத்து 655 பேரும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை எழுதுகின்றனர்.

              சென்னையில் மட்டும் 272 பள்ளிகளில் இருந்து, 36 ஆயிரத்து 148 மாணவர்களும், புதுச்சேரியில் 226 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 529 மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர். சென்னையில், 223 மையங்களிலும், புதுச்சேரியில் 47 மையங்களிலும் தேர்வுகள் நடக்கின்றன. ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கும் தேர்வுகளை கண்காணிக்கும் பணியில், 4,000 உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படை குழுவினர் ஈடுபடுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior