உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 06, 2011

கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஊர்வலம்

 

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு; 

விடுதலை சிறுத்தைகள் போராட்டம்

கடலூர்:

              இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய கோரி கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் திருமாறன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் அறிவுடைநம்பி, செல்லப்பன், ராஜாமுகமது, கதிரவன், பொருளாளர் அன்பழகன், செய்தி தொடர்பாளர் ஆதவன், நகர செயலாளர் பாவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

              இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் படத்தினை வைத்து அவருக்கு சவப்பாடைகட்டி, தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். கடலூர் உழவர் சந்தையில் இருந்து ஊர்வலம் தொடங்கி அண்ணாபாலம், புதுநகர் காவல் நிலையம் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்து முடிந்தது. பாரதிசாலை அருகே ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப் பட்டது. ஊர்வலத்தில் மாநில நிர்வாகிகள் திருமார்பன், பன்னீர்செல்வம், அணிகளின் மாவட்ட செய லாளர்கள் நாகவேந்தன், அரச்செல்வன், புரட்சி வேந்தன், மருதமுத்து, செந்தமிழ்செல்வன், காத்தவராயன், அறவாழி, ரகு, மற்றும் அறிவு உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் ஒன்றிய அமைப்பாளர் ஜித்தன் நன்றி கூறினார்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior