உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 29, 2011

சிதம்பரத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

சிதம்பரம்:

             கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.இவரது மகன் சாந்தினிவாசன் (வயது 32).இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்கு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளது.

             இதே போல் கனகசபை நகரை சேர்ந்த விஜயன் மகன் அரவிந்த் ராஜ் (24) மீதும் அண்ணாமலைநகர் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர்கள் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு துரை மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகவல னுக்கு பரிந்துரை செய்தார்.

           அதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட கலெக்டர் அமுதவல்லியிடம் பரிந்துரை செய்தார். அதன்படி தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தர விட்டார். அதன்படி அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கி யராஜ், சாந்தினி வாசன், அரவிந்த்ராஜ் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.
 

 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior