உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 01, 2011

பரங்கிப்பேட்டை தே.மு.தி.க., வேட்பாளர் மனு தள்ளுபடி

பரங்கிப்பேட்டை : 

            பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்த தே.மு.தி.க., வேட்பாளரின் மனு தள்ளூபடி செய்யப்பட்டது

             .பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., மாரிமுத்து அவருக்கு மாற்று வேட்பாளராக சங்கர், தி.மு.க., முகமது யூனுஸ், தே.மு.தி.க., மோகன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களாக ஜெகந்நாதன், முகமது சபியுல்லா, ஜெய்சங்கர், ஹசன்அலி உள்ளிட்ட 8 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது.அதில் தே.மு.தி.க., வேட்பாளர் மோகன் கொடுத்த மனுவில் வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் தொடர் எண்ணும், முன்மொழிபவர் தொடர் எண்ணும் மாறியுள்ளதால் அவரது மனு தள்ளூபடி செய்யப்பட்டது.வார்டு கவுன்சிலர்களுக்கு போட்டியிட அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 102 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior