உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 28, 2011

விருத்தாசலம் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

விருத்தாசலம்:

              விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு விஷமிகள் யாரோ எம்.ஜி.ஆர். சிலையின் இடதுகையை உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இன்று காலை இதனை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

              இதுகுறித்து கம்மாபுரம் கிளை ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ஆறுமுகம் கம்மாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரில், எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior